Thursday 30 September 2010

பாபர் மசூதி இடிப்பு வழக்குகள்: சட்டப்படி நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம்

பாபர் மசூதி இடிப்பு வழக்குகள்: சட்டப்படி நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம்

பதிவேற்றியது ஆர்வலர் Wednesday, 29 September 2010 22:16 புதிய ஜனநாயகம்
2009

இந்து மதவெறிக் கும்பலால் பாபர் மசூதி இடித்துத்தள்ளப்பட்ட கிரிமினல் நடவடிக்கையை ஆராய லிபரான்கமிசன் டிசம்பர் 10, 1992 அன்று பாபர் மசூதி இடித்துத்தள்ளப்பட்ட நான்காவது நாளில் மைய அரசால் நியமிக்கப்பட்டது.

மூன்று மாதங்களுக்குள் அறிக்கையைத் தர வேண்டும் என்ற நிபந்தனையோடு நியமிக்கப்பட்ட இக்கமிசன், 16 ஆண்டுகள் 6 மாதங்கள் கழித்து, கடந்த ஜூன் 30, 2009 அன்றுதான் தனது அறிக்கையை மைய அரசிடம் தந்துள்ளது.

இக்கமிசனின் விசாரணைக்கு டெல்லி உயர்நீதி மன்றம் விதித்திருந்த தடை, பாபர் மசூதி இடிப்பில் நேரடியாகத் தொடர்புள்ள கல்யாண் சிங் போன்ற "சாட்சிகள்' கமிசனின் முன் விசாரணைக்கு ஆஜராகாமல் இழுத்தடித்தது போன்றவைதான் இத்தாமதத்திற்கான காரணங்களாகக் கூறப்பட்டாலும், "மசூதியை இடித்துத் தள்ளிய சதிகாரர்கள் யார்?'' என்பது உலகுக்கே தெரிந்த இந்த வழக்கு தொடர்பான விசாரணையை நடத்தி முடித்து அறிக்கை கொடுக்க, நீதிபதி லிபரானுக்கு 16 ஆண்டுகள் " தேவைப்பட்டிருப்பதை ' எந்தவிதத்திலும் நியாயப்படுத்திவிடமுடியாது.

பாபர் மசூதியை இடித்துத் தள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தப்பட்ட அத்வானியின் ரத யாத்திரை; மசூதி இடிக்கப்படுவதற்கு முதல் நாள் பஜ்ரங் தள் தலைவர் வினய்கத்தியாரின் வீட்டில் நடந்த சதி ஆலோசனை; அதில் கலந்துகொண்ட அத்வானி உள்ளிட்ட தலைவர்களின் பங்கு; மசூதி இடிக்கப்படுவதற்கு முதல் நாள் அயோத்திக்கு வந்து உரையாற்றி விட்டு, அன்றிரவு ராமஜென்ம பூமி நியாஸின் தலைவர் பரமஹம்ஸர் வீட்டில் நடந்த "கலந்துரையாடலில்' கலந்துகொண்டுவிட்டுச் சென்ற வாஜ்பாயின் பங்கு; பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ படங்கள்; அக்கிரிமனல் நடவடிக்கையைத் தடுக்காமல், அதனை ரசித்துப் பார்த்துப் பெருமிதம் கொண்ட அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் பல குட்டித் தலைவர்களின் இந்து மதவெறி வக்கிரம்; சிவசேனா தலைவர் பால்தாக்கரே மற்றும் பா.ஜ.க.வைச் சேர்ந்த கல்யாண் சிங், உமாபாரதி ஆகியோர் மசூதி இடிக்கப்பட்டதை நியாயப்படுத்தி வெளியிட்ட அறிக்கைகள் மற்றும் நேர்காணல்கள் இத்துணை அசைக்க முடியாத ஆதாரங்கள் இருக்கும் பொழுது, மசூதியை இடித்துத் தள்ளிய இந்து மதவெறிப் பாசிசக் கும்பலும், அவர்களுக்குத் துணையாக நின்றவர்களும் இந்நேரம் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், லிபரானோ மலையைக் கெல்லி எலியைப் பிடித்த கதையாக, 16 ஆண்டுகள் கழித்துதான் 27 தொகுதிகள் கொண்ட அறிக்கையைக் கொடுத்திருக்கிறார். மைய அரசோ அந்த அறிக்கையை வெளியிட "நல்ல நாள்' பார்த்துக் கொண்டிருக்கிறது. கள்வனிடமே பெட்டிச் சாவியைக் கொடுத்தது போல, பாபர் மசூதி இடிக்கப்பட்டதை வேடிக்கை பார்த்து நின்ற கயவாளி காங்கிரசு கும்பலிடம் லிபரான் அறிக்கை போய்ச் சேர்ந்திருக்கிறது. இதைவிட இந்து மதவெறிக் கும்பலுக்கு வேறு பாதுகாப்பு தேவையில்லை. பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக மையப் புலனாய்வுத் துறை நடத்தி வரும் வழக்கும் 16 ஆண்டுகளாக விசாரணை வாய்தா மேல்முறையீடு என்ற இழுத்தடிப்புகளைத் தாண்ட முடியாமல் முடங்கிப் போய்க்கிடக்கிறது.

லிபரான் கமிசனில் அரசு தரப்பு வழக்குரைஞராகப் பணியாற்றி வந்த பஞ்சாப் ஹரியானா உயர்நீதி மன்றத்தைச் சேர்ந்த மூத்த வழக்குரைஞர் அனுபம் குப்தா, "நீதிபதி லிபரான் விசாரணையின் பொழுது அத்வானிக்கு அதிகபட்ச சலுகைகள் காட்டியதாக''க் குற்றம் சுமத்தி வருவதோடு, மசூதி இடிப்பில் அத்வானியின் பங்கு குறித்து நீதிபதி லிபரானுக்கும் தனக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடே கமிசனில் இருந்து தான் விலகுவதற்குக் காரணமாக அமைந்ததாகக் கூறி வருகிறார்.

அனுபம் குப்தா அத்வானியைக் குறுக்கு விசாரணை செய்தபொழுது, "நாடு சுதந்திரமடைந்த பின் குஜராத்திலுள்ள சோமநாதர் ஆலயத்தைப் புதுப்பிக்கும் பிரச்சினையை ஜவஹர்லால் நேரு எப்படிக் கையாண்டார்'' என்பது தொடர்பாக அத்வானியிடம் கேள்வி எழுப்பியதாகவும், இந்தக் கேள்வியினால் அத்வானியை விட லிபரான் தான் அதிகப் பதற்றமடைந்ததாகவும், அதனால் அத்வானியிடம் தன்னை மன்னிப்புக் கேட்கக் கோரி லிபரான் நிர்பந்தித்தாகவும் அனுபம் குப்தா கூறி வருகிறார்.

இதே போன்று, மசூதி இடிப்பு தொடர்பான உளவுத் துறை அறிக்கையொன்றைச் சுட்டிக் காட்டி அத்வானியை, தான் குறுக்கு விசாரணை செய்தபொழுது, அத்வானி ஆத்திரமடைந்ததாகவும், அதனால், அந்தக் கேள்விக்கு லிபரான் தடை விதித்துவிட்டதாகவும் அனுபம் குப்தா கூறுகிறார். "அத்வானி, ஜோஷி ஆகியோரின் கண் முன்னே மசூதி இடிப்பு நடந்தபோதும், அவர்கள் அதற்குப் பொறுப்பல்ல; நிலைமை அவர்களின் கையை மீறிப் போய் விட்டது'' என்பது தான் பா.ஜ.க.வின் நிலைப்பாடு. இதே நிலைப்பாட்டைத்தான் லிபரான் கொண்டிருப்பதாக அனுபம் குப்தா குற்றம்சாட்டி வருகிறார்.

லிபரான் கமிசன் மீதான இக்குற்றச்சாட்டுக்கள் கிசுகிசு செய்திகளைப் போல அல்லாமல்,"அவுட் லுக்'' என்ற ஆங்கில வாரஇதழில் அனுபம் குப்தாவின் நேர்காணலாகவே வெளிவந்திருக்கிறது. இதனால், நீதிபதி லிபரான் "நடுநிலையாக' விசாரணையை நடத்தி அறிக்கை கொடுத்திருப்பாரா என்ற சந்தேகம் தவிர்க்கமுடியாமல் எழுந்துள்ளது. இந்தசந்தேகத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, நீதிபதி லிபரான் நேர்மையாகவே விசாரணையை நடத்தியிருப்பார் என்று எடுத்துக் கொண்டாலும், அதனால் என்ன விளைவு ஏற்பட்டுவிடும்?

பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து நடந்த மும்பய்க் கலவரத்தை விசாரித்து அறிக்கை அளித்த சிறீகிருஷ்ணா கமிசன்,1982இல் நடந்த மண்டைக்காடு இந்து மதவெறிக் கலவரத்தை விசாரித்து அறிக்கை அளித்த வேணுகோபால் கமிசன், 1969இல் குஜராத் அகமதாபாத்தில் இந்து மதவெறியர்கள் நடத்திய கலவரத்தை விசாரித்து அறிக்கை அளித்த ஜக்மோகன்ரெட்டி கமிசன் ஆகியவற்றுக்கு என்ன கதி நேர்ந்ததோ, அதேநிலை லிபரான் கமிசன் அறிக்கைக்கும் ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது?

லிபரான் கமிசன் அளித்துள்ள அறிக்கை ஒருபுறமிருக்கட்டும். பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக மையப் புலனாய்வுத்துறை நடத்தி வரும் இரு வழக்குகளில், ஒன்றில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, வினய் கத்தியார், அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர், வீ.எச்.டால்மியா, சந்நியாசினி ரிதம்பரா ஆகிய எட்டு பேர் மீது சதிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. இக்குற்றச்சாட்டுக்குப் பூர்வாங்க ஆதாரம் இருப்பதைக் கூடுதல் குற்றவியல் நீதிபதி ஜகதீஷ் பிரசாத் சிறீவத்ஸவா உறுதி செய்துள்ளார்.

எனினும், காலப்போக்கில் இந்து மதவெறிக் கும்பல் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டும், சட்டத்திலுள்ள ஓட்டைகளையும், தலித் "சகோதரி' மாயாவதியின் நட்பையும் பயன்படுத்திக் கொண்டும் அந்த எட்டு பேர் மீதான சதிக் குற்றச்சாட்டை உடைத்தெறிந்து விட்டது. அவர்கள் மீது இக்குற்றச்சாட்டை மீண்டும் சுமத்தி வழக்கு நடத்துவதற்கு சட்டப்படியே வாய்ப்புகள் இருந்தும்கூட, அதை காங்கிரசு உள்ளிட்டு எந்தவொரு மதச்சார்பற்ற கட்சியும் கண்டு கொள்ளவில்லை. தற்பொழுது அவர்கள் மீது மதக் கலவரத்தைத் தூண்டிவிடும்படி நடந்து கொண்டார்கள் என்ற உப்புச்சப்பில்லாத குற்றச்சாட்டுதான் சுமத்தப்பட்டுள்ளது.

இதுவொருபுறமிருக்க, பாபர் மசூதி ராமஜென்ம பூமி வழக்கு தொடர்பான 23 கோப்புகளைக் காணவில்லை என உ.பி. மாநில அரசு அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தி ஆகஸ்டு மாத இறுதிக்குள் அறிக்கை தரும்படி மையப் புலனாய்வுத் துறைக்கு உத்திரவிட்டுள்ளது, அலகாபாத் உயர்நீதி மன்றம். இந்தக் கோப்புகள் எப்பொழுது, எப்படி காணாமல் போயின என்பது கூட "மர்மமாக'த் தான் உள்ளது.

உ.பி.மாநில அரசின் மதக் கலவர தடுப்புப் பிரிவைச் சேர்ந்த சிறப்பு அதிகாரி சுபாஷ் பஹ்ன் சாத், அலுவல் வேலைதொடர்பாக தில்லிக்குச் சென்றுகொண்டிருந்த பொழுது, தில்லியில் உள்ள திலகர் பாலம் தொடர்வண்டிநிலையத்தில் மர்மமான முறையில் இறந்து போனார். சுபாஷ் சாத் இறந்துபோய் ஒன்பது ஆண்டுகள் ஓடிவிட்டன. எனினும், அவர் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டுக் கொல்லப்பட்டாரா அல்லது தடுமாறி விழுந்து இறந்து போனாரா என்பதும் மர்மமாகவே உள்ளது. லிபரான் கமிசன் விசாரணை தொடர்பான விவகாரங்களைக் கவனிக்கும் பொறுப்பு சுபாஷ் சாத்திடம்தான் இருந்துள்ளது என்பதும், அவர் "இறந்து' போன சமயத்தில் மைய அரசில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது காணாமல் போன கோப்புகளை லிபரான் கமிசனிடம் கொடுப்பதற்காக சுபாஷ் எடுத்துச் சென்றதாகக் கூறுகிறது, உ.பி. மாநில அரசு. இது உண்மையென்றால், அந்தக்கோப்புகள் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே "தொலைந்து'போய்விட்டன என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், உ.பி. மாநில அரசோ, லிபரான் கமிசன் தனது அறிக்கையை அளித்த பிறகுதான் கோப்புகள் தொலைந்துபோன விவகாரத்தை வெளியே சொல்லுகிறது. இதனை இவ்வளவுகால தாமதமாக சொல்ல வேண்டிய பின்னணி என்ன என்பதும் மர்மமாக உள்ளது.

லிபரான் கமிசனோ தொலைந்து போய்விட்டதாகக் கூறப்படும் அந்தக் கோப்புகளை அந்தச் சமயத்தில் சுபாஷ் சாத்தை எடுத்துவரச் சொல்லி எந்த உத்தரவும் அளிக்கவில்லை எனக்கூறுகிறது. சுபாஷ் சாத் ஓடும் ரயிலில் இருந்து "விழுந்த' இடத்தைப் புலனாய்வு செய்த டெல்லி போலீசாரோ, "அந்த இடத்தில் சில வெற்றுத் தாள்களையும், அடையாள அட்டைகளையும் தவிர வேறெதுவும் இல்லை'' எனக் கூறிவிட்டனர். சுபாஷ்சாத்தின் தந்தை பிர் பஹ்ன் சாத், தனது மகன் டெல்லிக்குக் கிளம்பிச் சென்றபொழுது தன்னுடன் இத்துணை கோப்புகளை எடுத்துச் சென்றதாகத் தெரியவில்லை எனக் கூறுகிறார். பாபர்மசூதி வளாகத்தினுள் ராமபிரான் ஜெனிக்கவில்லை என்பதை நிரூபிப்பதற்கு அகழ்வராய்ச்சி நடத்தியதைப் போல, இந்தக்"காணாமல்' போன கோப்புகளைக் கண்டுபிடிக்கவும் அகழ்வராய்ச்சி நடத்த வேண்டியிருக்குமோ?

பாபர் மசூதி பிரச்சினையில் முசுலீம்களுக்கு நீதி கிடைத்துவிடக் கூடாது என்பதில் இந்து மதவெறி பாசிசக் கும்பல் குறியாக இருந்து வருவதைப் பாமரர்கள் கூடப் புரிந்து கொள்ளமுடியும். அதே சமயம், தங்களை மதச்சார்பற்றவர்களாகக் கூறிக் கொள்ளும் ஓட்டுக்கட்சிகள் மட்டுமின்றி, சி.பி.ஐ.,போலீசு, நீதித்துறை ஆகிய அரசு உறுப்புகளும் கூட இந்தவழக்கை இத்தனை ஆண்டுகளாக இழுத்தடிக்க வேண்டிய பின்னணி என்ன என்ற கேள்வியை எழுப்பும் பொழுதுதான், மதச்சார்பற்ற இந்திய அரசின் யோக்கியதையைப் புரிந்துகொள்ள முடியும். மதச்சார்பற்ற ஓட்டுக்கட்சிகளின் இரட்டைவேடத்திற்கு எதிராக மட்டுமல்ல; இந்திய அரசின் போலி மதச்சார்பின்மைக்கு எதிராகவும் மக்களைத் திரட்டி போராடினால் மட்டுமே பாபர் மசூதியை இடித்துத் தள்ளிய இந்து மதவெறிபாசிசக் கும்பலைத் தண்டிக்க முடியும்.

· செல்வம்

Thursday 23 September 2010

கொலைக்கள குவாண்டனாமோ!

Source: http://www.muslimleaguetn.com/news.asp?id=1862
Thursday, September 16, 2010
கொலைக்களம் குவாண்டனாமோ! - வெ. ஜீவகிரிதரன்

அமெரிக்க நாட்டின் பொருளாதார இதயமான நியூயார்க் நகரின் இரட்டை கோபுரங்கள் 2001 செப்டம்பர் 11-ல்தான் தகர்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து உலக அளவிலே "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’’ - பிரகடணத்தை அமெரிக்கா அறிவித்து களத்தில் இறங்கியதை நாம் அறிவோம். ஆனால், எண்ணெய் வளம் மிகுந்த அரபு நாடுகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கும் அமெரிக்காவின் பேராசைக்கு இது இன்னொரு காரணம் மட்டுமே என்பதை வெளி உலகம் அறியாது.

அரபு நாடுகள் அனைத்தும் முஸ்லிம் நாடுகளாக இருப்பதால், முதலில் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து-அவர்களை ஒடுக்குவதாக கூறி அந்நாடுகளை தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து-அதன் பின் அங்குள்ள எண்ணெய் வளங்களை கொள்ளையடிக்கிறது அமெரிக்கா.

ஈராக் பேரழிவு ஆயுதங்களை குவித்து வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டி, அதன் மீது "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’’ தொடுத்து, அதிபர் சதாம் உசேனையும் அவரது குடும்பத்தினர், ஆதரவாளர்கள் அனைவரையும் கொன்றொழித்தது. ஆனால், பேரழிவு ஆயுதம் ஒன்றைக் கூட ஈராக் மண்ணில் இருந்து கைப்பற்றி உலகுக்கு காட்ட இயலவில்லை. இன்று ஈராக் என்ணெய் வளம் முழுவதும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டது.

இப்படியான ஆக்கிரமிப்புப் போர்களின் போது பல்லாயிரம் அப்பாவி மக்களைக் கொல்வதுடன் பல நூறு பேரை கைதிகளாக பிடித்து, விசாரணை என்ற பெயரிலே கொடும் சித்ரவதை செய்வது அமெரிக்காவின் வாடிக்கை. ஈராக் மீதான ஆக்ரமிப்புப் போரின் போது ஈராக் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளிலிருந்தும் பல ஆயிரம் பேரை கைது செய்தது அமெரிக்க ராணுவம். அக்கைதிகளை அடைத்து வைக்க கியூபா நாட்டின் குவாண்டனாமோ வளைகுடாவில் சிறைச்சாலையையும் அமைத்தது. இது சிறைச்சாலையாக இல்லாமல் கொடும் சித்ரவதைச் சாலையாகவே இருந்தது. பல நூறு கைதிகள் இங்கு பிணமாக்கப்பட்டனர்.

இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட நாள் முதல் 9.7.2004 வரையிலான மூன்று ஆண்டுகளில் மட்டுமே 24,000 கைதிகள் இந்த சிறையிலே விசாரணை என்ற பெயரிலே மனிதாபிமானமற்ற, மிருகத்தனமான சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். இது வெளி உலகின் குற்றச்சாட்டு அல்ல. அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனமான எப்.பி.ஐ. (F. B. I) இந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலே உள் விசாரணை ஒன்றை நடத்தியது. இந்த மூன்று வருட காலங்களில் குவாண்டனாமோ சிறையில் பணி புரிந்த சுமார் 493 - எப்.பி.ஐ. அதிகாரிகளுக்கு அதன் தலைமையகம் ஈமெயில் ஒன்றை அனுப்பியது. அதில் சிறைக் கைதிகளிடம் இராணுவ அதிகாரிகள் யாரேனும் வரம்புமீறி, அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் பற்றி தெரியுமா? அப்படி ஏதும் நடந்திருந்தால் அதில் சம்பந்தப்பட் அதிகாரிகள் யார்? போன்ற விவரங்களை தலையகத்துக்கு தெரியப்படுத்துமாறு உத்தரவிட்டது. மொத்தம் 493 அதிகாரிகளில் 434 பேர் இதற்கு பதிலனுப்பினர்.

தங்கள் பதிலில், தாங்கள் பணிபுரிந்த பொழுது சிறையில் நடந்த கொடுஞ் செயல்கள், சித்ரவதைகள், மேலும் அதைச் செய்த அதிகாரிகளின் விவரங்கள் ஆகியவற்றை அளித்திருந்தனர். இச்செய்தி எப்.பி.ஐ. தலைமையகத்தால் டிசம்பர் 2004ல் அரசுக்கு அளிக்கப்பட்டது.

மனித உரிமை மீறல்கள், ஐ.நா.வின் ஜெனிவா ஒப்பந்த மீறல் போன்ற கொடுஞ் செயல்களில் அமெரிக்க இராணுவம் ஈடுபட்டது அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பாலேயே வெளிப்பட்டதால், ஒரு உள் விசாரணை நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு அமெரிக்க இராணுவம் தள்ளப்பட்டது.

2004 - டிசம்பரில் தென் பிராந்திய கமாண்டர். பண்டஸ் ஜே.கிரட்டாக் இராணுவ புலன் விசாரணைக்கு உத்தரவிட்டார். பிரிகேடியர் ஜெனரல் ஜான். டி. பர்லோ விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். முதலில் 2 மாதம் விசாரணை நடத்திய ஜான். டி.பர்லோ, தன்னை விட மூத்த அதிகாரிகளையும் விசாரிக்க வேண்டிய நிலை இருப்பதை தலைமையகத்துக்கு தெரியப்படுத்தினார். அதனால் 28.2.2005 அன்று இந்த விசாரணைக் குழுவில் லெப்டினன்ட் ஜெனரல் ரேன்ட்ஸ் எம்.ஷ்மித் மற்றும் அமெரிக்க வான்படையின் தென்பிராந்திய கமாண்டர் டேவிட் மோன்தான் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இந்த புலன் விசாரணைக்குழு 24.3.2005 வரை விசாரணை நடத்தியது. இதில் 100க்கும் மேற்பட்ட அமெரிக்க தென் பிராந்திய இராணுவ அதிகாரிகள், 30க்கும் மேற்பட்ட எப்.பி.ஐ. அதிகாரிகள், ஜாய்ன்ட் டாஸ்க் போர்ஸ் எனப்படும் கூட்டு நடவடிக்கைப் படை பிரிவு 160,170 மற்றும் குவாண்டனாமோ அதிகாரிகள், அமெரிக்க இராணுவ உளவுப் பிரிவு அதிகாரிகள் ஆகியோர் விசாரிக்கப்பட்டனர்.

விசாரணையின் போது பல்வேறு குற்றச் செயல்களில் அமெரிக்க இராணுவம் ஈடுபட்ட தகவல்கள் புற்றீசல்களாய் வெளிவந்தன. இந்த புதிய தகவல்களையும் சேர்த்து புலன் விசாரணை செய்யுமாறு 5.5.2005ல் இராணுவ தலைமையகம் மீண்டும் உத்தரவிட்டது.

சித்ரவதைகள்:

இந்த புலன் விசாரணைக் குழு விசாரிக்க வேண்டியதாக கூறப்பட்ட ஒழுங்கீனங்கள் என்ன தெரியுமா? இராணுவ விதிகளிலே கூறப்பட்டுள்ள விசாரணை உத்திகளை மீறி வேறு வகையான உத்திகளை விசாரணையின் போது கையாண்டது என்பது. அவை யாவை?

1. விசாரணைக் கைதிகளின் மீது இராணுவ நடவடிக்கையில் உபயோகப்படுத்தப்படும் நாய்களை ஏவி விட்டு பயங்கரமாக குரைக்க வைப்பது. கடிக்க விடுவது போல பயமுறுத்துவது (இந்த உத்தி 12.11.2002க்கு பிறகு அங்கீகரிக்கப்பட் உத்தியாக மாற்றப்பட்டது)

2. கைதிகள் குர்ஆனின் ஆயத்துகளை தொடர்ந்து முணுமுணுப்பதாகக் கூறி அவர்களின் வாய்களை சுற்றி ஒட்டும் நாடாவைக் கொண்டு இறுக்கிக் கட்டி வைத்தது.

3. கைதிகளை விசாரணை செய்யும் போது தான் இராணுவ அதிகாரி என்பதை மறைத்து, எப்.பி.ஐ. அதிகாரி எனப் பொய் சொல்லி அவர்களை மிரட்டியது.

4. எப்.பி.ஐ. அதிகாரிகள் தங்கள் பணிகளை செய்ய விடாமல் இராணுவ அதிகாரிகள் தடுத்தது.

5. வக்கிரமான பாடல் இசைகளை பயங்கர சத்தத்துடன் நீண்ட நேரம் அலறச் செய்து கைதிகளை சித்ரவதை செய்தது.

6. ஒரு நாளைக்கு 18 முதல் 20மணி நேரம் விசாரணை என்ற பெயரில் தொடர்ந்து 48 முதல் 54 - நாட்கள் கைதிகளை தூங்கவே விடாமல் விசாரணை செய்தது. தொடர்ந்து 10 அல்லது 15 நிமிடங்களுக்கு மேல் தூங்க அனுமதிக்காதது. (இந்த உத்தி 2.12.2005க்கு பிறகு அங்கீகரிக்கப்பட்ட உத்தியாக மாற்றப்பட்டது).

7. தரையிலே சிறு வளையம் பொறுத்தி அதிலே கைதியின் இரு கைகளையும் மணிக் கட்டுவரை நுழைத்து பூட்டி விடுவது இதன் மூலம் எப்போதும் கைதி குறுகிய நிலையில் குனிந்தே இருக்க வேண்டும்.

8. அளவுக்கு அதிகமான வெப்பத்தையும், அளவுக்கு அதிகமான குளிரையும் மாறி மாறி கைதிகள் மேல் செலுத்தியது (2.12.2005க்கு பின்னர் இந்த உத்தி அங்கீகரிக்கப்பட்டுவிட்டது)

9. ஆண் கைதிகளின் தொடை மீது அமர்ந்து பெண் இராணுவ அதிகாரிகள் "லேப் டான்ஸ்’’ எனப்படும் பாலியல் வக்கிர நடனம் ஆடியது.

10. பெண் இராணுவ அதிகாரி ஆண் கைதி முகத்தின் மீது மாதவிலக்கில் வெளிப்பட்ட இரத்தத்தை பூசியது (விசாரணையில் அது வெறும் சிவப்பு மைதான் என கூறப்பட்டது)-

11. கைதிகளிடமிருந்து குர்ஆன் நூலை பிடுங்கி எறிவது.

12. பெண் இராணுவ அதிகாரிகள் தங்களின் உடைகளைக் களைந்து விட்டு ஆண் கைதிகளின் உடலோடு உரசுவது, அவர்களின் தலை மயிரில் விரல்விட்டு கோதுவது, அவர்களின் மர்ம உறுப்புகளை தொடுவது போன்ற பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவது. (இந்த உத்தி இராணுவ விசாரணையின்போது கைதியின் மன உறுதியை குலைக்கச் செய்வதற்கான அங்கீகரிக்கப்பட்ட உத்திதான் என விசாரணையின்போது விளக்கம் தரப்பட்டது).

13. கைதிகளுக்கு தேவையான உணவு, தண்ணீர் ஆகியவற்றை தராமல் சித்ரவை செய்தது.

14. குர்ஆனை தரையிலே கிடத்தி விட்டு அதன் மேல் ஏறி உட்கார சொல்வது.

15. கைதிகளின் மன உறுதியைக் குலைப்பதற்காக அவர்களின் குடும்பமே தற்போது சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொய் சொன்னது.

இவையல்லாம் கடுமையான உடல் ரீதியான சித்ரவதைகளுக்கும் மேலாக செய்யப்பட்ட மன ரீதியான சித்ரவதைகள்தான். உடல் ரீதியான சித்ரவதைகளுக்கு அளவே இல்லை.

அமெரிக்க இராணுவத்தின் புலன் விசாரணையின்போது கைதிகளிடம் கையாள வேண்டிய விசாரணை உத்திகளில், கைதிகளின் மன உறுதியைக் குலைப்பதற்கென சில உத்திகள் கையாளப்படுகின்றன. இராணுவ விதிகள் எப்.எம்.34 - 52 விதிகள் எனப்படும் அவை என்ன தெரியுமா?

1.
ஆண் கைதிகளுக்கு பெண்களின் உள்ளாடைகளை மட்டும் அணிவிப்பது.

2. கைதியின் தாயும், சகோதரியும் விபச்சாரிகளாக மாறிவிட்டதாக பொய் தகவல் தருவது.

3. கைதி ஒரு ஓரின சேர்க்கையாளன் என முத்திரை குத்துவது. ஓரின சேர்க்கை மூலம் வன் புணர்ச்சிக்குள்ளாக்கப் போவதாக மிரட்டுவது.

4. நாய்க்கு கழுத்திலே கட்டும் பட்டையைப் போல கைதியின் கழுத்திலே கட்டி சிறு கயிறு அதிலே இணைத்து நாள் முழுவதும் நாயைப் போல அறையை சுற்றி, சுற்றி வரச் செய்வது.

5. வக்கிரமான பாடல்களை அலறவிட்டு அந்த இசைக்கு ஏற்ப விசாரணை அதிகாரியுடன் நடனமாட வேண்டும் என கொடுமைப் படுத்துவது.

6. கைதியை முழு நிர்வாணமாக்கி விட்டு பெண் அதிகாரிகளின் மத்தியிலே நிற்கச் செய்வது.

7. தொழுகை நடத்த முயலும் போது தடுப்பது.

8. கைதியில் தலை மீது அடிக்கடி நீரைக் கொட்டுவது.

இந்த உத்திகளின் மூலம் ஒரு கைதி தொடர்ந்து 160 நாட்கள் தனிமைச் சிறையிலேயே, ஒரு நாளைக்கு 18 முதல் 20 மணி நேரம் விசாரிக்கப்பட்டதாக விசாரணைக் கோப்புகளில் இருந்ததை மேற்சொன்ன இராணுவ புலன் விசாரணைக் குழு காண முடிந்தது.

அக்கிரமங்கள் மூடி மறைப்பு!:

இந்த கொடும் செயல்கள் எல்லாம் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகவும், ஐ.நா.வின் ஜெனிவா ஒப்பந்த விதிகளை மீறுவதாகவும், மனித குல நாகரிகத்துக்கு எதிரானதாகவும் இருந்த போதும், விசாரணை நடத்திய சிறப்பு விசாரணைக் குழு அத்துனை அக்கிரமங்களையும் மூடி மறைத்தது. கைதிகள் மீது நடத்தப்பட்ட அத்துமீறல்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்ன.

1. இராணுவ விதிகளில் அங்கீகரிக்கப்பட்ட விசாரணை உத்திகள்.

2. இராணுவ விதிகளால் பிற்பாடு அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட விசாரணை உத்திகள்.

3. அங்கீகரிக்கப்படாத விசாரணை உத்திகள்.

இவற்றில் பெரும்பான்மையான குற்றச்சாட்டுகள் முதல் இரண்டு பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டன. மூன்றாவது வகை குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவர்களை எச்சரித்து விட்டு விடலாம் எனப் பரிந்துரை செய்யப்பட்டது.

சர்வதேச நெருக்கடி காரணமாக சமீபத்தில் குவாண்டனாமோ சிறையை படிப்படியாக மூடிவிடுவது எனவும், அங்குள்ள கைதிகளை அமெரிக்காவின் சாதாரண சிறைகளுக்கு மாற்றி விடுவது என்றும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

கொலைக் களமே நீதிமன்றம்; கொலைகாரர்களே நீதிபதிகள்!!:

2002ம் ஆண்டு கனடா நாட்டைச் சேர்ந்த உமர் காதிர் என்ற 15-வயது சிறுவன் அல்-காயிதா அமைப்பை சேர்ந்தவன் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு குவாண்டனாமோ சிறையில் அடைக்கப்பட்டான்.

இன்றுவரை குவாண்டனாமோ சிறையின் அனைத்து சித்ரவதைகளையும் சந்தித்தும் உயிரோடு உள்ளான். அவன் மீதான வழக்கு விசாரணை 13.8.2010ல் தொடங்குவதாக அமெரிக்க ராணுவ நீதிமன்றம் அறிவித்துள்ளது. விசாரிக்கப்போகும் நீதிபதிகள் யார் தெரியுமா? அதே கொடுங்கோல் இராணுவத்தின் அதிகாரிகள் அடங்கிய ஒரு குழுதான். இங்கு கொலைக் களமே நீதிமன்றம்... கொலைகாரர்களே நீதிபதிகள்!!


- நன்றி பிறைமேடை செப்டம்பர் - 1-15

Wednesday 22 September 2010

அமெரிக்க எண்ணெய் வெறி

Source: http://www.muslimleaguetn.com/news.asp?id=1863

Thursday, September 16, 2010
அமெரிக்காவின் எண்ணெய் வெறி ஆப்கனும் ஈராக்கும் களப் பலி! - வெ. ஜீவகிரிதரன்

உலகின் தலைசிறந்த செய்தி நிறுவனமான பி.பி.சி., கடந்த 29-1-2001 அன்று ஒரு சிறிய செய்தியினை வெளியிட்டிருந்தது. அந்த செய்தி இந்த உலகின் மிகப் பெரிய அழிவுகளுக்கு கட்டியம் கூறும் செய்தி என்பது தெரியாமலே போனது. சுமார் 5 லட்சம் மக்கள் உயிர் உடமைகளை இழக்கவும், அடிமைப்பட்டுப் போகவும் காரணமாக அச் செய்தி இருக்கப் போகிறது என்பதை யாருமே அறியவில்லை.

2001-ல் அமெரிக்க அதிபர் புஷ் அமைத்த அமைச்சரவை பற்றிய செய்தி அது. அமெரிக்க செனட்டின் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் பல கோடிகளுக்கு அதிபதிகள்; பெரும் பணக்காரர்கள். அதிபர் புஷ் பெட்ரோலிய கம்பெனிகள் மூலம் பல லட்சம் கோடிகளுக்கு சொந்தக்காரர். துணை அதிபர் டிக் செனாய் ஹாரிபர்ட்டன்’’ எண்ணெய் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து சுமார் 5 முதல் 6 கோடி டாலர்கள் ஈட்டியவர். டாம் பிரௌன்’’ என்ற எண்ணெய் கம்பெனியில் அதிபராக இருந்த டொனால்ட் இவான்ஸ் - பல கோடிகளின் அதிபதி - வர்த்தகத் துறை அமைச்சர். தேசிய பாதுகாப்பு செயலர் கொண்டலிசாரைஸ் ஹசெவ்ரான்’ என்ற புகழ் பெற்ற எண்ணெய் கம்பெனியின் இயக்குநர். இவ்வாறு "புஷ் அரசாங்கம் - எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம்’’ ஆக உள்ளது என்று அச் செய்தியில் விமர்சிக்கப்பட்டது.

ஒட்டு மொத்த அமைச்சர்களும் - துணை அதிபர், அதிபர் உட்பட - பெட்ரோலிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டு பல இலட்சம் கோடிகளை சம்பாதித்துக் கொண்டிருந்தவர்கள். இவர்களின் அரசு என்ன செய்யும் என யூகிக்க முடியாதா என்ன?

உலகின் எந்த மூலையில் பெட்ரோல் வளம் இருந்தாலும் அங்கே படையெடுப்பதுதானே இவர்களின் குறிக்கோள்! படையெடுப்புக்கு ஏதேனும் ஒரு காரணத்தை இந்த உலகுக்கு சொல்ல வேண்டும். அப்படி சொல்லப்பட்ட வெற்றுக் காரணம்தான் "பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’’ - என்பது.

உலகிலேயே அதிகமான பெட்ரோலிய வளம் கொண்ட நாடுகளில் இராக்கும் ஒன்று. அதேபோல் பல நாடுகளுக்கும் பெட்ரோலியத்தை குழாய்கள் வழியாக கொண்டு செல்லும் முக்கிய கேந்திரமாகவும், பெட்ரோலிய வளம் கொண்ட நாடாகவும் உள்ளது ஆப்கனிஸ்தான். இந்த இரு நாடுகள் மீதான பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’’ செப்டம்பர் 11-ம் தேதி இரட்டை கோபுர தாக்குதல் சம்பவத்துக்கு முன்னாலேயே திட்டமிடப்பட்டு விட்டது என்பது உங்களுக்கு தெரியுமா? முதலில் ஆப்கனிஸ்தான் மீதான ஆக்கிரமிப்பை காண்போம்.


கேஸ்பியன் கடல் எண்ணெக் குழாய் திட்டம்:

ஆப்கன் வழியாக குழாய்கள் பதித்து துர்க்மேனிஸ்தானிலிருந்து இயற்கை எரிவாயுவை பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்துக்கு கொண்டு செல்ல "கேஸ்பியன் கடல் எண்ணெய்க் குழாய் திட்டம்’’ - உருவாக்கப்பட்டது. இத் திட்டத்திலே "அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களும், பாகிஸ்தானும் மிகுந்த ஆர்வம் காட்டியதாக’’ 29-12-1997-ல் பி.பி.சி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த குழாய் திட்டத்தை நிர்மாணிக்க "சென்ட்கேஸ்’’ என்ற அமைப்பு 1997-ல் உருவாக்கப்பட்டது. சென்ட்கேஸ் அமைப்பின் முக்கிய பங்குதாரராக சுமார் 46.5 சதவிகிதம் பங்குகளை கொண்ட "யூனோகால்’ என்ற அமெரிக்க எண்ணெய் கம்பெனி இருந்தது. இந்த கம்பெனியின் இயக்குநராக இருந்தவர் டாக்டர் ரைஸ். இவர் அதிபர் புஷ் நிர்வாகத்தில் வான்படை செயலராக பதவி வகித்தவர். அதற்கு முன்னர் அமெரிக்க ராணுவத்தில் துணை இயக்குநராக பணியாற்றியவர்..


அமெரிக்க ஆதரவு அரசு:

இந்த எரிவாயு குழாய் திட்டத்திற்கு எதிர்ப்பு ஏதும் காட்டாமல் துணை நிற்க வேண்டும் என்பதற்காக தாலிபான் அமைப்புக்கு இந்த யூனோகால் நிறுவனம் வருடம் ஒன்றுக்கு சுமார் நூறு மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை கொடுக்க முன் வந்துள்ளது. 1998-ல் அமெரிக்கா வெளிப்படையாக தன் எண்ணத்தை வெளியிட ஆரம்பித்தது. ஆப்கனில் அமெரிக்க ஆதரவு அரசு இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது. 12-2-1998-ல் நடைபெற்ற "அமெரிக்க அரசின் வெளிநாட்டுக் கொள்கைக்கான கமிட்டியின்’’ கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை வெளி யிடப்பட்டது. அது- "யூனோகால் - எரிவாயு குழாய் திட்டம் உட்பட பல்வேறு எண்ணெய் குழாய் திட்டங்களை அமெரிக்க அரசு ஆதரிக்கிறது. ஆனால், குழாய் வரும் வழியில் உள்ள நாடான ஆப்கனிஸ்தானில் தற்போதுள்ள அரசாங்கத்தை அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை. ஆனால் குழாய் திட்டத்தை ஆதரிக்கிறோம்’’.

"இந்த குழாய் திட்டத்துக்கான சாத்தியப்பட்ட ஒரே வழி ஆப்கனிஸ்தான் வழியாக வருவதுதான். ஆனால், ஆப்கனிஸ்தானில் நமக்கு சவால்கள் காத்திருக்கின்றன. சர்வதேச சமூகம் ஒத்துக் கொள்ளும் ஒரு அரசு ஆப்கனில் அமையும் வரை 'சென்ட்கேஸ்’ நிறுவனம் கட்டுமானங்களை துவக்க முடியாது’’ - என குறிப்பாக ஆப்கனில் உள்ள அரசை நீக்கிவிட்டு புதிய அமெரிக்க ஆதரவு - பொம்மை அரசை நிறுவ வேண்டிய அவசியத்தை முன் வைக்கிறது.

1998 நவம்பர் 3-ம் தேதி பி.பி.சி. செய்தி நிறுவனம் ஒரு செய்தியை வெளியிட்டது. "அமெரிக்க எண்ணெய் நிறுவனமான 'யூனோகால்’ நிதியுதவிடன் ஆப்கனில் ஒரு பயிற்சித் திட்டம் செயல்பட்டுக் கொண்டிருந்தது. 3-11-98 அன்று அமெரிக்காவின் ராணுவம் 80-க்கும் அதிகமான ஏவுகணைகளை ஆப்கனிஸ்தான் மீதும் சூடான் மீதும் ஏவியது. இந்த ஏவுகணைத் தாக்குதல்களால் யூனோகால் நடத்தி வந்த பயிற்சி திட்டம் மூடப்பட்டது. இந்த ’’யூனோகால்’’ நிறுவனம்தான் துர்க்மேனிஸ்தானிலிருந்து, பாகிஸ்தானுக்கு, ஆப்கன் வழியாக எரிவாயு குழாய்களை பதிக்கும் திட்டத்தை செயல்படுத்த இருந்த நிறுவனம்’’ . இதுதான் அந்த செய்தி.

அமெரிக்கா தன் தாக்குதலை 1998லேயே தொடங்கி விட்டது. தொடர்ந்து 2-1-1999 அன்று ஆப்கனில் உசாமா பின்லேடனின் அமைப்பினர் தங்கியுள்ள முகாம்களின் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறி குண்டு மழை பொழிந்தது. 15-3-2001-ல் ரஷ்யா, அமெரிக்கா ஈரானுடன் இந்தியாவும் இணைந்து கொண்டது. ஆப்கனின் தாலிபான் அரசை வீழ்த்துவதுதான் இந்த நாடுகளின் உடனடி திட்டம். இந்த நான்கு நாடுகளும் இணைந்து செயல்பட்டதாலேயே ராணுவ நடவடிக்கைகளின் முக்கிய கேந்திரமான பாமியன் நகரை கைப்பற்ற முடிந்தது என டெல்லி ராணுவ வட்டாரங்கள் பெருமிதப்பட்டதாக செய்திகள் வெளியாயின. ஊடகங்கள் வெளிப்படுத்திய உண்மை

2001 செப்டம்பர் 3-ம் தேதியே பி.பி.சி. செய்தி நிறுவனம் ஒரு செய்தியை வெளியிட்டது. அதில் மத்திய கிழக்கு பகுதிக்கு, இங்கிலாந்தின் ராணுவமும், போர்க் கப்பல்களும் விரைவதாக செய்தி சொன்னது. 24 போர்க் கப்பல்கள், இரண்டு அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்கள், "எச்.எம்.எஸ். இல்லஸ்ரியஸ்’’ என்ற விமானம் தாங்கி போர்க் கப்பலின் தலைமையிலே இங்கிலாந்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகக்கு விரைகிறது.

"கிறிஸ்துமஸ் விழாவிற்கு முன்னதாக மிகப் பெரும் பேரழிவு நடவடிக்கைகளை இந்த ஆபரேஷன் மேற்கொள்ளும். இதனால் சுமார் 100 மில்லியன் பவுண்டுகள் அரசுக்கு செலவாகும்’’ என அச் செய்தி கூறியது. சரியாக ஒரு வாரத்தில் (செப்டம்பர் 11) இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டது. அமெரிக்கா "பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’’ - பிரகடனம் செய்தது. உடனடியாக ஆப்கனில் நுழைந்த அமெரிக்க ராணுவம் தாலிபன் அரசை தூக்கி எறிந்தது. 'சர்வதேச சமூகம் ஒப்புக் கொள்ளும் அரசை’ நிறுவியது. இடைக்கால அரசு ஹமீத் கார்சாய் தலைமையிலே நிறுவப்பட்டது. இந்த ஹமீத் கர்சாய் 'யூனோகால்’ எண்ணெய் நிறுவனத்தின் ஆலோசகராக இருந்தவர். 'யூனோகால்’’ சார்பாக தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியவர். இந்த 'யூனோகால்’ நிறுவனம்தான் ஆப்கனில் எரிவாயு குழாய் திட்டத்தை நடைமுறைப்படுத்த இருந்தவர்கள். இப்போது அந்த நிறுவனத்தின் ஆலோசகரே ஆப்கனின் அதிபராக அமர்த்தப்பட்டு விட்டார். ஆப்கனில் எரிவாயு மற்றும் எண்ணெய் குழாய்களை பதிக்கும் அமெரிக்கா எண்ணெய் நிறுவனங்களின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக இருந்த அரசை தூக்கி எறிந்து விட்டு, அமெரிக்காவின் பொம்மை அரசை நிறுவுவதற்காகவே ஆப்கன் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் போர் நடந்தது என்பதற்கு இதைவிட சான்று ஏதும் தேவையா? ஆப்கன் ஆக்கிரமிப்பு 12-2-1998லேயே திட்டமிடப்பட்டு, சிறிது சிறிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டே இருந்தது. "11-9-2001 இரட்டை கோபுர தாக்குதலும், பயங்கரவாதத்துக்கு எதிரான போரும்’’ வெறும் பம்மாத்துகளே என்பதை உலகமே அறியும்.


முன்னரே திட்டமிடப்பட்டது:

அடுத்ததாக ஈராக் ஆக்கிரமிப்பு. இரட்டை கோபுர தாக்குதலுக்கு 6 மாதங்களுக்கு முன்னரே ஈராக் ஆக்கிரமிப்பு போரை அமெரிக்கா திட்டமிட்டு விட்டது. 2001 ஏப்ரலில் நடந்த அதிபர் புஷ்ஷின் அமைச்சரவை, "சர்வதேச சந்தையிலே எண்ணெய் வரத்து - நிலைகுலைவதற்கு ஈராக் எண்ணெய் சப்ளை காரணமாக இருக்கிறது. இது அமெரிக்காவின் நலன்களுக்கு எதிரானது. எனவே, ராணுவ நடவடிக்கை உடனடித்தேவை’’ - என தீர்மானித்தது. இதை சண்டே ஹெரால்டு என்னும் இங்கிலாந்து செய்திப் பத்திரிகை 6-10-2002-ல் அம்பலப்படுத்தியது.

"பயங்கரவாதத்துக்கு எதிரான போர்" பேரழிவு ஆயுதங்கள், இரட்டை கோபுர தாக்குதல், ஐ.நா.வின் பேரழிவு ஆயுத ஆய்வு, இராக்கிய மக்களின் மனித உரிமை மீறல் - இவை எதுவும் ஈராக் மீதான போருக்கு காரணமே அல்ல. புஷ்ஷின் தேர்தல் பிரச்சாரத்தின்போது பல ஆயிரம் கோடிகளை கொட்டிக் கொடுத்த எண்ணெய் கம்பெனிகள் மற்றும் புஷ்ஷின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த எண்ணெய் கம்பெனி அதிபர்கள் விருப்பத்துக்கு இணங்கவே ஈராக் மீதான ஆக்கிரமிப்பு போர் துவங்கியது. 2002 செப்டம்பர் 12-ல் அமெரிக்க அதிபர் புஷ், ஐ.நா.வுக்கு சொன்னது, "ஈராக் தன்னிடமுள்ள பேரழிவு ஆயுதங்களை அழிக்கவோ, அகற்றவோ, வெளிப்படையாக எடுத்துக் காட்டவோ மறுத்தால் அமெரிக்கா தாக்கியே தீரும்’’. ஆனால் ஈராக் தன்னிடம் அப்படிப்பட்ட பேரழிவு ஆயுதங்கள் எதுவுமே இல்லை என தொடர்ந்து மறுத்து வந்தது.

1998-ல் ஐ.நா.வின் ஆயுத ஆய்வுக்குழுவில் பணியாற்றி பின்னர் பதவி விலகிய ஸ்காட் ரிட்டர் 2002 செப்டம்பர் 8-ம் தேதியே ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் எதுவுமே இல்லை என்றும், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் குற்றச்சாட்டுகளில் கொஞ்சம்கூட உண்மையே இல்லை என்றும், குறிப்பாக ஈராக், இரட்டை கோபுரங்களை தகர்த்த சக்திகளுக்கு எதிராக நிற்கிறது என்றும், ஈராக்கிய பாராளுமன்றத்திலே உரை நிகழ்த்தினார்.

ஆனாலும், அமெரிக்காவும், இங்கிலாந்தும் கூட்டு சேர்ந்து ஈராக் மீதான ஆக்கிரமிப்புப் போரை தொடர முடிவு செய்து விட்டன. மிகப் பெரிய எண்ணெய் கம்பெனிகளும், ஆயுத தளவாடங்கள் உற்பத்தி செய்யும் கம்பெனிகளும் இதன் பின்புலமாக நின்றனர். காரணம் ஈராக் உலகிலேயே இரண்டாவது பெரிய எண்ணெய் வளம் கொண்ட நாடு என்பதால், அதை முழுக்க முழுக்க தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட வேண்டும் என்பதுதான். மேலும் போர் என ஆரம்பித்து விட்டால், அண்டை நாடுகள் மற்றும் அந்த பிராந்தியம் முழுவதமே போர் பதற்றம் நிலவும். அதனால் பல இலட்சம் கோடிகளில் ஆயுத வியாபாரமும் செழிப்பாக நடக்கும் என்பதுதான் இரண்டாவது காரணம்.

அமெரிக்காவின் எரிசக்தி துறை 1999-ல் ஒரு மதிப்பீட்டை செய்தது. "ஈராக், தன்வசம் 112 பில்லியன் ( 1 பில்லியன் என்பது 100 கோடி) பேரல்கள் பெட்ரோலும், 110 டிரில்லியன் (1 டிரில்லியன் என்பது 1 லட்சம் கோடி) கனஅடி எரிவாயுவும் வைத்துள்ளது. உலக அளவிலே எண்ணெய் வளத்தில் இரண்டாம் இடம் பெற்றுள்ள ஈராக் சர்வதேச எண்ணெய் மார்க்கெட்டிலே ஒரு தீர்மானகரமான சக்தி’’ என அறிக்கை அளித்தது.

"அதிபர் புஷ், ஈராக் சம்பந்தமாக என்ன முடிவு செய்தாலும் சரியே. அது அமெரிக்காவின் எரிசக்தி துறையை பிரகாசமாக மாற்றுவதாகவே இருக்கும்’’ என்றார் - வௌளை மாளிகையின் அதிகாரப்பூர்வ செய்திதொடர்பாளர் ஆரி பிளசர்.

அமெரிக்க இராணுவப் போரின் போது அழிக்கப்படும் ஆபத்து உள்ள எண்ணெய் கிணறுகளை முதலில் தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து பாதுகாக்க வேண்டும் என வெளியுறவுக்கான கவுன்சில் அமெரிக்க அரசுக்கு டிசம்பர் 2002-ல் பரிந்துரை செய்தது.

2001 ஜனவரியில் அதிபர் புஷ் பதவியேற்ற 10 நாட்களுக்குள்ளாகவே ஈராக்கின் சதாம் உசேன் அரசை தூக்கியெறிவதற்கான வழிவகைகளை வகுக்குமாறு தன் சகாக்களுக்கு உத்தரவிட்டார்.

"சதாம் வீழ்த்தப்பட்ட பிறகான ஈராக்’’ என்று பெயரிடப்பட்ட திட்டம் 2001 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ஆலோசிக்கப்பட்டது. அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகனின் "ஈராக் எண்ணெய் வயல்களுக்கான ஒப்பந்ததாரர்கள் பட்டியல்’’ ஈராக்கில் வளமான எண்ணெய் வயல்கள் இருக்கும் வரைபடத்தை உள்ளடக்கியதாக 5-3-2001-ல் தயாரிக்கப்பட்டது.


சண்டே ஹெரால்டு செய்தி:

'சண்டே ஹெரால்ட்’ என்ற செய்தித்தாள் 6-10-2002-ல் "மேற்குலகின் எண்ணெய்க்கான போர்’’ என்ற தலைப்பில் "செப்டம்பர் 11-க்கு முன்னமே ஈராக்கின் எண்ணெய் வளங்களை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் திட்டத்துடன் ஈராக் மீதான தாக்குதலுக்கு நியாயம் கற்பித்துக் கொண்டிருந்தது’’ என எழுதியது.

29-1-2001 பி.பி.சி. செய்தி நிறுவனம் வெளியிட்ட "எண்ணெயும் புஷ் நிர்வாகமும்’’ என்ற செய்தியில், "இதற்கு முன்பிருந்த அரபுகளுக்கும் புஷ் தலைமையிலான அமைச்சரவைக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் இவர்களில் பெரும்பான்மையினர் எண்ணெய் கம்பெனிகளுடன் வியாபார தொடர்புள்ளவர்கள்’’ - எனக் கூறியது.

அதே பி.பி.சி. 18-01-2001-ல் "புஷ் எண்ணெய் வர்த்தகத்தில் மிக நெருக்கமான நீண்ட கால உறவை வைத்துள்ளனர். அவர் மட்டுமல்ல. அவர் அமைச்சரவையில் பலர் அப்படித்தான் உள்ளனர். இவர்களின் தேர்தல் பிரச்சாரத்தின் போது எண்ணெய் நிறுவனங்கள் மறைமுகமாக பல்லாயிரம் கோடி நிதியுதவி செய்துள்ளன’’ என செய்தி வெளியிட்டது.

இந்த பின்னணியிலேதான் அதிபர் புஷ், ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள், இரசாயன ஆயுதங்கள், உயிர்க்கொல்லி, நச்சுக்கிருமி ஆயுதங்கள் பெருமளவில் குவித்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை ஈராக் ஒப்படைக்காவிடில் தாக்குதல் தொடுக்கப்படும் என்றும் அறிவிக்கிறார். அமெரிக்காவும், இங்கிலாந்தும் சர்வதேச சட்டங்கள், விதிகள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டு ஆக்கிரமிப்புப் போருக்கு தயாராகின.

அடாவடி நடவடிக்கை:

இங்கிலாந்தின் அட்டர்னி ஜெனரல் மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் இருவரும் இந்த தாக்குதல் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேய்ரை எச்சரித்தனர்.

ஈராக்கின் அமைச்சரவையிலேயே தனக்கு உளவு சொல்லும் ஒருவரை அமெரிக்க உளவு நிறுவனம் சி.ஐ.ஏ. வைத்திருந்தது. அவரை தொடர்பு கொண்டு சி.ஐ.ஏ. உளவுத் தகவல் சேகரித்தது. அத்துடன் ஈராக் வந்திறங்கிய சி.ஐ.ஏ. உளவாளிகள் ஈராக்கின் "பேரழிவு ஆயுதங்கள்’’ குறித்த தகவல்களை மும்முரமாக சேகரித்தனர். இறுதியில் சி.ஐ.ஏ. வின் தலைவர் ஜார்ஜ் டெனட், 'ஈராக்கின் வசம் பேரழிவு ஆயுதங்கள் எதுவுமே இல்லை' யென அமெரிக்க அரசுக்கு தகவல் அளித்தார். சி.ஐ.ஏ.வும், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனமும் இணைந்து ஈராக் மேற்குலகிற்கு ஒரு பயமுறுத்தல் அல்ல என்றும், அதனிடம் எவ்வித பேரழிவு ஆயுதமும் இல்லை என்றும், அதி காரப் பூர்வமாக அறிவித்தன. மேலும், ஈராக் மீது தாக்குதல் தொடுப்பது அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புக்கு கேடாக முடியும் எனவும் சி.ஐ.ஏ. எச்சரித்தது.

ஆனால், துணை அதிபர் டிக்செனாய் மற்றும் ராணுவ அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் இருவரும் சி.ஐ.ஏ. உளவு நிறுவனத்தை ஓரங்கட்டினர். ராணுவத்தின் துணை அமைச்சர் பால் உல்ப்ஹோவிட்ஸ் மேற்பார்வையில் டக்ளஸ்பைத் தலைமையில் சிறப்பு திட்டக் குழுவை உருவாக்கினர். இந்த குழு உளவுத் தகவல்கள் என்ற பெயரில் தாக்குதலுக்கு சாதகமான விஷயங்களை செனட்டுக்கும், அமைச்சரவைக்கும் அளித்தது. சில தகவல்களை வேண்டுமென்றே ஊடகங்களுக்கு கசிய விட்டது. இதன் மூலம் தாக்குதல் தொடுக்க வேண்டியது நியாயமே என்ற பொதுக் கருத்தை திட்டமிட்டு உருவாக்கியது.

கடைசியாக 20-03-2003-ல் அமெரிக்க ராணுவம் அதிகாரப் பூர்வமான ஈராக் மீதான ஆக்கிரமிப்பு தாக்குதலை ஆரம்பித்து விட்டது. 1-5-2003-ல் சதாம் அரசு தூக்கியெறியப்பட்டு ஈராக் முழுவதுமாக கைப்பற்றப்பட்டு விட்டதாக அறிவித்தது. இராக்கின் அதிகாரப்பூர்வ ராணுவமும் கலைக்கப்பட்டது. சதாமின் மகன்கள் உத்தய் மற்றும் குசாய் இருவரும் 22-6-03-ல் படுகொலை செய்யப்பட்டனர். சதாம் உசேன் 14-2-2003-ல் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஒரு வருடம் தேடியும் அமெரிக்கா சொன்ன பேரழிவு ஆயுதங்கள் எதுவுமே ஈராக்கில் இல்லை என்பதால் அவற்றை தேடும் திட்டம் 24-1-2004-ல் நிறுத்தப்பட்டது.

அடுத்த குறி ஈரான்:

உலகின் இயற்கை எரிவாயுவில் மொத்தம் 40 சதவீதத்தை தன்னகத்தே வைத்திருக்கும் ஈரான்- அமெரிக்காவின் அடுத்த குறி. ஈரான் பேரழிவு ஆயுதமான அணு ஆயுதம் தயாரிப்பதாக அமெரிக்கா பிலாக்கனம் பாட ஆரம்பித்து விட்டது. மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா ஏராளமான படைகளையும், ஆயுதங்களையும் ஏற்கனவே குவித்து வைத்துள்ளது. ஈரானின் இருபுற எல்லைகளான ஈராக்கும், ஆப்கனும் தற்போது அமெரிக்காவின் பிடியில்.

இன்னுமொரு ஆக்கிரமிப்பு யுத்தத்துக்கான அடித்தளம் போடப்பட்டு விட்டது. கூடிய விரை வில் ஒரு "பயங்கர வாத எதிர்ப்பு போர்’’ அல்லது "பேரழிவு அணு ஆயுத எதிர்ப்பு போர்’’ என அமெரிக்கா பரணி பாடும். கொலைக்கார கூட்டத்தின் குரல் வளையை நெறிக்கும் வரை அதன் வெறியாட்டம் ஓயாது.

என்ன செய்யப் போகிறோம்???


- நன்றி பிறைமேடை - செப்டம்பர் - 16-31

Monday 13 September 2010

பக்கிங்காம் கால்வாய்

பக்கிங்காம் கால்வாய்: தமிழக கடலோரப்பகுதி வளர்ச்சி பெற தூத்துக்குடி வரை நீட்டிக்கப்படுமா?

பக்கிங்காம் கால்வாயை சென்னை திருவான்மியூரில் இருந்து, தூத்துக்குடி வரை நீட்டிப்பதன் மூலம், தமிழக கடலோரப் பகுதியில் மிகப்பெரிய வளர்ச்சித் திட்டங்களை உருவாக்க முடியும். பக்கிங்காம் கால்வாய், இந்தியாவின் கிழக்கு கடற்கரையோரம் காக்கிநாடாவில் (ஆந்திரா) இருந்து, தெற்கே மரக்காணம் (புதுச்சேரி) வரை அமைந்துள்ளது.

சில நூறு ஆண்டுகளுக்கு முன் தோண்டப்பட்ட இக்கால்வாய் மூலம், கட்டுமானம் மற்றும் உணவுப் பொருட்கள் ஆந்திராவிற்கும், தமிழகத்திற்கும் இடையே கொண்டு வரப்பட்டன. ஆனால், கடந்த 60-70 ஆண்டுகளுக்கு முன், இக்கால்வாய் நீர்வற்றி தூர்ந்து போய், இக்கடலோர நீர்வழிப் பாதை முற்றிலுமாக மறைந்து போய் விட்டது. மூன்று காரணங்களால் இந்நீர் வழிப்பாதை தூர்ந்து போனது.

* சென்னை பகுதியில் பூமி மேலே எழும்புவதாலும், அதனால் எண்ணூர் மற்றும் கோவளம் கிரீக் (கடல் நீர்நிலத்தில் உட்புகும் ஓடைகள்) மூலம் கால்வாய்க்கு வந்த நீர் குன்றியது.

* சென்னை பகுதியில் பூமி மேலே எழும்புவதால், இந்நீர் வழிப்பாதைக்கு மேற்கு பகுதியிலிருந்து கிழக்கே, வங்காள விரிகுடாவில் கலக்கும் நதிகள் மற்றும் ஓடைகள் அதிகமாக மண்ணைக் கொண்டு வந்து கொட்டி, இக்கால்வாய் மண் செரிமானம் அடைந்தது.

* கடலோரப் பகுதியின் அபரிமிதமான வளர்ச்சித் திட்டங்களால் ஏற்பட்ட ஆக்கிரமிப்பு ஆகியவை. ஆனால், பக்கிங்காம் கால்வாயை வடக்கே திருவான்மியூரில் (சென்னை) இருந்து, தெற்கே மரக்காணம் வரை புதுப்பிப்பதோடு, இக்கால்வாயை கடற்கரையோரமாக மரக்காணத்தில் (புதுச்சேரி) இருந்து, காரைக்கால், வேளாங்கண்ணி, வேதாரண்யம், ராஜாமடம், மணமேல்குடி, ராமநாதபுரம் மற்றும் வைகை கடல்கரையோரமாக தூத்துக்குடி வரை நீட்டிக்க முடியும். அதற்கான நிலவியல் சாத்தியங்கள் இருப்பதாகவும், செயற்கைக் கோள்கள் மூலம் நடத்திய ஆய்வுகள் காண்பிக்கின்றன.

அப்படி அமைப்பதற்கு ஏதுவாக, வடக்கே மரக்காணத்திலிருந்து தெற்கே தூத்துக்குடி வரை, கடந்த கால கடல்மட்ட மாறுதல்களால் உருவாக்கப்பட்ட நீளமான கால்வாய் போன்ற களிமண்ணால் ஆக்கிரமிக்கப்பட்ட பள்ளங்களும், அப்பள்ளங்களின் இருபுறங்களிலும் நீளமான மணல்மேடுகளும் உள்ளன. இப்பள்ளங்களை ஆராய்ந்து, அதன் மூலம் தக்க பாதையைக் கண்டறிந்து, அதன் வழியே பக்கிங்காம் கால்வாயை தூத்துக்குடி வரை நீட்டிக்க முடியும். அவ்வாறு நீட்டிப்பதற்கு, கடல்நீர் நிலத்தில் உட்புகும் ஓடைகள் (கிரீக்) மூலம், கடல் நீரை உள்ளே கொண்டு வந்து, நீரோட்டத்தை உருவாக்கலாம்.

உதாரணமாக, வேதாரண்யம் பகுதியில் கிரீக் (1), (2) மற்றும் (3) வழியாக கடல்நீரை பக்கிங்காம் கால்வாய்க்கு கொண்டு வரலாம். இந்நீரை வேதாரண்ய பகுதியை பொருத்தவரை, இரண்டு பாதையில் பக்கிங்காம் கால்வாயை தோண்டி ஓடச் செய்யலாம். ஒன்று: தில்லை விளாகம் (4) வழி, மற்றொன்று: வேதாரண்யம் கடலோர நீர்நிலை வழி (5). அப்படி கொண்டு செல்வதால், தில்லைவிளாகப் பகுதியில் (4) இக்கால்வாய் நீரை தில்லைவளாகம் பகுதியில் உள்ள வறண்ட சதுப்பு நிலத்தில் பரப்பி, அதன் மூலம் மீன்வளர்ப்பு, மீன் உணவு வகை தயாரித்தல், உப்பு மற்றும் கடல்சார் வேதியியல் பொருட்கள் உற்பத்தி ஆகியவற்றை உருவாக்க முடியும்.

அதுபோலவே வேதாரண்யம் கடலோரத்தில், தற்போது மண் செரிமானம் அடைந்து, மறைந்து போய் கொண்டிருக்கும் கடலோர நீர்நிலை (5) மூலம், பக்கிங்காம் கால்வாயின் மறுகிளையை கொண்டு சென்று, மண் செரிமானத்தால் மறைந்து விட்ட கடலோர இந்நீர் நிலையை மறுபடியும் உருவாக்கி, கடல்சார் வேதியியல் பொருட்கள், மீன்வளர்ப்பு, மீன் உணவு தயார் செய்தல், புன்னைக்காடுகள் வளர்ச்சி ஆகியவற்றை செயல்படுத்தலாம். இதேபோன்று இக்கால்வாயை நீட்டிப்பதன் மூலம், தமிழகக் கடலோரத்தில் பல இடங்களில், புன்னைக் காடுகளை உருவாக்கலாம்.

உதாரணத்திற்கு, ராஜாமடம் பகுதியில் (6) கடலில் கலக்கும் நதிநீரை கால்வாய்க்கு மேற்கே தேக்கி, (7) கடல்நீரை டர்பைன் மூலம் (8) அலை அலையாக நதிகளின் முகத்துவாரத்தில் செலுத்தி கடல்நீரும், நதிநீரும் கலக்கும் தன்மையை உருவாக்கி, பக்கிங்காம் கால்வாயின் பகுதிகளில் காணப்படும் நதிகளின் கழிமுகத்தில் புன்னைக் காடுகளை உருவாக்க முடியும். இதுபோன்ற புன்னைக் காடுகளை உருவாக்குவதன் மூலம், சுனாமி மற்றும் புயல் அலை எழும்பும் காலங்களில், கடல்நீர் உட்புகுதலை தடுத்து நிறுத்த உதவும்.

இதுபோன்று பக்கிங்காம் கால்வாயை மேற்கூறியவாறு நீட்டிப்பதால், பல அரிய நன்மைகள் உள்ளன. அவை

* கேரளா மாநிலத்தில் உள்ளது போல, கடலோர நீர்வழிப் பாதையின் மூலம் போக்குவரத்து.

* சீர்காழி, சிதம்பரம், நாகூர், வேளாங்கண்ணி, சிக்கல், காரைக்கால், திருநள்ளார், தேவிபட்டினம், ராமேஸ்வரம் போன்ற புனித தலங்களை இணைத்தல்.

* கடலோரப் பகுதிகளில், பல சிறு துறைமுகங்களை அமைத்தல்.

* கால்வாயின் இருமருங்கிலும் உள்ள சதுப்பு நிலத்தில், சுற்றுப்புறச்சூழல் பாதிக்காத மீன் வளர்ப்பு மற்றும் உப்பளங்கள்.

* புன்னைக் காடுகள் வளர்த்தல் போன்ற, பல வளர்ச்சித் திட்டங்களை உருவாக்க முடியும்.

உண்மையிலேயே தமிழகக் கடலோர அமைப்பு, இயற்கை நமக்கு தந்த மிகப்பெரிய வரப்பிரசாதம். ஆகவே, பக்கிங்காம் கால்வாயை வடக்கே திருவான்மியூரில் (சென்னை) இருந்து, தெற்கே தூத்துக்குடி வரை நீட்டிப்பதன் மூலம், தமிழக கடலோரப் பகுதியில் மிகப்பெரிய வளர்ச்சி திட்டங்களை உருவாக்க முடியும். இதற்கு செயற்கைக்கோள் தொழில் நுட்பம் சார் நிலவியல் ஆய்வு தேவை.


- சோம. இராமசாமி (துணைவேந்தர், காந்திகிராம கிராமியப் பல்கலைக் கழகம், காந்தி கிராமம்)

"நிறைய சம்பாதித்தும் சந்தோஷம் இல்லை"

"நிறைய சம்பாதித்தும் சந்தோஷம் இல்லை" - ஆய்வு


அதிகமாக சம்பாதித்து சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக, தங்கள் சொந்த நாடுகளை விட்டு, வளமான நாடுகளுக்கு செல்வோர், உண்மையில் அப்படி சந்தோஷமாக இருக்கின்றனரா என்று ஓர் ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவு எதிர்மறையாகத் தான் அமைந்தது.

நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் உள்ளவர்கள், பிரிட்டன், அமெரிக்கா போன்ற வளமான நாடுகளுக்குச் சென்று தங்கள் திறமைக்கேற்ப அதிகளவில் சம்பாதித்து அதன் மூலம் வாழ்வில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று அந்நாடுகளுக்குச் செல்கின்றனர். சொந்த நாடுகளிலிருந்து அயல் நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து செல்வோரின் வாழ்க்கை சந்தோஷகரமானதாக இருக்கிறதா அல்லது அவர்கள் சென்ற நாட்டில் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனரா என்று சமீபத்தில் ஓர் ஆய்வு நடந்தது.

“பொருளாதார புலம் பெயர்வும் மகிழ்ச்சியும்: தாயகத்தினர் மற்றும் குடியேறுவோருக்கு இடையிலான ஓர் ஒப்பீடு’ என்ற தலைப்பில் பிரிட்டனைச் சேர்ந்த சமூகவியலாளர் டேவிட் பர்ட்ராம் என்பவர் இந்த ஆய்வை நடத்தினார். மொத்தம் 1,400 பேர் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர். ஆய்வின் இறுதியில், குடியேறுவோர் தாங்கள் எதிர்பார்த்த படி மகிழ்ச்சியாக இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

இது குறித்து டேவிட் கூறியதாவது: அதிகளவில் சம்பாத்தியம் செய்வதால் மகிழ்ச்சி கிடைத்து விடும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு தவறானது என்பதை தான் இந்த ஆய்வு நமக்கு காட்டுகிறது. அயல் நாடுகளிலிருந்து வளமான நாடுகளுக்கு குடியேறியவர்களில் பெரும்பாலோர் மனச்சோர்வுடன் தான் உள்ளனர். புலம் பெயர்ந்தோர் அதிகளவில் சம்பாதித்தாலும், தங்கள் உறவுகளை அவர்களால் முழுமையாகப் பேணிக் கொள்ள முடிவதில்லை. அதனால், சொந்த நாட்டுக்காரர்களை விட அந்த நாட்டில் குடியேறியவர்கள் மிகவும் குறைவான அளவிலேயே மகிழ்ச்சி அடைகின்றனர்.

தற்போதைய நிலையை விட அதிகமாகச் சம்பாதித்தால் மகிழ்ச்சியாக வாழலாம் என்று நினைத்துத் தான் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். ஆனால், அங்கு சென்றவுடன் மேலும் அதிகமாகச் சம்பாதித்தால் தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்ற நிலை உருவாவதும் இதற்கு ஒரு காரணம். சம்பாத்தியத்துக்கு ஏற்றாற்போல விருப்பங்களும் அதிகரித்து விடுகின்றன. நம்மில் பெரும்பாலோர், மகிழ்ச்சியை விட பணத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். இந்த ஆய்வும், அது புலம் பெயர்வோர் விஷயத்தில் சரி தான் என்பதை காட்டுகிறது. ஆனால், வளமான ஒரு நாட்டில் வந்தேறியாக வாழ்வது என்பது மிகவும் கடினமானது. இவ்வாறு டேவிட் தெரிவித்தார்.

இருபது வயது குறைய - இதோ ஒரு வழி

இருபது வயது குறைய - இதோ ஒரு வழி


தினசரி அரை மணி நேரம் நடைபயிற்சி செய்தால் வயதானவர்களின் மூளை செயல்பாடு 20 ஆண்டுகள் வரை இளமையாகும் என அமெரிக்க ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது. உடற்பயி ற்சிகளுக்கும் மூளையின் செயல்பாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர்.

59 முதல் 80 வயது வரை யுள்ள 65 பேர் தேர்வு செய்யப்பட்ட னர். அவர்களை தொட ர்ந்து ஒரு மாதத் துக்கு தினமும் அரை மணி நேரம் நடை பயிற்சி செய்ய கேட்டுக் கொள்ளப் பட்டது. அதற்கு முன்ன தாக, அவர்களது மூளை இயக்கத்தை சோதனை செய்து நிபுணர்கள் குறித்து வைத்துக் கொண்டனர். 18 முதல் 35 வயது வரையுள்ள 35 பேரை தேர்வு செய்து அவர்களின் உடற் பயிற்சி வழக்கம், மூளையின் செயல் பாடுகளை குறித்துக் கொண்டனர்.

ஒரு மாதம் கழித்து, கடுமை யான உடற் பயிற்சி செய்து வந்த இளைஞர்களின் மூளை செயல் பாட் டையும், தினசரி நடை பயிற்சி செய்த வயதானவர்களின் மூளை இயக்கத்தையும் சோதித்த னர்.

கடுமையான உடற் பயிற்சிகளை விட நடை பயிற்சியால் மூளையின் முக்கிய நரம்பு கள் சுறுசுறுப்படைந்தது தெரிய வந்தது. நடைபயிற்சி செய்தவர்களின் உடல் சுறுசுறுப்பு, வாழ்க்கைத்தரம் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததுபோல இருந்தது. எனவே, நடுத்தர, வயதான வர்களுக்கு நடைபயிற்சி சிறந்த பலன் அளிக்கும் என்று நிபுணர்கள் அறிவித்துள்ளனர்

Saturday 11 September 2010

Photos: Eid Al Fitr 2010 - Around the world

Eid Al Fitr 2010 - Around the world
Prayer and its celebration

1. New moon: A crescent - marking the start of a new lunar (Shawwal) month and the symbol of Islam - is seen in the sky from Silver Spring, in the U.S. state of Maryland

New moon: A crescent - marking the start of a new lunar month and the symbol of Islam - is seen in the sky from Silver Spring, in the U.S. state of Maryland


2. All pray to Mecca: Tens of thousands of Muslim pilgrims inside the Grand Mosque in Saudi Arabia

All pray to to Mecca: Tens of thousands of Muslim pilgrims inside the Grand Mosque in Saudi Arabia


3. Happy: Palestinian look joyful as they gather outside the Al-Aqsa Mosque in Jerusalem's Old City

Happy: Palestinian look joyful as they gather outside the Al-Aqsa Mosque in Jerusalem's Old City


4. Packed: Muslims offer Eid al-Fitr prayers in front of the Taj Mahal in India

Packed: Muslims offer Eid al-Fitr prayers in front of the Taj Mahal in northern India


5. Devout: Worshippers in neat rows fill every part of the National Mosque in Dhaka, Bangladesh

Devout: Worshippers in neat rows fill every part of the National Mosque in Dhaka, Bangladesh


6. The place to be: Hundreds of thousands fill a field for Eid prayer in Bhopal, India

The place to be: Hundreds of thousands fill a field to say prayers in Bhopal, India


7. Smaller gathering: Pakistani flood victims pray outside the damaged mosque in the village of Sadikiya

Smaller gathering: Pakistani flood victims pray outside the damaged mosque in the village of Sadikiya


8. Mountain of prayers: Tens of thousands of Muslims attend the Eid al-Fitr prayers in Dashaping, near Lanzhou city, China's Western Gansu Province.

Mountain of prayers: Tens of thousands of Muslims attend the Eid al-Fitr prayers in Dashaping, near Lanzhou city, China's Western Gansu Province


9. Covered: Thai Muslim women pray outside Pattani central mosque

Covered: Thai Muslim women pray outside Pattani central mosque


10. In need of shade: Muslims shield their eyes from the sun at the King Hassan II Mosque in Casablanca, Morocco

In need of shade: Muslims shield their eyes from the sun at the King Hassan II Mosque in Casablanca, Morocco


11. Hallowed ground: Indian Muslim devotees offer Eid al-Fitr prayers in the rain amongst the ruins of the Ferozshah Kotla fort and mosque in New Delhi

Hallowed ground: Indian Muslim devotees offer Eid al-Fitr prayers in the rain amongst the ruins of the Ferozshah Kotla fort and mosque in New Delhi


12. Troubled land: Afghan Muslims outside a mosque in Kabul

Troubled land: Afghan Muslims outside a mosque in Kabul


13. Time to eat: Residents of Peshawar, Pakistan enjoy breaking their fast once again eating in daylight

Time to eat: Residents of Peshawar, Pakistan enjoy breaking their fast once again eating in daylight


14. Celebration: A Muslim family in New Delhi, India, buys balloons as they leave after offering prayers

Celebration: A Muslim family in New Delhi, India, buys balloons as they leave after offering prayers




Friday 10 September 2010

சங் பரிவார்க் கும்பல்-காவி தீவிரவாதம்

தொண்டு நிறுவனங்களா - குண்டு நிறுவனங்களா?

சங் பரிவார்க் கும்பல் நாட்டில் பல பாகங்களிலும் நடைபெற்றுவரும் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட் டுள்ளது என்பதற்கு நாளும் ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன. தெற்கே தென்காசி தொடங்கி, மாலே கான், அய்தராபாத் மெக்கா மசூதி, அஜ்மீர், ராஜஸ் தானின் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு கோவா, கான்பூர் முதலிய இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் எல்லாம் சங் பரிவார்க் கும்பலின் ஈட்டி முனையான ஆர்.எஸ்.எஸின் துணை அமைப்பான அபிநவ் பாரத் முதலியவை சம்பந்தப்பட்டுள்ளன. ஒரு வலைப் பின்னல் (நெட் ஒர்க்) இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

காந்தியார் படுகொலையின்போது ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களுக்கு ஏற்பட்டதுபோன்ற நெருக்கடி இப்பொழுது ஏற்பட்டுள்ளதாக அவர்கள் மத்தியிலே பேசப்படுகிறது; எந்த நேரத்தில் யார் கைது செய்யப்படுவார்களோ என்ற அச்சம் அவர்களைப் பிடித்து உலுக்கிக் கொண்டிருக்கிறது.

நயவஞ்சகமாகவும், தந்திரமாகவும், இரகசியமாகவும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் எப்படியும் ஒரு கட்டத்தில் அம்பலத்துக்கு வரத்தான் செய்யும் - அந்தக் கட்டம் காவிக் கும்பலுக்கு இப்பொழுது ஏற்பட்டுள்ளது.

மிதவாதிகள், தீவிரவாதிகள் என்பதெல்லாம் அந்தக் கும்பலில் கிடையவே கிடையாது.

மக்களின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவுவதற்குப் பாசிஸ்டுகள் கையாளும் நடைமுறை தந்திரம் அது. தீவிவராதி அத்வானி என்று சொன் னால், மிதவாதி என்று இன்னொருவரை காட்டி அவர் பரவாயில்லை என்னும் பொதுமக்கள் மத்தியிலே ஏற்படுத்திட மேற்கொள்ளப்படும் தந்திரமும், யுக்தியு மாகும் இது.

சாத்மிகவாதி என்று விளம்பரப்படுத்தப்பட்ட அடல்பிகாரி வாஜ்பேயிகூட அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முதல் நாள் லக்னோவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், மறுநாள் நடக்கப் போகும் வன்முறையைச் சூசகமாகச் சொல்ல வில்லையா?

சமன் செய்யப்பட்ட இடத்தில் அமர்ந்து பஜனை செய்வார்கள் கரசேவகர்கள் என்றால் அதன் பொருள் என்ன? பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கி சமன் செய்து, அதன்மீது அமர்ந்து பஜனை செய்வார்கள் என்பதைத்தானே கவித்துவக் கொழுப்பு வடிய வன்முறைக்குப் பூண் போட்டுப் பேசினார்.

இப்படிப் பேசப்படும் நயவஞ்சகப் பேச்சைவிட நேரடியாக இடி! என்று சொல்பவர்கள் நேர்மையான வர்கள் என்று கூடச் சொல்லலாம்.

இந்தச் சங் பரிவார்க் கூட்டத்துக்கு வெளிநாடு களிலிருந்து கிடைக்கும் பொருளாதார உதவி அபரிமிதமானது.

விசுவ இந்து பரிஷத்துக்கு இதே வேலைதான். உள்நாட்டிலும் பெரிய பெரிய பண முதலாளிகள் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்துக்குப் பணத்தை வாரி விடுகின்றனர்.

ராஜபாளையத்தில் தொழில் அதிபர்களிடம் காஞ்சி சங்கராச்சாரியார் என்ன பேசினார்?

தொழிலதிபர்களே! கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் ஆர்.எஸ்.எஸை ஆதரியுங்கள். நீங்கள் இப்பொழுது அதை ஆதரிக்காமல், பின் எப்பொழுது ஆதரிக்கப் போகிறீர்கள்? மற்ற மதக்காரர்களும், நாத்திகர்களும் உங்களை ஆதிக்கம் செய்த பிறகுதான் ஆர்.எஸ்.எஸை ஆதரிக்கப் போகிறீர்களா? (ஆர்.எஸ்.எஸின். அதிகாரப்பூர்வ ஏடான - ஆர்கனைசர் 28.3.1982).

இந்தப் பின்னணியைப் புரிந்துகொண்டால், சங் பரிவார் வட்டாரத்துக்கு நிதி எப்படி பொத்துக்கொண்டு கொட்டுகிறது என்பதை எளிதில் விளங்கிக் கொள்ளலாம்.

இப்பொழுது வெளிவந்துள்ள செய்தி மிகவும் முக் கியமானது, தொண்டு நிறுவனங்கள் ஆர்.எஸ்.எஸ்., வகையறாக்களுக்கு உதவி செய்கின்றன என்பதுதான் அந்தத் தகவல். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் சில ராஜஸ்தான், அஜ்மீர் நகரில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் நேரடியாகத் தொடர்பு கொண்டிருப்பது வெளிச் சத்துக்கு வந்துள்ளது.

இது தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள சந்திரசேகர் பட்டிதார் என்பவர் மூலம் இந்த வகையில் பல திடுக்கிடும் தகவல்கள் கசிந்துள்ளன. சி.பி.அய்.யும் விசாரணையைத் தொடங்கிவிட்டது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பல வகைகளிலும் நிதியைப் பெற்றுக்கொண்டு இருக்கின் றன. இதன் நிருவாகிகள் காவிப் பரிவார்களுடன் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள் என்பது உறுதியாகத் தெரிந்துள்ள நிலையில், அடுத்தடுத்து திடுக்கிடும் பல தகவல்கள் வெளிவர வாய்ப்புண்டு.

சுருக்கமாகச் சொன்னால், காவி தீவிரவாதம் என்று உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் சொன்னதற்கான வலுமிக்க ஆதாரங்கள் நாளும் கிடைத்து வருகின்றன. நடுவண் அரசு மதவாத இந்துத்துவா போக்கைக் கைவிட்டு, இந்துத்துவா வன்முறையாளர்களுக்குக் கைவிலங்கு போடுவதில் தயக்கம் காட்டக் கூடாது - கூடவே கூடாது!

---- "விடுதலை” தலையங்கம் 9-9-2010
நன்றி: தமிழ் ஓவியா--- http://thamizhoviya.blogspot.com/

Thursday 9 September 2010

அல்குர்ஆன் தோற்றுவித்த சமுதாயம்

அல்குர்ஆன் தோற்றுவித்த சமுதாயம்

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி இம்தியாஸ் ஸலஃபி

“அல்லாஹ் உங்கள் மீது புரிந்த அருளை நினைத்துப் பாருங்கள்.நீங்கள் (ஒருவருக்கொருவர்) விரோதிகளாக இருந்த சமயத்தில் அவன் உங்கள் இதயங்களுக்கிடையே அன்புப்பிணைப்பை உண்டாக்கினான். ஆகவே அவனுடைய பேரருளால் நீங்கள் சகோதரர்களாகி விட்டீர்கள்.(அதற்கு முன்பு) நீங்கள் நரக நெருப்பு குழியின் விளிம்பின் மீதிருந்தீர்கள். அதிலிருந்தும அவன் உங்களை காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகிறான்.(3:102)

மனித சமூகத்தில் மிக மோசமானவர்களாக நடமாடிய ஒரு சமூகத்தை நேர்வழியின் கொண்டு வந்தது பற்றி அல்குர்ஆன் இங்கே பிரஸ்தாபிக்கிறது.

படுபாதகத்தில் வாழ்ந்த வாழ்விலிருந்து காப்பாற்றியதை நினைவூட்டி நேர்வழியில் தொடர்ந்திருப்பதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது அல்குர்ஆன்.

யார் அந்த சமூகம்?

நாளா பக்கங்களிலும் பாராங்கற்களினால் சூழப்பட்ட பகுதிகளில் வாழ்ந்தவர்கள்! தோற்றத்தில் மனிதர்களாகவும் செயற்பாட்டில் அசிங்கமாகவும் இயங்கியவர்கள்! கற்பாரைகளைப் போன்றே உள்ளங்களும் கடுமையாகவே இருந்தன!

வரலாறு அவர்களை ஜாஹிலியா சமூகம் என்று அழைக்கிறது! அந்த சமூகத்தினர் அல்குர்ஆன் மூலம் அடைந்த மாற்றங்கள் மற்றும் உயர்நிலைகள் வரலாற்றில் எந்த சமூகமும் பெற்றதில்லை.

அந்த சமூக மாற்றத்தில் அல்குர்ஆன் செய்த புரட்சி பசுமையானது. இனிமை சேர்க்கும் அந்த வரலாற்றின் ஒரு சில பக்கங்களை கொஞ்சம் கவனியுங்கள்.

கல்லையும் மண்ணையும் வணங்கி பூஜித்து அறியாமையில் மூழ்கிக் கிடந்து மூடர்களாகவும் முரடர்களாகவும் கல்நெஞ்சம் படைத்தவர்களாகவும் வாழ்ந்த அந்த மக்கள் அல்குர்ஆனை கேட்டு மனமுறுகினார்கள். கண்ணீர்வடித்தார்கள். ஒரே ஆண்டவனாகிய அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு முன் மன்டியிட்டார்கள். மனிதர்களாகவும் புனிதர்களாகவும் மாற்றியமைப்பதில் அல்குர்ஆன் தனியான பங்கை வகிக்கின்றது என்பதை உறுதியாக நம்பி செயற்பட்டார்கள்;. அல்குர்ஆனின் ஒவ்வொரு வசனங்களுக்கேற்ப தங்களை மாற்றிக் கொண்டார்கள். தங்கள் வீட்டையும் சூழலையும் குர்ஆனிய மத்ரஸாவாக மாற்றிக் கொண்டார்கள். இதென்ன சாதாரண மாற்றமா?

அகம்பாவம் ஆணவம் மற்றும் அரக்கத்தனத்துடன் ஆடித்திரிந்தவர்களை அன்பாளர்களாக பண்பாளர்களாக உருவாக்கியது அல்குர்ஆன்.

பலவீனர்களை அடக்கி ஆண்டு உரிமைகளை பறித்தெடுத்து அட்டகாசம் புரிந்த சண்டாளர்களை ஆண்டவனாகிய அல்லாஹ்வின் வார்த்தைகளுக்கு முன் சரணடையச் செய்து உரிமைகளுக்கு உத்தரவாதமளிக்கும் உத்தமர்களாக மாற்றியது அல்குர்ஆன்.

சுகபோக வாழ்க்கையில் சுழன்று உலக மோகத்தில் மூழ்கி குறிக்கோளின்றி சென்றவர்களை இப்பூமியில் அல்லாஹ்வின் தீனை நிலைநாட்டும் இலட்சிய புருஷர்களாக தியாக செம்மல்களாக உருவாக்கியது அல்குர்ஆன்.

ஷைத்தானின் சுலோகங்களில் கட்டுண்டு காட்டுத் தர்பார் புரிந்தவர்களை காடேரிகளாக வாழ்ந்தவர்களை நாடாளும் மன்னர்களாக நம்பிக்கைவான்களாக உருவாக்கியது அல்குர்ஆன்.

சடவாத சிந்தனைக்குள் சிக்குண்டு நாஸ்தீக பட்டறைக்குள் பதுங்கியிருந்தவர்களை ஒரே ஒரு கடவுளாகிய அல்லாஹ்வின் வல்லமைகளை எடுத்தோதும் பகுத்தறிவாளர்களாக அழைப்பாளர்களாக நடமாடச் செய்தது அல்குர்ஆன்.

உயிர் உடலை விட்டு பிரிந்து மண்ணறைக்குள் மறைந்ததன் பின்னால் எல்லாம் முடிந்துவிட்டது என்ற மமதையில் ஓடித் திரிந்தவர்களை மறுமை நாளின் சிந்தனையுடையவர்களாக மனித விவகாரங்களுக்குப் பொறுப்புள்ளவர்களாக வாழச் செய்தது அல்குர்ஆன்.

குலபேதம், நிறபேதம், மொழிபேதம், பிரதேச வாதம், பேசி இனவெறிப் போராட்டத்தில் ஈடுபட்டு பிரிந்து கிடந்தவர்களை சகோதர நேசர்களாக சமாதானத்தின் தூதுவர்களாக காட்சியளிக்கச் செய்தது அல்குர்ஆன்.

உயர்வு தாழ்வு பேசி உயிர்களை மாய்த்துக் கொண்டு பல காலம் பலி பீடத்தில் பயணித்தவர்களை ‘தக்வா எனும் இறையச்சமுடையவர்களே அல்லாஹ்விடத்தில் உயர்ந்தவர்கள் என்ற கொள்கையில் உறுதியுள்ளவர்களாக பாசபிணைப்புள்ளவர்களாக உருவாக்கியது அல்குர்ஆன்.

மதுவிலும் மங்கையர்களிலும் மயங்கி பாவங்களில் குதூகலித்து அநாகரீகமாக ஆடிக் கொண்டிருந்தவர்களை ஒழுக்கச் சீPலர்களாக நாகரீகத்தின் காவலர்களாக மாற்றியது அல்குர்ஆன்.

பொதுவுடமை பேசி பொதுமக்களின் சொத்துக்களை சூரையாடி நிலமானியம் பேசி நிலங்களை கொள்ளையடித்து அரசியல் பேசி அராஜகம் பண்ணி அரசாண்டவர்களை நீதியாளர்களாக உலகம் போற்றும் நீதிமான்களாக உயர்த்திக் காட்டியது அல்குர்ஆன்.

பெண் குழந்தைகளை இழிவாகக் கருதி உயிருடன் புதைத்து பெண்களின் உரிமைகளைஉரித்தெடுத்து உல்லாசபுரி வாழ்க்கையில் திளைத்திருந்தவர்களை நற்பண்புகளுக்கு நற்சய்தி சொல்லக் கூடியவர்களாக மாற்றியது அல் குர்ஆன்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் அர்த்தமுள்ள சம அந்தஸ்துகளை வழங்கி உரிமைகளை, கடமைகளை பகிர்ந்து கொடுத்து தனிமனித குடும்ப சமூக வாழ்க்கையை பண்படுத்தி ஒழுக்க விழுமியங்களுடன் வாழச் செய்தது அல் குர்ஆன்.

நரகத்தின் படுகுழியில் பக்கத்தில் இருந்தவர்களை சுவனத்துப் பூங்காவில் நிழல் பெறும் சமூகமாக மாற்றிக் காட்டியது அல் குர்ஆன்

இருண்ட உள்ளங்கள் அல்லாஹ்வின் ஒளி பொருந்திய வசனங்களை கேட்டு சிரம்பனியச்செய்தது அல் குர்ஆன்.

உலக மக்கள் தங்களுடைய விடிவுக்காகவும் விடுதலைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் இவர்களை தேடி தூது அனுப்பக் கூடியதாக எடுத்துக் காட்டியது அல்குர்ஆன்.

ஒரு காலத்தில் உலக மக்கள் இவர்களை கண்டு அஞ்சினார்கள். ஒதுங்கி நின்றார்கள். குறுகிய காலத்தில் அவர்களை கண்டு அரவணைக்கவும் ஆதரவு தேடவும் புறப்பட்டார்கள்.

நாகரீகத்தையும் அறிவியலையும் ஒழுக்கவிழுமியங்களையும் இவர்களிடமிருந்தே உலகம் கற்றுக் கொண்டது. இந்த மாபெரும் அதிசயத்தை ஆற்றிய பெருமை மாமறை அல்குர்ஆனுக்கே உண்டு. மனித சமூகத்தில் தனிப் பெரும் செல்வாக்கை செலுத்தக் கூடியதாக முத்திரை பதித்து அல்குர்ஆன்.

நபி (ஸல்) அவர்கள் 23 வருட காலங்களில் குர்ஆனிய போதனைகளின் அடிப்படையில் தோற்றுவித்த சமுதாயம் இது. இவர்களை “சஹாபாக்கள்” என்று சரித்திரம் இன்று சான்று பகிர்கின்றது.

“அல்லாஹ்வும் அவர்களை பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வை பொருந்தி கொண்டார்கள்”.(அல்குர்ஆன் 98:8)

அதே அல்குர்ஆன் இன்றும் எங்களுக்கு மத்தியில் இருக்கிறது. ஆனாலும் எந்த மாறுதல்களும் எங்களுக்குள் உருவாக வில்லை என்றால் அது குர்ஆனின் கோளாறு அல்ல. எங்களது கோளாறு.

அல்குர்ஆனை முறையாக ஓதுவதில்லை, படிப்பதில்லை, விளங்குவதில்லை, பின் பற்றுவதில்லை என்றால் என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது?

Source: http://www.islamkalvi.com/portal/?p=4970

முகத்தில் சுருக்கத்தை ஏற்படுத்தும் சூரிய ஒளி

முகத்தில் சுருக்கத்தை ஏற்படுத்தும் சூரிய ஒளி

சூரிய ஒளியில் வைட்டமின் டி உள்ளது. இது மனிதர்களின் உடல் நலத்திற்கு நன்மை பயக்கும், என்ற கருத்து நிலவுகிறது. எனவே, மேற்கத்திய நாட்டவர்கள் கடற்கரையில் படுத்த படி சூரிய குளியல் (சன்பாத்) செய்கின்றனர்.

ஆனால் சூரிய ஒளி முகத்தில் சுருக்கத்தை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். லாண்காஸ்டர் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் டிரேவர் மேக்மிலன், சாரா அல்லிசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

அதன் மூலம், கண்ணாடி வழியாக ஊடுருவி வரும் சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருந்தால் முகத்தின் வசீகரம் கெட்டு விடும். ஏனெனில் ஊடுருவி வரும் சூரிய ஒளியின் கதிர்கள் முகத்தில் சுருக்கத்தை ஏற்படுத்தி விடும். இதனால் 7 ஆண்டுகள் அதிகமாக முதுமையான தோற்றம் ஏற்படும். அதே போன்று காரில் தொடர்ந்து பல மணி நேரம் பயணம் செய்யும் போதும் இது போன்ற நிலை உண்டாகும். குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் பயணம் செய்தால் கடுமையாக தாக்கும் சூரிய ஒளியால் முக சுருக்கம் ஏற்படும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

யானைகளை மிரட்டும் கட்டெறும்புகள்

மரம், நெற்பயிர்களை அண்டவிடாமல் யானைகளை மிரட்டும் கட்டெறும்புகள்

அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக் கழகத்தை சேர்ந்த டாக்டர் டோட்பால்மர் தலைமையில் இயங்கும் விஞ்ஞானிகள் குழு கென்யாவில் ஓர் ஆய்வு நடத்தியது.

ஒருவகை மரத்தின் கிளைகளை யானைகள் மேய்ந்துவிடாமல் கட்டெறும்புகள் தடுக்கின்றன என்று இந்த விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது. வன விலங்குகளில் மிகவும் பெரியது யானை, மிகவும் சிறியது கட்டெறும்பு, அப்படியிருந்தும் எறும்புக்கு யானை பயப்படுகிறது. அதற்கு குழு ஒற்றுமையே காரணம்.

யானை மரக்கிளைகளை ஒடிக்க முயலும் போது அந்த மரத்தில் இருக்கும் கட்டெறும்புகள் கூட்டமாக யானையின் துதிக்கைக்குள் புகுந்து கடிக்கத் தொடங்கி விடுகின்றன. இதனால் வேதனையில் துடிக்கும் யானைகள் மீண்டும் அந்த மரத்தின் பக்கம் திரும்பிப் பார்ப்பதே இல்லை.

கட்டெறும்புகளின் பயம் என்பது குழு ஒற்றுமைதான். யானை உருவத்தில் பெரியதாக இருந்தாலும் தனியாக நின்றுதான் கட்டெறும்பு கூட்டத்தின் சவாலை எதிர் கொள்ள வேண்டியுள்ளது. இதனால் துதிக்கையில் புகும் கட்டெறும்பு கூட்டத்துடன் மோதும் போது யானை தோற்று விடுகிறது.

இதனால் கென்யாவில் அகோரப்பசி வந்தாலும் கட்டெறும்பு கூட்டங்கள் இருக்கும் மரங்களை யானைகள் அண்டவே அண்டாது. அந்த அளவுக்கு கட்டெறும்புகள் யானைகளை மிரட்டி வைத்துள்ளன. சில நேரங்களில் கட்டெறும்பு கடித்து யானை இறந்து விடுவதும் உண்டாம்.

ஆப்பிரிக்காவிலுள்ள காட்டு மரங்கள், வயலில் விளையும், நெற்பயிர்களை யானைகள் தின்று நாசமாக்கி விடுகின்றன. எனவே யானைகளிடம் இருந்து அவற்றை காக்க மரங்கள் மற்றும் நெற்பயிர்களுக்குள் கென்யா கட்டெறும்பை விடலாம் என விஞ்ஞானிகள் குழு யோசனை தெரிவித்துள்ளது

Wednesday 8 September 2010

September 24, 2010: அயோத்தி விவகார தீர்ப்பு



September 24, 2010: அயோத்தி விவகார தீர்ப்பு

அயோத்தியில், 1528ம் ஆண்டில் பாபர் மசூதி கட்டப்பட்டது. ஆனால், இந்த மசூதி அங்கிருந்த கோவிலை இடித்து விட்டு கட்டப்பட்டதாக, இந்துக்கள் புகார் தெரிவித்தனர். சுதந்திரத்திற்குப் பின், 1949ல் இந்த இடத்திற்கு உரிமை கோரி, இந்துக்கள் தரப்பிலும், முஸ்லிம்கள் தரப்பிலும் வழக்கு தொடரப்பட்டது. 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி கரசேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அடுத்து, சர்ச்சைக்குரிய அந்த 2.77 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்திக் கொண்டது.சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கின் விசாரணை அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்சில், 2002ம் ஆண்டு ஏப்ரலில் துவங்கியது. வழக்கு விசாரணையின் போது, 88 பேரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.இவர்களில் 34 பேர் முஸ்லிம்கள்; 54 பேர் இந்துக்கள். இருந்தாலும், இந்துக்களில் 11 பேர் மசூதிக்கு ஆதரவாக சாட்சியம் அளித்தனர். நீதிபதிகள் மாற்றம் அல்லது ஓய்வு பெற்றதன் காரணமாக இந்த வழக்கின் விசாரணை மூன்று முறை புதிதாக துவங்கியது.


அலகாபாத் ஐகோர்ட்டின் தற்போதைய லக்னோ பெஞ்ச், கடந்த ஜனவரி 11ம் தேதி விசாரணையைத் துவக்கியது. முஸ்லிம்கள் தரப்பிலான வாதம் பிப்ரவரி 25ம் தேதி முடிவுக்கு வந்தது. ராமர் கோவிலுக்கு ஆதரவானவர்களின் வாதம் ஜூலை 7ம் தேதி முடிவுக்கு வந்தது.பிப்ரவரி மாதத்திற்குப் பின், அன்றாட அடிப்படையில் வழக்கு விசாரணை நடைபெற்றது. ஜூலை இறுதி வாரத்தில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில், வரும் 24ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது. நீதிபதிகள் எஸ்.யு.கான், சுதிர் அகர்வால், சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பை வழங்குகிறது.


அறுபது ஆண்டுகளுக்குப் பின், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. அதனால், நாடே இந்தத் தீர்ப்பை பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறது. தீர்ப்பு வரும் 24ம் தேதி வழங்கப்படும் என்பதை அகில இந்திய பாபர் மசூதி செயல் கமிட்டி அமைப்பாளர் ஜிலானியும் உறுதி செய்துள்ளார்.தீர்ப்பு நாள் நெருங்குவதால், அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க, பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ராமஜென்மபூமி இருக்கும் அயோத்தி மற்றும் பைசாபாத்தில் உள்ள மக்கள் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர்.


வரும் 24ம் தேதி வழங்கப்பட உள்ள தீர்ப்பில், "சர்ச்சைக்குரிய இடம் கடவுள் ராமர் பிறந்த இடமா? அந்த இடத்தில் கோவில் இருந்ததா அல்லது மசூதி இருந்ததா? மசூதி கட்டுவதற்காக கோவில் இடிக்கப்பட்டதா?' என்ற மூன்று முக்கிய விஷயங்களுக்கு கோர்ட் தீர்வு காண உள்ளது.தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக இல்லை என, எந்தத் தரப்பினர் விரும்பினாலும், அவர்கள் ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வர்.

Want respect? Give others first!

Want respect? Give others first!

By ABUDAIM AL-SAEED | AL-EQTISADIAH

An elderly man was at an ATM withdrawing some money. A Saudi youth was waiting behind him and could not tolerate the delay any longer. “Sadeek (friend), finish your work quickly. Don’t you have any mukh (brain)?” he said.

The old man asked the youth why he was behaving like this to a person who is a Saudi national and older than him. The youth apologized and said: “I thought you were an Asian after seeing your clothes and face.”

The old man replied: “My brother, we should not discriminate against a person or underestimate his value on the basis of his nationality or color and religion. An Asian is also a human being and deserves your respect. Don’t you know how to communicate with others in a better way?” Unfortunately many people in our society do not use manners when talking to others. It is as if they don’t have in their vocabulary phrases such as “I am sorry” or “thanks” or “excuse me.”

We often address elderly people in streets or markets in a disrespectful manner, especially if the person is simple and does not wear a new thobe (a long dress) or headdress. Is this because of the country’s hot climate or because of a bad upbringing at home and school? You often see many of our children in schools ridiculing their foreign teachers without any good reason. This shows that there is something wrong in the way they were brought up.

We can no longer blame the rough climate for our rough behavior. By the Grace of God, we are now enjoying the most advanced living facilities. We have also learned how to behave according to the teachings of the Prophet (peace be upon him), who said that adhering to religion is the best way to deal with others. The Prophet has also taught us to be merciful to others.

Even at our houses we don’t use the word “please” when we ask our wives or children to do something for us and we rarely say thank you after they do what we wanted. We also find it extremely difficult to say “sorry” when we make any mistake or do something wrong to others, be it at home, school, the office or on the street.

We have heard the story of Sawad bin Aziyeh, a companion of the Prophet, during the battle of Uhd. When the Prophet asked his fighters to stand in line, all of them followed his order except Sawad. The Prophet beat him slightly on his stomach. He told the Prophet that he had been hurt. The Prophet then showed his stomach and asked Sawad to beat him. But the loving companion kissed the Prophet’s stomach, instead of beating him. It was the highest form of apology demonstrated by the Prophet, who was a great example for noble behavior and morals.

I take this opportunity to commend the television program “Khawater” hosted by Ahmed Al-Sheqairy, especially the one that showed students cleaning their classrooms and school in the presence of the education minister. I am sure that such programs would have a great positive impact on our children and their future life.

I would like to thank my daughter for giving me the idea to write this article. We are now in the last days of Ramadan, the month of magnanimity, forgiveness, repentance and charity. We have to ask for God’s forgiveness for our past mistakes.

(Abu.daim@hotmail.com)

Source: http://arabnews.com/saudiarabia/article129794.ece

Vatican official: Predicted - "Islam would sooner or later conquer the majority in Europe".

Islam will sooner or later dominate Europe: Italian priest


LONDON: Christians in Europe must have more children or else the continent would become Islamised, said a Vatican official who predicted that Islam would "sooner rather than later conquer the majority in Europe".

Italian Father Piero Gheddo said the poor birth rate among Europeans coupled with waves of Muslim immigrants could lead to Europe getting dominated by Islam.

"The challenge must be taken seriously," Daily Telegraph Tuesday quoted Father Gheddo of the Vatican's Pontifical Institute for Foreign Missions as saying.

He said: "Certainly from a demographic point of view, as it is clear to everyone that Italians are decreasing by 120,000 or 130,000 persons a year because of abortion and broken families - while among the more than 200,000 legal immigrants a year in Italy, more than half are Muslims and Muslim families, which have a much higher level of growth."

"Newspapers and television programmes never speak of this. However, an answer must be given above all in the religious and cultural fields and in the area of identity."

The official held Christians responsible for failing to live up to their own beliefs that led to the creation of a "religious vacuum" being filled by Islam.

He said Islam would "sooner rather than later conquer the majority in Europe".

"The fact is that, as a people, we are becoming ever more pagan and the religious vacuum is inevitably filled by other proposals and religious forces."

Gheddo went on to say that Christians were also making themselves vulnerable to secularists' attacks.

He stated that when "religious practice diminishes in Christian Europe and indifference spreads, Christianity and the Church are attacked".

"If we consider ourselves a Christian country, we should return to the practice of Christian life, which would also solve the problem of empty cradles."

A few months back, a Czech cardinal had also blamed lapsed Catholics for Europe's Islamisation.

Cardinal Miloslav Vlk had said Muslims were well placed to fill the spiritual void "created as Europeans systematically empty the Christian content of their lives".

He said that in case Christians didn't wake up to the threat they would one day realise that they don't have the strength to make their mark on society.


Tuesday 7 September 2010

ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தவை!

ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தவை!

எழுதியவர்/பதிந்தவர்/உரை தேங்கை முனீப்

Articleஎங்கேனும் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடந்தால் சற்றும் யோசிக்காமல் முஸ்லிம் தீவிரவாதி இஸ்லாமியத் தீவிரவாதம் என்று செய்திகளை வெளியிட்டு முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிக்க ஊடகங்கள் தயங்குவதில்லை. மாலேகானில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புச் சம்பவம் திட்டமிட்டு சங் பரிவார் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டமை இன்று வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ஒட்டுத் தாடிகளுடன் இஸ்லாமிய வேடமிட்டு குண்டு வெடிப்பு நடத்தி முஸ்லிம்களைக் குற்றவாளிகளாக்க முயன்றவர்களின் சதியை வல்ல இறைவன் அம்பலப் படுத்திவிட்டான்! ஆனால் வழக்கமாக ஊடகங்களின் பார்வையில் இது ஒரு செய்தியாகப் படவில்லை.

டெல்லி குண்டு வெடிப்பில் பக்கம் பக்கமாக எழுதி இஸ்லாமைத் தூற்றிய இந்தியா டுடே ஆகட்டும், பள்ளிவாசலில் குண்டு வெடித்தால் பள்ளி வாசலில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது என்று செய்தியைத் திரித்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் பாசிசப் பத்திரிக்கை தினமலராகட்டும், எதுவுமே இன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ள மாலேகான் குண்டு வெடிப்பு பற்றிய செய்திகளில் அவ்வளவு அக்கரை காட்டவில்லை. காரணம் வெளிப்பட்டிருப்பது மறைக்கப்பட்டிருந்த அவர்களின் கோர முகங்கள்!

குண்டு வெடிப்பில் அதிகம் பேர் கொல்லப்படவில்லை என்பதற்காகக் கவலை கொள்ளும் பெண் (சாத்தவி?) பயங்கரவாதி பரக்யாசிங் தாக்கூராகட்டும், அவளுக்கு சுக்கான் பிடிக்கும் பா.ஜ.க, விஸ்வ இந்து பரிசத் இந்துத் துவ வாதிகளாகட்டும், அப்பாவிகளைக் கொல்லக் கூடாது என்ற எந்த இங்கிதமும் இவர்களுக்குக் கிடையாது. இதனால் தான் கைதானவர்கள் விடுதலையாக சங்பரிவார் துடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும் ஊடகங்கள் தீவிரவாதத்துக்கு எதிரான ஒழுக்கப் பயிற்சிகளும், பொதுக் கூட்டங்களும், மாநாடுகளும், கருத்தரங்கங்களும் அதிக அளவில் நடத்துவது முஸ்pலம்கள் தான் என்பதை மறந்து விடுகின்றன. இஸ்லாமிய அறிஞர்களின் தலைமையில் நடைபெறும் இத்தகைய நிகழ்ச்சிகளில் ஏராளமான இளைஞர்கள் பங்கு பெற்று ஒழுக்கமுள்ள சமுதாயமாக முஸ்லிம் சமுதாயம் ஒரு பக்கம் வளர்ந்து வரும்போது இன்னொரு பக்கம் சங்பரிவார் தன் தொண்டர்களுக்கு ஆயுதப் பயிற்சியும், வெடிகுண்டு வைக்கும் பயிற்சியும் அளித்து வருகிறது. இவை அத்தனையும் ராணுவத்தின் உதவியுடன் நடைபெறுகிறது. ராணுவத்தில் உயர் பதவி வகிப்பவர்கள் கூட இவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கும் அளவுக்கு இந்திய ராணுவத்தில் பயங்கரவாத நோய் பீடித்துள்ளது.

இப்போது இந்த குண்டு வெடிப்புடன் தொடர்புடைய ராணுவத்தில் இன்டலிஜன்ஸ் பிரிவில் பணியாற்றிய லெஃப்டினெண்ட் கேணல் பிரசாத் புரோகித் என்பர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கஷ்மீரில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது ராணுவத்தின் நிதியிலிருந்து ரகசியமாக பணத்தை தீவிரவாத இயக்கங்களுக்கு மாற்றியுள்ளார். இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகிய ஸமீர் குல்கர்னி என்பவன் பல முறை கஷ்மீரில் வைத்து இவரை சந்தித்ததும் வெளிப்பட்டுள்ளது. (செய்தி: மாத்யமம்)

சங்கப் பரிவார் திட்ட மிட்டு தன் தொண்டர்களை ராணுவத்தில் சேர ஊக்குவித்து வருகிறது. கஷ்மீரில் தீவிரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மிகப்பெரிய ராணுவ அதிகாரிகளின் உதவியுடன் சங்பரிவார் தீவிரவாதிகளுக்குக் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

இது ஒரு புறமிருக்க இத்தகைய சம்பவங்களைக் காரணம் காட்டி முஸ்லிம் இளைஞர்களை காவல் துறை வேட்டையாடி வருகிறது. முஸ்லிம் இளைஞர்களை பிடித்துச் சென்று பின்னர் சுட்டுக் கொலை செய்து விட்டு என்கவுண்டர் என்று திருப்பி விடுகிறது. பத்திரிக்கைகளும் முஸ்லிம் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை என்று தலைப்புச் செய்திகள் வெளியிடுகிறது. ஜாமிஆ நகரில் இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் படித்துக் கொண்டிருக்கும் அப்பாவி மாணவர்கள் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இது போன்று இன்னொரு சம்பவத்தை நிறைவேற்ற மாறு வேடத்தில் காரில் வந்து இளைஞர்களைக் கடத்திச் செல்ல முற்பட்ட போலீஸ் அதிகாரி டெல்லியில் பிடிபட்டுள்ளார். இப்படிப் பட்ட போலி என்கவுண்டர்கள் ஏராளம். இவ்வாறு செய்திகளை வெளியிடும் பத்திரிக்கைகள் முஸ்லிம்கள் குற்றமற்றவர்கள் என்று நிருபணமானால் மட்டும் செய்திகளை தந்திரமாக இருட்டடிப்பு செய்து விடுகின்றன.

அவ்வாறு இருட்டடிப்புச் செய்யப்பட்ட உரு செய்திதான் ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் கடந்த வருடம் நடந்த குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்ட சம்பவம்.

இவர்கள் மீது சுமத்தப்பட்ட வழக்குகளில் குற்றத்தை நிரூபிப்பதில் அரசு வழக்குரைஞர் தோல்வியடைந்து விட்டதாக நீதி மன்றம் கூறுகிறது. இவர்களுக்கு இழப்பீடாக உதவித் தொகைகளும் ஆட்டோ வும் அரசாங்கம் வழங்குவதாக உறுதி செய்துள்ளது.

இதில் கைது செய்யப்பட்ட ஒருவரை அரக்கத் தனமாக சித்திர வதை செய்து, குண்டு வைத்ததாக ஒப்புக் கொள்ளவில்லையெனில் என்கவுண்டர் நடத்தி விடுவதாக காவல் துறை மிரட்டியதை விடுதலையான இம்ரான் என்ற இளைஞர் கூறுகிறார். (நன்றி: சத்திய மார்க்கம்.காம்)

ஆக ராணுவம் முதற் கொண்டு காவல் துறை வரை கொடிய எண்ணமுடையவர்கள் செயல்பட்டுக் கொண்டிரு ப்பது இதன் மூலம தெரிய வருகிறது.

இதற்கிடையில் மாலேகான் குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்கள் தான் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பையும் நடத்தியிருக்கக் கூடும் என்று இவ்வழக்கை விசாரித்து வரும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இது குறித்து இப்போது விசாரணை மேற்கொள்ளப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மறைக்கப்பட்ட இந்து பயங்கரவாதத்தின் கோர முகம் இதிலிருந்து வெளிப்பட்டுள்ளது. எனினும் ஊடகங்கள் இதிலும் ஒரு சார்பு நிலையைத் தான் கடைபிடித்து வருகிறது. முஸ்லிம் சமுதாயம் தனக்கென ஒரு உறுதியான செய்தி ஊடகத்தை உருவாக்குவதன் அவசியத்தை இது உணர்த்துகிறது.

நன்றி: http://www.islamkalvi.com/portal/?p=1151

மும்பைத் தாக்குதல் – கார்கரே -ஐ கொலை செய்தது யார்?

26/11 மும்பைத் தாக்குதல் – கார்கரே -ஐ கொலை செய்தது யார்?


S.M.முஷ்ரீஃப் I.P.S. (மகாராட்டிர மாநிலத்தின் முன்னாள் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல்) அவர்கள் எழுதிய "ஹேமந்த் கார்கரே -ஐ கொலை செய்தது யார்?" என்ற புத்தகத்தின் தமிழ் மொழிப்பெயர்ப்பு வெளியீட்டு விழா மற்றும் கருத்தரங்கம்.

வழங்குபவர்கள்:
M. குலாம் முஹம்மது (எழுத்தாளர், வேர்கள் வெளியீட்டகம்),
திரு. அருணன் (எழுத்தாளர்),
T. லஜபதிராய் (அட்வகேட், வைகை சட்ட அலுவலகம்),
S.M.முஷ்ரீஃப் I.P.S. (மகாராட்டிர மாநிலத்தின் முன்னாள் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல்)

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும்.
நன்றி:
www.islamkalvi.com

Hindutva terrorism: Who will bell the cat?

Hindutva terrorism: Who will bell the cat?

Submitted by admin7 on 7 September 2010 - 4:49pm

By Abdul Hannan Siwani Nadvi,

P. Chidambaram’s saffron terrorism remark angered BJP, RSS and their followers. BJP has objection at association of terrorism to particular organization. BJP, which has a long history of blaming whole Muslim community and calling Muslim areas as epicenter of ISI and terrorism, is now objecting at the term.

There are two things that should be clear to everyone: One, associating terrorism to particular community; and second, terrorism of Hindutva.

Common Muslims, Ulema and other Muslim leaders have been demanding for long that terrorism should not be linked to a particular community, or religion. Their repeated demand remained unheeded. Nobody was ready to address their pain and agitations. Everyone was seeing them as liars and cheaters. BJP and its followers were working to add more fuel in it. The result finally ended with the arrest of hundreds of Muslim boys.

Most of them have been acquitted of the terror charges. However, a large number of Muslim boys are still languishing in jails and no one knows when their pain will end and when they will be freed.

As for existence of terrorists in Muslim community, it has been proven many times that Muslim youths are implicated in false terror cases. Acquittal of most of them by the courts in various states where they were arrested is a big evidence of their innocence. The latest example comes from Gujarat where nine people were acquitted by a local court.

Unfortunately, while mere arrest of innocent Muslim youths in terror cases was seen as a matter of security of the country, cases of Hindutva cadres carrying out bomb blasts, making bombs and placing it in Muslim areas in the garb of Muslim identity were not taken as a security issue by the police or state and central government. It is seen just an incident that happens everywhere.

The term of terrorism was used with different colors – Islamic terrorism, jihadists and Jihadism-- when it was being associated with Muslims. BJP, its allied functionaries and their followers in Media, security agencies and in other government run-offices were busy in blaming Islam and Muslim community for every single, big and small incident related to terrorism without checking the facts and following the clues. It was their great work. No one can deny their role in maligning Muslim community.

BJP’s hue and cry over P Chidambaram‘s statement on saffron terrorism is an effort to cover their terrorism. If today terrorism has no color except black, as Congress clarified with vote bank politics in mind, then why it was silent when Islam and whole Muslim community were being blamed for the menace.

Today, when the term of saffron terrorism or Hindu terrorism is being used, BJP disrupts Parliament. It used immoral ways to express their objection at associating terrorism to Hindutva groups. News channels offices were vandalized. At last, it tried to play its old and very important card saying that it is the insult of Hindu nation.

Modi, who has lost moral right to stay as chief minister of Gujarat where a large number of Indian citizens, most of them Muslims, were killed in riots or encountered later and where the Indian constitution was being paralyzed and where all doors of justice had been closed on Muslims and where a majority of Muslim youths were put into jail, says that Prime Minister should apologize for saffron terror remark. He forgets that his hand is colored with the blood of innocent Muslims.




Members of Bajrang Dal openly brandish weapons, but without any repercussions. [Photo Jammu News Agency]

As for associating the term terrorism to any community, Muslims’ views are very clear from the first day: This term should not be linked to any particular community or religion. There are no differences among Muslims on this in and outside of India.

The second thing is terrorism of Hindutva. Can BJP deny its role in damaging India’s communal harmony? Can BJP deny that various Hindutva groups as an organization or as an individual are involved in bomb blasts? Can BJP deny that those activists and workers who were killed during making bombs were associated with Sangh?

BJP and its leaders are themselves accused in Babri Masjid demolition case and in so many cases of communal violence.

The gravity of the heinous terror attacks carried out by Hindutva activists can be gauged with the fact that they not only targeted Muslim religious places but also used Muslim’s identity and leaved at the site of the attacks, proofs that could indicate to Muslim’s involvement.

Spreading hatred, creating gulf between communities, brainwashing uneducated Hindu youths and inciting them against particular community are very old and common tactics of the game they play.

Challenging court orders, raping constitutions, defying court orders, stopping police and administration form doing their jobs and using religious sentiments to achieve their hateful aim – they do all brazenly.

Their aim, objectives and task are very destructive. Their emergence and supporting them in their destructive role is very harmful to India’s security and its integrity.




Former BJP leader Rithambara with Malegaon bomb accused Pragya Thakur.

No doubt that their network is very strong and their hand is very long. Their political, social and religious groups are active in every corner to check what is happening there and how they can protect themselves from the grip of law. Their work is very old. Their communal minded people are very strong.

Indian security agencies have not been able to prove Muslim’s role in any bomb blast. Acquittal of Muslim boys by the court of charges of terror and waging war against India is a biggest proof.

The failure of Police and security enforcers in proving their charges shows clearly that their mind was set only against Muslims.

BJP banned SIMI when it was leading NDA government at center. The Court once acquitted this organization of the charges leveled against it. There are a large number of cases, in which Muslims came out clean but precious and most important moments of their life were ruined by BJP’s communal politics.

Saffron organizations, on the other hand, have been involved in violence from the first day and now they are involved in making bombs and executing bomb blasts. They used retired Indian army officers and personals for their destructive projects.

Fair investigation of some terrorist attacks confirms the role of Hindutva brigades while other attacks are in need to be investigated honestly not as a matter of Hindus and Muslims but for the sake of India’s integrity and its security.

At last, the important question is: Are Indian citizens ready to accept Hindutva terrorism and their communal project? Can India survive with existence of such destructive objectives? Is protection of Hindutva more important than India’s security?

How long saffron organizations will get free hand to bring bad name to the country? Today or tomorrow it will come into discussion and every Indian will be forced to think on that point.

(The writer can be contacted at ahannan111@yahoo.in)

Source: http://www.twocircles.net