Friday 29 April 2011

Who will be “lesser evil” for Muslims in Tamil Nadu

Who will be “lesser evil” for Muslims in TN: Amma or Kalaignar?

By Md. Ali, TwoCircles.net,

New Delhi: With just 15 days left in the Judgment of Tamil Nadu assembly elections and amid various poll predictions, the political temperature of the state seems high. All election surveys point towards the possibility of a coalition government or a fractured mandate or a hung assembly.

Like general voters, no body exactly knows who the Muslim electorate favored on 13 of this month, although each alliance, led by DMK and AIDMK, claims to have got their votes.


Jawahirullah (3rd from Left) with a TMMK delegation meeting Jayalalitha

What has become the talk of the town is the question: Who among Amma and Kalaignar, as Jayalalitha and Karunanidhi are popularly known, will be “good” for Muslims who constitute around seven percent of the state population.

There are many who think that the DMK-led alliance will be better for the Muslim electorate of the state. Historically and traditionally Muslims are seen as a DMK vote bank. Credit goes to its alliance with the Indian Union Muslim League (IUML) since the days of its founder Mohammed Ismael. This time IUML fought on 3 assembly seats but on the DMK symbol, the rising sun.

Shafi Ahmad Ko, Chennai-based senior journalist, says that Karunanidhi-led DMK is largely seen as a Muslim-friendly political party. Explaining the basis for this kind of image, Shafi says that the DMK government started 3.5% reservation for Muslims in the state and during the campaign trail, Karunandhi promised to raise the percentage to 5% if voted back to power. The DMK government also constituted an Urdu academy in the state for the propagation of the language which is spoken in some Muslim pockets of the state. Moreover, when it comes to the religious freedom of the minorities, people feel much more comfortable during the regime of DMK, adds Ahmad.

As opposed to the DMK, Shafi explains that the media image of Amma is of a pro-Brahmanical force. The reason behind this kind of image is that Jayalalitha had supported the Karsevaks’ demolition of the Babri Masjid. Another instance of her anti-Minority image was the Anti Conversion Law which Amma brought in 2002 but she had to scrap it due to its widespread criticism.


In this file photo K.M. Khader Mohideen, president of the Tamil Nadu State Indian Union Muslim League is seen along with M. Karunanidhi, Chief Minister of Tamil Nadu, during a IUML State conference in Chennai. Photo by The Hindu

But there are people who regard both the regional parties as “evil” and call for choosing the lesser of the two. In this regard, a section of the intellectuals in the state looks at the welfare measures announced by the DMK government for the minorities, with a strong sense of skepticism and calls for the evaluation of these schemes as they are being implemented on the ground.

Dr. Sattar, president of the state chapter, All India Muslim Majlise Mushawarat, cautions against the simplistic way of blindly considering DMK as the messiah of the Muslims in the state. Sattar points towards the state sponsored structural prejudices against Muslims because of which their representation at various governmental sectors is quite low. He also highlights the low accessibility and skewed implementation of the schemes for the welfare of the minorities in the state, “Just by allowing the minority community to pray according to its religion doesn’t mean that you are secular and their friend.”

On the issue of Urdu for instance, S.M. Pasha of Urdu Lovers Forum is very angry against the DMK government, “the state government pretends acting in the interests of Urdu but actually it couldn’t have done more harm to the language when it made the language optional for the students.”

Consequently, a section of the Muslim community calls for revaluation of their approach towards Jayalalitha. They look forward to Amma as the possible sincere benefactor of Muslims in the state. It’s on the support of this constituency that Prof. Jawahirullah, chief of Tamil Nadu Muslim Munnetra Kazagham (TMMK), withdrew his support to DMK and went with the AIADMK alliance in this election.

“Only AIADMK can provide the real empowerment to the Muslims because only this party had the courage to let the only Muslim party have its identity as opposed to the DMK which treats IUML as its minority wing,” says the TMMK chief.

Highlighting the failures of the DMK government in the past, Jawahirullah shows the “sincerity” of the AIADMK when it promised the Muslims reservation not just 5% but a proportionate one. Alleging that the largest number of communal riots happened in the state during the DMK regime and not during the AIADMK government, Jawahirullah says that, “It’s a myth that the DMK government has protected the minorities.”

“Jayalalitha means business as opposed to Karunanidhi who only talks and most of his announcements are just propaganda which doesn’t get implemented at the ground level,” says Jawahirullah who has also fought assembly elections from Ramanathapuram.

Accusing the DMK government of insincerity, the TMMK chief also highlights the failure of the DMK government in implementing the recommendations of the Ranganath Mishra Commission Report in the state.



Jayalalitha & M. Karunanidhi [Photo Courtesy: chikubuku.com]

But what about the anti-minority stands of the AIADMK in the past? “Every body learns from their experiences from the past and so has Jayalalitha. We just need to give her another chance,” defends the TMMK chief who avoids being called a “professional politician.”

What will be very interesting to see is: who is voted to power and how the Muslim political groups respond to that political dispensation because ultimately it will influence the way Muslim politics is being done in the state.

Source: http://goo.gl/QuRQc

Wednesday 27 April 2011

பாஜக நிலம் ஒதுக்கியது செல்லாது! உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!



பாஜக நிலம் ஒதுக்கியது செல்லாது!
உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

அரசியலில் 'தூய்மையானவர் நாங்கள்தான் என்று ஜம்பம் அடிப்பதில் பாஜகவுக்கு நிகர் யாரும் இல்லை. ஊடகங்களும் அவர்களின் பிரச்சாரகர்களாக செயல்பட்டு அதை மிகைப்படுத்துகின்றன. தெஹல்கா இணைய தளம் பங்காரு லஷ்மணன் பணம் வாங்குவதை வீடியோ எடுத்து ஒளிபரப்பி பாஜகவுக்கும், தூய்மைக்கும் சம்மந்தம் இல்லை என்பதை நிரூபித்துக் காட்டியது.

அந்த வரிசையில் பாஜகவின் அடுத்த ஊழல் இப்போது சந்தி சிரிக்க ஆரம்பித்துள்ளது. மக்கள் நலப் பணிகளை செய்து வரும் இயக்கங்கள், அறக்கட்டளைகள் ஆகியவற்றுக்கு ஆளும் அரசுகள் வருமான வரியில் சலுகைகள், நிதி உதவிகள், நிலம் ஒதுக்கீடு செய்தல் ஆகியவைகளை வழங்குவது இயல்பான ஒன்றுதான். ஆனால் விதிமுறைகளை மீறி மத்தியப் பிரதேச முதல்வராக இருந்த உமாபாரதி பாஜக அறக் கட்டளைக்கு நிலம் ஒதுக்கியதுதான் தற்போது பிரச்சினைக்குள்ளாகியுள்ளது.

பாஜக தலைவர்களுள் ஒருவராக இருந்து மறைந்த குஷாபாவ் தாக்கரே பெயரில் அறக்கட்டளை ஒன்று பாஜகவினரால் துவங்கப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளையில் பாஜக மூத்த தலைவர்களான எல்.கே. அத்வானி, வெங்கையா நாயுடு, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட பாஜகவின் முன்னணி தலைவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

கடந்த 2004ம் ஆண்டில் மத்தியப் பிரதேச முதல் மந்திரியாக இருந்த உமாபாரதி குஷாபாவ் தாக்கரே அறக்கட்டளைக்கு 30 ஏக்கர் நிலம் ஒதுக்கினார். இந்த ஒதுக்கீட்டை எதிர்த்து மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அகில பாரதிய உபோக்தா காங்கிரஸ் என்ற அமைப்பு உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள பாஸ்வதியா கிராமத்தில் இருந்த அரசுக்கு சொந்தமான 30 ஏக்கர் நிலத்தை சட்ட விதிகளை மீறி அறக்கட்டளைக்கு ஒதுக்கி உள்ளது. அரசின் இந்த ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரணைக்கு வந்தது.

மத்திய பிரதேச அரசு, "அரசியல் கட்சித் தலைவர்கள் உறுப்பினர்களாக உள்ள அறக்கட்டளைக்கு மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநில அரசுகளும் இடம் ஒதுக்கீடு செய்கின்றன. எனவே அதில் தவறு எதுவும் இல்லை. நில ஒதுக்கீட்டை ரத்து செய்வதாக இருந்தால் மத்திய அரசு ஒதுக்கிய நிலங்கள் உள்பட எல்லாவற்றையும் சமமாக பார்க்க வேண்டும். அனைத்தையுமே உச்ச நீதிமன்றம் வெளிப்படையாக ஆய்வு செய்ய வேண்டும்...'' என வாதிட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கடந்த 06-04-2011 அன்று, "2004ம் ஆண்டு மத்தியப் பிரதேச அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நில ஒதுக்கீடு ஆணை ரத்து செய்யப்படுகிறது...'' என்று தீர்ப்பு கூறினர்.

இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் மனீஷ் திவாரி, "ஊழலுக்கு எதிராக போராடுவதாக பாஜக கூறி வருகிறது. ஆனால் செயலில் காட்டுவதில்லை. கர்நாடகா, மத்தியப் பிரதேசம் என அது தொடர்கிறது. மத்தியப் பிரதேசத் தில் ரூ. 60 கோடி மதிப்பிலான நிலத்தை ஒரு ரூபாய்க்கு ஆர்.எஸ்.எஸ். சார்பு அறக்கட்டளைக்கு வழங்கி உள்ளனர். நில ஒதுக்கீட்டை ரத்து செய்து உச்ச நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவை நாங்கள் வரவேற்கிறோம்...'' என்று கூறியுள்ளார்.

நேர்மை வேடம் போட்டு வந்த பாஜகவினருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு பாஜகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.


- அபு சுபஹான்

மகர ஜோதி பொய், ஐஸ் லிங்கம் பொய், பக்தி பரவசமும் பொய்!


மகர ஜோதி பொய், ஐஸ் லிங்கம் பொய், பக்தி பரவசமும் பொய்!

April 26, 2011 by இளமாறன்
http://athikalai.wordpress.com/2011/04/26/magara-jothi/


“”சபரி மலையின் மகரஜோதி என்பது தானே எரிவது அல்ல, அது கோயில் ஊழியர்களால் கொளுத்தப்படுவதுதான்” என்று ஐயப்பன் கோயில் தலைமைப் பூசாரியின் குடும்பத்தைச் சேர்ந்த ராமன் நாயர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்தார். இதனை ஒட்டி பதில் சொல்லியாக வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டார் கோயிலின் தலைமைத் தந்திரி கண்டரரு மகேஸ்வரரு. அவர் சார்பில் அறிக்கை வெளியிட்ட அவரது பேரனும் கோயில் தந்திரியுமான ராகுல் ஈஸ்வர், “”வனத்துறை அதிகாரிகளும், தேவசுவம் போர்டு (அறநிலையத்துறை) அதிகாரிகளும், போலீசும் கூட்டாகச் சேர்ந்து கொளுத்தும் தீப்பந்தம்தான் மகரவிளக்கு” என்ற உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

“இந்த அளவுக்கு குட்டு உடைந்த பிறகும் மார்க்சிஸ்டு அரசு மகரஜோதியைக் கொளுத்துமா?’ என்ற கேள்விக்கு “”சபரிமலையில் மகரவிளக்கு வெளிச்சம் எப்படி உருவாகிறது என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தப்படும். ஆனால் பக்தர்களின் நம்பிக்கைக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாது” என்று பதிலளித்திருக்கிறார் மார்க்சிஸ்டு முதல்வர் அச்சுதானந்தன். யாரை யார் விசாரிப்பது? பந்தம் பிடிப்பவனை பற்ற வைப்பவன் விசாரிப்பதா? “”தீவட்டியைத் தொடர்ந்து கொளுத்துவோம். தீவட்டிக் கொள்ளையைத் தொடர்ந்து நடத்துவோம்” என்பதுதான் அச்சுதானந்தனுடைய கூற்றின் பொருள்.

மகரஜோதி அம்பலமாவது இது முதல் முறையல்ல. பந்தம் கொளுத்திய மின்வாரிய ஊழியர்களைப் பிடித்துக் கொண்டு வந்தார்கள் கேரள மாநில பகுத்தறிவாளர் சங்கத்தினர். “”அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா, அரசாங்க வருமானத்துக்கு ஆப்பு வைக்காதீங்கப்பா” என்று அன்பு வேண்டுகோள் விடுத்து அன்று பகுத்தறிவாளர்களை அமுக்கினார் அந்நாள் மார்க்சிஸ்டு முதல்வர் ஈ.கே. நாயனார்.

கோயில் தந்திரி கண்டரரு மோகனரு, தனது லீலாவிநோதங்கள் மூலம் ஐயப்பன் மகிமையைக் கந்தலாக்கியது தனிக்கதை. அவருக்கு வேதம், மந்திரம் போன்ற வெங்காயம் எதுவும் தெரியாதென்பதும் விலைமாதர் வீட்டு முகவரிகள் மட்டுமே தெரியும் என்பதும் அவரிடம் நடந்த விசாரணையில் அம்பலமானது. இப்போது தலைமைத் தந்திரியின் ஒப்புதல் வாக்குமூலம் வந்திருக்கிறது.

தெற்கே தீவட்டி பிசினஸ்; வடக்கே பனிக்கட்டி பிசினஸ். காஷ்மீரில் அமர்நாத் எனுமிடத்தில் குளிர்காலத்தில் ஒரு குகைக்குள்ளே பெரிய “குச்சி ஐஸ்’ வடிவத்தில் உருவாகும் பனிக்கட்டியைத் தரிசிப்பதற்கு ஆண்டுதோறும் 4 லட்சம் பக்தர்கள் அங்கே சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த பக்தர்களை பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாக்க 40,000 சிப்பாய்களை மாதக்கணக்கில் காவல் வைக்கிறது அரசு.

மேற்படி சிவலிங்கத்திற்கும் வந்தது சோதனை! “”முன்னர் சுமார் 12 அடி உயரம் இருந்த பகவான் தற்போது 6 அடிக்கும் கீழே போய்விட்டார். காரணம் புரியவில்லை” என்று சென்ற ஆண்டு அபாயச்சங்கு ஊதினார் அந்தக் கோயிலின் நிர்வாக அதிகாரி. பகவானைக் கண்டு பக்தர்கள் உருகலாம், பக்தர்களைக் கண்டு பகவான் எப்படி உருகமுடியும்? “”பக்தர்கள் விடும் மூச்சுக்காற்றின் வெப்பத்தைப் பனீசுவர பகவானால் தாங்கமுடியவில்லை” என்றன சில பத்திரிகைகள். பக்தர்களின் மூச்சை நிறுத்த முடியாதே! “”குகைக்கு அருகில் அடுப்பு பற்றவைத்து பக்தர்கள் சப்பாத்தி போடுகிறார்கள். சூடு தாங்கமுடியாமல்தான் பகவான் கசிந்துருகுகிறார்” என்றன வேறு சில பத்திரிகைகள். புவி சூடேறுதல்தான் காரணம் என்றனர் வேறு சிலர்.

காரண காரியங்கள் குறித்த அறிவுப்பூர்வமான ஆய்வுகள் தொடர்வது ஆன்மீகத்துக்கு ஆபத்து என்பதால் குப்தா கமிசன் என்றொரு கமிசனைப் போட்டு ஆராயச் சொன்னது அரசு. பகவான் கரையாமலும், பக்தர்கள் கூட்டம் கலையாமலும் பாதுகாக்கும் பொருட்டு குகைக்கு குளிர் சாதன வசதி செய்து சிவபெருமானை ஸீரோ டிகிரியில் பாதுகாப்பது; பக்தர்கள் சப்பாத்தி போட 100 ஏக்கர் வனப்பகுதியைக் கோயிலுக்கு தானம் கொடுத்து அடுப்புச் சூட்டிலிருந்து ஆண்டவனைப் பாதுகாப்பது என்று முடிவு செய்தது அரசு. இந்த 100 ஏக்கர் தானத்துக்கு எதிராகக் காஷ்மீரே பற்றி எரியத் தொடங்கி, அதன் விளைவாக அம்மாநில காங்கிரசு அரசு இப்போது உருகிக் கொண்டிருக்கிறது.

எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக, “அமர்நாத் பனிலிங்கம் செயற்கையானதல்ல’ என்று கொட்டை எழுத்தில் செய்தி போடுகிறது தினமணி (24.6.08).

இயற்கையாக உருவான எல்லாம் வல்ல இறைவனை செயற்கையாகப் பாதுகாப்பது ஏன் என்ற கேள்விக்கு மட்டும் அவர்கள் பதில் சொல்லவில்லை.

“இராமன் பாலம் என்பது இயற்கையாக அமைந்த மணல்திட்டு’ என்று சொன்னால், “இல்லையில்லை, அது இராமனால் கட்டப்பட்டது, செயற்கையானது எனவே தெய்வீகமானது’ என்று கத்துகிறார் இராம. கோபாலன். “அமர் நாத் பனிலிங்கம் செயற்கையானது’ என்று சொன்னால் “இல்லையில்லை, அது இயற்கையானது எனவே தெய்வீகமானது’ என்கிறார்கள். வடக்கே இயற்கை தெய்வீகம்! தெற்கே செயற்கை தெய்வீகம்!

மக்களை மயக்கத்தில் ஆழ்த்துவதற்காக ஆளும் வர்க்கம் உருவாக்கிய மடமைகள் உடைபடும்போது மதவாதிகள் பதறுகிறார்கள்; அதற்குக் காரணம் இருக்கிறது. ஆனால் அற்புதம் என்றும் தெய்வீகம் என்றும் தாங்கள் இதுகாறும் நம்பிக் கொண்டிருந்தவை அயோக்கியத்தனமான மோசடிகள் என்று ஆதாரப்பூர்வமாகத் தெரியும்போது பக்தர்கள் பதறியிருக்க வேண்டாமா?

“”கடன் பட்டதும், காவியணிந்ததும், மதுமாமிசம்மனைவியைத் துறந்ததும், காடு மலைகளில் நடையாய் நடந்ததும் கேவலம் ஒரு தீவட்டியைத் தரிசிக்கத்தானா?” என்று குமுறியிருக்க வேண்டாமா? “அது தீவட்டியில்லை, தெய்வீகத் தீபம்தான். நாங்கள் நம்பமாட்டோம்’ என்று நக்கீரனுக்குப் பேட்டி கொடுக்கிறார்கள் ஐயப்பசாமிகள். “”பகவானை எண்ணி பனியைச் சகித்ததும், பயங்கரவாதிகளை எண்ணிப் பயந்து செத்ததும், 12,000 அடி உயரம் மூச்சு வாங்க மலையேறியதும் ஒரு குச்சி ஐஸைத் தரிசிக்கத் தானா?” என்று கொதித்திருக்க வேண்டாமா? அந்தக் குச்சி ஐஸைப் பாதுகாக்க பாரத் பந்த் நடத்துகிறது பாரதிய ஜனதா. அதற்கும் கூட்டம் சேருகிறது.

பகுத்தறிவின் ஒளி பட்டவுடனே மூடநம்பிக்கை இருள் அகலவில்லையே ஏன்? “மகரஜோதி பொய்’ என்பதை அந்தக் கோயிலின் தந்திரியே பிரகடனம் செய்த பின்னரும் அய்யப்பன்மார்கள் திருந்தவில்லையே ஏன்? இந்த பக்தர்களை “மூட நம்பிக்கைக்குப் பலியானவர்கள்’ என்று மட்டும் நாம் கருதமுடியுமா? என்ன வகை பக்தி இது?

மூடநம்பிக்கைபகுத்தறிவு, ஏமாற்றுபவன்ஏமாற்றப்படுபவன் என்ற வகைப்பாடுகளின் வரம்பைத்தாண்டி ஒரு விநோதக் கலவையாக உருப்பெற்று வருகிறது இந்த “பக்தி’. காமவெறி பிடித்த பித்தலாட்டக்காரனாக அர்ச்சகன், இந்தப் பித்தலாட்டத்துக்குப் பந்தம் பிடிக்கும் அரசு, அதற்குக் காவல் நிற்கும் போலீசு, ஐயப்ப சீசனில் திருடுவதற்காகவே மாலை போட்டுக் கொள்ளும் பிக்பாக்கெட்டுகள், டாஸ்மாக் கடைகளில் அய்யப்பன்மார்களுக்கென்றே ஒதுக்கப்பட்டிருக்கும் தனிக் கோப்பைகள், சுத்தம் கருதி சாக்கனாக் கடைகளில் அவர்களுக்கு மட்டும் இலை போட்டுப் பரிமாறப்படும் புரோட்டாக்கள்..! மோசடியும் சுயமோசடியும் சரிவிகிதத்தில் கலந்து உருவாகியிருக்கும் இந்தக் கூட்டுக் களவாணித்தனத்தில் ஏமாற்றுபவன் யார், ஏமாற்றப்படுபவன் யார் என்று பிரித்தறிய முடியவில்லை.

புதுப்பட ரிலீஸ் அன்று கட் அவுட்டுக்குப் பால் அபிசேகம் செய்யும் ரசிகனின் பரவசம், நூறு ரூபாய்ஒரு குவாட்டர் என்று கறாராக ரேட் பேசிக் கொண்டு லாரியில் ஏறி வந்து “தலைவா’ என்று உணர்ச்சி வசப்படும் தொண்டனின் மனக்கிளர்ச்சி, இலஞ்சத்தை அழுதுவிட்டு அப்புறமும் அதிகாரியிடம் “ங’ப் போல் வளையும்’ நெளிவு சுளிவு, மொய் எழுதும் வயிற்றெரிச்சலை மறைத்தபடி திருமண வீட்டில் மலர்ந்து மணம் பரப்பும் புன்னகைகள்..! அன்றாட வாழ்வில் நாம் காணும் இந்த “உணர்ச்சிகள்’ எல்லாம் அமர்நாத் யாத்ரீகர்களின் பரவசத்தையும் அய்யப்பன்மார்களின் மனக் கிளர்ச்சியையும் பிரதிபலிக்கவில்லையா?

இந்த மத உணர்ச்சி ஒரு மயக்கமென்றால், அது ஆட்படுத்தப்பட்ட மயக்கம் மட்டுமல்ல, விரும்பி ஆட்படும் மயக்கம். இது தெய்வீக அபினி மட்டுமல்ல, லவுதீக அபினியும் கூட. இது புனித யாத்திரை என்ற முகமூடி அணிந்த இன்பச் சுற்றுலா. இந்தப் போலி பக்தியை ஆன்மீக அனுபவமாக “உணர்ந்து’ மயங்கும் பொருட்டு ஒரு “தெய்வீக கிளைமாக்ஸ்’ பக்தனுக்கே தேவைப்படுகிறது.

எனவேதான் பக்தன் பதறுவதில்லை. சாம்சங் ரெப்ரிஜிரேட்டரையே கருவறையாக்கி, அதற்குள் பனி லிங்கம் ஒன்றை உறையவைத்து, ஆண்டுக்கு ஒரு முறை திறந்து காட்டினாலும் “ஹர ஹர மகாதேவா’ என்று கன்னத்தில் போட்டுக்கொள்ள இந்த பக்தர்கள் தயார்! மகரஜோதிக்குப் பதில் சிலிண்டரை வைத்து “ஸ்பிக் ஜோதி’யைக் கொளுத்திக் காட்டினாலும் அதனைத் “தரிசிக்கும்’ பொருட்டு விரதமிருக்கவும், இருமுடி சுமக்கவும் அய்யப்பன்மார்கள் தயார்!

“டென் கமாண்ட்மென்ட்ஸ்’ என்ற திரைப்படத்தில் பார்த்த ஒரு காட்சி இங்கே நினைவுக்கு வருகிறது. பல வகையான விக்கிரக வழிபாடுகளில் மூழ்கியிருக்கும் யூத மக்களிடம் “”இவையெல்லாம் கடவுளல்ல, உண்மையான கடவுளின் செய்தியை நான் உங்களுக்குக் கொண்டுவருகிறேன்” என்று கடவுளைத் தேடி மலைக்குச் செல்வார் மோசஸ். போனவர் திரும்புவதற்குத் தாமதமாகவே, “”ஒரு கடவுளில்லாமல் இன்னும் எத்தனை நாள்தான் நாம் காத்திருக்க முடியும்?” என்று விசனப்பட்ட மக்கள் ஒரு எருமைக்கிடா பொம்மையைக் கடவுளாக்கி அதைத் தலையில் வைத்துக் கூத்தாடத் தொடங்குவார்கள்.

அந்தக் கூத்தும் இந்தக் கூத்தும் ஒன்று போலத் தோன்றினாலும் ஒன்றல்ல. அது அச்சத்திலும் மவுடீகத்திலும் மனிதகுலம் ஆழ்ந்திருந்த, அறிவியல் வளராத காலம். அது பல் முளைக்காத குழந்தையின் மழலை. இன்று நாம் காண்பதோ கிழவனின் மழலை. “”ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான்தான் என்று, அந்தப் பொய்யில் உயிர்வாழ்வேன்” என்று மன்றாடும் காதலனைப் போல, “எங்களுக்கு ஒரு மாயையை வழங்கு’ என்று இறைஞ்சுகிறார்கள் இந்த பக்தர்கள்.

சென்னை தீவுத்திடலில் அமர்நாத்தைப் போலவே பனிக்கட்டி லிங்கத்தை உருவாக்கி “சென்னையில் அமர்நாத்’ என்று விளம்பரம் செய்யப்படுகிறது. ராட்டினம் ஏறப்போன பொருட்காட்சிக் கூட்டம் உடனே பக்தர்களாக உருமாறி அந்த செயற்கை லிங்கத்தைப் பரவசத்துடன் வழிபடுகிறது. திருப்பதி வரை சென்று தரிசிக்க முடியாத பக்தர்களுக்காக “சீனிவாச திருக்கல்யாணத்தை’ சென் னையிலேயே நடத்தி, “சென்னையில் ஒரு திருப்பதி’ என்று விளம்பரம் செய்கிறது திருப்பதி தேவஸ்தானம். “கோயிந்தா கோயிந்தா’ என்று அங்கேயும் கூட்டம் அலைமோதுகிறது.

ஷாம்பு பாட்டில் வாங்கும் வசதியில்லாதவர்களுக்காக இப்போது சாஷேக்களில் தொங்குகிறார் கடவுள். நுகர்வு தரும் சிற்றின்பத்துக்கும் ஆன்மீகப் பேரின்பத்துக்கும் இடையில் நிலவுவதாகச் சொல்லப்படும் சீனப்பெருஞ்சுவர் மாயமாக மறைந்து விட்டது. இந்தப் பேரின்பமென்பது சிற்றின்பத்தின் வாலில் தடவப்பட்டிருக்கும் ஆன்மீக வாசனைத் தைலம். தமது இஷ்ட தெய்வங்கள் மீது இந்த பக்தர்கள் கொண்டிருக்கும் ஈடுபாடு, தமது இஷ்ட பிராண்டுகள் மீது நுகர்வோர் கொண்டிருக்கும் ஈடுபாட்டையே பெரிதும் ஒத்திருக்கிறது.

இது உத்திரவாதமில்லாத பரலோக இன்பவாழ்வை இலட்சியமாகக் கொண்டு இகலோகத் துன்பங்களைச் சகித்துக் கொள்ளும் இலக்கண வகைப்பட்ட ஆன்மீகமல்ல; உத்திரவாதமான இன்பத்துக்கான தேட்டம். “பக்தி’ என்று புனைபெயர் சூட்டிக் கொண்ட பிழைப்புவாதம். ஜோதியோ, லிங்கமோ, பக்திப் பரவசமோ அனைத்தும் இங்கே பிஸ்கெட் பாக்கெட்டுகளின் பளபளப்பான மேலுறைகள் மட்டுமே.

கஞ்சாச் செடியின் போதையைத் தெய்வீகமென்றும் பேரின்பமென்றும் தவமென்றும் எண்ணிக் கொண்டிருந்த கருத்து மயக்கமல்ல இது. “கஞ்சாவே பேரின்பம்’ என்று அறிவுப்பூர்வமாகத் தேர்ந்து தெளிந்த விழிப்பு நிலை. சொல்லப்போனால் இது வேறு ஒரு வகைப் பகுத்தறிவு. சுயநலத்துக்காகத் தெரிந்தே தன்னை மடமையில் ஆழ்த்திக் கொள்ளும் பகுத்தறிவு. கல்லையும் மரத்தையும் கண்டு அஞ்சி வணங்கிய மூடநம்பிக்கையைக் காட்டிலும் அபாயகரமான பகுத்தறிவு.

“மாலை போடுவது மடமை’ என்று நீங்கள் சாடினால், “ஒரு மண்டலம் விரதமிருப்பதும், புலால் மறுப்பதும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்’ என்று அறிவியல் பூர்வமாக விளக்கி உங்களைத் திகைப்படையச் செய்வார்கள் இந்த பக்தர்கள். “பனிலிங்கம் பொய்’ என்று நீங்கள் கூறினால், “”இந்த விசயம் உங்களுக்கு இப்போதுதான் தெரியுமா, எனக்கு ஏற்கெனவே தெரியும்” என்று சொல்லி உங்களை அதிர்ச்சியில் உறைய வைப்பார்கள். நீங்கள் அறிந்திராத மேலும் இரண்டு ஆன்மீக மோசடிகளை உங்களுக்கு விளக்கி, தங்களது உலக ஞானத்தின் மேன்மையை உங்களுக்குக் குறிப்பாலுணர்த்துவார்கள்.

அல்லது “”மகரஜோதியும் பனிலிங்கமும் மட்டுமா, உலகமே மோசடிகளால்தான் நிறைந்து இருக்கிறது” என்று தத்துவஞானத்தின் தளத்துக்கு விவாதத்தை தள்ளிச் செல்லுவார்கள். லஞ்சம், வரதட்சிணை, சாதி, வாஸ்து, சாமியார்கள், ராசிக்கல் என நியாயப்படுத்த முடியாத எல்லா அயோக்கியத்தனங்களையும் கொள்கையளவில் மறுப்பதற்கும், நடைமுறையில் அவற்றுடன் அனுசரித்துச் செல்வதற்கும் என்ன விதமான நியாயப்படுத்தல்களை சமூக வாழ்வில் நாம் எதிர்கொள்கிறோமோ, அவற்றைத்தான் பக்தர்களும் பயன்படுத்துகிறார்கள். பிழைப்புவாதமும் காரியசாத்தியவாதமும் பழகிவிட்டதால், அந்த வாதங்கள் அனைத்தையும், “பழகிய சைக்கிளை பழகிய ரோட்டில் ஓட்டும் இலாவகத்துடன்’ பயன்படுத்தி பகுத்தறிவை முறியடிக்கிறார்கள் இந்த பக்தர்கள்.

“டபுள்யூ.டபுள்யூ.எஃப்’ என் றொரு அமெரிக்க மல்யுத்தத்தைத் தொலைக்காட்சிகளில் நீங்கள் பார்த்திருக்கலாம். அதில் இரண்டு மாமிசமலைகள் மோதிக்கொள்வார்கள். நாக்கூசும் வார்த்தைகளால் ஏசிக் கொள்வார்கள். கொலைவெறியுடன் கட்டிப் புரளுவார்கள். எனினும் அது உண்மையான சண்டையல்ல. யார் வெல்ல வேண்டும் யார் தோற்க வேண்டும் என்பதை முன்னரே தீர்மானித்து நிகழ்ச்சியை நடத்தும் முதலாளிகள் காட்சிப்படுத்தும் நாடகம் அது. இரசிகர்களுக்கும் இது தெரியும். இருந்தாலும் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி சண்டையை ரசிக்கிறார்கள். “குத்து.. கொல்லு’ என்று வெறிகொண்டு கூச்சலிடுகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் ஏமாற்றுபவன் யார், ஏமாற்றப்படுபவன் யார்? நடிகன் யார், ரசிகன் யார்? தீவட்டி கொளுத்துபவன் யார், கன்னத்தில் போட்டுக் கொள்பவன் யார்? கண்டரரு யார், காணதவரு யார்? குருசாமி யார், கன்னிச்சாமி யார்?

இது ஒரு வகைப் “பகுத்தறிவு’. இதுதான் நம் முன் பக்திவேடம் பூண்டு ஆடுகிறது. வெறும் கருத்துப் போராட்டத்தால் இதனை வீழ்த்த முடியாது. இதன் இதயம் ஆன்மீகத்தில் இல்லை ; லௌகீகத்தில் இருக்கிறது சமூக வாழ்க்கையின் எல்லாப் பரப்புகளிலும் வேர் பரப்பியிருக்கும் இந்தப் “பகுத்தறிவை’ எதிர்த்துப் போராடுவதென்பது “ஒரிஜினல் மூடநம்பிக்கையை’ எதிர்த்துப் போராடுவதைக் காட்டிலும் கடினமானது.

-மருதையன்

நன்றி: புதிய கலாச்சாரம் ‍