Thursday 31 May 2012

காளான் பிரியரா நீங்க! உஷாரா இருங்க!!




சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காளான், பேல் பூரி, பானி பூரி விற்கும் தள்ளுவண்டிக் கடைகள் சாலையோரங்களில் ஆயிரக்கணக்கில் முளைத்திருக்கின்றன. ஒரு பிளேட் ரூ. 10 என்பதால் மாலை நேரத்தில் இக்கடைகளில் வாடிக்கையாளர் கூட்டம் மொய்க்கிறது. மாணவர்கள், தொழிலாளர்கள் என பல தரப்பினரும் தினமும் விரும்பி காளான் உட்கொள்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.


சிலர், மனைவி, குழந்தைகளுடன் கூட கடைகளின் முன் நின்று ருசிக்கின்றனர். அவற்றை உண்பதால் ஆரோக்கியத்துக்கு கேடு ஏற்படும் என்பதை பற்றி, பலரும் அறியாதவர்களாகவே உள்ளனர். பெரும்பாலான கடைகளில் ‘காளான்’ என்ற பெயரில் விற்கப்படும் ‘அயிட்டம்‘ காளான் இல்லை என்பதே உண்மை. முட்டைக்கோஸ், மைதாமாவுடன் உப்பு சேர்த்து பிசைந்து எண்ணையில் வடை போல பொறித்து வைத்துக்கொள்கின்றனர்.


பின்னர் சிவப்பு நிறமேற்றுவதற்காக ஜிலேபிபவுடர், காரத்துக்கு மிளகாய்த் தூளை தண்ணீரில் கரைத்து, வாணலியில் ஊற்றி, அவற்றுடன் ஏற்கனவே பொறித்த முட்டைக்கோஸ் மைதாமாவு கலவை ‘வடை‘களை போட்டு வேக வைத்து வாடிக்கையாளருக்கு பிளேட்டில் பரிமாறுகின்றனர். இவற்றில் காரமும், உப்பும் அதிகம் சேர்த்திருப்பதால் சுவை கூடி நாவை சுண்டியிழுக்கிறது; இதுவே, காளான் என்ற பெயரில் விற்கப்படுகிறது.


இதையறியாத பலரும் ‘காளான்‘ சுவையை மனதில் நினைத்தபடி, போலி காளான் ‘அயிட்டத்தை‘ விரும்பி சுவைக்கின்றனர். இவ்வகையான காரம், ஜிலேபி பவுடர், அதிக உப்பு கலந்த முட்டைக்கோஸ், மைதாமாவு கலவை தீனியை தொடர்ச்சியாக தினமும் வாங்கி உட்கொள்வது, உடல் ஆரோக்கியத்துக்கு வேட்டு வைக்கும் என்கின்றனர் சுகாதாரத் துறையினர்.


மேலும், ஒருமுறை உணவை வேகவைக்க பயன்படுத்திய எண்ணையை மீண்டும், மீண்டும் பயன்படுத்துவதால் அவற்றில் நச்சுதன்மை கலந்து, ஆரோக்கியத்துக்கு ஆபத்தை விளைவிக்கிறது. எனினும், வாடிக்கையாளர் மத்தியில் இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாததால், தள்ளு வண்டிக்காரர்களின் வியாபாரம் சூடு பிடித்துள்ளது.


உடல் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் இதுபோன்ற போலி ‘காளான்‘ விற்பனை தள்ளுவண்டிக் கடைகள் மற்றும் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட இட்லி, தோசை விற்கும் தள்ளுவண்டி கடைகள், சிறு ஒட்டல்களை சுகாதாரத்துறையினர் கண்டுகொள்வதில்லை. இந்த துறையின் அலட்சிய போக்கு, மக்களின் ஆரோக்கியம் மற்றும் பொதுசுகாதாரத்தின் மீது அக்கறை காட்டாததையே காட்டுகிறது.

மாரடைப்பு ஆபத்து

அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது : சுகாதாரமற்ற, அதிக காரத்தன்மையுள்ள உணவுப்பண்டங்களை தவிர்ப்பது நல்லது. வயிற்று வலி, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட வயிறு, குடல் சம்பந்தப்பட்ட உபாதைகளுக்காக சிகிச்சை பெற வருவோரிடம், அவர்களது அன்றாட உணவு முறைகள் குறித்து விசாரிப்பது வழக்கம். அப்போது, பலரும் சாலையோரத்தில் விற்கப்படும் அதிக காரத்தன்மையுடைய ‘காளான்’ ‘பானிபூரி’ ‘பேல் பூரி’யை தினமும் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருப்பதாக தெரிவித்தனர்.


இது போன்ற, உடல்நலத்துக்கு எதிரான உணவு வகைகளை தவிர்த்தால், ஆரோக்கியம் மேம்பாடும். இல்லாவிடில் அல்சர், ஜீரணக்கோளாறு போன்ற பாதிப்புகள் ஏற்படும். மாசலா, ஜிலேபி பவுடர் போன்றவற்றை அதிகம் பயன்படுத்தி சமைக்கப்படும் உணவை தொடர்ச்சியாக உட்கொள்வோருக்கு, ‘கேன்சர்‘ பாதிக்கக்கூடிய வாய்ப்புகளும் அதிகம் உள்ளன.


ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை மீண்டும், மீண்டும் கொதிநிலைக்கு கொண்டு சென்று அதில் உணவுப்பொருட்களை வேக வைக்கும் போது, ‘ஹைட்ரோ கார்பன்‘ அளவு அதிகமாகிறது. இதில், சமைக்கப்படும் உணவை தொடர்ச்சியாக உட்கொள்வோருக்கு கொழுப்புச் சத்து கூடி ரத்தக்குழாய் அடைப்பு, மாரடைப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். இவ்வாறு எச்சரிக்கின்றனர்.

நன்றி: தினகரன்
Engr.Sulthan

Wednesday 23 May 2012

Baghdad turned orange by Enormous Sandstorm (Photos)

A thick layer of dust blanketed Baghdad today (22 May 2012) as one of the heaviest sandstorms in years hit the city a day before it is due to host global talks with Iran about nuclear weapons.
The sky turned an ominous orange as sand from the surrounding desert blew into the Iraqi capital and caused mayhem.
The international airport was closed, businesses were forced to shut and hundreds of residents – particularly those with asthma - went to hospital with breathing difficulties due to the choking air.

Hazy summer days: An Iraqi man stands in a Baghdad street, in an 
orange haze from a heavy dust storm a day before talks with Iran begin 
there
Hazy summer days: An Iraqi man stands in a Baghdad street, in an orange haze from a heavy dust storm a day before talks with Iran begin there.

The spring storm also appeared to hamper military flights.
None of the helicopter patrols that regularly roar over the city of six million people seemed to be airborne.
Sandstorms usually occur about twice a year in Baghdad, which is shielded from the desert by a thin strip of arable land between the Tigris and Euphrates rivers.
But this latest one comes as a very unfortunate time as Iran and six world powers are due to meet in the city tomorrow for negotiations over Iran's nuclear intentions. The storm means envoys may struggle to reach the Iraqi capital.
Hidden: A man rides his donkey cart while everything else on the 
street is masked by the sandstorm
Hidden: A man rides his donkey cart while everything else on the street is masked by the sandstorm

Glowing: Traffic snakes through Kahramana Square during the heavy 
sandstorm, which prompted the shutdown of Baghdad's airport
Glowing: Traffic snakes through Kahramana Square during the heavy sandstorm, which prompted the shutdown of Baghdad's airport

Masked: A traffic policeman directs vehicles while the thick, 
choking air makes it both hard to see and breathe
Masked: A traffic policeman directs vehicles while the thick, choking air makes it both hard to see and breathe
Disruption: Traffic slowly moves down a street a s man signals for
 a taxi to stop in a bid to escape the choking sandstorm
Disruption: Traffic slowly moves down a street a s man signals for a taxi to stop in a bid to escape the choking sandstorm

Caked: An Iraqi woman is barely discernible as she walks in a 
Baghdad street clogged with orange dust
Caked: An Iraqi woman is barely discernible as she walks in a Baghdad street clogged with orange dust

Struggle: An Iraqi policeman wears a protective surgical mask as 
he mans a checkpoint
Struggle: An Iraqi policeman wears a protective surgical mask as he mans a checkpoint

Hardgoing: Residents wear masks as they walk near Tahrir Square in
 central Baghdad. Many business were closed due to the conditions
Hard going: Residents wear masks as they walk near Tahrir Square in central Baghdad.
Many business were closed due to the conditions
Hospital
A boy sells masks during a sandstorm in central Baghdad
Contrasting fortunes: A woman with breathing difficulty uses an oxygen mask in hospital, left, while a boy makes some extra money selling masks in central Baghdad

Cllogged: Men wear dust masks as they walk through one of 
Baghdad's main commercial districts
Clogged: Men wear dust masks as they walk through one of Baghdad's main commercial districts

Keep on moving: Iraqis walk through Tahrir Square during a heavy 
sandstorm
Keep on moving: Iraqis walk through Tahrir Square during a heavy sandstorm

Saturday 19 May 2012

Amazing Grand Mother! (PHOTOS Attached)

Indian Grandmother, 78,  be the world's oldest professional sharpshooter!

At 78, most pensioners are reliant on the glasses to even read a newspaper. But not Indian grandmother Chandro Tomar.

With a £1,200 pistol in hand, and her sari draped over her long silver hair, it’s believed she’s the world’s oldest female professional sharpshooter.
 
Granny, get your gun: Indian grandmother Chandro Tomar is, at 78, 
believed to be the world's oldest professional sharpshooter
Granny, get your gun: Indian grandmother Chandro Tomar is, at 78, believed to be the world's oldest professional sharpshooter.

She has entered and won over 25 national championships across India as well as raising six children and 15 grandchildren.

She said: ‘I wanted to do something useful with my life and show people my capabilities. As soon as, I shot my first pistol I was hooked. And now I’ve shown everyone there’s no disadvantages to my age. If you’re focused you can do anything.’
 
Almost ten years ago Chandro took her granddaughter to a local firing range in Johri village, in Uttar Pradesh, India.

She wanted to learn a new skill but was too shy to go alone. In the end it was Chandro who was welcomed into the club with open arms.

Sharp-eyed: Chandro takes aim. She has won over over 25 national 
championships across India - as well as raising six children and 15 
grandchildren
Sharp-eyed: Chandro takes aim. She has won over over 25 national championships across India - as well as raising six children and 15 grandchildren.

Crack shot: She took up the sport nearly ten years ago after 
taking taking a few practice shots to pass the time while taking her 
granddaughter down to a local shooting range
Crack shot: She took up the sport nearly ten years ago after taking taking a few practice shots to pass the time while taking her granddaughter down to a local shooting range.

‘As I was waiting around I decided to have a go. The coach spotted me and was amazed at my aim,’ she said.

‘He told me to come back so I did. Initially I was just supporting my granddaughter but I enjoyed it so much it became a passion and I looked forward to going to the club every week.’

While Chandro tended to her daily chores on her farm and raised her family, she practiced her aim whenever she could using stones and throwing them at water bottles.

The club’s coach, Farooq Pathan, who set up the shooting club with two friends in 1998, said: 'I was surprised when I saw a pensioner in our group but she picked it up pretty quickly. 'She was so good some of the men stopped turning up altogether to avoid being humiliated by her, a old woman. She has the ultimate skill, a steady hand and a sharp eye.'

And now she’s a national treasure, known throughout India for her skill, even winning gold at the Veteran Shooting Championship held in Chennai.

Concentration: Chandro takes aim at the local firing range
Concentration: Chandro takes aim at the local firing range.


Multi-talented: The grandmother shows off her prowess with a 
rifle
Multi-talented: The grandmother shows off her prowess with a rifle

But her biggest fan is her daughter Seema, who is also an international shooting star becoming the first Indian woman to win a medal at the Rifle and Pistol World Cup.

'She is amazing,' she said. ‘If she can do it then so can we. She showed us that anything is possible. She has helped so many of us improve our lives. 'Many members of the club have gone on to even find jobs with the military, and police force, because of her encouragement.’

Winner: Chandro at home with her many medals and awards
                             Winner: Chandro at home with her many medals and awards

Chandro had an experience with the police herself, proudly beating an officer at one competition.

She said: ‘I defeated the Deputy Inspector General (DIG) of Delhi police. It was brilliant.'
 
But medals or no medals, life at home never changes for Chandro and she still cooks, cleans and cares for her family, making sure dinner is served before firing some bullets down at her local range and helping to carve out future success stories from the club.

Friday 18 May 2012

இரட்டைக்குழல் துப்பாக்கி: இந்திய ஊடகங்களும் இந்துத்துவாவும்?!

 இந்திய ஊடகங்கள் பரப்பும் ‘இந்துத்துவ வெளி’

கசாப் - இந்த பெயர் சில மாதங்களுக்கு முன் இந்தியா முழுவதும் அனைவராலும் உச்சரிக்கப்பட்ட பெயர். இந்தியாவிலுள்ள அனைத்து ஆங்கில ஊடகங்களாலும் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தப்பட்ட பெயர். மும்பையில் அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகளில் ஒருவன்தான் கசாப்.

சரி, இது அப்படியே இருக்கட்டும். ‘சாத்வி பிரக்யா’ என்கிற பெயரை இந்தியாவில் எத்தனை பேருக்கு தெரியும்? மாலேகான் குண்டு வெடிப்பு சம்பவம் பொதுமக்கள் எத்தனை பேருக்கு தெரிந்திருக்க வாயப்பு இருக்கிறது? மேலே குறிப்பிட்ட ‘சாத்வி பிரக்யா’ என்கிற பெயரும், இப்பெயரை தொடர்ந்த அந்த சம்பவமும், திரளான மக்களுக்கு சென்றடையாத செய்திகளாகவே இன்றளவும் உள்ளன.

2007, பிப்ரவரி 18ல் தில்லி – லாகூர் இடையிலான சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 68 பேர் உயரிழந்தனர். 68 அப்பாவி பொதுமக்கள் இறப்பதற்குக் காரணமாக இருந்து செயல்பட்டவை ‘இந்து’ தீவிரவாத அமைப்புகள். அந்த ‘இந்து' தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்தான் சாத்வி பிரக்யா என்பவரும், அவரது கூட்டாளியான சுனில் ஜோஸி என்பவரும். ‘இந்து’ தீவிரவாதம் என்கிற வார்த்தையே நம் மக்களுக்கு புதிய சொல்லாகத்தான் இருக்கும். ஏனென்றால், இந்து தீவிரவாத அமைப்பு, இந்து தீவிரவாதிகள் போன்ற செய்திகளை நமது ஊடகங்கள் நமக்கு எடுத்துச் சொல்வதில்லை. சொல்ல விரும்புவதுமில்லை. எழுத்து ஊடகம், காட்சி ஊடகம் மற்றும் சினிமா என மக்களிடம் நேரடியாக பேசும் எந்த அமைப்பும் இந்து தீவிரவாதத்தை பற்றி மக்களுக்கு துளி அளவும் சொன்னதில்லை. அதே நேரத்தில் இசுலாமிய தீவிரவாதம், தீவிரவாதிகள் என்றாலே இசுலாமியர்கள் என்கிற சித்தரிப்பை ஊடகங்கள் திட்டமிட்டு செய்து வருகின்றன.

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ‘கசாப்’ என்கிற 22 வயது இளைஞனுக்கு மரண தண்டனை ஏன் வழங்க வேண்டும், மரணம் எந்த வகையில் அவனுக்கு அமைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தண்டனை முறைகளை ஆங்கில ஊடகங்கள் அரசுக்கு ஆலோசனைகளாக வழங்கின. 
 
சிறுமி முதல் பெரியவர் வரை ‘கசாப்’ மரண தண்டனை குறித்து கருத்து கேட்டு, இந்தியா முழுவதும் ‘கசாப்’ சாக வேண்டியவன் என்கிற பிரச்சாரத்தை செய்தன. மும்பை தொடர்வண்டி நிலையத்தில் இறந்து போன அப்பாவி மக்கள் மீது தாங்கள் காட்டும் கருணையாக, கசாப் சாகவேண்டும் என்று நினைப்பதே தேசப்பற்றுள்ள இந்தியனின் கடமை என்பது போலவும், ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. 
 
இந்து தீவிரவாதி ‘சாத்வி பிரக்யா' வினால் சுட்டு கொல்லப்பட்ட 68 பேரும், இந்தியர்கள்தான். இந்த 68 பேர் இறந்துபோன செய்தியையும், இதற்குக் காரணமான இந்துத்துவ அமைப்புகளைப் பற்றியும், இப்பாதகச் செயலை செய்த சாத்வி பிரக்யாவை தூக்கில் போட வேண்டும் என்றும், எந்த ஊடகமும் இதுவரை பிரச்சாரம் செய்யவில்லை. தங்களை நடுநிலையாளர்களாக சொல்லி கொள்ளும் ஆங்கில ஊடகங்களின் உண்மை முகம் இதுதான்.

ஊடகம் என்பது இந்திய அளவில் பார்ப்பன, பனியாக்களின் தலைமையில் செயல்படும் அமைப்பாகவே இருக்கிறது. இந்திய வல்லாதிக்க கூறுகளான, 'தேசிய இனங்களின்' மீதான ஒடுக்குமுறை, இசுலாமியர்கள் மீதான பொய் சித்தரிப்பு, தரகு தேசிய முதலாளிகளுக்கான ஆதரவு மனநிலை, பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான கருத்தியல், பிராந்திய உணர்வுகள் கொண்ட மாநில கட்சிகளை சிறுமைப்படுத்துதல் என அனைத்து கருத்தாக்கங்களையும் பெருந்திரளான மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் வேலையைத்தான் இங்குள்ள ஊடகங்கள் செய்து கொண்டு இருக்கின்றன. சமூக நீதிக்கு முரணான இந்திய தேசிய கட்டமைப்பை, இந்துத்துவா உணர்வை, இந்தி மொழி திணிப்பை இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் பொது புத்தியாக உருவாக்கும் அரசியலைத்தான் இந்த ஊடகங்கள் திட்டமிட்டு செய்து வருகின்றன.

மாலேகான் குண்டு வெடிப்பு, அஜ்மீர் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு, பழனிபாபா படுகொலை என இந்துத்துவா அமைப்புகள் நடத்திய வன்முறைத் தாக்குதல்களை இதுவரை எந்த ஊடகமும் வெளிச்சம் போட்டுக் காட்டியதில்லை. 1984-ல் விஷ்வ இந்து பரிஷத் தொடங்கிய பிறகு தான் இந்திய அளவில் மதக்கலவரங்களும், வன்முறை தாக்குதல்களும் பரவலாகின. குண்டுவெடிப்பு கலாச்சாரத்தை இந்நாட்டில் துவங்கி வைத்த இந்த்துவ பார்ப்பனிய அமைப்புகளை தீயசக்திகள் என்கிற பிரச்சாரத்தை எந்த ஊடகங்களும் செய்ததில்லை. தீவிரவாத அமைப்புகள் என்றால், தேசிய இன விடுதலை அமைப்புகள் மற்றும் இசுலாமிய மத அமைப்புகள்தான் என்பதை பொதுமக்கள் மத்தியில் ஆழமாகப் பதிவு செய்வதில் முகாமையான பங்கை இந்த ஊடகங்கள் வகிக்கின்றன.

1995க்குப் பிறகு தமிழகத்தில் இசுலாமிய அமைப்புகளில் சில தலைவர்கள் தங்களது மத இறுக்கத்தை விடுத்து பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட அமைப்புகளுடன் இணைந்து சமூகநீதிக்கான பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள ஆரம்பித்தனர். பார்ப்பனியத்திற்கு எதிராக, பிற்படுத்தப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரை ஒருங்கிணைத்து குரல் கொடுத்தவர்களில் முதன்மையானவர் பழனிபாபா. அமெரிக்காவில் உள்ள Philadelphia வில் 25 ஆண்டுகளுக்கு முன்னரே, முதலாளித்துவத்தின் கோரமுகத்தையும், நுகர்வு கலாச்சாரத்தை அதிகரிக்கும் அமெரிக்காவின் பொருளாதாரக் கொள்கைகளையும் கண்டித்து பேசிய ஆற்றல்மிகு பேச்சாளர் பழனிபாபா. 1997ல் இந்து தீவிரவாதி ஒருவனால் வெட்டிக்கொல்லப்பட்டார் பழனிபாபா. இந்துத்துவத்திற்கு எதிராக இசுலாமிய அடிப்படைவாத சக்தியாக இல்லாமல் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் உதவியுடன் சமூக நீதிக்காக களம் கண்டவர் பழனிபாபா. அதன் காரணமாகவே பார்ப்பனியத்திற்கு பலியானார்.

‘சாத்வி பிரக்யா’ என்கிற இந்து தீவிரவாதியை மக்களுக்கு அடையாளம் காட்டாமல் இந்திய தேசியகட்டமைப்பு எப்படி பாதுகாத்து வருகிறதோ, அதேபோல் பழனிபாபா போன்ற இந்துவத்திற்கு எதிரான ஆளுமைகளையும் மறைத்து வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சட்டக் கல்லூரியில் தலித் மாணவர்களுக்கும், சாதி இந்து மாணவர்களுக்கும் இடையே நடந்த வன்முறையை ஊடகங்கள் மீண்டும் மீண்டும் பலமுறை ஒளிபரப்பின. ஆண்டாண்டு காலமாக தலித்களின் மீதான வன்கொடுமைகளை பரவலாக மக்களிடம் கொண்டு போய் சேர்க்காத ஊடகங்கள் தலித் கையில் ஆயுதமேந்தியவுடன் அதனை வெளிச்சம் போட்டுக் காட்டுவதன் மூலம் ஊடகங்களின் விஷமப் பிரச்சாரத்தை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.

ஈழவிடுதலைக்காக உயிர் துறந்த முத்துக்குமரன் முதல் சமீபத்தில் கொலை செய்யப்பட்ட முத்துக்குமார் வரை தமிழின உணர்வாளர்களின் போராட்டங்களையும், அர்ப்பணிப்பு வாழ்வையும் திட்டமிட்டு மறைத்து வருகிறது இந்திய வல்லாதிக்கத்திற்கு துணை நிற்கும் இந்த ஊடகங்கள். ராகுல்காந்தி போன்ற கத்துக்குட்டி அரசியல்வாதி தலித்கள் வீட்டில் தங்கினாரென்றும், அவர்களை தொட்டுப் பேசினார் என்றும் கற்பனைவாத சோசலிச கருத்துக்களைப் பரப்பும் இந்த ஊடகங்கள் ஈழத்திற்குச் சென்று சிங்கள ராணுவத்தால் கொடுமைப்படுத்தப்பட்ட தோழர் அங்கையர்கண்ணியைப் பற்றியும், சிங்களக் காடையர்களால் வன்தீண்டலுக்கு ஆளான தோழர் திருமலையைப் பற்றியும் இன்று வரை ஏன் பேசவில்லை?

பாலியில் வன்முறை, குழந்தைகளை கடத்தி கொலைச்செய்தல் போன்ற சம்பவங்களை மையமாக வைத்து ஊடகங்கள் தங்கள் கவலையை சமீபகாலமாக வெளிப்படுத்தி வருகின்றன. சமூக அக்கறையுள்ள ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்தான் அவை. இருப்பினும், கோவையில் மார்வாடிக் குழந்தைகள் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டு இறந்த பிறகே, இந்திய தேசிய கட்டமைப்பும் ஊடகங்களும் இப்பிரச்சனையை கவனத்தில் எடுத்துக் கொண்டன. சேரிக் குழந்தைகள் பலபேர் அரசு மருத்துவமனையில் கடத்தப்படுவதும், அக்குழந்தைகள் பிச்சைக்காரர்களாக்கப்படுவதும், சாதி இந்துக்களால் தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு கட்டாயப்படுத்தப்படுவதும், நகர்ப்புறங்களிலும், ஊர்ப்புறங்களிலும், ஆண்டாண்டு காலமாக நடைபெறும் சமூக அவலங்கள். அதிகார வர்க்கத்திற்கு பாதிப்பு ஏற்படும்போது மட்டும்தான் ஊடகங்களும், இந்திய அரசும் அப்பிரச்சனையில் அக்கறை கொள்கின்றன.

தமிழக அமைச்சர் ஒருவருக்கு டெல்லியில் ஆங்கிலம் பேசத் தெரியாவிட்டால், இந்தியாவின் அனைத்து பத்திரிகைகளிலும் அது கேலிச்சித்திரமாகிறது. ஆனால், வெளியுறவுதுறை அமைச்ர் எஸ்.எம்.கிருஷ்ணா ஐ.நா.பாதுகாப்பு அவை உரையின்போது, வேறு நாட்டு உரையை வாசித்தால் அது வெறும் செய்தியாக மட்டுமே வருகிறது. இதே தவறை தமிழ்நாட்டைச் சேர்ந்த மந்திரி செய்திருந்தால் சும்மா விட்டிருக்குமா இந்த ஊடகங்கள்? 
 
மாநில உரிமைகளுக்கான போராட்டத்தை ஒடுக்குதல், தமிழ்தேசியப் போராட்டத்தை பகடி செய்தல், பழங்குடிகளின் வரலாற்றை மறைத்தல், சிறுபான்மை மக்களை அந்நியப்படுத்துதல் உள்ளிட்ட இந்திய வல்லாதிக்க கனவுகளை சராசரி குடிமகனின் பொதுப் புத்தியாக கொண்டு வருவதில் இந்திய ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. ‘சாத்வி பிரக்யா’ போன்ற இந்து தீவிரவாதிகளை திட்டமிட்டே மறைத்து, பாதுகாத்து வருகிறது இந்திய தேசிய கட்டமைப்பு. இதன் இத்துத்துவ, ஒடுக்குமுறையை உடைத்தெறிந்து, தமிழ்தேசிய இன அடையாளத்தையும், தமிழ்தேசிய கட்டமைப்பையும் வளர்த்தெடுக்க வேண்டிய பெரும்பணி நமக்கு இருக்கிறது.
 

Thursday 17 May 2012

(Blogs - வலைப்பூக்களான) Blogger, WordPress பற்றி ...?

ஒருவரது எண்ணங்களையும் கருத்துக்களையும் இணையத்தில் எவருடனும் பகிர்ந்து கொள்கின்ற இடம் தான் Blog (வலைப்பூ) என்பது! இதை ஒரு வகையான Journalism என்றுகூட வகைப்படுத்தலாம்!
ஒரு நேரத்தில், Yahoo வின் Yahoo!Blog, Geocities போன்றவை, மேற்சொன்ன பகிரும் விஷயத்தில், பிரபல்யமாக இருந்தவை தான்! காலப்போக்கில் இவைகளின் பயன்பாடு சரிய ஆரம்பித்தது என்னவோ Google -லின் Blogger - அதாவது Blogspot, மற்றும் Word Press போன்றவைகள் இணையத்தில் உலாவர தொடங்கியப் பிறகே!

Google Blogger ருடைய Blogspot டின் எளிமையான வடிவமைப்பும் அதனுள் பொதிந்துள்ள வசதிகளும்தான் பலரை அதன்பால் விரையவைத்தது! சிறந்த வரவேற்ப்பையும் பெற்றது!! இதற்குப்பின் அடுத்த இடத்தை தக்கவைத்திருப்பது  WordPress ஆகும்.        
  
Blogger: Pyra Labs என்ற நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு, August 23, 1999 இல் உருவாக்கப்பட்ட இந்த Blogger -ஐ, Google நிறுவனம் விலை கொடுத்து வாங்கி, 2003 ஆம் ஆண்டில், தன்வசமாக்கியது.  

சொந்தமான வலைத்தளங்கள் இல்லாத பதிவர்கள் தம்மை இங்கு இணைத்துக்கொள்வதால் அப்பதிவர்களின் அனைத்து Blog -(செய்தி)களும் Google லின் Server இல் இருந்து blogspot.com என்னும் (Google லின்)  subdomain மூலம் வெளியிடப்படுகின்றது.

வலைப்பதிவுகளை உருவாக்கத் தேவையான மென்பொருட்கள், (அப்பதிவுகளை சேமிக்க) சேமிப்பகங்கள் மற்றும் இணையத்தில் அவற்றை வெளிக்கொணரத்தேவையான Server போன்ற அனைத்தையும் பயனாளி, அதாவது உபயோகிப்பாளர், அறியாதவாறு வடிவமைத்தது இதன் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது.

அதோடு, Computer அதன் தொடர்புடைய இணைய அறிவு போன்ற  விஷயங்கள் பதிவர்களுக்கு அடிப்படை அளவில் (Basic Level) இருந்தாலே போதும் என்ற நிலையையும் இந்த வடிவமைப்பு உருவாக்கியது இதன் வெற்றிக்கு மேலும் வலு சேர்த்தது.

பதிவர்களை கருத்தில் கொண்டு எண்ணற்ற வசதிகளை, இச்சேவை, இணையத்தில் மேம்படுத்தி பதிவர்களையும், அவர்களின் பதிவுகளையும் திறம்பட பரவலாக்கியது.

இந்த சேவையை Google இலவசமாகவே வழங்குவதால், இணைய வசதி உள்ள  எவரும் எளிதாக Blog (வலைப்பூ) துவங்கலாம் என்கிற நிலைபாட்டினால், வலைப்பதிவு எழுதுபவர்களின் எண்ணிக்கை சமீபகாலங்களில் கணிசமாகவும்  உயர்ந்துள்ளது.

முற்கால கையெழுத்துப்பிரதி(பத்திரிக்கை)களுக்கு  ஒப்பானதாகவும்  இது கருதப்படுவதில் வியப்பில்லை! 

இதற்கான Link: http://blogger.com
  
Matthew Charles Mullenweg வோர்ட்பிரஸ் (WordPress) பற்றி ஒரு விரிவான பார்வை
Matt Mullenweg





WordPress: இதுவும் ஒரு வலைப்பதிவு மென்பொருளாகும். இதை உபயோகப்படுத்தியும் பல்லாயிரக்கணக்கில் வலைப்பதிவுகள்  வெளியிடப்படுகின்றன.

இந்த WordPress 27 May 2003 இல், 19 வயதான Matt Mullenweg என்பவரால், துவங்கப்பட்டது. இது ஒரு சுதந்திர மென்பொருளாக (Open Source Program) இருப்பதால் பயனாளிகளின் விருப்பத்துக்கும், தேவைக்கும் தகுந்தவாறு மாற்றி அமைத்துக்கொள்ளவும்  முடியும்.

பயனாளிகளின் இஷ்டத்துக்கு ஏற்றப்படி மாற்றி அமைத்து பயன்பெற இயலும் என்கின்ற காரணத்தால் பெரும்பாலான பெரிய தளங்கள் WordPress மூலமே செயல் பட்டு வருகின்றன.

2007, 2009, 2010, 2011 ஆகிய வருடங்களில் சுதந்திர மென்பொருளுக்கான (Open Source Program) விருதுகளை WordPress பெற்றாலும் பாதுகாப்பு குறைபாடுகளுக்காக கடுமையாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.
      
இதற்கான Links:
 http://wordpress.com/   (இலவச சேவை) அல்லது
 http://wordpress.org/ (கட்டண சேவை)

இலவச சேவையான wordpress.com மூலம் Limited Theme Supported, No Plugins Allowed, FREE, Limited Monetization, No Maintenance போன்றவற்றையும், 
கட்டண சேவையான wordpress.org மூலம் Full Theme Supported, All Plugins Allowed, Regular Expense, Monetization Freedom, Maintenance போன்ற வசதிகளை பெறலாம். 
Blogger மற்றும் WordPress ஆகிய இவ்விரண்டிலும் Blogger தான், பயனாளர்களால் மிகவும் விரும்பப்படுகிறது. இதற்கான காரணம், Blogger -ரின் எளிமையான வடிவமைப்பு, மேம்படுத்தப்பட்ட பலவசதிகள் மற்றும் தொழில்நுட்பஅறிவு என்பது பயனாளர்களுக்கு தேவையற்ற ஒன்று என்ற நிலைப்பாடு போன்ற இவைகளால்  Blogger முன்னணியில் இருப்பதில் வியப்பில்லை!

WordPress இல், Blogger போன்றே, பலவசதிகள் இருந்தாலும் தொழில்நுட்பஅறிவு என்பது WordPress க்கு சற்றேனும் அவசியமாகிறது. இதனால் தான் பெரிய தளங்கள் பெரும்பாலும் WordPress மூலம் செயல்படுகின்றன.   

"எங்கும் இலவசம்; எதிலும் இலவசம்" என்பதைத்தானே நாமெல்லோரும் விரும்புகிறோம். அந்த ரீதியில் Blogger மற்றும் WordPress ஆகிய இவ்விரண்டிலுமே இலவசப் பதிவுகள்தான் அதிகமாக எழுதப்பட்டு வருகின்றன!

Saturday 12 May 2012

அம்பேத்கர் மக்கள் மீது தொகாடியாவின் திடீர் பாசம்!

அம்பேத்கரின் மக்கள் மீது தொகாடியாவுக்கு என்ன திடீர் பாசம்?

முஸ்லிம்கள் கல்வி, அரசியல் அதிகாரம் மற்றும் பொருளாதார ரீதியில் மேம்பாடு அடைந்து விடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து சிறுபான்மை நலன் சார்ந்த அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்பு காட்டி வரும் இந்துத்துவாவினர் அந்த எதிர்ப்புகளினூடே தவறான வாதங்களையும் முன் வைத்து பெரும்பான்மை மக்களை சிறுபான்மையினருக்கு எதிராக திருப்பி விடும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சிறுபான்மை துவேஷத்தை வெளிப்படுத்தி வரும் இந்துத்துவா அமைப்புகளின் முக்கிய பிரிவான விஷ்வ இந்து பரிஷத், மத்திய அரசு சிறுபான்மை மக்களுக்கு வழங்கியிருக்கும் இட ஒதுக்கீட்டை தொடர்ந்து ஆட்சேபித்து வருகிறது.

சமூக நீதிக்கு எதிராக சிந்திக்கும் விஷ்வ இந்து பரிஷத்தின் அகில உலக (!) செயல் தலைவரான தொகாடியா, டாக்டர் அம்பேத்கரின் பிறந்த தினமான ஏப்ரல் 14 அன்று ஹைதராபாத்திலுள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த கையோடு அம்பேத்கரின் சிந்தனைக்கு எதிராக சிறுபான்மையினரின் இட ஒதுக்கீட்டை மறுத்துப் பேசியுள்ளார்.

“டாக்டர் அம்பேத்கர், தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடியினர் சமூகத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பதால் அவர்கள் வறுமையிலிருந்து நீங்கவும், முன்னேற்றம் அடையவும், பிற சமூகத்தவரோடு சேர்ந்து முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பதற்காகவும் அம்மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க அரசியல் சாசனச் சட்டத்தில் சாதகமான அம்சங்களை வழங்கியிருந்தார்.

அதே சமயம், இந்திய அரசியல் அமைப்பில் மத ரீதியிலான இட ஒதுக்கீட்டை வழங்குவதை டாக்டர் அம்பேத்கர் கடுமையாக எதிர்த்தார். இதற்கு காரணம், மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கினால் உண்மையான வளர்ச்சியும் சமூக ஒற்றுமையும் சீர்குலையும் என அம்பேத்கர் எண்ணினார்...'' என்று பேசியிருக்கும் தொகாடியா,

“முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் மத்திய அரசு அளித்திருக்கும் இட ஒதுக்கீட்டைத் திரும்பப் பெற வேண்டும்; அதோடு, முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு அளித்ததற்காக டாக்டர் அம்பேத்கரிடம் மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்...'' என்றும் கூறியிருக்கிறார்!

தொகாடியாவின் பேச்சை கூர்ந்து கவனித்தால்... முஸ்லிம், கிறிஸ்தவ எதிர்ப்பு மட்டும் அவரது பேச்சில் வெளிப்படுவதை புரிந்து கொள்ள முடியும்.

மத்திய அரசு சிறுபான்மை மக்களுக்கு அளித்திருக்கும் 4.5 சதவீத இட ஒதுக்கீடு மத அடிப்படையில் வழங்கப்பட்டதல்ல என்பது சமூக நீதியில் அக்கறை கொண்டவர்களுக்கும், இட ஒதுக்கீட்டின் அரசியலை கூர்ந்து கவனித்து வருபவர்களுக்கும் தெரியும்.

மத்திய அரசு முஸ்லிம், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகங்களை மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் கொண்டு வந்து அதன் பின்பே இட ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது.

அதோடு, மொழிவாரி சிறுபான்மையினரையும் அந்தப் பட்டியலில் கொண்டு வந்து அவர்களின் சமூக முன்னேற்றத்திற்காக இட ஒதுக்கீட்டை வழங்கியிருக்கிறது. 

இதைத் தெரிந்து கொண்ட பின்பும் இந்துத்துவாவிற்கே உரிய கோயபல்ஸ் தத்துவத்தை பிரயோகித்து சிறுபான்மையினருக்கு மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதாக ஒரு சித்திரத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகிறார் தொகாடியா.

தொகாடியா நம்புவதைப்போல மத்திய அரசு மத அடிப்படையில்தான் இட ஒதுக்கீட்டை வழங்கியிருக்கிறது என்றால்... முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் மட்டும் வழங்கவில்லை... சீக்கியர்களுக்கும், பார்சிகளுக்கும், பௌத்தர்களுக்கும் சேர்த்தே வழங்கியிருக்கிறது.

ஆனால் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இட ஒதுக்கீட்டை மட்டும் தொகாடியா எதிர்ப்பது ஏன்?

ஏனெனில் இந்துத்துவாவினரின் கணக்குப்படி சீக்கியர்களும், பௌத்தர்களும் இந்துக்கள். பார்சிகள் மிகச் சொற்பமானவர்கள் என்பதாலும் இவர்கள் முஸ்லிம்கள் இல்லை என்பதாலும் இந்துத்துவா கண்டு கொள்வதில்லை. ஆக, முஸ்லிம், கிறிஸ்தவ எதிர்ப்பை மையப்படுத்தவே இந்துத்துவாவினர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கின்றனர்.

இன்னொரு வகையில் பார்த்தால் இட ஒதுக்கீட்டிற்கு தகுதியானவர்களாக அரசு முடிவு செய்திருக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருப்போர் யார்?

இவர்களெல்லாம் எந்த மதத்தையும் சாராதவர்களா? பெரும்பான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள்தானே இவர்கள்! அப்படியானால் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளித்ததற்காக அம்பேத்கரிடம் மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்; இட ஒதுக்கீட்டை திரும்பப் பெற வேண்டும் என சொல்வாரா தொகாடியா?

மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கினால் சமூக ஒற்றுமைக்கு கேடு வரும் என அம்பேத்கர் எண்ணியதாக சொல்கிறாரே தொகாடியா... சமூக ஒற்றுமையைப் பற்றி மத வெறியன் தொகாடியா பேசத் தகுதியிருக்கிறதா?

சரி! இதெல்லாம் போகட்டும். சட்ட மேதை டாக்டர் அம்பேத்கருக்கும் சனா தனவாதி தொகாடியாவுக்கும் என்ன சம்பந்தம்?

டாக்டர் அம்பேத்கரின் மக்களை சூத்திரர்களாக, தீண்டத்தகாதவர்களாக ஆக்கி வர்ணாசிரமம் பேசி அவர்களை சேரிப் பகுதிகளுக்குள் ஒடுக்கி வைத்தது தொகாடியா வகையறாக்கள் தானே... அம்பேத்கரின் மக்கள் மீது தொகாடியா சார்ந்த சமூகம் நிகழ்த்திய வன்கொடுமைகளைத் தாங்காமல் தானே இந்து மதத்தை விட்டு வெளியேறி லட்சக்கணக்கான மக்களை அழைத்துச் சென்று புத்த மதத்தில் சேர்ந்தார் அம்பேத்கர்.

தொகாடியா சார்ந்த இந்துத்துவாவினர் கடந்த ஜனவரி மாதம் அமலாபுரத்தில் அம்பேத்கரின் சிலையை உடைத்தார்களே அப்போது தொகாடியா கண்டனம் தெரிவிக்கவில்லையே!

இப்போது என்ன அம்பேத்கரின் மக்கள் மீது திடீர் பாசம்?

அம்பேத்கரின் மக்களுக்கு தொகாடியாவின் சமூகம் இழைத்து வந்த, இழைத்துக் கொண்டு வருகிற வன்கொடுமைகளையெல்லாம் அம்பேத்கர் சிலைக்கு மாலை போடுவதன் மூலம் அந்த மக்கள் மறந்து விடுவார்கள் என்று தொகாடியா நினைக்கிறார்.

அம்பேத்கர் சிலைக்கு மாலை போடுவது இந்துத்துவாவின் அரசியல் சூழ்ச்சி  தான். சிறுபான்மையினருக்கு எதிரான கலவரங்களின்போது அம்பேத்கரின் மக்களை பயன்படுத்தத் துடிக்கும் தொகாடியாவின் நிஜ முகத்தை அந்த மக்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள். அதனால் தொகாடியாவின் திடீர் பாசம் விஷத்தன்மை வாய்ந்தது என்று அம்பேத்கரின் மக்கள் புரிந்தே வைத்திக்கிறார்கள்.

- ஹிதாயா

தொகாடியாவின் பேச்சை தடை செய்ய வேண்டும்!
தொகாடியாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆலமி ஜம்யிய்யதுல் மஷய்க் என்கிற முஸ்லிம் அறிஞர்களைக் கொண்ட அமைப்பு தொகாடியா பேசுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ஹைதராபாத் காவல் துறையை கேட்டுக் கொண்டுள்ளது.

ஏ.ஜெ.எம். அமைப்பின் தலைமை ஆலோசகரான மவ்லானா சையத் ஷா அஸôர் ஹுசைனி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சமீபத்திய வகுப்புக் கலவரம் காரணமாக ஹைதராபாத் பழைய நகரிலும் கலவர பதட்டம் நிலவி வரும் சூழலில், நகரின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்களை கோபப்படுத்தும் வகையில் பேச தொகாடியா அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

அவரது சமீபத்திய பேச்சு, முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டை ஆட்சேபிக்கும் வகையிலும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரின் இட ஒதுக்கீட்டின் பலனை முஸ்லிம்கள் அனுபவித்து வருகிறார்கள் என்று பொய்யாகக் கூறி தாழ்த்தப்பட்ட - பழங்குடியினரை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டி விடும் வகையிலும் அமைந்திருக்கிறது. தொகாடியா சொல்வதைப்போல முஸ்லிம்களுக்கு மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. பின் தங்கிய சமூகப் பொருளாதார அடிப்படையில்தான் வழங்கப்பட்டிருக்கிறது.

உண்மையில் பார்க்கப்போனால் தாழ்த்தப்பட்ட - பழங்குடியினருக்குத்தான் மத அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியும். தாழ்த்தப்பட்ட - பழங்குடியினர் அனுபவிக்கும் இட ஒதுக்கீடு மற்றும் இதர பயன்களை வேறு மதத்தைச் சேர்ந்த எவரும் பெறமுடிவதில்லை என்பதுதான் யதார்த்த நிலைமை.

பொய்யான தகவல்களுடன் ஆத்திரமூட்டும் வகையில் பேசும் தொகாடியாவின் பேச்சுக்களுக்கு தடை விதிக்க வேண்டும். இல்லையென்றால் அவரது பேச்சுகளால் ஹைதராபாத் நகரில் சமூக நல்லிணக்கம் கெடும் என தெரிவித்திருக்கிறார் சையத் ஷா அஸார் ஹுசைனி.

Source: http://goo.gl/4Qb53

Tuesday 8 May 2012

விளம்பர அடாவடி!



எஸ்.ஜெயராம், அரண்வாயலிலிருந்து எழுதுகிறார்:

விளம்பரங்கள் -  நமது தினசரி வாழ்க்கையில் நுழைந்து பயங்கர கலாட்டா செய்ய ஆரம்பித்து விட்டது என்றே சொல்லவேண்டும்.

ஆம்! சனி, ஞாயிறுகளில் கூட காலை 5 மணி முதலே கூம்பு வடிவ ஸ்பீக்கர்கள்  மூலம் மத ரீதியான பிரசாரத்தை ஆரம்பித்து பள்ளிப் படிப்பு, முதியோர் அமைதி போன்ற பலவற்றை  கெடுக்கின்றனர்!! 

பிறந்த நாள், செத்த நாள் போன்ற நினைவு நாட்களிலும், அரசியல் தலைவர்களின் கட்சி மாநாடுகளிலும், திருமணங்களிலும்  டிஜிட்டல் பேனர்கள் கண்களை  உறுத்துகின்றன!

கட்சிகளின் கொடிக்கம்பங்களோ சென்டர் மீடியனில் அழகுக்காக வளர்க்கப்படுகின்ற செடிகளை நாசப்படுத்துவதோடு தெருக்களையும் அலங்கோலப்படுத்தி விடுகின்றன!

நாளிதழை திறந்தால் ....... விளம்பர நோட்டீஸ்களின் அபிஷேகம் தான்!

கொக்கி போட்டு திருடப்படுகின்ற கள்ள மின்சாரத்தில் தமிழகத்தின் ஏனைய அரசியல் தலைவர்களுடன் அரசின் அமைச்சர்களும் ஒளிர்கின்றனர்!

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடற்ற விளம்பர தட்டிகளில், கற்பனைக்கு அப்பாற்பட்ட வகையில், அக்கட்சிகளின் தலைவர்களை போற்றிப் புகழ்ந்து நம்மை கண்டு களிக்க செய்கின்றனர்?
 
பஸ் ஸ்டாண்டுகளில் 25 அடி உயர கட்-அவுட்களில் தலைவரும்/ தலைவியும்! அங்கே பயணிகள் நிற்பது எப்படி? 

பிறந்த நாளோ/ இறந்த நாளோ- இந்த கருமாதிகள் முடிந்த பிறகாவது இத்தலைவர்களின் அழகு முகங்களை(?) அப்புறப்படுத்துகிறார்களா?

சாலையின் குறுக்காக  கட்டிய சணல் அறுந்து பிளாஸ்டிக் தோரணங்கள் பாதசாரிகளின்  கால்களில் பின்னி கீழே தள்ளுகின்றன!  இதில் எல்லா கட்சிகளுக்கும் சம அளவு பங்களிப்பு உண்டு!!

கட்சித் தலைவர்களின் முகங்களை, "டிவி' சேனல்களிலும், நாளிதழ்களிலும் தினம் தினம் பார்த்து அலுத்தது போக தெரு சுவர்களையும் விடாமல், "இந்திரன், சந்திரன்" என்று புகழ்ந்து எழுதி அச்சுவர்களையும் ஏன் அலங்கோலப்படுத்துகிறீர்கள் ? அநியாயம் ஐயா! 

உயிரோடு இருக்கின்ற சாதி / சமுதாய / அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா நடிகர்கள் ஆகிய இவர்களின் படங்களுக்குத்தான் மாலைகள் போட்டு கோஷமிட்டு நாறடிக்கிறீர்கள் என்றால், செத்துப் போனவர்களையும் சந்தியில் உட்காரவைத்து கொட்டுமேளத்துடன் கூத்தடித்து சிரமப்படுத்துவானேன்?

உன் வீட்டு கல்யாணம் ....
உன் அப்பனுக்கு, 10 ஆம் நாள் காரியம் ....
உன் பிள்ளைக்கு ஓராண்டு நிறைவு ....
அவை எல்லாமே உன்னோடு!
எங்களுக்கு என்ன? 

உன் வீட்டு இறந்த உடல், சுடுகாடு நோக்கி, சாலையில் போகும் போது ... மது குடித்து, பூ இறைத்து ஆடிப்பாடி சாலைகளை விளம்பர மேடையாக்கி அசுத்தப்படுத்த, யார் அதிகாரம் தந்தது? 

உன் துக்கம் உன்னோடு! 
உன் மகிழ்வு உன் வீட்டுக்குள்!

இந்த விளம்பர அடாவடிக்கு, எப்போது தான் முடிவு?

---------------------------------------------------------------------------------
சகோதரர் Moosa mdn அனுப்பிய Email செய்தி, சற்று மாறுதல் செய்யப்பட்டு, இங்கு பகிரப்பட்டுள்ளது.

Wednesday 2 May 2012

சிறீ சிறீ ரவி சங்கர் = ஆதிக்கத்தின் ஆன்மா


“அரசு பள்ளிக்கூடங்களை நடத்துவோரின் முறையற்ற நிர்வாகமும்,  அசிரத்தையும் குழந்தைகளை சமூகத்தில் தனிமைப்படுத்தி எதிர்ப்பு மனப்பான்மையை உருவாக்குகிறது. ஆகையால் அரசு,  பள்ளிக்கூடங்களை நடத்தவேண்டியதில்லை. நாட்டின் அனைத்து அரசு கல்வி நிறுவனங்களும் தனியார் மயமாக்கப்பட வேண்டும் அல்லது இதர குழுவினரிடம் ஒப்படைக்கவேண்டும்.

அரசு பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்கள் மாவோயிஸத்தையும்,  ஹிம்சா மார்க்கத்தையும் தேர்வு செய்கின்றனர். தனியார் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் ஒருபோதும் இவற்றால் ஈர்க்கப்படுவதில்லை. அவர்கள் முன்மாதிரி குடிமக்களாக வளருகின்றனர். ஆசிரியர்கள் அவர்களின் பொறுப்பை ஏற்றுக்கொள்கின்றனர்” 

---- ஜய்ப்பூரில் நடந்த விழாவில் வாழும் கலை ரவி சங்கர்

இந்தியாவில் அறியப்படும் மதப்புனிதர்களில் இரந்து வாழும் சாதுக்கள்,  வேத விற்பன்னர்களான ரிஷிகள், சீர்திருத்தவாதிகளான சந்துக்கள்,  மடாதிபதிகளான ஸ்வாமிகள், கோயில்களில் பூஜை செய்யும் பூஜாரிகள் இருக்கின்றனர். இந்த பட்டியலில் வாழும் கலை வெள்ளாடைத்துறவியை எங்கு கொண்டுபோய் வைப்பது? என்ற குழப்பம் ரொம்ப நாட்களாகவே இருந்து வந்தது.
Sri_Sri_Ravi_Shankar_400 
அதை இன்னும் காலந்தாழ்த்த விடாமல் தீர்த்து வைத்த வாழும் கலை துறவி ரவிசங்கருக்கே முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்ளவேண்டியுள்ளது.

தனியார் மயம், தாராளமயம் என்ற பதாகை ஏந்தி வரும் கார்ப்பரேட் பெரு வணிக வல்லாதிக்க விளைவுகளின் எதிர்விளைவுதான் மாவோயிஸ்டுகளும், நக்ஸல்பாரிகளும். விளைவுகளின் பக்கம் தன்னை தெளிவாக அடையாளப்படுத்திக்கொண்ட வாழும் கலையாருக்கு கார்ப்பரேட் மடாதிபதிகள் என்ற புதிய நாமகரணம் கனகச்சிதம்.


நமது வாழும் கலை கார்ப்பரேட் ஸ்வாமிகள் உள்நாட்டு, பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவன ஊழியர்கள், அலுவலர்களுக்கு ஸுதர்சன் கிரியா என்ற பெயரில் மன அழுத்தத்தைப் போக்கவும், வேலைத்திறனை, வீரியத்தை கூட்டவும் கட்டணம் பெற்றுக்கொண்டு மூச்சு பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றார்.

முதலாளியும், வாடிக்கையாளர்களும் கார்ப்பரேட் ஆசாமிகளாச்சே? எனவே தொழில் நுட்ப கமுக்கத்தை வேறு யாரும் தட்டிக்கொண்டு போய் விடக்கூடாது என்கிற ஒரு கார்ப்பரேட்டுக்கே உரிய முன்னெச்சரிக்கை உணர்வுடன் ஸுதர்சன் கிரியா என்ற பெயருக்கு மேலே (R) என்ற ஒற்றை ஆங்கில எழுத்தைப் பயன்படுத்துகின்றார். R என்ற எழுத்துக்கு பதிவு செய்யப்பட்ட வணிகக்குறி (registered ) என்பதை விளக்கத் தேவையில்லை.

இந்த வீரியம் கூட்டும் மூச்சுப் பயிற்சிக்கு வெளிநாட்டைச் சார்ந்த 19 அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் ரெகுலர் கஸ்டமர்களாக இருக்கின்றனர். அந்தப் பட்டியலிலிருந்து கொஞ்சம் சாம்பிள் பாருங்கள்:

NASA
US army national guard
WORLD BANK ....

அமெரிக்கா,  ஸ்விட்சர்லாந்து, ஹாலந்து, பிரேஸில் போன்ற நாடுகளிலும் இவருக்கு வாடிக்கையாளர்கள் உண்டு.

வாழும் கலை ரவி சங்கர் ஏற்கனவே இராக், இலங்கை நாடுகளுக்குப் போய் தையல் எந்திரங்கள் வினியோகித்து விட்டு வந்துள்ளார். அண்மையில் பாகிஸ்தானுக்கும் ஒரு ரவுண்டு அடித்து விட்டு வந்திருக்கின்றார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இந்த மூன்று நாடுகளுமே உள்நாட்டுப் போரினாலும், மனித வெடிகுண்டு தாக்குதல்களாலும் கூடுதல் பாதிக்கப்பட்டவை.

இங்கு போரின் நேரடி,  பக்க விளைவுகளினால் மனதளவில் பாதிக்கப்பட்ட நபர்கள் நிறைய இருப்பார்கள் என்பதை துல்லியமாகக் கணித்து தனது மூச்சுப் பயிற்சி டிரேட் மார்க்கை சந்தைப்படுத்த புரோமோஷனல் டூர் போய் வந்துள்ளார்.

இனி உள்நாட்டில் தனது வாடிக்கையாளர்களை கூட்டுவதற்கு என்ன வழி என்று தலையைப் பிய்த்துக்கொண்ட மனிதருக்கு ஒரு ரூட்டை நமது உள்துறை அமைச்சகம் சிறிய கோடாக போட்டுக் கொடுத்தது. அதாவது மாவோயிஸ்டுகள், நக்சல்பாரிகள் செல்வாக்கு உள்ள பகுதிகளில் அந்த செல்வாக்கை குறைக்க ராமகிருஷ்ணா மிஷன், கிறிஸ்தவ மிஷனரிகள் உள்ளிட்ட மத அமைப்புக்களை ஈடுபடுத்துவது என முடிவு செய்தது உள்துறை அமைச்சகம்.

இந்த இடைவெளியில்தான் தனது அஸ்திரத்தை எடுத்து விட்டார் வாழும் கலை.

"அரசே! பள்ளிக்கூடங்களை நடத்துவது உன் வேலையல்ல. அவற்றை இழுத்து மூடு! உனக்கு வேண்டிய மாணவர்களை உன் தேவைக்கேற்ற அளவில் சிந்தனைத்திறனில், ரசனையில் நான் செதுக்கித் தருகின்றேன்" என அழையா விருந்தாளியாக ஆஜரானார்.

கார்ப்பரேட் உலகு நீடிக்க வேண்டுமெனில் அதற்கான நுகர்வு திரள், சேவகர் பட்டாளம்,  தாங்கு தளம் போன்றவை தங்கு தடையின்றி உற்பத்தியாகிக்கொண்டே இருக்க வேண்டும். அதனால்தான் இந்த கோதுமை நிற  'மக்காலே பிரபு' கல்விக்கடவுள் சரஸ்வதி தேவியை தனக்கு டிரேட் மார்க் உரிமை பண்ணி கேட்கின்றார்.

வாழும் கலை ஸ்வாமிக்கு ஒரு கல்லில் பல மாங்காய்.

முழுக்க முழுக்க சேவைத்துறையாக இருக்க வேண்டிய கல்வித்துறையை தனியார் மயமாக்குவது மூலம் கொழுத்த லாபம் பார்க்கலாம்.

அத்துடன் தனியார் கல்விக்கூடங்களிலிருந்து வெளிவரும் வெள்ளைக்காலர் கனவான்களின் தூசு படியா வேலைத்தேடலை கார்ப்பரேட் நிறுவனங்களின் மாய வாயில்களில் கொண்டு போய் முற்றுப்பெற வைத்த மாதிரியும் ஆச்சு..

கார்ப்பரேட் முதலாளிகள் பிழிகின்ற பிழியில் வாக்கும் மெய்யும் நைந்து தொய்ந்து வரும் ஊழியர்களுக்கும் சுதர்ஸன் கிரியா வகுப்பு நடத்தி காசைப்பார்த்த மாதிரியும் ஆயிற்று. 

ஒரு கல்விச்சாலையை திறப்பவன் பல சிறைச்சாலைகளை மூடுகின்றான்”----- விக்டர் ஹீயுகோ.

பொதுக்கல்வியை ஒழிப்பதன் மூலம் அறியாமையையும்,  தற்குறிகளையும், குற்றங்களையும் உருவாக்குவதில் இந்திய அரசுகளும்,  குடிமைச்சமூகமும் எப்படி தொழிற்படுகின்றன என்பதை ஒரு ஒற்றை நோட்டத்தில் காண்போம். 

-----1947 ஆம் ஆண்டின் அய்.நா. மனித உரிமைப்பிரகடனத்தில் இந்திய அரசு கையெழுத்திட்டுள்ளது. அதன் பிரிவு 26இல் ஆறிலிருந்து பதினான்கு வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டாய, இலவசக்கல்வி அளிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

-------- இன்னும் 10 ஆண்டுகளில் அனைவருக்கும் கல்வி வழங்கப்பட்டு விடும் என இந்திய அரசு 1950 ஆம் ஆண்டு கூறியது.

-------- இந்த வருட ஏப்ரல் 1 ஆம் தேதியோடு கல்விக்கான உரிமைச்சட்டம் இயற்றி இரண்டு வருடங்கள் கடந்து விட்டன. 

1947,  1950 வருட பிரகடனங்கள்,  2010 ஆண்டின் சட்டம்,  இது போக வந்து போகும் ஆட்சியாளர்கள் கொடுத்து காணாமல் போன கல்வி தொடர்பான ஏராளமான வாக்குறுதிகள் என்ற இந்த காகிதத் தோரணங்களின் இடையே பருண்மை அம்மணமாக உலா வருகின்றது.

இந்தியத் திருநாட்டில் இன்னும் கல்விக்கூடங்களை எட்டிப்பார்த்திராத குழந்தைகளின் எண்ணிக்கை 40 மில்லியன்களைத் தாண்டி விட்டது.

கல்வியானது மக்களுக்கு அரசு வழங்க வேண்டிய அடிப்படை உரிமையாகும் என்பது உலகமறிய ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மையாக இருந்தபோதிலும் 1996 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்படும் புதிய கல்விக்கொள்கையின் விளைவாக கல்வியானது மெல்ல மெல்ல தனியார் மயமாக்கப்படுகின்றது.

இந்த தனியார்மயமாக்கத்திற்கு வழிவிடும் வகையில் அரசு பள்ளிக்கூடங்களின் கழுத்து நெறிக்கப்படுகின்றது. பல அரசு பள்ளிக்கூடங்களில் பெயர்ப்பலகையைத் தவிர வேறு எதுவும் இருப்பதில்லை.

நகர்ப்புறங்களில் வளர்ச்சியைக் காரணம் காட்டி சாதாரண மக்களை நகருக்கு வெளியே தூக்கி எறிந்து விடுகின்றனர். மேட்டுக்குடிகளுக்கோ இருக்கவே இருக்கின்றது தனியார் பள்ளிக்கூடங்கள். இவற்றின் விளைவாக நகர்ப்புறங்களில் இயங்கும் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் இல்லை என்ற காரணத்தைக் காட்டி மிக எளிதாக இழுத்து மூடி விடுகின்றனர்.
govt_school_380 
மலைக் கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வாரம் ஒரு முறை மட்டும் செல்கின்றனர். அவர்கள் பணிக்கு வராத நாட்களுக்கும் சேர்த்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டு மலை இறங்கி விடுகின்றனர்.

கட்டமைப்பு வசதி குற்றுயிரும் குலைஉயிரும் ஆக்கப்பட்ட அரச கல்விக்கூடங்களின் காட்சிகள் இவையென்றால் முழு வசதிகளுடன் இயங்கும் அரச,  தனியார் கல்விக்கூடங்களில் கற்க வரும் மாணவர்களின் பிஞ்சு மனங்கள் எப்படி இன,  மத வேறுபாட்டால் குதறப்படுகின்றன என்பதைப் பாருங்கள்.

முன்னாள் துணை வேந்தரும், கல்விப் போராளியுமான வசந்தி தேவி அவர்கள் கூறியுள்ளது போல் இந்திய கல்வி முறையானது சமத்துவமற்ற சாதீய பாகுபாடுகளினால் சிதைக்கப்பட்டதாகத்தான் இருக்கின்றது.

இந்தியாவின் கிராமப் பள்ளிக்கூடங்களில் மட்டுமல்ல நகர்ப்புறத்தில் உள்ள அரசு,  தனியார் நடத்தும் பள்ளிக்கூடங்களிலும், உயர் கல்வி நிறுவனங்களிலும் சாதீய மற்றும் சிறுபான்மை வெறுப்பு தலைவிரித்தாடுகின்றது.

தலைநகர் புதுதில்லியிலுள்ள ஹிந்து நிர்வாகிகளையும், ஆசிரியர்களையும் கொண்ட அரசு,  தனியார் கல்விக்கூடங்களில் முஸ்லிம் சிறார்களை சேர்ப்பதில்லை அல்லது முஸ்லிம் சிறார்கள் அவற்றில் சேர விரும்புவதில்லை. அப்படி சேர விரும்பாததற்கு அச்சிறார்கள் சொல்லும் காரணம்:

எங்களின் உடை, உணவு பழக்க வழக்கங்களை ஆசிரியர்கள் கிண்டல் செய்கின்றனர். துலுக்கன் என்ற வசைச்சொல்லுக்கு சமமான மியான் என்ற ஹிந்தி சொல்லாடல் கொண்டு ஆசிரியர்கள் முஸ்லிம் மாணவர்களை அழைக்கின்றனர். இதன் காரணமாக வகுப்பிலுள்ள ஹிந்து மாணவர்கள் அனைவரும் உடன் பயிலும் முஸ்லிம் மாணவர்களை அப்படியே அழைக்கின்றனர்.

ஓடி ஒளித்து விளையாடும் கண்ணாமூச்சி விளையாட்டிலும் கூட முஸ்லிம் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. ஏன் அவ்வாறு செய்கின்றீர்கள் என உடன் பயிலும் ஹிந்து மாணவர்களை கேட்டபோது மியான்களை நம்ப முடியாது என்கின்றனர்.

இதன் விளைவாக முஸ்லிம் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை முஸ்லிம்கள் அல்லது கிறிஸ்தவ மிஷனரிகள் நடத்தும் கல்விக்கூடங்களில் சேர்க்கின்றனர்.

2007—2011 ஆம் ஆண்டு வரை ஆவணப்படுத்தப்பட்ட விவரங்களின் படி இந்திய உயர் கல்வி நிறுவனங்களில் உயர் சாதியைச் சார்ந்த ஆசிரியர்களாலும்,  உடன் பயிலும் மாணவர்களாலும் சாதிய ஏளனம், மிரட்டல், புறக்கணிப்பு,  வசை பாடல் போன்றவற்றிற்கு ஆட்படுத்தப்பட்டு தற்கொலை செய்துகொண்ட தலித் மாணவர்களின் எண்ணிக்கை 18. 

ஆவணப்படுத்தப்படாத தற்கொலைகளும், கொலைகளும் இதை விட கூடுதலாகும்.

இந்திய தொழில்நுட்பக்கழகம்,  அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம்,  இந்திய அறிவியல் கழகம், வேளாண் அறிவியல் கல்லூரி, பொறியியற் கல்லூரி, செவிலியர் பயிற்சி கல்லூரி, தேசீய நோய் தடுப்புத்திறனியல் கழகம், விளையாட்டு ஆணையம் போன்ற இந்தியாவின் உயர்ரக பெருமைமிகு அரசு கல்வி நிறுவனங்களில்தான் இந்த தலித் மாணவர்கள் உயர் சாதி வெறியால் தற்கொலைக்கு தூண்டப்பட்டிருக்கின்றனர். 

அரசு பள்ளிகளில் சீர்கேடுகள் உள்ளது உண்மைதான். அதை சீர்படுத்துவது பற்றி உரையாடாமல் மொத்தமாக அரசு பள்ளிகளையே இழுத்து மூடி தனியார் பகல் கொள்ளைக்காரர்களின் கையில் அவற்றை ஒப்படைக்கச் சொல்லுகின்றார் வெள்ளாடைத் துறவி ரவி சங்கர்.

தலையில் உள்ள நோய் கட்டிக்கு சிகிச்சையாக தலையைச்சீவுவது போல் உள்ளது.

இங்கு தமிழகத்தில் சமச்சீர் கல்வி தொடர்பாக ஜெயலலிதா அரசு எடுத்த நிலைப்பாட்டைக் கண்டித்து பல மானுட நேச கல்வியாளர்கள் களம் இறங்கினர். உச்ச நீதிமன்ற தீர்ப்பு சமச்சீர் கல்விக்கு ஆதரவாக வந்தவுடன் கல்விப்போராளிகளின் போராட்டம் அமைதியடைந்து விட்டது.

கல்வியானது முழுவதுமாக மக்களுக்கு சொந்தாமாகும் வரையில் பல்வேறு நிலைகளாகவும், கட்டங்களாகவும் நகர்த்தப்பட வேண்டிய போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும்.                      

"ரசு பள்ளிகளை தனியார் மயமாக்குங்கள். மாணவர்களை முன்மாதிரி குடிமக்களாக வளர்த்தெடுக்கும் பொறுப்பை ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்வர்” என கார்ப்பரேட் உலகின் ஆன்மா ஆசை வார்த்தை காட்டி தூண்டில் போடுகின்றது ஒரு புறம். 

"ஏழை மாணவர்களைப் பள்ளியில் சேர்ப்பதால்  கல்வி, தரம், ஒழுக்கம் கெட்டு விடும். ஆசிரியர்களிடம் ஒழுங்கு குலையும்.” என மறுபுறம் கொடுவாளை உயர்த்துகின்றது கார்ப்பரேட் உலகு.

கல்விக்கான உரிமைச்சட்டம் நடுவணரசால் இயற்றப்பட்டபோது சென்னை அடையாறில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் நிர்வாகிகள் எய்த சொற்கள் இவை.
கார்ப்பரேட் சாமியார்களும், அவர்கள் இயக்கும் உலகும் அந்தரத்தில் ஒன்றும் உருவாகி சுழல்வதில்லை. இந்நிலவுலகில் அவை வேரூன்றி கிளை பரப்பிட ஒரு உழுது பண்படுத்தப்பட்ட நிலமும் கரிசனையான தோட்டக்காரன் ஒருவனும் வேண்டும் .

எழுத்தாளர் ஜெயமோகன் தனது வலை தளத்தில் அவரது வாசகர் ஒருவரின்
ஜக்கி, ஸ்ரீஸ்ரீ, பாபா, நித்தி கார்ப்பரேட் சாமியார்கள் காலத்தின் கட்டாயமா? என்ற கேள்விக்கு நீண்ட நெடிய விடை அளிக்கின்றார்.

அதிலிருந்து சில பகுதிகள் இதோ:
நவீன கல்வி என்ன செய்கிறதென்றால் இளமையிலேயே நம்முடைய தர்க்கபுத்தியை வலுவானதாக ஆக்கி நம்முடைய நம்பிக்கையைத் தகர்த்துவிடுகிறது.
பக்திக்கும் வழிபாட்டுக்கும் உரிய மனநிலை இல்லாமலாகிவிடுகிறது. ஒவ்வொன்றையும் காரண காரிய அறிவுடன் புரிந்துகொள்ளவேண்டிய ஆவலை உருவாக்கிவிடுகிறது.
சாதாரணமாக மனிதர்கள் இளமைப்பருவத்தைத் தாண்டி வாழ்க்கையின் சிக்கல்களையும் தற்செயல்களையும் சந்திக்கும் தருணத்துக்கு வரும்போது,  தங்கள் தர்க்க புத்தியின் எல்லைகளைத் தாங்களே உணர்ந்துகொண்டு நம்பிக்கையை உருவாக்கிக் கொள்வதே வழக்கம்.
மிகச்சிலரே அப்படி உருவாக்கிக் கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது
அவர்களுக்காகவே ஜக்கி, ரவிசங்கர் போன்ற நவீனகுருமார்கள் உருவாகி வரவேண்டியிருக்கிறது. அவர்கள் செய்யும் பணியை ஞான-கர்ம சமுச்சயம் என்று சொல்லலாம்.
ஞானமார்க்கத்தின் வழிகளையும் விடைகளையும் எளிமைப்படுத்தி கர்மமார்க்கத்தில் செல்பவர்களுக்கு அளிக்கிறார்கள்.
அதற்கான தேவை உள்ளது என்பதையே அவர்களுக்குக் கிடைக்கும் பெரும் செல்வாக்கு காட்டுகிறது.
ஞானம் தேடுபவர்கள் சிலர் என்றால் லௌகீகமான விளக்கமும் வழிகாட்டலும் தேடுபவர்கள் பல கோடி.
ஆகவே அவர் தன் குரல் அனைவரையும் சென்றடைவதற்காக அமைப்பை உருவாக்க வேண்டியிருக்கிறது. நீங்கள் சொல்லும் கார்ப்பரேட் குரு என்ற முத்திரை விழுகிறது”.

கார்ப்பரேட் ஆன்மாவை விதைக்க தோட்டக்காரர் என்ன அழகாக பக்தர்களின் மன நிலத்தை சமன் செய்கின்றார் பாருங்கள்.

மானுட நேய மிக்க கல்விப்போராளிகள் தங்களது இலக்குகளை தெளிவாக வகுத்துக் கொள்வது நல்லது.

..... சாளை பஷீர் ....

Baby: born with SIX legs

Doctors remove four extra limbs from one-in-a-million baby who was born with SIX legs

    A baby boy born with six legs has had a successful operation to remove his four extra limbs.
    A youngster from Karachi in Pakistan was believed to have had a parasitic twin, which had not developed properly in the womb, resulting in the extra legs. 

    Doctors examined MRI, blood tests, and CT scans before deciding to
 operate on the boy
    Doctors examined MRI, blood tests, and CT scans before deciding to operate on the boy.

    Critical: Doctors in Pakistan are fighting to save the life of the
 baby boy who was born last week with six legs because of a rare genetic
 condition
    Critical: Doctors in Pakistan are fighting to save the life of the baby boy who was born last week with six legs because of a rare genetic condition.

    A team of five doctors had fought to save the boy's life at the National Institute of Child Health in Karachi. The head of the NICH, Jamal Raza, said 'the abnormal birth was the result of a genetic disease which would affect only one in a million or more babies. It was strange that apparently an abnormal baby with six legs was as normal as other children'.

    Before surgeons could operate they said they had to work out which of the limbs belonged to the boy and which to his twin.

    Dr Jamal Raza (right) along with Imran Sheikh reveal the operation
 was a success
    Dr Jamal Raza (right) along with Imran Sheikh reveal the operation was a success.

    Doctors examined MRI, blood tests and CT scan reports before deciding to perform the surgery. The operation lasted eight-hours and was performed in stages.

    The baby had been in intensive since he was born last week to the wife of an X-ray technician.

    The baby's father Imran Shaikh,  who lives in Sukkur, said 'he is thankful and grateful to the government and doctors for helping a successful operating his son as we are poor family'.

    Medical marvel: Since Shaikh made his public plea for help, the 
Sindh Governor has come forward and directed officials concerned to make
 sure the child receives all the medical care he needs
    Medical marvel: Since Shaikh made his public plea for help, the Sindh Governor has come forward and directed officials concerned to make sure the child receives all the medical care he needs.

    Aid: Since the father of the baby made his public plea for help, 
the Sindh Governor has come forward and directed officials concerned to 
make sure the child receives all the medical care he needs
    Shaikh and his wife, who is also his cousin, lived in Sukkur village around 280 miles north of where his son is being cared for. His wife is reported to be recovering well and in a good state of health. Shaikh said they were planning on naming their son Umar Farooq.

    The Sindh provincial health department said they were examining if the baby  needed any further treatment to live a normal life.