Friday 30 July 2010

உருகும் கிரீன்லாந்து-கண்களுக்குத்தெரிகிறது!



சுமார் 56 கி.மீ நீளம் கொண்ட கிரீன்லாந்தின் பனித்தீவு உருகி - ஆவி மற்றும் தண்ணீராக மாறிவருவதை, இப்போது கண்களால் பார்க்கப்படும் ஒரு காட்சியாகி விட்டது. ஆம்! பெருந்தொகையான உள்ளுர்வாசிகளும், காலநிலை அவதானிப்பாளர்களும் மற்றும் சுற்றுலா செல்லும் தனிமனிதர்களும் கிரீன்லாந்தின் பனித்தீவு உருகுதலை நேரடியாக பார்த்து அதிசயப்படுகிறார்கள்.

காலநிலைப் பாதிப்பு என்பது பனிமலைகளை உருக செய்யும் என்று சொல்லப்பட்டு வந்தாலும் அதைப் பலர் "அம்புலிமாமா கதை" என்றே வேடிக்கையாக கேட்டு வந்திருக்கிறார்கள். ஆனால் இன்று, அது ஒன்றும் அம்புலிமாமா கதையல்ல; கண் முன் காணும் நிதர்சனம் என்று தெரியவருகிறது.

கடந்த 2008ம் ஆண்டிலேயே இந்தத் தீவு உருகுவதை பார்ப்பதற்கான வெப்காம் (கேமரா) ஒன்றை அமைத்து இருந்தார்கள். நாம் வாழுகின்ற புவியை, நாமே- நமது சுயநலத்துக்காக, வெப்பமாக்கியதற்கான கொடுமை, கணத்திற்குக் கணம் இப்போது உலகத்தின் கண்களுக்கு தெரிகிறது. ஆசியப்பகுதி நாடுகளில் உயருகின்ற கடல் மட்டம் இதனுடைய மறுதாக்கம் என்பதும் கவனிக்கத்தக்கது.

No comments: