Showing posts with label பராமரிப்பு. Show all posts
Showing posts with label பராமரிப்பு. Show all posts

Monday, 13 September 2010

இருபது வயது குறைய - இதோ ஒரு வழி

இருபது வயது குறைய - இதோ ஒரு வழி


தினசரி அரை மணி நேரம் நடைபயிற்சி செய்தால் வயதானவர்களின் மூளை செயல்பாடு 20 ஆண்டுகள் வரை இளமையாகும் என அமெரிக்க ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது. உடற்பயி ற்சிகளுக்கும் மூளையின் செயல்பாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர்.

59 முதல் 80 வயது வரை யுள்ள 65 பேர் தேர்வு செய்யப்பட்ட னர். அவர்களை தொட ர்ந்து ஒரு மாதத் துக்கு தினமும் அரை மணி நேரம் நடை பயிற்சி செய்ய கேட்டுக் கொள்ளப் பட்டது. அதற்கு முன்ன தாக, அவர்களது மூளை இயக்கத்தை சோதனை செய்து நிபுணர்கள் குறித்து வைத்துக் கொண்டனர். 18 முதல் 35 வயது வரையுள்ள 35 பேரை தேர்வு செய்து அவர்களின் உடற் பயிற்சி வழக்கம், மூளையின் செயல் பாடுகளை குறித்துக் கொண்டனர்.

ஒரு மாதம் கழித்து, கடுமை யான உடற் பயிற்சி செய்து வந்த இளைஞர்களின் மூளை செயல் பாட் டையும், தினசரி நடை பயிற்சி செய்த வயதானவர்களின் மூளை இயக்கத்தையும் சோதித்த னர்.

கடுமையான உடற் பயிற்சிகளை விட நடை பயிற்சியால் மூளையின் முக்கிய நரம்பு கள் சுறுசுறுப்படைந்தது தெரிய வந்தது. நடைபயிற்சி செய்தவர்களின் உடல் சுறுசுறுப்பு, வாழ்க்கைத்தரம் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததுபோல இருந்தது. எனவே, நடுத்தர, வயதான வர்களுக்கு நடைபயிற்சி சிறந்த பலன் அளிக்கும் என்று நிபுணர்கள் அறிவித்துள்ளனர்

Friday, 27 August 2010

Cuddalore SIPCOT Residents Block the National Highway

Residents Protest Effluent Discharge in SIPCOT Canal: Block the National Highway

Cuddalore, 25 August 2010: Protesting the discharge of effluents through the storm water drains by the SIPCOT units, more than 100 residents of SIPCOT Cuddalore blocked the National Highway (NH) 45A today. The villagers were forced to take this step after the effluent discharge contaminated the village canal in Sangolikuppam village of SIPCOT.

According to the sources at about 9.30 am today SIPCOT residents noticed yellow colour water with strong ammonia like odour at the canal opposite the Kudikadu Bus Stop. This canal is parallel to NH45A and runs from Tagros in the north of SIPCOT Complex till the south of Sangolikuppam village ,where it meets the Pillukuthu canal which eventually drains into river Uppanar. It was reported that the odour from the effluent near the bus stop was ranked at around 8 on a scale of 1 to 10 and caused eye burning sensation. Following the canal further towards the South, the residents found black effluent with an oily layer and an acidic fruity odour near the petrol pump at Kudikadu. The residents complained of itching sensation when in contact with the water.

Sources inform that industries regularly release effluent through their stormwater drains during the rainy season. Based on the location where these effluents were found residents suspect TANFAC, Clariant, Shasun, Asian Paints, Aurobindo and Tantech responsible for this discharge. In the absence of a monitoring mechanism it was difficult to ascertain the exact source of the effluents.

While such releases are routine, today the residents particularly got angry as the contamination of Pillukuthu canal would deprive them of water for regular usage. The village panchayat blocks this canal during the rains to harvest rainwater and the entire pool has been contaminated by today's discharge.

Local police was the first to intervene at site to end the blockade but people refused to give in to the pressure and demanded action on the units responsible. Later the Village Officer, Tehsildar and the District Environment Engineer (DEE) of TNPCB intervened in the matter. The negotiations went on for about three hours and finally the blockade was removed upon assurance from DEE that 1) the effluent would be cleaned up immediately, 2) sample would be taken to ascertain the contaminants, 3) adequate action would be taken on the units responsible.

SACEM monitors have also taken a sample of the effluents along with the TNPCB officials. A complaint with regards to today's incident has been sent to District Collector and TNPCB head office.

Source: http://www.sipcotcuddalore.com/updates_250810.html
And thanks to: www.portonovo.in
(Mr. Mohamed Kaleel)

Monday, 26 July 2010

கடலூர் துறைமுகம் - கரையேறுமா?

கடலூர் துறைமுகம் - கரையேறுமா?


முறையான பராமரிப்பு இல்லாததால் சிதைந்து காணப்படும் கடலூர் துறைமுக ரயில்நிலைய சந்திப்பின் பாதை

200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கடலூர் இயற்கைத் துறைமுகம், கடந்த 25 ஆண்டுகளாகச் செயல் இழந்து கிடக்கிறது.
இந்தியாவுக்கு வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்களின் முதல் தலைநகரமாக விளங்கியது கடலூர். சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்படுமுன் கடலூரில் புனித டேவிட் கோட்டையைக் கட்டி, தங்கள் வாணிபத்தைத் தொடங்கினர். ஆங்கிலேயர்கள் தங்கள் நாட்டுடனான வாணிபத் தொடர்புகளுக்கு, கடலூர் துறைமுகத்தை அதிக அளவில் பயன்படுத்தியதாக சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
பரங்கிப்பேட்டையில் இருந்த இரும்பு உருக்கு ஆலைகளில் தயாரிக்கப்பட்ட இரும்புத் தளவாடங்கள் (made in Porto-Novo என்ற முத்திரையுடன்), கடலூர் துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் மூலம் இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்டன. மேலும் மணிலா, சர்க்கரை, இரும்புக் கனிமங்கள், வெள்ளைக் கற்கள் என்று ஏராளமானவை கடலூர் துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. சுதந்திரத்துக்குப் பின் கடலூர் துறைமுகத்தில் இருந்து, சேலத்தில் வெட்டி எடுக்கப்பட்ட இரும்புக் கனிமங்கள், வெங்காயம், வெல்லம், சர்க்கரை, வெள்ளைக் கற்கள் போன்றவை கப்பல்கள் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
யூரியா, கோதுமை போன்ற பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன. தற்போது தொழிற்சாலைகளுக்குத் தேவையான இயந்திரங்கள், ரசாயன மூலப்பொருள்கள், யூரியா உரம் ஆகியவை இறக்குமதி செய்யப் படுகின்றன. 1985 வரை 150 ஊழியர்களுடன் இத்துறைமுக அலுவலகம் செயல்பட்டது. 500 சரக்கு விசைப் படகுகளுடன், சுமார் 1 லட்சம் தொழிலாளர்களுக்கும், இங்கு வேலைவாய்ப்பு இருந்தது. தற்போது 7 ஊழியர்களுடன் இயங்கிக் கொண்டு இருக்கிறது துறைமுக அலுவலகம். கடலூர், நாகைத் துறைமுகங்களுக்கு ஒரே அதிகாரி செயல்படுகிறார். வடகிழக்கு பருவமழைக் காலத்தில் முகத்துவாரத்தில் படியும் மணலை வாருவதற்கு நிரந்தரமாக செயல்பட்டு வந்த மணல்வாரி இயந்திரம் (டிரட்ஜர்) தற்போது நிரந்தரமாக அகற்றப்பட்டு விட்டது.
சுனாமி மறுவாழ்வுப் பணிகளில், முகத்துவாரத்தில் இருந்து மீன்படிப் படகுகள் நிறுத்தப்படும் உப்பனாறு வரை, சிறிதளவு மணல் அகற்றப்பட்டது. ரூ.15 கோடியில் துறைமுகம் பகுதியில் அலைதாங்கி கற்கள் கொட்டப்பட்டன. எனினும் முகத்துவாரம் முழுமையாக தூர்வாரப்படவில்லை என்கிறார்கள் மீனவர்கள். ரயில் நிலையத்தில் இருந்து துறைமுகம் செல்லும் ரயில்பாதை கூட அகலப்பாதையாக மாற்றப்படாமல் சிதைந்து கிடக்கிறது.கடலூர் துறைமுகத்துக்கு வரும் கப்பல்கள் 0.5 கடல் மைல் தொலைவில், கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்படுகின்றன. துறைமுகச் செயல்பாடுகளுக்கு வசதியாக இந்தத் துறைமுகத்துக்கு சுமார் 100 ஏக்கர் நிலங்கள் உள்ளன. ஆனால் நாகை, கொளச்சல் துறைமுகங்களுக்கு போதிய நிலங்கள் இல்லை என்றும் துறைமுக அதிகாரிகள் கூறுகிறார்கள்.
சென்னைக்கு மிக அருகில் இருப்பதால், சென்னை துறைமுகத்தில் இறக்கக் கூடிய சரக்குகளை கடலூரில் இறக்கி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் எளிதில் கொண்டு போக முடியும்.இத்தனை வசதிகள் இருந்தும் கடலூர் துறைமுகம் விரிவாக்கம் செய்யப்படாமலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தாமலும் செயலிழந்து கிடக்கிறது. கடலூரில் துறைமுகத்தை யொட்டிய பகுதிகளில் மீன்பிடித்தல், படகுகள் கட்டுதல், சிறிய வர்த்தகக் கப்பல்கள் கட்டுதல் உள்ளிட்ட பணிகளால் ஆண்டுக்கு ரூ.200 கோடி வர்த்தகம் நடக்கிறது. மீன்பிடித் தொழிலுக்கு வசதியாகக்கூட கடலூர் துறைமுகம் விரிவுபடுத்தப்படவில்லை என்பதுதான் கடலூர் மக்களின் ஆதங்கம்.
தென் மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில், அதிகப்படியான அரசியல் இயக்கங்களும், அதிக எண்ணிக்கையில் அரசியல்வாதிகளும் நிறைந்ததாக கடலூர் மாவட்டம் திகழ்ந்த போதிலும், பொது நலத்தை எண்ணிப்பார்க்கும் சிறந்த அரசியல் தலைமை கிடைக்காததால், துறைமுகம் உள்ளிட்ட பல சிறந்த திட்டங்களுக்கு முறையாகக் குரல் கொடுக்க நாதியற்றுக் கிடக்கிறது கடலூரும், அதன் சுற்றுவட்டாரங்களும்.
இதுகுறித்து கடலூர் துறைமுக அதிகாரி அன்பரசன் கூறுவதாவது:

""கடலூர் துறைமுகம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, கடல்சார் வாரியத்திடம் உள்ளது. தமிழக கிழக்குக் கடற்கரையோரம் துறைமுகங்களுடன் ஒப்பிடும்போது, கடலூர் துறைமுகம் நல்ல வசதி கொண்டது. வசதி குறைந்த நாகை துறைமுகத்தில் ஓரளவு கப்பல் போக்குவரத்து நடைபெறுகிறது. ஆனால், இயற்கையாக அமைந்துள்ள கடலூர் துறைமுகத்தில் அதுவும் இல்லை. அவ்வப்போது வந்து போகும் கப்பல்களால் தற்போது, ஆண்டுக்கு சுமார் ரூ.4 கோடி மட்டுமே வருவாய் கிடைக்கிறது. தனியார் நிறுவனத்துடன் இணைந்து கடலூர் துறைமுகத்தை விரிவுபடுத்த அரசு திட்டுமிட்டு உள்ளது'' என்கிறார்.

Sunday, 18 July 2010

மரணத்தின் விளிம்பில் இருப்போரை பராமரிப்பது குறித்த ஆய்வு:

மரணத்தின் விளிம்பில் இருப்போரை குறித்த ஆய்வு:

மரணத்தின் இறுதிக்கட்டத்தில் இருப்போரை- சரியான முறையில்- பராமரித்து அவர்களின் உயிர் அமைதியாகப் பிரிவதற்குரிய நிபுணத்துவம் வாய்ந்த சேவைகளை வழங்கும் நாடுகளில் சிறந்தவை எவை என்ற ஆய்வு நடாத்தப்பட்டுள்ளது.

மொத்தம் 40 நாடுகளை எடுத்துக் கொண்டு அமெரிக்காவில் உள்ள பொருளியல் நுண்ணறிவுத்துறை மேற்கண்ட ஆய்வைச் செய்துள்ளது. இந்த ஆய்வு அறிக்கையின், 40 நாடுகளின் பட்டியலில், இந்தியா கடைசி மோசமான இடத்தைப் பிடித்துள்ளது.

முதல் பத்து இடங்களை பெற்ற நாடுகளின் பட்டியல் வருமாறு:

01. இங்கிலாந்து

02. அவுஸ்திரேலியா

03. நியூசிலாந்து

04. அயர்லாந்து

05. பெல்ஜியம்

06. ஆஸ்திரியா

07. கொலன்ட்

08. ஜேர்மனி

09. கனடா

10. அமெரிக்கா

எங்கே போய்க்கொண்டிருக்கிறது நமது பாரத கலாச்சாரம்?

முதியவர்களையும், வயதான பெற்றோர்களையும் பராமரிக்க தவறும் நாமும்..... முதிய வயதை அடைய மாட்டோமா? அப்பொழுது, நமக்கும் - இதே நிலை தானா!