Sunday 29 August 2010

அப்துல் நாசர் மதானி - அதிகாரத்தின் இரை

அப்துல் நாசர் மதானி - அதிகாரத்தின் இரை

ந்திய தேசத்தின் விடுதலைக்காக, தன் தேகத்தையே அர்பணித்த காந்தியடிகள் கொடூரமாக கொல்லப்பட்ட நிகழ்வுதான, விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பயங்கரவாத நிகழ்வு. மூச்சுக்கு ஒரு முறை ''ஹே ராம்'' என்று உச்சரித்து, கடைசி வரை தீவிர இந்து மதப் பற்றாளராக வாழ்ந்த காந்தியடிகளை கொன்றொழித்த பயங்கரவாதத்தை செய்தது முஸ்லிம்கள் அல்ல.. ஆனாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!

பன்மைத் தன்மை உடைய இந்தியத் திருநாட்டில், சமயச்சார்பின்மை என்னும் தத்துவம் தளைக்க தன் இறுதி மூச்சு உள்ள வரைப் போராடிய ஜவஹர்லால் நேருவின், அரசியல் வாரிசான இந்திரா காந்தியை சுட்டுப் பொசுக்கிய பயங்கரவாதத்தில் முஸ்லிம்களுக்குத் தொடர்பில்லை., ஆனாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!


இந்திரா காந்தியின் அருமைப் புதல்வரும், இந்தியாவின் இளம் பிரதமருமான ராஜீவ் காந்தியை சிதறடித்த பயங்கரவாதத்திலும் முஸ்லிம்களுக்கு சம்மந்தமில்லை. ஆனாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!


இந்துக்களின், கிறிஸ்தவர்களின், சீக்கியர்களின், பௌத்தர்களின் இன்ன பிற சமூகங்களின் வழிபாட்டுத் தலங்களையோ, வரலாற்றுச் சின்னங்களையோ, இடித்துத் தகர்த்த பயங்கரவாதத்தை, இந்தியாவின் எந்த ஒரு மூலையிலும் எந்த ஒரு முஸ்லிமும் செய்ததில்லை., ஆனாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!


சுதந்திர இந்தியாவில் நடை பெற்ற மிகப்பெரும் வகுப்புக் கலவரங்கள், இனப்படுகொலைகள் எல்லாவற்றிலும் உயிரை இழந்து, உடைமை இழந்து சொந்த மண்ணிலேயே அகதிகளாய் அல்லல்பட்டபோதும், உணர்வை இழக்காமல் உரிமை கேட்டதனால்., முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!


madani_360இரத்தமும் சதையுமாக இந்திய மண்ணை நேசித்த முஸ்லிம்களின், இரத்தம் குடித்து தன் சதை வளர்க்கும் இழி செயலை, இந்தியாவின் அதிகார வர்க்கமும், ஊடகங்களும் வெளிப்படையாக செய்து வருகின்றன. முஸ்லிம்களை குதறுவதையே முழு நேர செயல் திட்டமாகக் கொண்டு இயங்கும் இந்துத்துவ சக்திகளுக்கு, ஜனநாயகத்தின் அத்தனைத் தூண்களும் அரணாய் நிற்கின்றன. நாடு முழுவதும் தொடரும் இந்த அக்கிரமத்திற்கு இரையாகிப் போன இரத்த சாட்சியாக இப்போது பெங்களூர் சிறைக் கொட்டடியில் அடைபட்டுக் கிடக்கிறார் அப்துல் நாசர் மதானி.


நாம் வாழும் காலத்தில், நம் கண் முன்னாலேயே ஒரு மிகப்பெரும் அக்கிரமம் அரங்கேறிக் கொண்டு இருக்கிறது. சட்டம் அதன் கயமையைச் செய்கிறது. நீதிக்கு கல்லறை கட்டப்படுகிறது, எளிய மனிதர்களைச் சூறையாடும் அரச பயங்கரவாதம் தலை விரித்தாடுகிறது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இருபது சதவீதத்துக்கும் அதிகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் எழுச்சிக்காகவும், மறு மலர்ச்சிக்காகவும் போராடிய ஒற்றைக் காரணத்திற்காக ஒரு அப்பாவி மனிதரை வேட்டையாடிக் கொண்டிருக்கின்றன இந்தியாவின் அரசுகள்.


சட்டம், நீதி, ஜனநாயகம், இறையாண்மை என்றெல்லாம் வாய்கிழியப் பேசப்படுகின்ற ஒரு மண்ணில், அப்பட்டமாக மீறப் படுகின்றன மனித உரிமைகள். மாந்த நேயத்திற்கான அத்தனை இலக்கணங்களும் குழி தோண்டிப் புதைக்கப் படுகின்றன. ஜனநாயகத்தின் தூண்கள் அனைத்தும் ஈரமற்றப் பாறையாய் மாறி வருகின்றன. இதற்குப் பிறகும் சட்டம் பற்றியும், நீதி பற்றியும், ஜனநாயகத்தின் மாண்பைப் பற்றியும் பிதற்றுபவர்களை காணும்போது கடும் எரிச்சலும், கோபமும் தான் வருகிறது.


1992 டிசம்பர் 6 - இல் பாபர் மஸ்ஜிதை இடித்தார்கள். 450 ஆண்டு கால வரலாற்றுச் சின்னத்தை, முஸ்லிம்களின் புனிதமிக்க வழிபாட்டுத் தலத்தை அநீதியான முறையில் தகர்த்து எறிந்தார்கள். எப்படியாவது தங்களின் பள்ளிவாசல் காப்பாற்றப்பட்டு விடும் என்று கடைசி வரை நம்பியிருந்த முஸ்லிம்கள் கருவறுக்கப்பட்டார்கள். இந்த நாட்டின் மதிப்பு மிகுந்த நீதிமன்றத்தையும், ராணுவத்தையும், போலீசையும், ஓட்டுப் பொறுக்கி அரசியல் வாதிகளையும் நம்பி, நம்பி ஏமாந்து போனது முஸ்லிம் சமூகம்.


அவநம்பிக்கை மிகுந்த நிலையில், தமது இருப்பு குறித்த பாதுகாப்பின்மையும், எதிர்காலம் குறித்த அச்சமும் முஸ்லிம்களை வாட்டத் தொடங்கியது. தமக்கான பாதுகாப்பை தாமே உறுதி செய்து கொள்ளும் வகையில் முஸ்லிம் சமூகத்தின் உள்ளிருந்து உரிமைக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. அப்படி நாடு முழுவதும், ஜனநாயகப் பாதையில் நின்று உரிமை கேட்பதற்காக வெடித்து முளைத்த விதைகளில் ஒருவர்தான் அப்துல் நாசர் மதானி.


அடக்குமுறைகளுக்கு எதிரான கர்ஜனை, எவருக்கும் எதற்கும் அடங்காத கம்பீரம், நெருப்பை உமிழும் உரை வீச்சு, சமுதாய மறுமலர்ச்சியே உயிர் மூச்சு என்று தனிப்பெரும் அடையாளத்துடன் கேரள அரசியல் வானில் வலம் வந்தவர் அவர். அதிகாரத்தை நோக்கிய உண்மையின் குரலாக, ஒடுக்கப்பட்டோரின் உரிமைக் குரலாக ஓங்கி ஒலித்தவர் அவர். கொள்கைச் சமரசமற்ற அவரது அரசியல் நிலைப்பாடுகளும், இந்துத்துவ எதிர்ப்பில் அவர் காட்டிய உறுதிப்பாடும்தான் அவரை இன்று இந்த நிலைக்குத் தள்ளி இருக்கிறது.

கேரளாவின் கொல்லம் மாவட்டம் சாஸ்தான் கோட்டையைச் சார்ந்த அப்துஸ் சமத் மாஸ்டர், அஸ்மா பீவி தம்பதியருக்கு 1965 ஜனவரி 18 - இல், மூத்த மகனாக பிறந்தார் மதானி. பள்ளித் தலைமை ஆசிரியரான மதானியின் தந்தை, அவரை மார்க்க அறிவும் நல்லொழுக்கமும் உடைய பிள்ளையாக வளர்த்து எடுத்தார். பள்ளிக் கல்விக்குப் பின் கொல்லத்தில் உள்ள 'மஅதனுல் உலூம்' அரபிக் கல்லூரியில் இணைந்து இஸ்லாமிய மார்க்க அறிஞராக பரிணாமம் பெற்றார் மதானி. அந்தக் கல்லூரியில் வழங்கப்பட்ட 'மஅதனி' என்ற பட்டமே பின்னாளில் அவரது அடையாளத்துக்குரிய பெயராக மாறிப் போனது.

இளம் மார்க்கப் பிரச்சாரகராக தன் பயணத்தைத் தொடங்கிய மதானி, அனல் பறக்கும் உரை வீச்சுக்களால் அனைவரையும் ஈர்த்தார். அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலை மோதியது. கேரளாவின் சொற்பொழிவு மேடைகளில் தவிர்க்க முடியாத தனிப்பெரும் பேச்சாளர் ஆனார் மதானி. 1990 களில் இந்திய அளவில் நடைபெற்ற பல்வேறு அரசியல் நிகழ்வுகள் மதானியைப் பாதித்தது. மண்டல் கமிசன் அறிக்கைக்கு நேர்ந்த கதியும், அத்வானியின் தலைமையில் அரங்கேறிய இந்துத்துவ எழுச்சியும், முஸ்லிம்களை அச்சுறுத்தும் ஆர். எஸ்.எஸ் கும்பலின் தீவிரவாத நடவடிக்கையும் கண்டு கொதித்து எழுந்தார் மதானி.


ஆர்.எஸ்.எஸ்.க்கு அரசியல் தளத்தில் நின்று பதிலடி கொடுக்க ஐ.எஸ்.எஸ். [இஸ்லாமிக் சேவா சங்] என்ற அமைப்பை, 1990 ஆம் ஆண்டு தொடங்கினார். 1992 டிசம்பர் 6 - இல் பாபர் மஸ்ஜித் இடிக்கப் பட்டபோது மதானியின் ஐ.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் இந்திய அரசின் இத்தகைய நடவடிக்கையைக் கண்டித்து சூறாவளியாய் சுழன்றார் மதானி. பாபர் மஸ்ஜிதை இடித்த பயங்கரவாதிகளையும், அதற்குத் துணை நின்ற காங்கிரசையும் நெருப்பு உரைகளால் காய்ச்சி எடுத்தார்.


மதானியின் உரை வீச்சில் பொசுங்கிப்போன இந்துத்துவ சக்திகள், அவரை நேர்மையாக எதிர்கொள்ள முடியாமல் தீர்த்துக்கட்டும் சதியில் இறங்கினர். ஆதரவற்ற அனாதைக் குழந்தைகளை அரவணைக்கும் வகையில் அன்வார்சேரியில் மதானி உருவாக்கிய ஜாமியா அன்வார் என்னும் கலாசாலையில் இருந்து இரவு அவர் வெளியே வரும்போது, ஆர். எஸ்.எஸ் கும்பல் அவர் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியது. 1992 இல் நடைபெற்ற அந்த தாக்குதலில் தனது ஒற்றைக் காலை இழந்து ஊனமுற்ற மதானி, அதன் பின்னர் சக்கர நாற்காலியில் தவழ்ந்து கொண்டே சரித்திரம் படைத்தார்.


இந்தியச் சூழலில் முஸ்லிம்கள் தனித்து நின்று போராடுவதன் மூலம் இலக்கை அடைய முடியாது என்ற உண்மையை உணrந்து தெளிந்த மதானி, 1993 இல் மக்கள் ஜனநாயகக் கட்சி [PDP] என்னும் அரசியல் கட்சியைத் தொடங்கினார். தாழ்த்தப்பட்ட தலித் மக்களும், ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களும் ஓரணியில் ஒன்றிணைந்து அரசியல் சக்தியாக எழுச்சி பெறும் வியூகத்தை வகுத்தார். தலித் சமூகத்தை சார்ந்த ஒருவரை கேரளாவின் முதலமைச்சராக மாற்றியே தீருவேன் என்று சூளுரைத்தார். குருவாயூர், ஒற்றப்பாலம், திரூரங்காடி இடைத்தேர்தல்களில் போட்டியிட்டு கேரளாவின் mainstream அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்தார்.


முஸ்லிம்களோடு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களையும் அணி திரட்டும் மதானியின் தொலை நோக்குப் பார்வையைக் கண்டு கேரளாவின் அரசியல் கட்சிகளுக்கு நடுக்கம் வந்தது. அரசியல் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திக் கொண்டு முன்னேறிக் கொண்டிருந்த மதானி 1998 மார்ச் 31 - அன்றுகோவை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.


மதானி கோவை சிறையில் இருந்தபோது அவர் அனுபவித்த ரணங்கள் வார்த்தைகளில் அடங்காதவை. விசாரணைக் கைதியாக சிறையில் பூட்டப்பட்டு கசக்கி எறியப்பட்டார். 105 கிலோ எடை கொண்ட கனத்த தேகத்துடன், 33 வயதே நிரம்பிய துடிப்பு மிக்க இளைஞராக சிறைக்குச் சென்ற அவர் அதிகாரத்தின் கொடும் பசிக்கு இரையானார். நாளாக நாளாக அவரது உடல் எடை குறைந்து இறுதியில் 45 கிலோ ஆனது. உலகத்தில் உள்ள அத்தனை வியாதிகளும் குடியிருக்கும் நோய்களின் கூடாரமாக மாறி அவரது உடல் நலியுற்றது. ஒரு விசாரணைக் கைதிக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச உரிமைகள் கூட மதானிக்கு மறுக்கப்பட்டன.

1200 க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டு ஒருவர்கூட அவருக்கு எதிராக சாட்சி சொல்லாத நிலையிலும் அவரது ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டன. அவரது பாட்டி இறந்தபோது பரோலில் சென்று பட்டியின் உடலை பார்த்து வருவதற்கு கூட அவருக்கு அனுமதி தரப்படவில்லை. நீண்ட நாள் ஆகிவிட்டதால் பழுதடைந்த தனது செயற்கை காலை புதுப்பிக்கவும், சிகிச்சைக்காகவும் வேண்டி மதானி அனுப்பிய மனுக்கள் குப்பைக் கூடையில் எறியப்பட்டன. அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா மதானி விசயத்தில் மிக மூர்கத்தனமாக நடந்து கொண்டார்.

மதானியை விடுதலை செய்யக் கோரி தமிழகத்திலும், கேரளத்திலும் மிகப்பெரும் மக்கள் இயக்கங்கள் நடைபெற்றன. 2006 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும், அப்பாவி சிறைவாசிகளின் விடுதலையை முன்னிலைப்படுத்தி த.மு.மு.க போன்ற தமிழக முஸ்லிம் அமைப்புகள் தேர்தலை எதிர்கொண்ட விதமும், மதானி உள்ளிட்ட அப்பாவிகளின் விடுதலைக்கு வழிவகுத்தது.

கலைஞர் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற உடன் அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகள் குறித்த கோரிக்கைகள் கனிவோடு பரிசீலிக்கப்பட்டன. மதானிக்கு மருத்துவ சிகிச்சை கிடைத்தது. பின்னர் குற்றம் நிரூபிக்கப்படாமல் ஒன்பதரை ஆண்டுகால சிறை வாழ்கையை முடித்துக் கொண்டு 2007 ஆகஸ்ட் 1 - இல் விடுதலையாகி வெளியே வந்தார் மதானி. பரபரப்பான அவரது அரசியல் பயணத்தை முடக்கி, கம்பீரமான அவரது தோற்றத்தை ஒடுக்கி, இயங்க முடியாத நிலைக்கு அவரைத் தள்ளிய பிறகு குற்றமற்றவர் என்று விடுதலை செய்தது நீதிமன்றம்.

விடுதலைக்குப் பின் மதானியைத் தவிர வேறு யாராக இருந்தாலும், நலிந்த தன் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு பொது வாழ்வுக்கு ஓய்வு கொடுத்திருப்பார்கள். வெகு மக்களிடம் தன் மீது ஏற்பட்டிருக்கும் அனுதாபத்தை அரசியல் லாபத்திற்கான அறுவடையாகக் கருதி காங்கிரசோடு பேரம் நடத்தி இருப்பார்கள். முஸ்லிம்களுக்கான பிரச்சனைகளைப் பேசியதனால் தானே வம்பு ; பேசாமல் 'பதவி அரசியல்' நடத்துவோம் என்று கொள்கை அரசியலை கை கழுவி இருப்பார்கள்.

ஆனால் அப்படி எந்த முடிவுக்கும் வரவில்லை மதானி. முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் அரசியல் எழுச்சிக்கான தனது பயணத்தை முன்பை விடவும் வேகமாகக் கூர் தீட்டினார். பேச்சில் இருந்த வீச்சைக் குறைத்து அதை செயலில் காட்டினார். தன் உடல் நிலையைப் புறம் தள்ளி விட்டு கேரளா முழுவதும் வலம் வந்தார். ஒன்பதரை ஆண்டுகாலம் முடங்கிக் கிடந்த தனது தொண்டர்களை மீண்டும் தட்டி எழுப்பினார்.

மதானியின் கதை முடிந்து விட்டது என்று கணக்குப் போட்டு காய் நகர்த்தியவர்களுக்கு, அவரது இத்தகைய மீள் எழுச்சி எரிச்சலைத் தந்தது. ஏற்கனவே கோவைக் குண்டுவெடிப்பு வழக்கில் அவரைச் சிக்கவைத்து குளிர் காய்ந்தவர்கள் மீண்டும் அதே பாணியில் அவரைக் குதறத் தொடக்கி உள்ளனர்.

****

2008 ஆம் ஆண்டு ஜூலை 25 - ஆம் நாள் பெங்களூரில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் மதானி 31- ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, கர்நாடக மாநில காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் மதானி சேர்க்கப்பட்டுள்ள விதத்தையும், வழக்கின் போக்கையும் பார்க்கின்ற போது , மதானியை ஒரேயடியாக ஒழித்துக்கட்ட மிகப்பெரிய சதி வலைகள் பின்னப்படுவதை அறிய முடிகின்றது.

கேரளாவைச் சார்ந்த 'தடியன்டவிட' நசீர் என்பவர் 2009 ஆம் ஆண்டு, பங்களாதேசத்தில் வைத்து அங்குள்ள ரைபிள் படையினரால் கைது செய்யப் பட்டார். லஷ்கரே தொய்பா தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்ட நசீர், கொடுத்ததாக சொல்லப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் இப்போது மதானி வேட்டையாடப்படுகிறார்.

2005 ஆம் ஆண்டு கேரள மாநிலம் கலமச்சேரியில், தமிழக அரசுப் பேருந்து எரிக்கப்பட்ட வழக்கில், 'தடியண்டவிட' நசீரிடம் கேரள போலீசார் விசாரித்ததாகவும், விசாரணையில், ''தமிழக அரசுப் பேருந்தை எரிக்கச் சொன்னது மதானியின் மனைவி சூஃபியாதான் '' என்று நசீர் சொன்னதாகவும் கூறி 2009 டிசம்பரில் சூஃபியா கைது செய்யப்பட்டு எர்ணாகுளம் சிறையில் அடைக்கப்பட்டார். அது தனிக் கதை.

பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில், பெங்களூர் மாஜிஸ்த்ரேட் நீதிமன்றத்தில் மதானி மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி, மதானியின் சார்பில் அவரது வழக்கறிஞர் கர்நாடக உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவுக்கு எதிராக கர்நாடக காவல் துறையினர் பதில் மனுத் தாக்கல் செய்தனர்.

57 பக்கங்கள் கொண்ட அந்த பதில் மனுவில் காவல்துறை கையாண்டிருக்கும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் விஷம் தோய்ந்தவையாக இருக்கின்றன. மதானிக்கு எதிரான சதியின் முழுப் பரிணாமமும், முஸ்லிம்கள் மீதான அதிகார வர்க்கத்தின் வெறுப்புணர்வும் அதில் அப்பட்டமாகத் தெரிகிறது.

'' பெங்களூரில் குண்டுவெடிப்பு நடப்பதற்கு முன் மதானியும், கைது செய்யப்பட்ட நசீர் உள்பட 22 குற்றவாளிகளும், கேரள மற்றும் கர்நாடக எல்லையில் உள்ள குடகு நகரில் ஒன்று கூடி, அங்குள்ள தேயிலைத் தோட்டத்தில் வைத்து சதித்திட்டம் வகுத்ததாகவும், இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டும் என்பது அவர்களது திட்டம் என்றும், இதற்காக இந்தியாவில் வன்முறையைத் தூண்டி விட்டு, மத்திய மாநில அரசுகளுக்கு இடையூறு செய்வதே அவர்களின் நோக்கம் என்றும் போலீஸ் கூறியுள்ளது.

மேலும், நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து வெடி பொருட்களை ரகசியமாக கேரளத்துக்கு கடத்தி, அங்கு வெடிகுண்டைத் தயாரித்துள்ளனர் என்றும், இவ்வாறு தயாரிக்கப்பட்ட குண்டுகளை மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிக்க வைத்து மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளார்'' என்றும் நீளுகிறது போலீஸ் அறிக்கை.

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து மதானி குற்றமற்றவராக விடுவிக்கப் பட்டாலும், மதானியை தீவிரவாதியாக சித்தரிக்கும் ஆளும் வர்க்கத்தின் கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதையே போலீசின் இந்த அறிக்கை எடுத்துக் காட்டுகிறது.

சிறையிலிருந்து வெளி வந்த பின்னர் மதானியின் முழு செயல்பாடுகளும், நடவடிக்கைகளும் மத்திய மாநில புலனாய்வுக் குழுவினரால் கண்காணிக்கப்படுகிறது. அவரது சுற்றுப்பயணம் குறித்த முழு தகவலும் கேரள காவல் துறையிடம் இருக்கிறது.அப்படிப்பட்ட சூழ்நிலையில், 24 மணி நேரமும் கண்காணிப்பு வளையத்துக்குள் இருக்கும் ஒருவர், எப்படி குண்டு வெடிப்புச் சதியில் ஈடுபட முடியும்? குடகு நகரில் ரகசியமாகக் கூடி திட்டம் தீட்ட முடியும்? என்றெல்லாம் கேட்கப்படும் எந்தக் கேள்விக்கும் ஜனநாயக நாட்டில் விடை இல்லை.

நசீர் கைது செய்யப்பட்டு சுமார் ஐந்து மாதங்களுக்குப் பிறகு, '''மதானிக்கும் குண்டுவெடிப்பில் பங்குண்டு'' என்று அவர் வாக்குமூலம் அளித்ததாகக் கூறி மதானி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் காவல் துறையின் இந்த மோசடித்தனத்தை, கொச்சி உயர் நீதி மன்றத்தில் இருந்து வெளியே வரும் போது பத்திரிகையாளர்களை சந்தித்த நசீர் பகிரங்கமாக அம்பலப் படுத்தினார். ''பெங்களூர் குண்டுவெடிப்பில் மதானிக்கு தொடர்பு உண்டு என்று தான் கூறவே இல்லை'' என்று உறுதியாக மறுத்தார். ஆனாலும் காவல் துறையும், நீதி மன்றமும் அதை எல்லாம் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. மதானியை சூறையாட வேண்டும் என்று அதிகார வர்க்கம் முடிவு செய்து விட்ட பிறகு எந்த உண்மையைத் தான் அவர்களால் ஏற்க முடியும்?

இந்தியாவை இஸ்லாமிய நாடாக்க சதி நடக்கிறது என்று கர்நாடக பாஜக அரசின் காவல்துறை சொன்னதைப் போலவே, கேரளாவின் கம்யூனிஸ்ட் முதல்வர் அச்சுதானந்தனும் வாந்தி எடுத்தார். முஸ்லிம்களை ஒடுக்குவதில் இந்துத்துவத்திற்கும், இடதுசாரிகளுக்கும் இடையே இருக்கும் கள்ள உறவு இதன் மூலம் அம்பலத்திற்கு வருகிறது.

குற்றமே செய்யாமல், விசாரணைக் கைதியாக கோவை சிறையில் மதானி இழந்த ஒன்பதரை ஆண்டுகளுக்கு, பதில் சொல்ல வக்கற்றவர்கள், தற்போது மதானி விசயத்தில் 'சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றும், அவர் குற்றவாளியா இல்லையா என்பதை சட்டம் முடிவு செய்யட்டும்' என்றும் கூறி தப்பிக்க முயலுகின்றனர்.

மதானி கைது செய்யப்பட்டுள்ள 'அன்லாஃபுல் ஆக்டிவிட்டீஸ் பிரிவென்சன் நடைமுறைச் சட்டம் - 2008 ' என்ற சட்டம் எந்த வகையிலும் நீதி வழங்காது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. இதே போன்ற கறுப்புச் சட்டங்களால் ஏற்கனவே முஸ்லிம்கள் பட்ட காயங்களும், அதனால் ஏற்பட்ட ரணங்களும் இன்னும் ஆறாத வடுவாய் இருக்கிறது. இந்தக் கொடுஞ்சட்டத்தின் படி, சப் இன்ஸ்பெக்டர் ரேன்கிலுள்ள எந்த ஒரு அதிகாரியும், நாட்டில் யாரையும் சந்தேகத்தின் பேரில் குற்றவாளியாக்க முடியும். அதன் பின்னர் 150 நாட்கள் வரை ஜாமீனில்லாமல் சிறையில் அடைக்கலாம். குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமீன் கோரி விண்ணப்பித்தால் நீதி மன்றமும் எதுவும் செய்ய இயலாது. ஏனெனில் நீதிமன்றத்தின் எந்த ஒரு அனுமதியும் இன்றி 150 நாட்கள் வரை சிறையில் அடைக்க காவல்துறைக்கு சட்ட ரீதியான அதிகாரமுண்டு.

வழக்கமான சட்ட நடைமுறைகளின்படி, சாதாரண நிலையில் ஒருவரை கைது செய்தால், அவரை 24 மணி நேரத்துக்குள் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும். நீதி மன்றம் அவரை 14 நாட்கள் ரிமாண்ட் செய்யலாம். தொடர்ந்து பொறுப்பில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்றால் 15 ஆம் நாள் மீண்டும் நீதி மன்றத்தை அணுக வேண்டும்.

குற்றவாளி என்று நிறுவப்படும் வரை, ஒரு குடிமகனுக்கு உரிய அடிப்படை உரிமைகளைக் கருத்தில் கொண்டே சட்டத்தில் இவ்வாறெல்லாம் வழி வகை செய்யப் பட்டுள்ளது. ஆனால், மக்களுக்கு சட்டம் வழங்கியுள்ள இத்தகைய உரிமைகளை காலி செய்து அநீதி இழைக்கவே, அரசு அதிகாரம் புதிய கறுப்புச் சட்டங்களை இயற்றி வைத்துள்ளது. அப்படி என்றால் சட்டம் யாருடைய வழியில் செல்கிறது?

வழக்கு விசாரணை எல்லாம் முடிந்து, குற்றம் சற்றப்பட்டவர் நிரபராதி என்று விடுவிக்கப் பட்டால், சட்டம் போனது எந்த வழியில் என்று மானமுள்ள எவராவது விடையளிப்பார்களா?

அச்சுதானந்தனும், பிரணாய் விஜயனும், ரமேஷ் சென்னிதாலாவும், குஞ்சாலிக் குட்டியும் கூறுகின்ற, சட்டத்தின் யோக்கியதை இவ்வளவுதானே.. இவர்களுக்கெல்லாம் கொஞ்சமேனும் மானமும், சூடு உணர்ச்சியும் இருந்தால் ''சட்டம் சட்டத்தின் பாதையில் செல்லட்டும்'' என்று கூச்சமின்றி கூறுவார்களா?

மதானி விசயத்தில் யாரைக் கேட்டாலும் 'சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்' என்று கூறி சட்டத்தைக் கை காட்டி விட்டு பதுங்கி விடுகின்றனர். இந்தச் சட்டம் என்றைக்குத்தான் முஸ்லிம்களுக்கு நீதியை வழங்கி இருக்கிறது? முஸ்லிம்கள் என்றாலே சட்டம் ஒரு வழியிலும், நீதி வேறு வழியிலும் அல்லவா செல்கிறது... இங்கே சங்கராச்சாரிக்கும், அப்துல் நாசர் மதானிக்கும் ஒரே சட்டம்தான்... ஆனால் நீதி?

சங்கரமடப் பூசாரி சங்கர ராமனை கூலிப்படையை ஏவி கொலை செய்த வழக்கில் சங்கராச்சாரிக்கு, குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பே, சதிக் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என பிணை கொடுக்கிறது நீதி மன்றம். விடுமுறை நாளில் கூட சங்கராசாரிக்காக திறந்தன நீதிமன்றத்தின் கதவுகள். சுவாமிகளை சிறையில் அடைக்காமல் நீதிபதிகளின் குடியிருப்பிலேயே காவலில் வைக்கலாமே என்று யோசனை சொன்னார் ஒரு நீதிபதி. சிறையில் மலம் கழிக்க வாழை இலை கொடுக்கும் அளவுக்கு சங்கராசாரிக்காக வளைந்து கொடுக்கிறது சட்டம். ஒரு குற்றவாளிக்கு வழங்கப்பட்டது நீதி... ஆனால் குற்றமற்ற மதானிக்கு?

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆயுள் தண்டனை; அல் உம்மாவுக்குத் தடை.. ஆனால் குண்டுவெடிப்புக்கு காரணமாக அமைந்த, 19 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட கோவை கலவரத்தை, முன்னின்று நிகழ்த்திய இந்துத்துவக் குண்டர்களுக்கும், முஸ்லிம்களை சுட்டுத்தள்ளிய காவல் துறையினருக்கும் தடையுமில்லை, தண்டனையுமில்லை!

பழனி பாபாவின் ஜிகாத் கமிட்டிக்குத் தடை.. பழனி பாபாவைக் கொன்றவர்களுக்கோ விடுதலை!

இஸ்லாமிய மாணவர் அமைப்பான 'சிமி' க்குத் தடை.. ஆனால் சிமியின் பெயரால் இந்தியா முழுவதும் மிகப்பெரிய குண்டு வெடிப்புகளை நிகழ்த்திய ஆர் எஸ் எஸ்ஸுக்கு சகல சுதந்திரம்!

மாலேகான், புனே, அஜ்மீர், ஹைதராபாத், கோவா என நாட்டின் பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட அபினவ் பாரத், சனாதன் சன்ஸ்தான், இந்து ஜாக்ருதி சமிதி ஆகிய இந்துத்துவ தீவிரவாதஅமைப்புகளையும், அவற்றை பல்வேறு பெயர்களில் இயக்கிக் கொண்டிருக்கும் மூல அமைப்பான ஆர் எஸ் எஸ்ஸையும் தடை செய்ய அரசுக்குத் துணிவில்லை.

குண்டுவெடிப்புகளில் ஆர் எஸ் எஸ்ஸுக்கு தொடர்பு இருப்பதற்கான அனைத்து வகையான ஆதாரங்களும், வீடியோ காட்சிகளும் கிடைத்த பிறகும், ஹெட்லைன்ஸ் டுடே , தெஹல்கா போன்ற பெரிய ஊடகங்கள் அதை அம்பலப் படுத்திய பிறகும், ஆர் எஸ் எஸ் தலைமையகத்தை சோதனை செய்யவோ, ஆர் எஸ் எஸ் தலைவர்களை விசாரணைக்கு அழைக்கவோ துப்பில்லாத தொடை நடுங்கி அரசுகள், மதானியைக் குதறுவதில் முனைப்புக் காட்டுகின்றன.

நந்திகத்தில் உள்ள ஆர் எஸ் எஸ் ஊழியர் வீட்டில் குண்டு வெடிப்பு; கான்பூரில் பஜ்ரங்தள் நிர்வாகி வீட்டில் குண்டு வெடிப்பு; தென்காசி ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் குண்டு வெடிப்பு, என... ஆர் எஸ் எஸ் காரர்கள், குண்டுகளை தயாரித்துக் கொண்டிருக்கும் போதே வெடித்து சிதறிய குண்டுகள் ஏராளம், தாராளம்... இப்படி, பட்டவர்த்தனமாக ஆர் எஸ் எஸ்ஸின் பயங்கரவாதம் அம்பலப்பட்ட பிறகும், மதானி வெடிகுண்டு தயாரித்து சப்ளை செய்தார் என்று கதை விடுகிறது காவல்துறை.

2006 - லிருந்து நடைபெற்றுவரும் ஏழு மிகப்பெரிய குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஆர் எஸ் எஸ்ஸின் கள்ளக் குழந்தையான அபினவ் பாரத்துடன், உறவு வைத்துள்ள பல ராணுவ அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரைப் பற்றிய விபரங்கள், புலன் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த பிறகும், அவர்களில் எவரும் விசாரணைக்கு அழைக்கப் படுவதில்லை. 'தடியன்டவிட' நசீரை தேடிப்பிடித்து, நோண்டி நொங்கெடுத்தவர்களுக்கு, இந்த இந்துத்துவ அதிகாரிகளெல்லாம் கண்ணில் தெரிவதில்லை.

பெங்களூர் குண்டுவெடிப்பில் ஒருவர் பலியான வழக்கில், மதானியை சிக்க வைத்து சிறை பிடித்துள்ளவர்கள், குஜராத்தில் மூவாயிரம் முஸ்லிம்களைக் கொன்று நர வேட்டையாடிய நரேந்திர மோடியை, அதிகாரத்தில் அமர்த்தி அழகு பார்க்கின்றனர்.

போபாலில் பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்த அமெரிக்கப் பயங்கரவாதி ஆண்டர்சனை விமானத்தில் ஏற்றி தப்பி ஓடச் செய்து விட்டு, செத்துப் போன நரசிம்ம ராவ் மீது பழிபோடுகின்றனர். மதானியை விரைவாக ஒப்படைக்காத கேரள அரசின் மீது, கர்நாடக காவல்துறைக்கு வந்த கோபம், ஆண்டர்சனை ஒப்படைக்காத அமெரிக்கா மீது வருவதில்லை.

பாபர் மஸ்ஜித் இடிப்பில் மிக முக்கிய குற்றவாளிகளாக லிபரான் கமிஷனால் அடையாளப்படுத்தப்பட்ட அத்வானி, வாஜ்பாய், முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி போன்ற 68 குற்றவாளிகளில் எவர் மீதும் நடவடிக்கை இல்லை. 8 கோடி ரூபாய் மக்கள் வரிப் பணத்தை வாரி இறைத்து, 17 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரிக்கப்பட்டு , 1000 பக்கங்களில் சமர்பிக்கப் பட்ட லிபரான் அறிக்கை, இப்போது எந்தக் குப்பைத் தொட்டியில் கிடக்கிறதோ தெரியவில்லை.

பாபர் மஸ்ஜித் இடிப்புக்குப் பின், மும்பையில் நடைபெற்ற மிகப்பெரும் வகுப்புக் கலவரங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை இனப்படுகொலை செய்த குற்றவாளி என, நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா கமிஷனால் அறிவிக்கப்பட்ட, மும்பை பயங்கரவாதி பால்தாக்கரே மீது இதுவரை எந்தச் சட்டமும் பாயவில்லை.

சந்தேகத்தின் அடிப்படையிலும், புனையப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையிலும் முஸ்லிம்களை வேட்டையாடும் காவல் துறைக்கு, அரசால் நியமிக்கப் பட்ட விசாரணை ஆணையத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவர்களை கைது செய்ய துணிவில்லை.

பன்முகத் தன்மை உடைய இந்தியாவின் அரசியல் சாசன சட்டத்திற்கும், மதச் சார்பின்மைக்கும் எதிராக, மும்பையில் வட இந்தியர்களை, குறிப்பாக பீகார் மாநில எளிய மக்களை விரட்டி விரட்டி வேட்டையாடுகிறது நவ நிர்மான் சேனா. 'என்னை கைது செய்தால் மும்பையே பற்றி எரியும்' என்று பகிரங்கமாக கொக்கரிக்கும் ராஜ் தாக்கரேக்களெல்லாம் இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்களாகக் கருதப்படுவதில்லை.

48 கிருமினல் வழக்குகளில் தொடர்புடைய்ய ஆகப் பெரிய குற்றவாளி ஸ்ரீ ராம்சேனா பிரமோத் முத்தலிக் மீது தடாவும் இல்லை, பொடாவும் இல்லை.பெரும் தொகையை பேரம் பேசி கலவரம் செய்யும் புது வகை பயங்கரவாதியான முத்தலிக் மீது இந்தியாவின் பாதுகாப்புச் சட்டங்கள் பாய்வதில்லை.

ஸ்ரீராம் சேனாவைத் தொடங்குவதற்கு முன் முதாலிக் பஜ்ரங்தளத்தில் இருக்கும்போதே பல்வேறு வழக்குகளில் சிக்கிய பின்னணி கொண்டவன்.அப்படி இருந்தும் அவர்களால் எந்தத் தடையும் இன்றி அமைப்பு நிறுவ முடிகிறது; சுதந்திரமாக இயங்க முடிகிறது. பெங்களூர் குண்டுவெடிப்பில் ஸ்ரீராம் சேனாவின் கூலிப் படைக்குத் தொடர்பு உண்டு என்று ஊடகங்கள் உண்மையை உரைத்த பிறகும், அந்தக் கோணத்தில் விசாரணையை முடுக்கி விடாமல், கேரளாவுக்குச் சென்று மதானியைக் கொத்தி வந்துள்ளது கர்நாடக பாஜக அரசு...

***

மதானியின் விசயத்தில் நடப்பவை அனைத்தும் அப்பட்டமான மனித உரிமை மீறல் என்பது நன்கு தெரிந்த பிறகும், அவர் குற்றம் புரியாத அப்பாவி என்பது புரிந்த பிறகும், கேரளாவின் அரசியல் கட்சிகள் அவரை வெறுப்பது ஏன் என்ற கேள்வி எழாமல் இல்லை. மதானியின் கைது விவகாரத்தில் கேரளாவில் பாஜகவும், காங்கிரசும், கம்யுனிஸ்ட்டும், முஸ்லிம் லீக்கும் ஓரணியில் நின்று முழங்குகின்றன. மதானி ஒழிக்கப்பட்டால் தான் தாங்கள் நிம்மதியாக அரசியல் நடத்த முடியும் என்று எல்லா கட்சிகளும் எண்ணுகின்றன.

மதானியை உலவ விட்டால் அவர் முஸ்லிம்களை அணி திரட்டுவார்; கேள்வி கேட்கும் படி உசுப்பி விடுவார்; அடிமை அரசியலுக்கு சாவு மணி அடித்து விடுவார் என்று, மதானியின் வலிமை குறித்த பயம் கேரள அரசியல் கட்சிகளை பிடித்தாட்டுகிறது. அதிகார ருசி கண்ட முஸ்லிம் லீக், பதவியை இழக்கவோ அல்லது வேறு ஒருவர் அந்த இடத்திற்கு வரவோ சிறிதும் அனுமதிக்காது. பதவி இல்லாமல் இருக்கவே முடியாது என்ற வெறி முற்றிய பிறகு எந்த இலக்கணங்களுக்கும் கட்டுப்பட மனம் வராது.

பாபர் மஸ்ஜித் இடிப்பில் இந்துத்துவ சக்திகளுக்கு பக்கத் துணையாக நின்ற, காங்கிரஸ் கட்சியின் நயவஞ்சகத்தனத்தைக் கண்டித்து, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என்று, முதுபெரும் முஸ்லிம் லீக் தலைவர் இப்ராகிம் சுலைமான் சேட் கர்ஜித்தபோது, முஸ்லிம் லீக்கின் பதவி வெறி பிடித்த கேரள தலைவர்கள்தான் அதற்கு முட்டுக் கட்டையாக நின்றனர். மனம் வெறுத்துப் போன சுலைமான் சேட், கொள்கை காக்கும் போராளியாக முஸ்லிம் லீக்கில் இருந்து வெளியேறி தேசிய லீக்கைத் தொடங்கும் நிலை வந்தது.

மதானி ஒழிந்தால் பாஜக வை விட அதிகமாக மகிழ்ச்சி அடையும் கட்சியாக முஸ்லிம் லீக் திகழ்கிறது. மதானியின் மீதான அடக்குமுறை அரங்கேறிக் கொண்டிருக்கும் போதே, கேரளாவில் பிற முஸ்லிம் அமைப்புகளான பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மீதும், ஜமாத்தே இஸ்லாமிக் ஹிந்த் மீதும் அரச மற்றும் ஊடக பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது.

நியாயமான வழியில் நின்று, சமரசமற்ற முறையில், உயிரோட்டமான அரசியலை முன்னெடுக்க முனையும் முஸ்லிம் அமைப்புகளை முடக்கிப் போடுவதில் அதிகார வர்க்கம் குறியாய் இருக்கிறது. முஸ்லிம்களுக்கான தனித்த அரசியல் எழுச்சியை ஊடகங்கள் விரும்புவதுமில்லை, கண்டுகொள்வதுமில்லை.

முஸ்லிம்களின் பிரச்சனைகளை முன்வைத்து ஜனநாயக வழியில் அரசியல் நடத்துகிறவர்களை அடிப்படைவாதிகளாகவும், தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும், மதவெறியர்களாகவும் சித்தரிக்கின்ற போக்கு, நாடு விடுதலை பெற்ற நாள் முதல் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது .

இநதிய முஸ்லிம்களுக்கான தனித்த அரசியல் இயக்கமான முஸ்லிம் லீக், பிரிவினைக்குப் பின் பாகிஸ்தானின் கட்சி என்றாகிவிட்ட நிலையில், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் என்ற பெயரில், இநதிய முஸ்லிம்கள் தமது தனித்த அடையாளத்தோடு மீண்டும் அரசியல் நடத்தப் புறப்பட்டதை, அன்றைய ஆளும் காங்கிரசால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

இநதிய முஸ்லிம்களுக்கு தலைமை ஏற்க காயிதே மில்லத் துணிந்த போது, அவரை முடக்கிப் போடுவதற்கான எல்லா ஆயுதங்களையும் காங்கிரஸ் கட்சி கையில் எடுத்தது.

முதலில், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் என்றொரு அமைப்பு உருவாகி விடாமல் தடுப்பதில் கவனம் செலுத்தியது; முஸ்லிம் லீக்கின் முதுபெரும் தலைவர்களின் வாயாலேயே ''முஸ்லிம் லீக் இனி நமக்கு வேண்டாம்'' என்று சொல்ல வைத்தது; முஸ்லிம் லீக்கை விட்டு வெளியேறி எங்களோடு இணைந்தால், உயர் பதவிகளைத் தருகிறோம் என்று ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியது; காயிதே மில்லத் மசிய மாட்டார் என்று தெரிந்ததும், அபுல் கலாம் ஆசாத்தை முன்னிறுத்தி முஸ்லிம்களை வளைக்கப் பார்த்தது; காங்கிரசின் இத்தகைய எல்லா தந்திரங்களையும் தவிடு பொடியாக்கி விட்டு, இந்திய முஸ்லிம்களுக்குத் துணிச்சலாக தலைமை ஏற்றார் காயிதே மில்லத்.

அதன் பிறகு அவரை கண்காணிக்கத் தொடங்கியது இந்திய அரசு. தேச விரோத செயலில் அவரை சிக்க வைக்க ஏதேனும் வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கித் தவித்தது அரசு. காயிதே மில்லத் வெளிநாடு சென்ற போது, அவரது நடவடிக்கைகளை உளவு பார்க்க காங்கிரஸ் அரசு காமராஜரை அனுப்பி வைத்ததாக வரலாற்றுக் குறிப்புகளில் இருந்து அறிய முடிகிறது.

ஆனால், இன்றைக்கு முஸ்லிம் லீக்கையோ அல்லது முஸ்லிம் லீக் தலைவர்களையோ, ஆளும் வர்க்கம் அப்படிப் பார்ப்பது இல்லை. முஸ்லிம்களின் பிரச்சனைகளைப் பற்றி இன்றைய முஸ்லிம் லீக், காயிதே மில்லத்தைப் போல் பேசுவதில்லை. வகுப்பு வாதத்துக்கு எதிராக வீச்சோடு களமாடுவதில்லை.

அவர் தவறாக நினைத்து விடுவாரோ, இவர் தவறாக நினைத்து விடுவாரோ...அல்லது கூட்டணித் தலைமை கோபித்துக் கொள்ளுமோ என்று பல கணக்குப் போட்டு மென்மையான முறையில் அரசிய நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அது வெறுமனே பதவியை தக்க வைத்துக்கொள்கிற சுயநல அரசியல். ஆகையினால் இன்றைய முஸ்லிம் லீக்கை, ஆளும் வர்க்கமோ அல்லது ஊடகங்களோ கண்காணிப்பதுமில்லை; பிரச்சனைக்கு உரியவர்களாக கருதுவதுமில்லை.

அன்றைக்கு காயிதே மில்லத்தைப் போல், இன்றைக்கு கொள்கை சமரசமற்ற முறையில் யார் யாரெல்லாம் அரசியலை முன்னெடுக்கின்றர்களோ; போர்குணத்தோடு அமைப்பு நடத்துகிறார்களோ அவர்களின் மீதே, ஆளும் வர்க்கத்தின் பார்வையும் , ஊடகங்களின் பார்வையும் ஒரு சேரக் குவிகிறது. காயிதே மில்லத்தை தேச துரோகி என்றார்கள்; கண்காணித்தார்கள்; அவரது சகாக்களை அவரிடமிருந்து பிரித்து, அவரை பலவீனப் படுத்த முயன்றார்கள்; மிதமான அணுகுமுறை உள்ள மாற்றுத் தலைமையை முன்னிறுத்தினார்கள்.... இன்றைக்கும் அதே வழிமுறையை, அதே நடைமுறையை ஆளும் வர்க்கம் பின் பற்றி வருவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.

அன்றைக்கு அரசோடு கூட்டுச் சேர்ந்து, காயிதே மில்லத்தை விமர்சித்த, சுயநலம் கொண்ட முஸ்லிம்களின் இடத்தை, இன்றைக்கு முஸ்லிம் லீக் பிடித்துக் கொண்டிருப்பது தான் காலத்தின் கோலம்.

மதானியையும், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவையும், ஜமாத்தே இஸ்லாமியையும் கேரளாவில் முடக்கிப் போடுவதற்கு, ஆளும் தரப்பு கையாளுகின்ற அத்தனை வழிமுறைகளையும் முஸ்லிம் லீக் ஆதரிக்கிறது. போர்க் குணமிக்க முஸ்லிம் அமைப்புகள் விசயத்தில் அரசும், காவல் துறையும், ஊடகங்களும் என்ன சொல்கிறார்களோ, அதை ஒரு வரி விடாமல் வார்த்தை விடாமல் அப்படியே ஏற்றுக் கொள்ளுகிற மனநிலைக்கு, பாரம்பரிய முஸ்லிம் தலைமை தன்னை தகவமைத்துக் கொண்டுள்ளது.

***

மதானி கைது செய்யப் பட்ட போது, ஊடகங்கள் அதைக்கையாண்ட விதம் மிகவும் அருவருப்பானது. ஒரு குற்றவாளியை கர்நாடக அரசுக்கு கை மாற்றுவதில், கேரள அரசு தேவையற்ற தாமதத்தை ஏற்படுத்தி விட்டதாக கேரள ஊடகங்கள் விஷத்தைக் கக்கின. தமிழ் நாட்டின் பிரதான ஊடகமான சன் தொலைக்காட்சியின் செய்தி சேனலில், மதானியைக் கொச்சைப் படுத்தும் வகையில் செய்தி வாசிக்கப் பட்டது.

தான் குற்றவாளி அல்ல என்ற போதும் இறைவனுக்கு அடுத்த படியாக நீதி மன்றத்தின் மீது தான் வைத்துள்ள மரியாதையின் காரணமாக, சரணடைய விரும்புவதாக அறிவித்தவர் மதானி. அப்படிப்பட்ட ஒருவரை, ''ஆம்புலன்ஸ் மூலம் தப்பி ஓட முயன்ற போது பிடிபட்டதாக'' சன் டிவி தலைப்புச் செய்தி சொன்னது. செய்தியின் உள்ளீடாக, ''மதானி கோவை குண்டு வெடிப்பு வழக்கில் எட்டு ஆண்டுகள் தண்டனைப் பெற்றவர்'' என்று சொல்லி வரலாற்றுத் திரிபு செய்தது. விசாரணை கைதியாக கோவை சிறையில் ஒன்பதரை ஆண்டுகளை இழந்து, குற்றமற்றவர் என்று விடுதலையான மதானியின் உண்மை முகத்தைக் காட்டுவதற்கு ஊடகங்களுக்கு மனமில்லை. மதானியைக் கொச்சைப்படுத்தும் போர்வையில், முஸ்லிம்களின் உணர்வுகளைக் காயப்படுத்திய சன் டிவிக்கு தமிழக முஸ்லிம்கள் உடனடி பதிலடி கொடுத்தனர். தமிழகம் முழுவதும் இருந்து கிளம்பிய எதிர்ப்பு அலைக்குப் பணிந்து, தனது தவறை உணர்ந்ததாக வருந்தியது சன் டிவி.

இணைய தளங்களில் ஜெயமோகன் போன்ற இந்துத்துவ சிந்தனை உடைய இலக்கிய பயங்கரவாதிகள், மதானியை தீவிரவாதத்தின் ஊற்றாக சித்தரித்துக் கொண்டிருக்கின்றனர். இளம் தலை முறையினரின் களமாகத் திகழும் இணைய தளத்தில், முஸ்லிம் சமூகத்தின் போராளிகளை கொடூரமானவர்களாகவும், மனித குல விரோதிகளாகவும் காட்டுவதன் மூலம், முஸ்லிம்கள் மீதான வெறுப்பு வெகு மக்களிடம் பற்றிப் பரவுவதற்கு திட்டமிட்டு வேலை செய்கின்றனர்.

அறியாமையில் சிக்கி உழலும் முஸ்லிம் சமூகத்திற்கு, ஜெயமோகனையும் தெரியாது; இணைய தளமும் புரியாது என்பதுதான், உச்சக்கட்ட பரிதாபம்.

கருத்துருவாக்கம் செய்யக் கூடிய வலிமை மிகுந்த களமான ஊடகத்தில் முஸ்லிம்கள் இல்லை என்பதுதான், இத்தகைய அவலங்களுக்கு காரணமாக இருக்கிறது.

முஸ்லிம்கள் ஊடகத்தில் மட்டுமா இல்லை? அரசியலில் இல்லை; அதிகாரத்தில் இல்லை; கலை இலக்கியத்தில் இல்லை; பண்பாட்டுத் தளத்திலும் இல்லை...... இல்லை, இல்லை, இல்லவே இல்லை... இருப்பதெல்லாம் உள் முரண்பாடுகளும், குழுச் சண்டையும், கொள்கை மோதலும் தான்...

முஸ்லிம்களே! இனியும் இழப்பதற்கு எதுவுமில்லை; மீட்பதற்கோ ஆயிரம் இருக்கிறது.

[நன்றி: சமநிலைச் சமுதாயம்]

- ஆளூர் ஷாநவாஸ் ( mediasteps@gmail.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )

Source: http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=10687:2010-08-27-01-12-58&catid=901:2009-08-16-09-44-24&Itemid=139

Friday 27 August 2010

Cuddalore SIPCOT Residents Block the National Highway

Residents Protest Effluent Discharge in SIPCOT Canal: Block the National Highway

Cuddalore, 25 August 2010: Protesting the discharge of effluents through the storm water drains by the SIPCOT units, more than 100 residents of SIPCOT Cuddalore blocked the National Highway (NH) 45A today. The villagers were forced to take this step after the effluent discharge contaminated the village canal in Sangolikuppam village of SIPCOT.

According to the sources at about 9.30 am today SIPCOT residents noticed yellow colour water with strong ammonia like odour at the canal opposite the Kudikadu Bus Stop. This canal is parallel to NH45A and runs from Tagros in the north of SIPCOT Complex till the south of Sangolikuppam village ,where it meets the Pillukuthu canal which eventually drains into river Uppanar. It was reported that the odour from the effluent near the bus stop was ranked at around 8 on a scale of 1 to 10 and caused eye burning sensation. Following the canal further towards the South, the residents found black effluent with an oily layer and an acidic fruity odour near the petrol pump at Kudikadu. The residents complained of itching sensation when in contact with the water.

Sources inform that industries regularly release effluent through their stormwater drains during the rainy season. Based on the location where these effluents were found residents suspect TANFAC, Clariant, Shasun, Asian Paints, Aurobindo and Tantech responsible for this discharge. In the absence of a monitoring mechanism it was difficult to ascertain the exact source of the effluents.

While such releases are routine, today the residents particularly got angry as the contamination of Pillukuthu canal would deprive them of water for regular usage. The village panchayat blocks this canal during the rains to harvest rainwater and the entire pool has been contaminated by today's discharge.

Local police was the first to intervene at site to end the blockade but people refused to give in to the pressure and demanded action on the units responsible. Later the Village Officer, Tehsildar and the District Environment Engineer (DEE) of TNPCB intervened in the matter. The negotiations went on for about three hours and finally the blockade was removed upon assurance from DEE that 1) the effluent would be cleaned up immediately, 2) sample would be taken to ascertain the contaminants, 3) adequate action would be taken on the units responsible.

SACEM monitors have also taken a sample of the effluents along with the TNPCB officials. A complaint with regards to today's incident has been sent to District Collector and TNPCB head office.

Source: http://www.sipcotcuddalore.com/updates_250810.html
And thanks to: www.portonovo.in
(Mr. Mohamed Kaleel)

Wednesday 25 August 2010

உலகின் மிகப்பெரிய இஃப்தார் நிகழ்ச்சி

உலகின் மிகப்பெரிய இஃப்தார் நிகழ்ச்சி: நாளொன்றுக்கு 2.5 மில்லியன் சவூதி ரியால்கள்!






நபிகளாரின் பள்ளி என்று அழைக்கப்படும், மதீனா - மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலில் நோன்புக்காலத்தில் தினமும் பத்து இலட்சம் மக்கள் நோன்பு துறக்க ‘இஃப்தார்’ ஏற்பாடுகள் செய்யப்படுகின்றனவாம்.


விருந்தோம்பலுக்கும் உபசரிப்புக்கும் பெயர்பெற்ற மதீனாவாசிகள் நோன்பாளிகளுக்கு உணவு வழங்கி மகிழ்வதை பெருமிதமாகவும் பாக்கியமாகவும் கருதுகின்றனர். இவ்வகையில் நாளொன்றுக்கு சுமார் 2.5 மில்லியன் சவூதிரியால்கள் செலவிடப்படுகின்றதாம்.


மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹரம் என்னும் பெரிய பள்ளியில் நோன்பு துறக்க பேரீச்சம் பழங்களும், சவூதி கஃவா என்னும் காஃபி வகை பானமும் மட்டுமே வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ள "புனித பள்ளிகள் துறை அமைச்சகம்", மதீனாவாசிகளின் விருந்தோம்பல் உணர்வுக்கு மதிப்பளித்து, அவர்கள் விருப்பத்திற்கேற்ப நோன்பு துறப்பு ஏற்பாடுகளைச் செய்துகொள்ள அனுமதித்துள்ளது. இத்தகவல்களை அத்துறையின் மக்கள் தொடர்பாளர் அப்துல் வாஹித் அல்ஹத்தாப் தெரிவித்துள்ளார்.

மதீனாவாசிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 10,000 பேர் கொண்ட குழு, மாலைநேரத்தொழுகைக்குப் பிறகு இதற்கான ஆயத்தங்களில் இறங்குகிறது. பகுதி, பகுதியாக, குழு,குழுவாக தினமும் சுமார் 10 இலட்சம் (1மில்லியன்) மக்களுக்கு இஃப்தார் உணவு வழங்கப்படுகிறது.

ஈத்தம்பழம், தயிர், ஷ்ரைக் எனப்படும் ரொட்டி, டக்கா எனப்படும் கஞ்சி போன்ற உணவு, சவூதி கஃவா ஆகிய உணவு வகைகள் விநியோகிக்கப்படுகின்றனவாம். மட்டுமின்றி, 20,000 குளிர்விகளில் புனித ஜம்ஜம் நீரும் வழங்கப்படுகிறது. பெருமளவு மதீனா பெண்களும் இதில் பங்கெடுக்கின்றனர்.

12 நிமிடங்கள் நீடிக்கும் இஃப்தார் நிகழ்ச்சிக்குப் பின் 2,000க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் மின்னணு துடைப்பான்கள் மூலம் சுத்தம் செய்கின்றனர். அதன் பின் மஃக்ரிபு தொழுகை முடிந்த பின்னாலும், ஈத்தம் பழங்களும், கஃவா பானமும் வழங்கப்படுகிறதாம்.

நோன்பு துறப்பு மட்டுமின்றி, நோன்பு வைப்பதற்கான சஹர் உணவும், இந்திய மற்றும் சவூதி உணவு வகைகளாக, சுமார் இரண்டு இலட்சம் பேருக்கு வழங்கப்படுகிறதாம்.

நன்றி: http://www.inneram.com/2010082410263/worlds-biggest-ifthar-programme-at-a-cost-of-25-million-rilyas-per-day

அடடே! ஆர் எஸ் எஸ் அமமனக்கட்டை!!






(அயோத்தியில் பஜ்ரங்தள் சிறார்களுக்கு ஆயுதப் பயிற்சி)

சிபிஐ வசம் இருக்கும் சில முக்கிய விடியோக்களை போன வாரம் ஹெட்லைன்ஸ் டுடே என்ற செய்தித் தொலைக்காட்சி சேவை நிறுவனம் ஒலிஒளி பரப்பியது (6 விடியோக்கள்) . அவை அனைத்தும் பட்டாசு ரகங்கள். ஆர் எஸ் எஸ்ன் முக்கியத் தலைவர்கள் பயங்கரவாதிகள் என்ற உண்மை வெளிவந்தது. இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியை கொல்வதற்கான திட்டங்களையும் வகுத்துள்ளனர் ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள்.

இந்த பயங்கரவாத கும்பலை இயக்கியவர்களில் ஒருவன் இந்திரேஸ் குமார். இவர் ஆர் எஸ் எஸ்ல் பல முக்கியப் பொறுப்புகள் வகிப்பவர். இவன் தான் காஷ்மீர் அமர்நாத் நிலப் பிரச்சினையை தூபம் போட்டு வளர்த்தவர்களில் ஒருவன். இவன் தான் நேபாள் மாவோயிஸ்டுகளுக்கு எதிராகவும் வேலை செய்துள்ளான். குறிப்பாக ஆர் எஸ் எஸ்ன் முஸ்லீம் பிரிவின் தலைவரே இவர்தான். என்னவொரு முரன்நகை? ஆர் எஸ் எஸ் கும்பல் முஸ்லீம் வேசம் போட்டு குண்டு வைக்கும் போது அதன் தலைவர்களோ முஸ்லீம்களுக்கு அமைப்பு ஏற்படுத்தி அதற்கு தலைமை வகிக்கிறார்கள்.

கடந்த சில வருடங்களில் நடந்த பல குண்டு வெடிப்புகளில் ஆர். எஸ். எஸ்ன் பாத்திரம் மீண்டும் மீண்டும் ஊர்ஜிதமாகி வந்துள்ளது. குறிப்பாக, மலேகான் குண்டு வெடிப்பு கைதுகள் விரிவாக நடந்து அதில் ஆர் எஸ் எஸ்ன் நேரடி பாத்திரம் மறுக்க இயலாத அளவு அம்பலமானது. ஆயினும் ஆர் எஸ் எஸை தடை செய்யவோ அதன் அலுவலகங்களை சோதனையிட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்யவோ அரசு தயாராக இல்லை (இந்த இடத்தில் பாப்புலர் பிரண்ட் அமைப்பின் மீது நடத்தப்பட்டுள்ள அரசு தாக்குதல்களை ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளவும்).
(மலேகான் குண்டு வெடிப்பில் இந்து பயங்கரவாதிகள்)


(இந்து பயங்கரவாதி இந்திரேஸ் குமார் - ஆர் எஸ் எஸ் தலைவன்)


ஆர் எஸ் எஸ் இந்து பயங்கரவாதிகளும் மிகத் தைரியமாக பேசி வருவதும், ஏதோ முஸ்லீம் குண்டு வைச்சான் அதனால் நான் திருப்பி குண்டு வைக்கிறேன் என்பது போலவும் நியாயப்படுத்தி வந்துள்ளது. ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள் முஸ்லீம் வேசம் போட்டுக் கொண்டு இந்துக்கள் கூடும் இடங்களில் குண்டு வைத்து மாட்டிக் கொண்டுள்ளனர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. மேலும் இதுவரை இவர்கள் மாட்டிக் கொண்டுள்ள குண்டு வெடிப்புகள் எதிலுமே அவை முஸ்லீம்கள் மீது பலி போடும் வகையிலேயே செய்துள்ளனர். ஆக இவர்களின் நோக்கம் மக்களை மத அடிப்படையில் மோத விட்டு ரத்தம் குடிக்க வேண்டும் என்பதே ஆகும். இஸ்லாம் பயங்கரவாதிகள் ஆர் எஸ் எஸ்ன் எதிர்பார்ப்புக்கு பொறுத்தமான அளவு அதிகமான குண்டு வெடிப்புகளை நிகழ்த்தவில்லை என்பதே இவர்களின் வருத்தம். வருத்தத்தை தீர்க்கும் வகையில் முஸ்லீம் வேசம் கட்டி ஆர் எஸ் எஸ் கும்பலே குண்டுகள் வைக்கத் தொடங்கிவிட்டனர்.

(இந்து பயங்கரவாதிகள் குண்டு வைத்துள்ள இடங்கள்)

ஆதாரம்: outlook india

மாட்டிக் கொண்டவர்களின் இன்னொரு பயங்கரவாத தலைவன், பாஜகவின் முன்னாள் இருமுறை எம்பி பி. எல். சர்மா. இவனும் மாலேகான் குண்டு வெடிப்பு முக்கிய குற்றவாளிகள் தாயனந்த் பாண்டே மற்றும் லெப்டினண்டு ஸ்ரீரிகாந்த் புரோகித் ஆகியோர் இந்தியா முழுவதும் குண்டு வைத்து லட்சக்கணக்கில் மக்களைக் கொல்வது குறித்து பேசுகின்ற விடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. ஆர் எஸ் எஸ்ன் முகமுடி அமைப்பான அபினவ் பாரத் என்ற பயங்கரவாத குழுவே முக்கிய குண்டு வெடிப்பு குற்றவாளி ஆகும். இந்த அமைப்புடன் பல விவாதங்களில் பங்கெடுத்துள்ளான் பாஜக முன்னாள் எம்பி சர்மா.

ஜனவரி 2008ல் பரிதாபாத்தில் நடந்த இவர்களின் கூட்டத்தில் (சர்மா மற்றும் பிற பயங்கரவாதிகள்) இந்திய குடியரசுத் துணைத்தலவரை கொல்லும் திட்டம் தோல்வியடைந்தது குறித்து விவாதித்துள்ள விடியோவும் அம்பலமாகியுள்ளது.

(பயங்கரவாதிகளின் அணிவகுப்பு)
ஆர் எஸ் எஸ் தலைவன் பயங்கரவாத கும்பலின் வழிகாட்டி இந்திரேஸ் குமார் பேட்டி எடுத்தது ஹெட்லைன்ஸ் டுடே. ஆர் எஸ் எஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு என்ற உண்மைகளை சொல்லி அவனிடம் பேசிய பொழுது மறுக்க வழியின்றி ஒடிவிட்டான் பயந்தாக்கொள்ளிப் பயல்.

உண்மைகளை வெளிப்படுத்திய குற்றத்திற்காக ஹெட்லைன்ஸ் டுடே நிறுவனத்தை வெள்ளிக்கிழமை 2000 ஆர் எஸ் எஸ் ரவுடிகளை அனுப்பி தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதல் குறித்தும் ஆர் எஸ் எஸ் அம்பலமானது குறித்தும் பிற இந்திய ஊடகங்கள் அதிகபட்ச மௌனம் காத்தன (தெஹல்காவிற்கு காட்டியது போலவே).

இவர்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நம்பிக்கை போய்விட்டதாம் எனவே இந்து ராஷ்டிரம் அமைக்கப் போகிறார்களாம். இதே போல கூறிய 'குற்றத்திற்'காகத்தான் தியாகத் தோழர் ஆசாத்தின் படுகொலை நியாயப்படுத்தப்பட்டது. இந்திய அரசு ஆர் எஸ் எஸ் தலைவர்களை நாயைச் சுடுவது போல சுட்டுக் கொல்லுமா? நாய்க்கும் தன் குட்டி பொன் குட்டி, எனவே அவர்கள் செய்ய மாட்டார்கள்......

அசுரன் .... பதிவுக்கு நன்றி.

Source: http://poar-parai.blogspot.com/2010/07/blog-post_18.html

தரவுகள் ஆதாரம்: ஹெட்லைன்ஸ் டுடே

தென்காசி RSS அலுவலகத்தில் குண்டு வைத்த வழக்கு மூன்று இந்து முன்னணி ஆட்கள் கைது!!!

வெடித்த குண்டுகள் ! புதையுண்ட உண்மைகள் !!


ஆயுத பயிற்சி எடுக்கும் RSS!! ஆயுதங்களோடு போகுது ஊர்வலம்!!



சிபிஐயிடம் மாட்டிக் கொண்டனர் இந்து பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்ன் முக்கியத் தலைவர்கள்!



Hindu Rashtra: Saffron terror's hall of shame



The Headlines Today sting




Vedio-Saffron goons attack HT Delhi office


Saffron goons attack Headlines Today office


Hindu terror is a reality, yet India refuses to utter its name

Faith gives Chinese expats spiritual satisfaction

Faith gives Chinese expats spiritual satisfaction

A Saudi scholar explains the features of Islam to Chinese converts during a meeting in Makkah. (AN photo by Badea Abu Al-Naja)

By BADEA ABU AL-NAJA | ARAB NEWS

MAKKAH: Chinese laborers working on the Haramain Rail project have spoken of their joy after embracing Islam.

There are 4,600 Chinese nationals working on the scheme, which when completed will link the holy cities of Makkah and Madinah via Jeddah and Rabigh. Among them, 370 are already born Muslims.

Last year, over 600 of them embraced Islam, causing controversy with a section of the international media slamming it as a public relations stunt.

At the time, there were calls from sections of Saudi society to replace the non-Muslim workers, who represent the majority Han community in China, with minority Muslims.

Hamza, 42, said he embraced Islam after he saw the Holy Kaaba for the first time on Saudi television.

“It had an electrifying effect on me. I watched the live transmission of prayers at the Grand Mosque and the circumambulation of the faithful around the holiest shrine in Islam,” he said.

“I asked my Muslim colleague the other day about all these things. He took me to the Call and Guidance Office for Foreigners (Jaliyat) at our company site, where I had the opportunity to learn about the various aspects of Islam.”

Hamza said he feels happier and more relaxed now that he has become a Muslim. Fifty-one-year-old Ibrahim is another Chinese worker who embraced Islam in September last year.

“While we were in China, we did not have any opportunity to learn about Islam. When I reached Makkah, I was very impressed by the behavior of many of its residents. Their equal treatment of Muslims and non-Muslims had a big impact on me,” he said.

Ibrahim, who is working with the maintenance section of the state-owned Chinese Railway Company, says that he, like Hamza, became a Muslim when he saw the Kaaba.

Abdullah Al-Baligh, 51, was inspired to embrace Islam after seeing the positive changes in his colleagues. “Six months after I arrived in Makkah, I noticed that my colleague, who was already a Muslim, had totally changed and his behavior and conduct were exemplary. I realized that Islam was the guiding force behind these changes,” he said.

“When I asked him, he told me that he had known nothing about the religion while in China. Now, he had a proper understanding of Islam and wanted to become more of a role model.”

Younus, another worker, says that he became a practicing Muslim only after his arrival in Makkah.

“Islam in China is lacking. I realized about this only after coming over to the Kingdom. Many of my Muslim colleagues and I only truly learned about Islam in the holy city, thanks to the commendable work of the Call and Guidance Office,” he said.

Zaid Al-Osaimi of the Jaliyat office in Al-Sharaie district in Makkah told Arab News that he sought permission from the Chinese Railway Company to open an office at their site.

“The company officials responded positively to our request. We erected two tents inside the site. Religious classes are being held in one of these tents while the second one is meant for recreational purposes as well as allowing our workers and the laborers to get together,” he said.

“The office holds open meetings on every Thursday. We continue to conduct study classes to teach the fundamental principles of Islam as well as helping workers memorize the Holy Qur’an,” he said.

He added that there has been a tremendous response from the Chinese workers, while the office has also been distributing Chinese translations of the Holy Qur’an as well as Islamic books and booklets free of charge.

Source: http://arabnews.com/saudiarabia/article112478.ece

Sunday 22 August 2010

வெள்ளைப்பூண்டு

வெள்ளைப்பூண்டு: இரத்த அழுத்தத்தை குறைக்கும்!

பரபரப்பான வாழ்க்கை சூழலில் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது இதய நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணியாகவும் இருக்கிறது. இந்நிலையில், பூண்டுக்கு உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் திறன் இருப்பதாக ஒரு ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.

ஆஸ்திரேலியாவின் யுனிவர்சிட்டி ஆப் அடிலெய்டு பேராசிரியர் டாக்டர் கரின் ரீட் தலைமையிலான குழுவினர் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைப்பது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். 140 எம்எம்க்கும் அதிகமாக பீபி உள்ள 50 பேர்களை தேர்வுசெய்து பூண்டை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட மாத்திரைகள், சுமார் 12 வாரங்களுக்கு தரப்பட்டது. அதன் பின்னர் அவர்களை பரிசோதனை செய்ததில் அதிகபட்சமாக 10 எம்எம் எச்ஜி வரை பீபி குறைந்திருந்தது தெரியவந்தது.

பீபி அளவு குறைவதால் நோய் ஆபத்தும் குறையும் என்பது நிரூபணமாகி உள்ளது. குறிப்பாக, குறைந்தபட்சமாக 5 எம்எம் அளவுக்கு பீபி குறைவதன் மூலம் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 8 முதல் 20 சதவீதம் வரை குறையும் என்கிறது ஆய்வு முடிவு. எனினும், பச்சை அல்லது வேக வைத்த பூண்டை நேரடியாக சாப்பிடுவதன் மூலம் ரத்த அழுத்தத்தைக் குறைவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை.

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக்கூடிய நைட்ரிக் ஆக்ஸைடு மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு ஆகிய ரசாயன பொருட்களை, பூண்டு உற்பத்தி செய்கிறது. இது ரத்த அணுக்கள் ஓய்வெடுக்கவும் உதவுகிறது. எனவே, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பூண்டிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் உதவும் என டாக்டர் ரீட் தெரிவித்துள்ளார்.

கொய்யாப்பழம்

கொய்யாப்பழம்-இதயநோய், தலைவலியை குணமாக்கி நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்

நம் உடலைத்தாக்கும் பல்வேறு நோய்களில் இருந்து காக்கும் அருமருந்தாக திகழ்கிறது கொய்யாப்பழம். பச்சைப்பசேலென்ற நிறத்திலும், ஒருசில வகைகள் மஞ்சள் நிறத்திலும் உள்ளன.

வெப்பம் மிகுந்த நிலங்களில் விளையும் கொய்யப்பழங்கள் ருசியில் முதல் இடத்தை பிடிக்கின்றன.
கொய்யாவின் பிறப்பிடம் அமெரிக்கா. இதில் 100-க்கும் மேற்பட்ட வகைகள் இருப்பது விசேஷம். வெப்பம் மிகுந்த நாடுகளில் தற்போது அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. தற்போது கொய்யாப்பழ சீசன் என்பதால் அதிக அளவில் கொய்யாப்பழம் வந்து குவிந்துள்ளன.

கொய்யாப்பழத்தின் மருத்துவ குணங்கள் பற்றி சென்னை அரும்பாக்கம் ரத்னா சித்த மருத்துவ மனையின் இயக்குனர் டாக்டர் திருத்தணிகாசலம் கூறியது:-

மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்கிறது கொய்யாப் பழம். சிலருக்கு தொடர்ச்சியாக தலைவலி பிரச்சினை இருந்து கொண்டே இருக்கும். இப்படிப்பட்டவர்களின் ரத்தத்தில் உள்ள ஒருசில குறைபாடுகளால் தலைவலி ஏற்படும். இந்த வலியை நிரந்தரமாக தீர்த்து விடுகிறது கொய்யாப்பழம். இப்பழம் ரத்தத்தை சுத்திகரித்து தலைவலிக்கான மூலகாரணத்தை சரிசெய்து விடுகிறது. இதனால் தீராத தலைவலியால் அவதிப்படுவோர் கொய்யாப்பழத்தை நிறைய சாப்பிடலாம்.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் கொய்யாவுக்கு முக்கியபங்கு உண்டு. நீரிழிவு நோயாளிகள் இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு பெருமளவில் குறைந்து விடும். கொய்யாப்பழம் ரத்தத்தை நன்றாக சுத்திகரிப்பதால் இதய நோய் பெருமளவில் குறையும். இந்நோய் வராமலும் தடுத்து விடும். குடல் நோய்களான ஜீரண கோளாறு, பேதி போன்ற வற்றை குணப்படுத்தும்.

கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய் களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யா கொழுந்து மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலை கட்டுப்படுத்தும். கொய்யாவில் வைட்டமின் ஏ, சி சத்துக்கள் அதிகம் உள்ளன. இந்த வைட்டமின் குறைபாடு உள்ளவர்கள் தினமும் கொய்யாப்பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

கொய்யாவில் சிறிதளவு கொழுப்பு, புரோட்டின் உள்ளன. உடலில் ஏற்படும் காயங்களுக்கு இதன் இலையை அரைத்து போட்டால் காயம் குணமாகும். கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் பெரிதும் உதவுகின்றன. கொய்யா இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் கஷாயம் குழந்தைகளுக்கு வரும் மாந்தம், இழுப்பு, காக்காய்வலிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு கொடுக் கப்படுகிறது.

கொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது. மது போதைக்கு அடிமையான மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம்.

கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றில் ஏற்படும் புண்ணை ஆற்றி விடுகிறது. புகை பழக்கம் உடைய வர்களின் நுரையீரல் கடுமையாக பாதிக்கப் பட்டிருக்கும். இப்படிப்பட்டவர்கள் கொய்யா சாப்பிட்டால் நுரையீரல் கோளாறு நீங்கி சுகவாழ்வு பெறலாம். ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்த ஓட்டம் போன்றவற்றை கொய்யா சீராக்குகிறது. அனைத்து நோய்களையும் இது தீர்ப்பதால் மேற்கத்திய நாடுகளில் “டாக்டர் கொய்யா” என்று அழைக்கிறார்கள்.இவ்வாறு டாக்டர் திருத்தணிகாசலம் கூறினார்.
கோயம்பேடு மார்க்கெட்டில் குவியும் கொய்யாப்பழங்கள் கொய்யாப்பழ சீசன் தொடங்கி விட்டதால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கொய்யாப்பழ வரத்து அதிகரித்துள்ளது. தினமும் 100 டன்¢ கொய்யாப்பழங்கள் கர்நாடகம் மற்றும் விழுப்புரம், திருப்பத்தூர் பகுதிகளில் இருந்து வருகிறது. இவற்றில் கர்நாடக கொய்யா பழங்கள் முதல் தரமாக கருதப்படுகிறது. இவை கிலோ ரூ.15-க்கு விற்கப்படுகிறது. விழுப்புரம், திருப்பத்தூர் பகுதிகளை சேர்ந்த கொய்யாப்பழங்கள் கிலோ ரூ.10-க்கு விற்கப்படுகிறது. இதில் பெரிதாக இருக்கும் பழங்கள் ரூ.11-க்கு விற்கப்படுகிறது.

இப்பழங்களை வாங்க மக்கள் மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள். இப்பழத்தின் வரத்து அதிகரிப்பால் மற்ற பழங்களின் விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கோயம்பேடு வணிக வளாக வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

Thursday 19 August 2010

அரசு ஊழியருக்கு விழுந்தது "செருப்படி''

மனைவி இல்லையென கோர்ட்டில் சாட்சியம்:

அரசு ஊழியருக்கு விழுந்தது "செருப்படி''

குடும்பம் நடத்தி இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண்ணை தன் மனைவி இல்லை என, கோர்ட்டில் மறுத்த அரசு ஊழியருக்கு செருப்படி விழுந்தது.

இச்சம்பவம் கடலூர் கோர்ட் வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டம் டி.குமராபுரத்தைச் சேர்ந்தவர் அருள் (50). வரக்கால்பட்டு மின் அலுவலகத்தில் லைன் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி, இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், தனது முதல் திருமணத்தை மறைத்து, விழுப்புரம் மாவட்டம் அந்தராசிபாளையம் விஜயலட்சுமி (35) என்பவரை மயிலம் கோவிலில் வைத்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இரண்டாவது மனைவி, விஜயலட்சுமிக்கு 9, மற்றும் 5 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், அலுவலகம் தொடர்பான அனைத்து ஆவணங்களிலும், வாரிசு உரிமையை தனது முதல் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு சேர வேண்டும் என அருள் எழுதி வைத்துள்ளார். இதனையறிந்த விஜயலட்சுமி, அருளை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தான் தாய் என்கிற ஆதாரங்களுடன், கடலூர் கலெக்டர் சீத்தாராமனிடம் புகார் மனு கொடுத்திருக்கிறார். இதனை தொடர்ந்து, கடலூர் மாவட்ட முதன்மை தலைமை மாஜிஸ்திரேட் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை நேற்று (18 August 2010) நடந்தது. விசாரணையின் போது, விஜயலட்சுமி தனது மனைவி இல்லை என அருள் கூறினார். விசாரணை ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து, அருள் தன் வீட்டிற்குச் செல்ல கலெக்டர் அலுவலகம் சாலை வழியாக நடக்க முயன்றபோது, வெளியே நின்றிருந்த விஜயலட்சுமி, அருளிடம் சென்று, "கோவிலில் தாலி கட்டி, இரண்டு பிள்ளைகளை பெற்று விட்டு நா கூசாமல் கோர்ட்டில் என் மனைவி இல்லை என பொய் சொல்லுகிறாயே ' என கேட்டபடி தனது செருப்பை கழட்டி அடித்து, சட்டையைப் பிடித்து உலுக்கி உள்ளார்.

இதனால் அவமானமடைந்த அருள், விஜயலட்சுமியை உதறித் தள்ளி விட்டு மீண்டும் கோர்ட்டுக்குள் ஓடினார். மண்ணை வாரி விட்டு அழுத விஜயலட்சுமியை அங்கிருந்த போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Wednesday 18 August 2010

பக்திக்கு ஒரு அளவே இல்லையா?!

பாம்பு வடிவ கீரைத்தண்டு: கோவில் அமைக்க முடிவு?

திட்டக்குடியில் பாம்பு வடிவத்தில் கீரைத்தண்டு வளர்ந்த இடத்தில் கோவில் அமைத்து வழிபட பக்தர்கள் தீர்மானித்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி கூத்தப்பன்குடிக்காடு சாவடி தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது தோட்டத்தில் வளர்ந்த புளிச்ச கீரைத் தண்டை பார்த்த ஒரு பெண் நல்ல பாம்பு படமெடுத்து ஆடுவதாக கூறி ஓடி வந்தார். அங்கிருந்தவர்கள் சென்று பார்த்த போது, பாம்பு உருவத்தில் கீரைத்தண்டு வளர்ந்திருந்தது தெரியவந்தது.

தகவலறிந்த அப்பகுதி பெண்கள் கீரைத்தண்டிற்கு விபூதி, குங்குமம், மஞ்சள் தூவி வழிபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை பெண்கள் ஐந்து தலை பாம்பினைக் கொண்ட அம்மன் வடிவ சிலையை கீரைத்தண்டிற்கு கீழ்புறம் வைத்து, சுற்றிலும் மஞ்சள் துணியால் சுற்றி விளக்கேற்றி வழிபடத் துவங்கினர். பெண் ஒருவர் திடீரென சாமியாடி, அந்த இடம் 'அம்மன் குடியிருக்கும் இடம்' எனவும் 'இங்கே கோவில் கட்டி வழிபட வேண்டும்' என்றும் தெரிவித்தார். உடனே அங்கு வேப்ப மரக்கன்று நட்டு, சிறப்பு வழிபாடு நடத்தினர்.

தொடர்ந்து கீரைத்தண்டு வளர்ந்திருந்த இடத்தை சுற்றிலும் பச்சை தென்னை கீற்றினால் கூரையிட்டு திடீர் கோவிலாக மாற்றினர். அப்பகுதியில் கோவில் கட்டி தினசரி வழிபாடு நடத்தவும் முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் காட்டுத் தீ போல பரவியதால் திட்டக்குடி பகுதிகளை சேர்ந்த பெண்கள், ஆண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேற்று மாலை முதல் திரண்டனர்.

இவர்களின் பக்திக்கு ஒரு அளவே இல்லையா?!

Thursday 5 August 2010

பரங்கிப்பேட்டை வெள்ளாற்றில் பாலம்

பரங்கிப்பேட்டை- கிள்ளை

பாலம் பணி முடிந்து, சாலை அமைக்கும் பணி துரிதம்

பரங்கிப்பேட்டையில் இருந்து கிள்ளையை இணைக்கும் வகையில் வெள்ளாற்றில் 20 கோடி மதிப்பிலான பாலம் கட்டும் பணி முடிவு பெற்று பாலத்தை இணைக்கும் சாலைகளை அமைக்கும் பணி இரண்டு பக்கங்களிலும் துரிதமாக நடந்து வருகிறது.

பரங்கிப்பேட்டையிலிருந்து கிள்ளைக்கு செல்வதற்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பேருந்தில் முட்லூர், புவனகிரி வழியாக சிதம்பரம் சென்று பிறகு கிள்ளைக்கு வரவேண்டியதாக இருந்தது. இதனால் கால விரயமும் பொருட்செலவும் ஏற்பட்டது. மேலும் கிள்ளை, பொன்னன் திட்டு, முடசல் ஓடை போன்ற சிறிய கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் பரங்கிப்பேட்டையின் அரசு பள்ளிகளில் படிக்க வெள்ளாற்றில் படகுகள் மூலம் சென்று வந்தனர்.

பரங்கிப்பேட்டை மக்களுக்கும் அதை சுற்றியுள்ள கடலோர கிராம மீனவ மக்களுக்கும் மற்றும் கிள்ளை, அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், மீனவ மக்கள் என அனைத்து தரப்பினருக்கும் பரங்கிப்பேட்டையில் இருந்து கிள்ளையை இணைக்கும் வகையில் வெள்ளாற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என்பது 50 ஆண்டு கால கனவாகவே இருந்து வந்தது என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

அதன்பேரில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஆசியா வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் 20 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்ட டெண்டர் விடப்பட்டு கடந்த 2007 - ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26ம் தேதி பணி துவங்கப்பட்டது. 2008 - ஆம் ஆண்டு அக்டோபர் இறுதிக்குள் முடிப்பதற்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டாலும், பாலம் கட்டும்பணி ஆமைவேகத்திலேயே நகர்ந்தது. இயற்கை சீற்றங்களான மழை மற்றும் வெள்ளம் காரணமாகவும் இரண்டு ஆண்டுகள் இழுத்துச் சென்றது. தற்போது பாலம் கட்டும் பணி முழுவதும் முடிந்து பாலத்தினை இணைக்கும் வகையில் கிள்ளை, பரங்கிப்பேட்டை பகுதிகளில் சாலை போடப்பட்டு வருகிறது.

கிள்ளை பகுதி முடிந்து கடந்த இரண்டு நாட்களாக பரங்கிப்பேட்டை பகுதியில் சாலை அமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. மேலும் பாலத்தின் நான்கு பக்கங்களில் 3 லட்சம் மதிப்பில் 6 அடி உயரத்தில் திருவாரூர் தேர் அமைக்கும் பணி நடக்கிறது. இம்மாத இறுதிக்குள் அனைத்து பணிகளும் முடிந்துவிடும் என அதிகாரிகள் கூறுகின்றனர். புதியபாலத்தினை நேற்று முதல் பைக், சைக்கிளில் செல்பவர்கள் உபயோகித்து வருகின்றனர்.

வெள்ளாற்றில் பாலம், அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளதால் பரங்கிப்பேட்டை, அதன் சுற்று வட்டார மக்கள் மற்றும் கிள்ளை பகுதி மக்கள் என அனைவருமே மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திருச்சி ஜ‌மால் முஹ‌ம்ம‌து க‌ல்லூரி: முன்னாள் மாண‌வ‌ர் ச‌ங்க‌ வ‌ருடாந்திர ச‌ந்திப்பு

திருச்சி ஜ‌மால் முஹ‌ம்ம‌து க‌ல்லூரி, முன்னாள் மாண‌வ‌ர் ச‌ங்க‌த்தின் வ‌ருடாந்திர ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் ஆக‌ஸ்ட் மாதம் 15-ம் தேதி க‌ல்லூரி வ‌ளாக‌த்தில் ந‌டைபெறுவ‌து வ‌ழ‌க்க‌ம்.

2010-11 ஆம் க‌ல்வி ஆண்டிற்கான க‌ல்லூரியின் அறுப‌தாம் ஆண்டு விழா - "வைர‌ விழா" வாக‌ கொண்டாட‌ப்ப‌ட உள்ளது. இதையொட்டி முன்னாள் மாண‌வ‌ர்க‌ள் ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி 26. 01. 2011-ல் ந‌ட‌த்த‌ப்ப‌டும் என‌ க‌ல்லூரி முத‌ல்வ‌ர் முனைவ‌ர் ஷேக் முஹ‌ம்ம‌து அவ‌ர்க‌ள் தெரிவித்துள்ளார்.

நடக்கவுள்ள வைர விழாவில் 1951-ம் ஆண்டு முத‌ல் ப‌யின்ற‌ முன்னாள் மாண‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் கலந்து கொண்டு விழாவினை சிற‌ப்பிக்குமாறு கல்லூரி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், வெளிநாடுக‌ளில் ப‌ணிபுரிந்து வ‌ரும் முன்னாள் மாணவர்கள் [^] இந்த நிக‌ழ்ச்சியில் க‌ல‌ந்து கொள்ளும்படி கல்லூரி நிர்வாகம் அன்போடு அழைப்பதோடு- இதன் பொருட்டு, ‌ த‌ங்க‌ள‌து விடுமுறையினையும் அமைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

விழா மற்றும் வ‌ருடாந்திர‌ ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி குறித்த தகவல்கள் அறிய கீழ் கண்ட முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம் அல்லது மின்னஞ்சலும் அனுப்பலாம்.

தொட‌ர்பு முக‌வ‌ரி :
ஜ‌மால் முஹ‌ம்ம‌து க‌ல்லூரி
7 ரேஸ் கோர்ஸ் சாலை
காஜா ந‌க‌ர்
திருச்சி 620 020
மின்ன‌ஞ்ச‌ல் : princi@jmc.edu
இணைய‌த்த‌ள‌ம் : www.jmc.edu

(இக் கல்லூரியில் 1973 -1978 வரை பயின்ற ஒரு முன்னாள் மாணவனாக - "Porto Novo" M. A. காஜா நஜிமுதீன் - இப்பதிவு இணைக்கப்பட்டுள்ளது).

Wednesday 4 August 2010

"இரத்தக்கண்ணீர்" - நெஞ்சை விட்டு அகலாத திரைப்படம்

"இரத்தக்கண்ணீர்" - நெஞ்சை விட்டு அகலாத நல்லதொரு திரைப்படம்

சில திரைப்படங்களை காலம் வந்தால்தான் சிறப்பாக ரசிக்கலாம். தற்போதைய தமிழினமும், புலம் பெயர் தமிழரும் இரத்தக்கண்ணீர் பார்த்துத் திருந்த வேண்டிய காலம் இப்போதுதான் வந்திருக்கிறது.

தயாரிப்பு : நேஷனல் பிக்சர்ஸ்
நடிகர்கள்: எம்.ஆர்.ராதா, எஸ்.எஸ்.ஆர், சிறீரஞ்சினி, எம்.என்.ராஜம், எஸ்.ஆர்.ஜானகி மற்றும் பலர்.
வசனம் : திருவாரூர் தங்கராசு
இயக்கம் : கிருஷ்ணன் பஞ்சு
வெளிவந்த ஆண்டு : அக்டோபர் - 1954

"இரத்தக்கண்ணீர்" திரைப்படம் வெளியாகி 56 வருடங்களுக்குப் பின் இத்திரைப்படத்தை மறுபடியும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இத்திரைப்படத்தை நல்லதொரு திரைப்படம் என்று போற்றாதவர்கள் இதுவரை எவருமே கிடையாது என்று சொல்லலாம். ஆனால் இன்று மதுபானம், போதைவஸ்துக்கள் மற்றும் மேலை நாடுகளின் மேனா மினுக்கிகளின் மோகத்தாலும் சீரழியும் புலம் பெயர் தமிழினத்தின் புதிய அவலங்களை அவதானித்தால் இரத்தக்கண்ணீரை மறுபடியும் நினைவுக்கு கொண்டுவர வேண்டியது தவிர்க்க முடியாத விஷயமாகவே உள்ளது.

மதுபானமும் விபச்சாரமும் மேலைநாடுகளில் மட்டுமல்ல - இன்று தமிழர் தாயகமாம் தமிழகத்தில் மேலை நாடுகளைவிட அபரிமிதமாக அலங்கரிக்கப்பட்டு கேவலமாக செயற்ப்பட்டு வருகிறது. ஆகவேதான் இரத்தக்கண்ணீர் திரைப்படம் இரு இடங்களுக்கும் பொதுமைப்பட்டதாகிறது.

திரைப்படத்தின் கதை:

வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்புகிறான் கதாநாயகன். மேலைநாட்டு கலாச்சாரத்தில் மூழ்கி - சொந்தத் தமிழ் கலாச்சாரத்தை இழிவாகக் கருதுகிறான். தன் மனைவியை நாகரிகமற்றவளாகக் கருதி உதறுகிறான். வேசி வீட்டிலேயே வாழ்க்கையைக் கழிக்கிறான். விபச்சாரத்தில் ஈடுபட்டு குஸ்டரோகம் பிடித்து, கண்கள் குருடாகி, கைகால்கள் கொரண்டி, சொத்தெல்லாம் அழிந்த நிலையில் தாசியால் விரட்டப்படுகிறான். தனது தவறுகளை உணர்கிறான், ஊரின் நடுவே தனக்கு ஒரு சிலை கட்டச் சொல்லி, அதன் மீது எல்லோரும் காறி உமிழும்படி கேட்கிறான். தனது மனைவியை நண்பனுக்கு மணம் முடித்து வைத்து இறக்கிறான்.

திரைப்படத்தில் மனம் கவரும் இடங்கள்:

01. விபச்சாரியின் வீட்டில் குடியும், கூத்தியாட்டமுமாக மயங்கிக் கிடக்கிறார் எம்.ஆர்.ராதா. அப்போது அவருடைய தாய் நோய்வாய்ப்பட்டு இறக்கும் தறுவாயில் கிடக்கிறார். ராதா அவரைப் பார்க்கப் போக மறுத்துவிடுகிறார். தாய் இறந்து பிணம் ஊர்வலமாக வருகிறது. கொள்ளியிட மகனை சுடலைக்கு அழைப்பார்கள் - மூன்று மைல்கள் நடக்க வேண்டும். "போ.. மேன் நீயே கொண்டுபோய் தீமூட்டு " என்று விரட்டியடிப்பார். வேசியின் மயக்கத்தில் பெற்றதாயின் இறந்த உடலுக்கே தீ மூட்ட மறுத்த மகனாக வரும்போது நமது உள்ளங்களில் நெருப்பு எரியும்.

02. ராதாவிற்கு தொழுநோய் முற்றி கைகள், கால்களெல்லாம் புண்ணாகி ஒழுகும். அவருக்குப் பிடித்த நோய் மற்றவருக்கும் தொற்றும் அபாயம் வந்துவிட்டது. கையில் இருந்த பணமும் கரைந்து போய்விட்டது. ஆனாலும் ஆசை விடவில்லை.. வேசியாக நடித்த எம்.என்.ராஜத்தை கட்டித்தழுவப் போவார். அவளோ "போ" என்று விரட்டிவிடுவாள். அப்போதுதான் ராதாவிற்கு தனது நிலை புரியும். அப்போது அவர் விழுந்து கதறும் கதறல் மனதை உருக வைக்கும்.

03. "குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது.." என்ற சிதம்பரம் சி.எஸ்.ஜெயராமன் பாடலுக்கு இடையிடையே ராதா கொடுக்கும் குரல்.. "ஆம்! குற்றம் புரிந்தேன் - கொண்டவளை துறந்தேன் - கண்டவள் பின் சென்றேன்.." என்ற வரிகளை பேசாதவர் யாருண்டு..

04. ராதா பேசும் குசும்பு வசனங்கள்… குஷ்டரோகியான ராதா வீதியால் போகும்போது யாரோ ஒரு பக்தன் 'திருவண்ணாமலை தீபம் பார்க்கப் போகிறேன்' என்பான். அவனைப் பார்த்து ராதா "ஏன் உன் வீட்டைக் கொளுத்து; அதில திருவண்ணாமலையைப் பார்" என்று பேசுவார்.. இப்படி பல நாத்திகக் கருத்துக்களை பேசுவார்.

05. தனது மனைவி இதுகாலமும் வாழ்ந்ததில்லை. அவளை தனது நண்பனுக்கே திருமணம் செய்து வைத்து மறுமணத்தையும் ஆதரிப்பார்.

06. எல்லோரும் தனக்கு ஒரு சிலையைக்கட்டி மாலை போடு என்பார்கள். ஆனால், தன்னைப் பார்த்து காறித்துப்புவதற்காகவே சிலை கட்டுபவராக அவர் மாறுகிறார். இன்று நாம் காணும் பல சிலைகளின் நிலையும் அதுதானே!

07. ராதாவின் நடிப்பு, வசனம், அவருடைய மூன்றுவிதமான குரல் என்பவை திரைப்படத்தை தூக்கி நிறுத்துகிறது.

இரத்தக்கண்ணீர் 3, 021 தடவைகள் மேடையேறிய நாடகம். பதினைந்து வருட இடைவெளிக்குப் பின்னர் எம்.ஆர்.ராதா மறுபடியும் நடிக்க வந்திருந்தார். திரையுலகில் அவருக்கு இணையான நடிகர் ஒருவர் இல்லவே இல்லை என்பதை அன்றே உணர்த்தி வைத்தார்.

நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பாதிப்பில்லாமல் தமிழ் திரையுலகில் எந்தப் பாத்திரத்திலும் நடிக்க முடியாது. ஆனால் சிவாஜியின் பாதிப்பே இல்லாத ஒரேயொரு மகா நடிகர் எம்.ஆர். ராதாதான். அதேபோல, உலகத்தின் Holy Wood மற்றும் இந்தித் திரைப்பட உலகு உட்பட எந்தத் திரையுலகிலுமே எம்.ஆர். ராதாவிற்கு இணையான ஒரு நடிகன் கிடையாது என்பது நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் கருத்தாகும். அது உண்மைதான் என்பதை உலகத் திரைப்பட ஞானம் உள்ளவர்கள் ஒப்புக் கொள்வார்கள். அப்படியொரு உன்னதக் கலைஞனை அடையாளம் காட்டிய திரைப்படம் இரத்தக்கண்ணீர். 3,000 -க்கு மேற்பட்ட மேடைகளில் நடித்துப் பார்த்துவிட்டு திரைக்கு வந்தது கூட ஒரு மாபெரும் சாதனையாகும்.

தனது குரலை மூன்று விதமாக மாற்றி, நிறுத்தி பாவனை காட்டி பேசும் ஒரேயொரு நடிகனும் அவர்தான். அவருக்குள் இருந்து மூன்று பெரும் நடிகர்கள் குரலால் வெளி வருவார்கள். அவருடைய உடல் அசைவு, முக பாவம் இவைகளில் நவரசபாவங்களையும் பிழிந்து கொடுப்பார். இந்தத் திறமையை எந்த நடிகரும் இதுவரை பெற்றுவிடவில்லை. ராதா ஒரு பாத்திரத்தில் நடித்தால் அதில் 12 புகழ் பெற்ற நடிகர்கள் மிளிர்வார்கள்.

இன்றைய மிக நவீன, உயர்தர காமேராக்களினால் என்ன output -ஐ எடுக்க ஆசைப்படுகிறோமோ அத்தனை அவுட்புட்டையும் தன் நடிப்பால் தந்து தொழில் நுட்பத்திற்கே சவால் விட்டவர் எம்.ஆர்.ராதா என்பதை அறிவதற்கும் இப்படத்தைப் பார்க்க வேண்டும்.

இந்தத் திரைப்படத்தை ஏன் பார்க்க வேண்டும்.

இன்றைய புலம் பெயர் இளையோர்க்கும், தாயகத்தில் உள்ளோருக்கும் மறுபடியும் காண்பிக்க வேண்டிய திரைக்காவியம் இரத்தக்கண்ணீராகும். இன்று நமது இனம்- நடக்கும் நடை, போகும் பாதை யாவும் ஒரு சமுதாய இரத்தக்கண்ணீர் வருவதற்கு காரணமாகப் போகிறது.

ஆகவே ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு தமிழனும் திருந்தி நடக்க இரத்தக்கண்ணீர் மறுபடியும் பார்க்கப்பட வேண்டியது அவசியம்.

திரைப்படங்களில் நடிக்க ஆசைப்படும் கலைஞர்கள் அவதானிக்க வேண்டிய நடிப்பு ராதாவின் நடிப்பாகும்.

எல்லாவற்றிலும் மேலாக 1954 ம் ஆண்டிலேயே இப்படியொரு படத்தை தந்திருக்கிறார்களே என்பது தமிழ் திரையுலகிற்கு பெருமை தரும் விஷயமாகும்.

எம்.ஆர்.ராதா இந்தத் திரைப்படத்தில் கேட்ட சம்பளத்தைவிட மூன்று மடங்கு அதிகமாக தம்மிடம் வாங்கிவிட்டதாக டைரக்டர்கள் கிருஷ்ணன் பஞ்சு இருவரும் குறை கூறியிருந்தார்கள். அதே இரட்டையர்தான் பெற்றால்தான் பிள்ளையா படத்தை எடுத்த போது எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் எம்.ஜி.ஆரை சுட்டு சிறைக்குப் போனார்.

அந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தின் இரகசியத்தை எம்.ஆர். ராதாவோ அல்லது எம்.ஜி.ஆரோ இறக்கும்வரை வெளியிடாமலே இறந்து போய்விட்டார்கள். எல்லாவற்றையும் வெளிப்படையாக பேசிய ராதா, வெளிப்படையாக பேச மறுத்த இரகசியம் இதுவாகும்.

சில திரைப்படங்களை காலம் வந்தால்தான் சிறப்பாக ரசிக்கலாம். தமிழினமும், புலம் பெயர் தமிழரும் இரத்தக்கண்ணீர் பார்த்துத் திருந்த வேண்டிய காலம் இப்போதுதான் வந்திருக்கிறது.


Tuesday 3 August 2010

பரங்கிப்பேட்டை: பாழாகி வரும் அரசு பள்ளிக்கட்டிடம்

பரங்கிப்பேட்டை: பாழாகி வரும் அரசு பள்ளிக்கட்டிடம்

பரங்கிப்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி கட்டடங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக பயன்படுத்தப்படாததால் பாழாகி வருகிறது.

பரங்கிப்பேட்டை வண்டிக்காரத் தெருவில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அரசு பெண்கள் பள்ளி இயங்கி வந்தது. மாணவர்கள், ஆசிரியர்களுக்குப் போதிய இடவசதி மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் சுனாமிகுப் பின் ராஜஸ்தான் மாநில அரசால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே 6 ஏக்கரில் நிலம் வாங்கப்பட்டு அனைத்து வசதிகளுடன் கூடிய பள்ளி கட்டடம் கட்டப்பட்டது.

இதனையடுத்து புதிய பள்ளிக் கட்டடத்தில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாற்றம் செய்யப்பட்டது. அதனால் வண் டிக்காரத் தெருவில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளிக் கட்டடங்கள் பயன்படுத்தப்படாமல் மூடப்பட்டது.

அந்த பள்ளிக் கட்டடத்தில் வருவாய் அலுவலகம், பரங்கிப்பேட்டை ஒன்றிய உதவி தொடக்கக் கல்வி அலுவலகம், கச்சேரி தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக் கப் பள்ளி ஆகியவைகள் கொண்டுவர பேரூராட்சி தலைவர் முகமது யூனுஸ் முந்தைய கலெக்டர் ராஜேந்திர ரத்னுவிடம் கோரிக்கை வைத்தார். அதையடுத்து கலெக் டர் ராஜேந்திர ரத்னு, கட் டடத்தை பார்வையிட்டு அரசு அலுவலங்கள் கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
ஆனால் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் ஐந்து ஆண்டுகளாக பெண்கள் பள்ளிக் கட்டடங்கள் பாழாகி வருகிறது.

பரங்கிப்பேட்டையின் கிராம நிர்வாக அலுவலகத்திலேயே செயல்பட்டு வரும் வருவாய் அலுவலகமும் சேதமாகி இருப்பது ஒருபுறமிருக்க நூலகம் உள்ளிட்ட மற்றைய அரசு அலுவலகங்களும் வாடகை கட்டடங்களில் இயங்கி வருகிறது. இப்படி பல அலுவலங்கள் வாடகை, மற்றும் பழமையான கட்டடங்களிலும் செயல்பட்டு வரும் நிலையில் அரசுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை தவிர்க்க பயன்படுத்தப்படாமல் கிடக்கும் பள்ளிக் கட்டடங்களை புதுப்பித்து - வருவாய் அலுவலகம், நூலகம் மற்றும் தொடக்கப் பள்ளி போன்றவற்றை கொண்டு வருவதற்கு மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.

இதற்கு ஊர் மக்களின் முழு ஒத்துழைப்பு, விடா முயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம்!

தென்கொரிய இளைஞர்களின் கிராம முன்னேற்ற பணி

கிராமங்களை முன்னேற்றும் பணியில் தென் கொரிய இளைஞர்கள்


தென் கொரியாவைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள், டாக்டர்கள் உள்பட 125 பேர் கொண்ட குழு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமங்களைத் தேர்ந்தெடுத்து சமூக சேவைகளை செய்து வருகிறது. ஹூண்டாய் கார் தயாரிப்பு நிறுவனத்தின் உதவியால் இந்த சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தேர்வு...
தென் கொரியாவில் உள்ள தலைமை ஹூண்டாய் அலுவலகத்தின் மூலம் இந்தியா, சீனா, பிரேசில், தைவான் உள்ளிட்ட நாடுகளில் சமூக சேவைகளில் ஈடுபட ஆர்வமுள்ள கல்லூரி மாணவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தெரிவு செய்யப்படுவார்கள். அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட 250 மாணவர்கள் தமிழகத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளார்கள். 250 பேரும் 2 குழுக்களாகப் பிரித்து அனுப்பப்பட்டுள்ளார்கள்.
2-வது குழு...
இப்போது தமிழகத்துக்கு வந்துள்ள 2-வது குழுவில் 125 பேர் உள்ளனர். இவர்கள் தங்களுக்குள் ஐந்து ஐந்து பேர் கொண்ட குழுக்களாக பிரிந்து சேவையில் ஈடுபடுகின்றனர். இரண்டு வாரங்கள் இங்கு தங்கியிருந்து அவர்கள் தங்கள் பணிகளில் ஈடுபடுவர்.
கல்வி மற்றும் சுகாதாரம்: முதல் மூன்று குழுக்கள் ஹூண்டாய் நிறுவனத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளிகளுக்குச் சென்று அங்கு தேவையான கழிப்பிடங்கள், குப்பைத் தொட்டிகள், மாணவர்கள் விளையாடும் இடங்களை மேம்படுத்துதல், கட்டடங்களுக்கு சுண்ணாம்பு அடித்தல், அங்குள்ள குப்பைகள், புற்களை அகற்றுதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளுகின்றனர். கிராமங்களிலும் வீடுகளுக்குத் தேவையான கழிப்பிடங்களைக் கட்டிக் கொடுக்கின்றனர் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை பழக்கவழக்கங்கள், சுகாதாரம் பேணுதல், தொற்று நோய் பரவாமல் தடுத்தல் ஆகியவைப் பற்றி மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் பாடல், செய்முறை விளக்கம் மூலம் விளக்குகின்றனர்.
மருத்துவம்:
மீதம் உள்ள 2 குழுக்கள் மருத்துவ முகாமில் ஈடுபடுகின்றனர். ஒவ்வொரு குழுவிலும் குறைந்தபட்சம் 5 டாக்டர்கள் உள்ளனர். பொது மருத்துவம், குழந்தைகள் நலம், பல் மருத்துவ நிபுணர்களும் இதில் அடங்குவர். அப்பகுதியில் உள்ள தனியார் செவிலியர் பள்ளி மாணவிகளின் உதவியுடன் கிராம மக்களுக்கு மருத்துவம் செய்கின்றனர்.
இது குறித்து டாக்டர்கள் குழுவின் தலைவர் டாக்டர் எஸ்.எச்.சோ கூறுகையில்,
"இங்குள்ள மக்களின் ஆடை, அவர்களின் செயல்பாடுகளை வைத்தே அவர்களுக்கு என்ன பிரச்னை என்பதைக் கண்டுபிடித்து விடுவோம். தமிழில் சில வார்த்தைகளைப் படித்து வைத்திருப்பது மேலும் எங்களுக்கு உதவியாக இருக்கிறது. இவர்களுக்குத் தேவையான மருந்துகளை தென் கொரியாவில் இருந்தே கொண்டு வந்துள்ளோம். அவற்றை இலவசமாக விநியோகிக்கிறோம்'' என்றார்.
மருந்துகளுக்கு அனுமதி:
இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் மருந்துகளுக்கு, தென் கொரியாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் அனுமதி பெற வேண்டும். மேலும் இப்பகுதியில் உள்ள ஆட்சியர், சுகாதாரத்துறை இணை இயக்குநர், இந்திய மருத்துவச் சங்கம் உள்ளிட்டவற்றின் அனுமதி பெற்ற பின்பே மருந்துகள் விநியோகிக்கப்படுகிறது. மருந்துகள் முறையாக "சீல்' செய்யப்பட்டே விநியோகிக்கப்படுகிறது.

Sunday 1 August 2010

நீதி நின்று கொல்லும்


இந்திய ஊடகங்களில் இன்று நிறைந்து நிற்கும் பெயர்:


மித் ஷா!?

யார் இந்த அமித் ஷா?

குஜராத் மாநில முதல்வரும் உள்துறை அமைச்சருமான நரேந்திரமோடியின் வலதுகை என பாஜகவினுள் மரியாதையுடன் புகழப்படும், குஜராத் உள்துறை இணையமைச்சராகப் பதவி வகித்தவர்தான் இவர். மோடியின் அந்தரங்கங்களை அறியும் அளவுக்கு மிக நெருக்கமான அமித் ஷா, பேசப்படுவதற்கேற்ப மாநிலத்தில் மோடியின் பதவிக்கு அடுத்த உயர்ந்த பதவியில் மோடியால் அமர்த்தப்பட்டு அழகுபார்க்கப்பட்டவர்.

சுருக்கமாக, மோடியின் மனசாட்சி!

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் பிரதமருக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என்ற அளவுக்குப் பாஜகவில் சக்தி பெற்றவராகச் சித்தரிக்கப் பட்டார் மோடி. அந்தமோடியின் வலது கையான அமித் ஷா, சமீபத்தில் சிபிஐயால் விலங்கிடப் பட்டது.

மோடியின் துருப்புச் சீட்டான சொஹ்ராபுதீன்!

சொஹ்ராபுத்தீன் என்பது இன்றுபோல் 2005ஆம் ஆண்டு நவம்பர் இறுதியில் இந்திய ஊடகங்களில் நிறைந்து நின்ற மற்றொரு குஜராத்வாலாவின் பெயர். சுமார் 3000க்கும் அதிகமான முஸ்லிம்களை விரட்டி விரட்டி வேட்டையாடி, இந்திய வரலாற்றின் ஏடுகளில் தீராத களங்கத்தைப் பதிவு செய்த நரேந்திரமோடியின் கோரமுகத்தை உலகின்முன் மூடிமறைக்க, 'லஷ்கரீ' முத்திரையோடு பயன்படுத்தப் பட்டவர். குஜராத்தில் நடைபெற்ற நரவேட்டை அட்டூழியங்களைத் தொடர்ந்து வந்த சட்டமன்றத் தேர்தலில் மக்களின் ஓட்டுகளை அள்ளியெடுக்க அரசு இயந்திரங்களைப் பயன்படுத்தி, "மோடியைக் கொலை செய்ய முயன்றவர்கள்" எனும் ரெடிமேடுத் தீவிரவாத முத்திரை குத்தப்பட்டு, போலி என்கவுண்டர்கள் மூலம் போட்டுத்தள்ளப்பட்ட அநேகரில் ஒருவர்தான் இந்த சொஹ்ராபுதீன்!

அன்று சொஹ்ராபுதீன் அஸ்திரம் மோடிக்குத் தேர்தலில் வெற்றியைக் கொடுத்தது எனில், இன்று அதே அஸ்திரம் பூமராங்காகத் திருப்பி வந்து மோடியின் பரிவாரங்களை ஒவ்வொன்றாக வீழ்த்தி வருகிறது. காவல்துறையிலுள்ள ஒருசில மோடிவாலாக்களை வீழ்த்தத் துவங்கிய சொஹ்ராபுதீன் வழக்கு அஸ்திரம், மோடியால் கொடுக்கப்பட்ட பல்வேறு இடையூறுகளையும் உடைத்தெறிந்து உச்சநீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்ட சிபிஐ விசாரணையின் மூலம் பல காவல்துறை உயரதிகாரிகள், நான்கு ஐபிஎஸ் உத்தியோகஸ்தர்கள் என நீண்டு, இன்று குஜராத் உள்துறை இணையமைச்சர்வரை தொட்டு நிற்கிறது.

இந்த அஸ்திரம் இத்தோடு நிற்குமா? அல்லது குஜராத்தின் அனைத்து பயங்கரவாதங்களுக்கும் ஆணிவேரான மோடியையும் வீழ்த்திய பின்னரே ஓயுமா? என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி.

"குஜராத் முதல்வர் மோடியைக் கொலை செய்ய வந்த லஷ்கரே தொய்பா தீவிரவாதி சொஹ்ராபுதீன் காவல்துறை என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்" என்று 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி பத்திரிகைகளில் செய்தி வெளியானபோது, மோடி எதிர்பார்த்ததைப் போன்று முஸ்லிம் சமூகத்தின்மீது மற்றொரு தீவிரவாதச் சேறு பூசப்பட்ட கையோடு, மீண்டும் முதல்வர் பட்டமும் மோடிக்கு வந்து சேர்ந்தது. ஆனால், விடாமுயற்சியோடு சொஹ்ராபுதீனின் சகோதரர் ருபாபுத்தீன் தொடர்ந்த சட்டப்போராட்டத்தின் இறுதியில் சுமார் இரண்டாண்டுகளுக்குப் பின்னர் சொஹ்ராபுதீன் கொலை செய்யப்பட்டதன் பின்னணியிலுள்ள முடிச்சு 2007இலிருந்து ஒவ்வொன்றாக அவிழத் துவங்கியது.

சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையிலிருந்து...

நவம்பர் 19, 2005இல் ஹைதராபாத்திலிருந்து கிளம்பிய பேருந்திலிருந்து சொஹ்ராபுதீனையும் அவர் நண்பர் துளசிராம் ப்ரஜாபதியையும் நவம்பர் 22 அன்று காவல்துறையினர் வழிமறித்து வலுக்கட்டாயமாக இறக்கியபோது, சொஹ்ராபுதீன் மனைவி கௌஸர்பீவியைக் கொலை செய்யும் நோக்கம் அவர்களுக்கு இருக்கவில்லை.

கௌஸர்பீவியை அவர்களின் செயலுக்குத் தடையாக வராமல் அவரை விலக்கவே முயற்சி செய்தனர். கௌஸர்பீவியைப் பேருந்திலேயே பயணம் தொடரக் காவல்துறையினரில் ஒருவர் கேட்டுக்கொண்ட போது, "என் கணவரை விட்டு நான் மட்டும் செல்ல முடியாது" என கௌஸர்பீவி பிடிவாதமாக மறுத்து விட்டார். கௌஸர்பீவியைப் பேருந்தில் அனுப்பிவிடக் காவல்துறையினர் எவ்வளவோ முயன்றும் அவர் கடுமையாக வாக்குவாதம் செய்ததால், வேறு வழியில்லாமல் கௌஸர்பீவியைத் தனியாக ஒரு டாட்டா சுமோவில் ஏற்றினர்.

சொஹ்ராபுதீனையும் பிரஜாபதியையும் ஏற்றிய குவாலிஸிற்குப் பின்னால் கௌஸர்பீவியை ஏற்றிய டாட்டா சுமோ பயணித்தது. செல்லும் வழியில் வல்ஸாத் உணவகத்தில் அனைவரும் மதிய உணவு உண்டனர். அங்கு வைத்து, ராஜஸ்தானிலிருந்து வந்த STF காவலர்களின் மற்றொரு வாகனத்தில் ப்ரஜாபதி ஏற்றப்பட்டார். சொஹ்ராபுதீனும் கௌஸர்பீவியும் காந்திநகர்-சர்கேஜ் நெடுஞ்சாலையிலுள்ள திஷா பண்ணைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கிருந்து அர்ஹாம் பண்ணை வீட்டிற்கு மாற்றபட்டனர். இந்த அர்ஹாம் பண்ணை, பிஜேபி கவுன்ஸிலர் சுரிந்தர் ஜிராவாலாவின் தம்பி ராஜு ஜிராவாலாவுக்குச் சொந்தமானது.

மூன்று நாட்களுக்குப் பின்னர் அங்கிருந்து சொஹ்ராபுதீனை மட்டும் குஜராத் தீவிரவாதத் தடுப்புப்படையினரும் ராஜஸ்தான் STF காவலர்களும் இணைந்து நரோல்-விஷாலா பகுதிக்கு அரசு வாகனத்தில் கொண்டு சென்றனர். வாகனம் அப்பகுதியினை அடைந்தபோது, சொஹ்ராபுதீனை வெளியே இறங்கப் பணித்தனர். அங்கு வைத்து சொஹ்ராபுதீன் கொடூரமான முறையில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அதற்குப் பின்னர் கௌஸர்பீவி அர்ஹாம் பண்ணை வீட்டில் வைத்துக் கொல்லப்பட்டார். அவரின் உடல் கறுப்பு பெட்ஷீட்டில் சுற்றி, கார் மற்றும் ஜீப் பின்தொடர டெம்போவில் ஏற்றி லோல் கிராமப்பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஒரு காவலர் கிராமத்தின் புறப்பகுதியிலிருந்து விறகு மற்றும் வைக்கோல் சேகரித்து டெம்போவில் ஏற்றினார். பின்னர் சற்று தூரம் சென்று சாலையின் ஓரமாக அவற்றை இறக்கி, அங்கு சிதை மூட்டினர்.

சிதையில் கௌஸர்பீவியின் உடலை எரிக்கும் போது, அதில் ஈடுபட்ட சில காவலர்களுக்கு அந்த உடல் யாருடையது என்பது தெரியாது. அவர்களில் ஒருவரான காவலர் V.A. ரதோட், டெம்போவிலிருந்து உடலை இறக்கும்போது பெட்ஷீட்டிலிருந்து வெளியான உடல்பாகங்களைக் கருத்தில் கொண்டு அது ஒரு பெண்ணின் உடல் எனக் கூறினார். அவருடன் உடலை இறக்கிய மற்றொரு காவலர், "இது கௌஸர்பீவியின் உடல்" என அவரிடம் தெரிவித்தார்.

ஒரு காவலர் ஜீப்பிலிருந்த டீசல் நிரம்பிய கேனை எடுத்து சிதையின்மீது வைக்கப்பட்டிருந்த கௌஸர்பீவியின் உடலின் மீது ஊற்றினார். ஐபிஎஸ் அதிகாரி வன்சாரா, சிதைக்குத் தீவைத்தார் (இந்த வன்சாரா, சிறுவயதில் ஏழ்மையால் பாதிக்கப்பட்டு முஸ்லிம்களின் உதவியுடன் படித்து ஐபிஎஸ் அதிகாரியானவர்). சிதை எரிந்து முடிந்த பின்னர், ஒரு காவலர் புகைந்து கொண்டிருந்த சிதையின் மீது தண்ணீர் ஊற்றி அணைத்தார். சிதையில் மீதமிருந்த எலும்பு மற்றும் சாம்பலை இரு காவலரை அழைத்து ஒரு கோணிப்பையில் சேகரிக்க வன்சாரா உத்தரவிட்டார். பின்னர் அவை நர்மதா ஆற்றில் கலக்கப்பட்டது. (இந்தக் கொடும் குற்றங்களில் குஜராத், ஆந்திரா, ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களைச் சேர்ந்த காவல்துறை கருப்பாடுகள் ஈடுபட்டிருந்தன).

குற்றவாளிகளில் ஒருவரான டிஎஸ்பி நரேந்திர குமார் அமின், இப்போது அப்ரூவராக மாறி, சிபிஐக்கு வாக்குமூலம் அளித்துள்ளார். அவருடன் சிறையிலடைக்கப்பட்டிருந்த மற்றொரு குற்றவாளியான இன்ஸ்பெக்டர் N.V. சவுஹான் அமினுடன் பேசும் போது, "கௌஸர்பீவியைக் கொன்று எரித்துவிட குஜராத் இணையமைச்சர் அமித் ஷாவிடமிருந்து வன்ஸாராவிற்கு உத்தரவு வந்தது. அமித் ஷாவிடமிருந்து அவ்வப்போது கிடைத்துக் கொண்டிருந்த உத்தரவுகளுக்கு ஏற்ப, கௌஸர்பீவியை எரித்துச் சாம்பலைக் கரைக்கும் வரையில் வன்ஸாரா தொடர்ந்து எங்களை விரட்டிக் கொண்டிருந்தார்" எனத் தெரிவித்துள்ளார். இதனை அமின் பதிவு செய்து சிபிஐக்குக் கைமாற்றியுள்ளார்.

சொஹ்ராபுதீன் என்கவுண்டரிலும் அவர் மனைவி காணாமல் போன விஷயத்திலும் சந்தேகமடைந்த சொஹ்ராபுதீன் சகோதரர் ருபாபுத்தீன் ஷேக் வழக்குப் பதிவு செய்தார். வழக்கு உச்ச நீதிமன்றத்தில் சூடு பிடிக்க ஆரம்பித்த நேரத்தில், உச்ச நீதிமன்றத்தில் கொடுத்த புகாரைத் திரும்பப் பெற்றால் 50 லட்சம் ரூபாய் தருவதாக டிசிபி அபய் சுதாசமா சொஹ்ராபுதீன் குடும்பத்தினருக்கு ஆசை வார்த்தை கூறியுள்ளார். ஆனால் அதற்கு சொஹ்ராபுதீன் குடும்பத்தினர் சம்மதிக்காத உடன், "அமித் ஷா மத்தியப் பிரதேசத்திலிருந்து உங்களை ஒழித்து விடுவார். அங்கும் பிஜேபி அரசுதான் நடக்கிறது என்பதை மறவாதீர்கள்" என சுதாசமா மிரட்டல் விடுத்துள்ளார். சொஹ்ராபுதீன் என்கவுண்டர் தொடர்பாக காவல்துறைக்கு எதிராக மாவட்ட மற்றும் உயர் நீதிமன்றங்களில் ரிட் தாக்கல் செய்த ஷாஹித் கத்ரி என்பவரையும் அமித் ஷா மிரட்டியுள்ளார்.

சொஹ்ராபுதீன் குடும்பத்தினரைக் கொலை செய்ததோடு, ஆதாரங்களை முழுமையாக அழித்தல், சாட்சியத்தை இல்லாமலாக்கும் நோக்கில் அவர் நண்பர் துளசிராமைக் கொலை செய்தல், புகார் கொடுத்தவர்களை மிரட்டி பின்வாங்கவைத்தல் எனப் பல்வேறு குற்றங்களை அமித் ஷாவும் காவல்துறை உயரதிகாரிகளும் செய்துள்ளனர்.

அமித் ஷாவின் தலைமையில் ஐபிஎஸ் உயரதிகாரிகள் அடங்கிய நிழலுலக தாதா குழு ஒன்று செயல்பட்டு வந்தது. இதில் பெரிய வியாபாரிகளை மிரட்டிப் பணம்பறிக்கும் ஒரு ஏஜண்டாக சொஹ்ராபுதீன் பயன்பட்டு வந்தார். வியாபாரிகளின் அலுவலகங்களுக்கு நேரடியாகச் சென்று பயத்தை ஏற்படுத்தி எளிதாகப் பணம் பறிப்பதே சொஹ்ராபுதீனுக்குரிய வேலையாகும். தங்கள் கீழே வேலைபார்த்த சொஹ்ராபுதீனை, தங்களுக்கிடையிலான கொடுக்கல் வாங்கல்களில் ஏற்பட்ட பிரச்சனையில் எதிர்காலத்தில் தமக்குப் பிரச்சனையாக ஆகி விடுவாரோ என்ற பயம் ஏற்பட்டபோது திட்டமிட்டு தீர்த்துக் கட்டி, மோடியைக் கொலை செய்ய வந்த லஷ்கரே தொய்பா தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாகப் போலி என்கவுண்டர் நாடகமாடியதாக சிபிஐ குற்றப்பத்திரிக்கையில் தெளிவாக விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

சிபிஐ

"சொஹ்ராபுதீன் ஒரு தீவிரவாதியல்ல" எனவும் "அவர் மோடியைக் கொலை செய்யவரவில்லை" எனவும் "மோடியின் சரிந்துபோன இமேஜைத் தூக்கி நிறுத்தும் வகையில், அவரின் வலது கையான அமித் ஷா, தான் வகித்து வந்த உள்துறை இணையமைச்சர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி நான்கு ஐபிஎஸ் அதிகாரிகளின் துணையுடன் நேரடி உத்தரவு பிறப்பித்து, சொஹ்ராபுத்தீன், அவரின் மனைவி கௌஸர்பீவி, துளசிராம் ப்ரஜாபதி ஆகிய மூவரையும் ஒருவர்பின் ஒருவராக அநியாயமாகக் கொலை செய்துள்ளனர்" என்ற உண்மையை, உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிபிஐ விசாரணை குழு, ஆங்கிலத் திகில் படக்காட்சிகள் போன்று பக்கம் பக்கமாக விவரித்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.

குற்றப்பத்திரிக்கையில் சிபிஐ விவரிக்கும் நிகழ்வுகள் அச்சமும் அதிர்ச்சியும் ஊட்டுபவை! அரசு இயந்திரத்தை மக்களின்மீது தங்கள் சுயநலனுக்காக அரசியல்வாதிகள் இவ்வாறெல்லாம்கூட பயன்படுத்துவார்களா? என்று அதிர்ச்சியில் உறைய வைக்கும்படியான விவரங்கள்!

சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கை விவரங்களைப் பெட்டிச் செய்தியில் காண்க.

சொஹ்ராபுதீன் போலி என்கவுண்டர் நடந்த நாளிலிருந்து, உண்மைகள் வெளியான இப்போதுவரை இடைப்பட்ட காலத்தில் அவ்வழக்குக் கடந்து வந்த பாதையில் பயணித்துப் பார்த்தால் மோடி அரசின் அயோக்கியத்தனங்கள், சட்டமீறல்கள், இந்திய ஜனநாயகம்-சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக - அவற்றை ஒரு பொருட்டாககூட மதிக்காத மோடி அரசின் தில்லுமுல்லுகள் ஆகியவற்றை வண்டி வண்டியாக அள்ளலாம்.

சொஹ்ராபுதீன் என்கவுண்டர் வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் அவர் மனைவி கௌஸர்பீவியைக் கண்டுபிடித்துத் தரவேண்டும் எனவும் சொஹ்ராபுதீனின் சகோதரர் ருபாபுத்தீன் அளித்த மனுவை ஆரம்பத்தில் யாரும் ஒரு பொருட்டாகவே கருதவில்லை.

2007ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில் குஜராத் அரசு வேண்டா வெறுப்பாக சிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது.

சிஐடி இன்ஸ்பெக்டர் சோலங்கி

சிஐடி ஐஜி கீதா ஜோஹ்ரி ஐஏஎஸ் தலைமையில் நடந்த அந்த விசாரணை, ஓர் எல்லைவரை சரியான பாதையில் பயணித்தது. ஒரு கட்டத்தில் அப்போது காவல்துறை அமைச்சகத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இதே அமித் ஷா, அதுவரை விசாரித்து வைத்திருந்த சிஐடி அறிக்கையைத் தன் மேசைக்கு வரவழைத்து அதில் கூறப்பட்டத் தகவல்களுக்கு மாற்றமாக அறிக்கை தயார் செய்யும்படியும் தொடக்கத்திலிருந்து இந்த வழக்கை விசாரித்த சிஐடி இன்ஸ்பெக்டர் சோலங்கி அளித்த உண்மையான அறிக்கையிலுள்ள சில விவரங்களை அழித்து விடும்படியும் வற்புறுத்தியுள்ளார்.

கீதா ஜோஹ்ரி ஐஏஎஸ்

சொஹ்ராபுதீனின் நண்பர் துளசிராம் ப்ரஜாபதியை சொஹ்ராபுதீன் கொலையுண்டது தொடர்பாக விசாரிக்க வேண்டும் எனவும் எனவே ராஜஸ்தான் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் ப்ரஜாபதியை விசாரப்பதற்குத் தமக்கு அனுமதி தரவேண்டும் என்றும் இன்ஸ்பெக்டர் சோலங்கி, கீதா ஜோஹ்ரிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதம் கிடைக்கப்பெற்ற சில நாட்களில் ப்ரஜாபதியும் மற்றொரு போலி என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டார்.

அத்தோடு சோலங்கியின் கடித விவகாரத்தையே கீதா ஜோஹ்ரி தன் சிஐடி அறிக்கையிலிருந்து மறைத்து விட்டார். ஆரம்பத்தில் சரியான திசையில் சென்ற விசாரணை, திசைமாறிச் செல்வதை உணர்ந்து, மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின்மீது "குஜராத் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உச்ச நீதிமன்றம் கடுமையான உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு வரலாம் என எதிர்பார்த்த குஜராத் அரசு, கீதா ஜோஹ்ரியை அதிரடியாக விசாரணையிலிருந்து நீக்கி நாடகமாடியது.

நரேந்திர குமார் அமின்

இப்போது அப்ரூவராக மாறியிருக்கும் நரேந்திர குமார் அமின் எனும் முன்னாள் அதிகாரி (DSP-Crime, Ahmedabad), "கீதா ஜோஹ்ரி பல அரசியல்வாதிகள், காவல்துறை உயரதிகாரிகள், கிரிமினல்கள் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். அதனால், போலி என்கவுண்டர் வழக்கைத் திசை திருப்பினார். சொஹ்ராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் தொடர்புடைய குற்றவாளியான நாதுஷா ஜடேஜா என்பவர் தலைமறைவாகி விட்டதாகப் பொய் அறிக்கை சமர்ப்பித்தார் ஜோஹ்ரி. பின்னர் அவரே, 'இந்த வழக்கில் ஜடேஜாவை ஒரு சாட்சியாளர்' என்பதாகப் பிரமாணப் பத்திரத்தைத் தயாரித்தளித்தார். கீதா ஜோஹ்ரியை முறைப்படி விசாரிக்க வேண்டும்" என சிபிஐயிடம் கூறியுள்ளார்.

சொஹ்ராபுதீன் போலி என்கவுண்டர் விவகாரம் நாடாளுமன்றத்திலேயே பிரளயத்தை ஏற்படுத்தியிருந்த வேளையில், குஜராத் சட்டமன்றத் தேர்தல் வேளையில் மோடியை "மரண வியாபாரி" எனக் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி விமர்சித்தார்.

2007 ஏப்ரல் 26

"சொஹ்ராபுதீன் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்; குஜராத் பாஜக உள்துறை இணையமைச்சர் சிறையில் அடைக்கப்பட வேண்டும்" என்று நாடாளுமன்றத்தில் சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்கள் வெளிப்படையாக கோஷங்கள் இட்டனர். இது நடந்தது 2007 ஏப்ரல் இறுதியில்.

நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம், காங்கிரஸ் என நாடு முழுவதும் மோடிக்கு எதிராக சொஹ்ராபுதீன் போலி என்கவுண்டர் விஷயத்தில் தீவிரம் காட்டிய வேளையில், மோடி தன் அயோக்கியப் புத்தியைப் பயன்படுத்தி, குஜராத் தேர்தல் பிரச்சாரத்திலேயே "தீவிரவாதியை என்ன செய்ய வேண்டும்?" எனக்கேட்டு, "கொலை செய்ய வேண்டும்" எனக் கூடியிருந்தவர்களைக் கூற வைத்து "அதைத்தான் நானும் செய்தேன்" என்று சொஹ்ராபுதீன் என்கவுண்டரை நியாயப்படுத்தி அதையும் ஓட்டாக மாற்றினார்.

இவ்வளவு அப்பட்டமாக ஒரு அநியாயக் கொலையை நியாயப்படுத்தி வெளிப்படையாகப் பேசிய பின்னரும் இந்தத் திறமையான குற்றவாளிக்கு எதிராக இந்திய அரசியல் சட்டம் எதுவும் இதுவரையிலும் பாயவில்லை! 'ஒப்புக்கு மாவு இடிக்கும்' வகையில், இந்தியத் தேர்தல் கமிஷன் மட்டும் மோடியிடம் ஒரு விளக்கம் கேட்டுக் கடிதம் அனுப்பியதோடு மூடிக்கொண்டது.

தொடர்ந்து குஜராத் மாநிலக் கட்டுப்பாட்டில் உள்ள சிஐடி விசாரணை, அமித் ஷாவால் கூர் மழுங்கடிக்கப்படுவது தெளிவான வேளையில், உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணைக்கு மனு அளிக்கப்பட்டது. முதலில் அம்மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும் தொடர் முயற்சியில் இறுதியாக உச்ச நீதிமன்றம், "சிபிஐ விசாரணை தேவை" என அறிவித்தது.

கடந்த ஆறுமாத கால அளவில் பல்வேறு அதிர்ச்சிகரமான உண்மைகளை ஆதாரத்துடன் கண்டறிந்த சிபிஐ, இறுதியாக சொஹ்ராபுதீன், கௌஸர்பீவி, பிரஜாபதி ஆகியோரின் அநியாயக் கொலைகளில், குஜராத் உள்துறை இணையமைச்சரின் நேரடிப் பங்கினை வெளிப்படுத்தியது.

ஒரு மாநிலத்தின் உள்துறை இணையமைச்சர் ஒருவர், பதவியில் இருக்கும்போதே சிபிஐயால் கொலைக் குற்றம் சுமத்தப்படுவது இந்திய வரலாற்றிலேயே இதுவே முதல்முறையாகும். இந்திய சரித்திரத்திற்குப் பல அவமானங்களைத் தேடித்தந்துள்ள சங்கபரிவார பாசறையிலிருந்து இந்தியாவுக்கு மற்றொரு தீராக் களங்கம்!

பதவியில் இருக்கும்போதே தலைமறைவான உள்துறை இணையமைச்சர் அமீத் ஷா, வேறுவழியின்றி சிபிஐ கைது செய்யத் தேடிக்கொண்டிருக்கும் நிலையில் தலைமறைவாக இருந்து கொண்டே தன் பதவியை ராஜினாமா செய்து முதல்வர் மோடிக்குக் கடிதம் அனுப்பினார். முதல்வருக்கும் சிபிஐ தேடும் தலைமறைவான உள்துறை இணையமைச்சருக்கும் நேரடித் தொடர்பு உள்ளது என்பதை அவர்களே ஒத்துக்கொண்டதற்குச் சமம் இது. அயோக்கியத்தனங்களின் மொத்த உருவம் மோடி என்பதற்கும் குஜராத்தில் நீதியின் ராஜ்யம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு, மோடி ராஜ்யம் நடைபெறுகிறது என்பதற்கும் இதைவிட தெளிந்த மற்றொரு உதாரணம் தேவையில்லை.

2005 நவம்பர் 21 அன்றிலிருந்து.. அதாவது சொஹ்ராபுதீன் குடும்பம் காவல்துறையால் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பிருந்து நவம்பர் 30 வரை, அதாவது சொஹ்ராபுதீன் மனைவி கௌஸர்பீவி கற்பழிக்கப்பட்டு, விஷம் ஊட்டப்பட்டு, பின்னர் எரித்துக் கொலை செய்யப்படுவதுவரை டிஜிபி நரேந்திர குமார் அமினுடன் குஜராத் உள்துறை இணையமைச்சர் அமித் ஷா நேரடியாகத் தொலைபேசியில் 30 முறை தொடர்பு கொண்டு, கௌஸர்பீவியைக் கொலை செய்வது குறித்து உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார் என்பதற்கான ஆடியோ ஆதாரமும் அதேபோன்று ஐபிஎஸ் அதிகாரி வன்சாராவிற்கும் இதே உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார் என்பதற்குமான ஆதாரங்களும் சிபிஐயால் கைப்பற்றப் பட்டுள்ளன.

இவ்வளவு ஆனபின்னரும் பாஜக கூடாரம் மோடிக்குத் தன் மொத்த ஆதரவையும் தெரிவித்துள்ளது. முன்னர் மாலேகான் வெடிகுண்டு வழக்கில் ப்ரக்யா சிங் கைது செய்யப்பட்டபோதும் பாஜக தலைவர் அத்வானி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாத்வீயை அரவணைத்தார். அண்மையில் இந்தியத் துணை ஜனாதிபதி அன்ஸாரியைக் கொலை செய்ய ஆர்.எஸ்.எஸ் தலைவர் திட்டம் தீட்டிய தகவலிலிருந்து இந்தியாவில் நடைபெறும் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் செயல்பட்டதற்கான ஆதாரங்களைத் தனியார் தொலைகாட்சி அலைவரிசை வீடியோ ஆதாரத்துடன் ஒளிபரப்பியது. இதைக் கண்ட வெறிகொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட சங்கபரிவார் பயங்கரவாதிகள் கும்பலாகச் சென்று அந்தத் தொலைக்காட்சி நிறுவன அலுவலகத்தைத் தாக்கியதும் நினைவிருக்கலாம். இந்தியாவில் சங்கபரிவாரத்தின் ஆதிக்கம் அரசு இயந்திரங்கள்வரை ஊடுறுவி உள்ளதும் அவற்றை பயங்கரவாதத்திற்கும் தீவிரவாதத்திற்கும் சங்பரிவார் பயன்படுத்தப்படுவதும் மிகத் தெளிவாக நிரூபிக்கப்பட்டு விட்டது.

சொஹ்ராபுதீன் குடும்பம் படுகொலை, கல்லூரி மாணவி இர்ஷாத் படுகொலை, குஜராத் இனப்படுகொலை, மாலேகோன், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா, தென்காசி, கோவா, அஹமதாபாத் குண்டுவெடிப்பு முதலான சங்கபரிவாரத்தின் பயங்கரவாதச் செயல்களில் இறுதிநீதிக்கான போராட்டம் இந்திய அரசியல் சாசனத்துக்கும் சங்கபரிவாரத்துக்குமே நடக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

இதில் இறுதி வெற்றிபெறப் போவது, ஃபாஸிஸ சங்கபரிவாரமா? அல்லது இந்திய அரசியல் சட்டமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

மேலதிகத் தகவல்களுக்கு, தொடர்புடைய நமது (http://www.satyamargam.com) பதிவுகள்:
1. போலி என்கவுண்ட்டர்கள் : குஜராத் அரசிற்கு உச்சநீதிமன்றம் இறுதிக்கெடு

2. குஜராத் போலி என்கவுண்டர்: தொடரும் அதிர்ச்சிகள்! (Updated)

3. மோடியின் அரசில் ராமனுக்கு நேர்ந்த கதி!

4. சொஹ்ராபுதீன் கொலையில் வன்சாரா முக்கிய குற்றவாளி - விசாரணை குழு அறிக்கை!

5. தெளிவான தீவிரவாதி...!

6. ஊடகங்கள், முஸ்லிம்கள் மற்றும் முஜாஹிதீன்!

7. ஐபியால் உருவாக்கப் படும் போலித் தீவிரவாதிகள்!

8. சட்டத் தீர்ப்புக்கு அப்பால்...

9 ஜனநாயகத் தூண்களே ...!

Follow-up: (சமீபத்திய தகவல்கள்)

1. இதுவரை மூன்று முறை சிபிஐயால் அமித்ஷா விசாரிக்கப்பட்டுள்ளார். இதுவரை எதையுமே ஒப்புக்கொள்ளாத அமித்ஷா, "எனக்கு எதுவுமே நினைவில்லை" என்று திரும்பத் திரும்ப கூறுவதாக சிபிஐ கூறுகிறது. அத்துடன், அமித்ஷா விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு தரவில்லை என்றும் கூறுகிறது.

2. சொக்ராபுதீன் ஷேக் என்கவுண்டரை சிஐடி விசாரித்துக்கொண்டிருக்கும் வேளையில் குஜராத் டிஜிபியாக இருந்த மூத்த ஐப்பிஎஸ் அதிகாரி பி.சி.பாண்டேயை ஆகஸ்ட் 11 ஆம் தேதி சிபிஐ விசாரிக்க முடிவு செய்துள்ளது.

3. அரசியல்வாதிகள், குற்றவாளிகளைத் தப்புவிக்க முயல்கிறார் என பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட, சொக்ராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கை விசாரித்த சிஐடி தலைவர் கீதா ஜோஹ்ரியையும் சிபிஐ விசாரிக்க இருக்கிறது. ஆகஸ்ட் 2 ஆம் தேதி கிதா ஜோஹ்ரி விசாரிக்கப்பட இருக்கிறார்.

4. குஜராத் முதல்வரும் உள்துறை அமைச்சருமான நரேந்திர மோடியையும் விசாரிக்க சிபிஐ ஆலோசித்து வருகிறது. உள்துறை இணையமைச்சராக இருந்த அமித்ஷா, மோடிக்குத் தெரிந்து தான் அந்தக் கொலைகளை நடத்தினாரா? என்பது குறித்து மோடியிடம் விசாரிக்க சிபிஐ விரும்புகிறது. இது நடந்தால், இந்த ஆண்டு இது இரண்டாவது தடவையாக மோடி சிபிஐயால் விசாரிக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

5. சொக்ராபுதீன் கொலை செய்யப்பட்டது போலி என்கவுண்டர் மூலம் தான் என்பதையும் அதை குஜராத் உள்துறை இணையமைச்சர் அமித்ஷா உத்தரவின் பேரில் தான் நிறைவேற்றப்பட்டது என்பதையும் விவரிக்கும் இரு காவலர்களுக்கு இடையிலான உரையாடல் ஆதாரம் காண்க: http://www.ndtv.com/news/videos/video_player.php?id=155074

நன்றி: http://www.satyamargam.com/1519