The book placed between them looks gigantic compared to the pair, but is in fact only 1ft high.
Jyoti took the title on her 18th birthday on December 16th last year.
ஈராக்கிற்கு கடந்த 2003ம் ஆண்டு மார்ச் மாதம் படை கொண்டு சென்று ஈராக்கிய முன்னாள் அதிபர் சதாமை பதவியில் இருந்து நீக்கி, பின்னர் தூக்கிலிட்ட செயலின் செயல்பாடுகளை ஆராய 'பிரிட்டனின் யுத்த விசாரணைக் கமிஷன்' - தனது விசாரணைகளை சமீபத்தில் தொடங்கியுள்ளது.
சகல யுத்தங்களையும் அது முடிவடைந்த பின்னர் மதிப்பீடு செய்வதும், அதில் உள்ள நிறை, குறை ஆகியவற்றை பதிவு செய்வதும் பிரிட்டனில் உள்ள வழமை. அந்த வழமையின் அடிப்படையில் நடைபெறும் ஆணைக்குழு விசாரணையில் ஐ.நாவின் ஆயுதபரிகரண முன்னாள் ஆணையராக செயற்பட்ட சுவீடன் நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கன்ஸ் பிளிக்ஸ் (Hans Blix) சாட்சியமளித்தார்.
அமெரிக்க அதிபர் புஸ், பிரிட்டன் பிரதமர் டோனி பிளேயர் ஆகிய இருவரும் ஈராக் யுத்தத்தை மிகவும் தவறான முறையில் நடத்தி சென்றனர் என்பதில் சற்றும் சந்தேகமே இல்லை என்று விசாரணையின் போது கன்ஸ் பிளிக்ஸ் (Hans Blix) தெரிவித்தார். இரு தலைவர்களும் தாம் செல்வது சரியான யுத்தபாதையே என்ற நம்பிக்கையில் பயணித்தாலும், அதை தவறான பாதையிலேயே நடத்தினர் என்றும் குறிப்பிட்டார். மேலும் சதாமிடம் அணு ஆயுதங்கள் இல்லை என்பது தெளிவாகிவிட்ட நிலையில் போரை நியாயப்படுத்த யாதொரு முகாந்திரமும் இல்லை என்பது பலரது கருத்தாகவும் உள்ளது.
அமெரிக்க ராணுவம் ரகசியமாக வைத்திருந்த போர் தகவல்கள் அம்பலத்துக்கு வந்திருக்கின்றன. அத்தனையும் அமெரிக்க உளவுப்படையின் ஆட்கள் ஆப்கானிஸ்தானில் சேகரித்தவை. தலிபான் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக நட்பு நாடுகளை சேர்த்துக் கொண்டு ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்தும் போர் ஒன்பது ஆண்டுகளை பூர்த்தி செய்யும் நேரத்தில் கசிந்துள்ள இந்த தகவல்கள், போரின் போக்கையே மாற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
போரில் உதவுவதற்காக அமெரிக்காவிடம் ஆண்டுக்கு ஐயாயிரம் கோடி டாலர் வாங்கும் பாகிஸ்தான் மறைமுகமாக தலிபான்களுக்கும் உதவுகிறது என்ற உண்மை ஆதாரங்களுடன் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ எப்படி இரட்டை வேடம் போட்டு இரு அரசுகளையும் ஏமாற்றி வருகிறது என்பது சுவாரசியமான கூடுதல் தகவல்.
ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு எதிரான நாசவேலைகளை திட்டமிட்டு நிறைவேற்றும் பொறுப்பை எஸ் விங் என்ற பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த எஸ் விங் 'எவருக்கும் பதில் சொல்ல அவசியமில்லாத வானளாவிய அதிகாரத்துடன் செயல்படுகிறது; அதனிடம் கணக்கு வழக்கு இல்லாமல் ஏராளமாக பணம் புரள்கிறது’ என்பது கசிந்த ரகசியங்களில் ஒன்று.
வியட்நாம் போரின்போது ராணுவத்தின் ரகசிய தகவல்கள் அம்பலமானதன் விளைவே அமெரிக்க மக்கள் போருக்கு எதிராக கொதித்தெழுந்தனர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அதுபோல் இப்போதும் நடக்க சாத்திய கூறுகள் உள்ளதாக சிலர் கணிக்கின்றனர்.
"விக்கிலீக்ஸ்" (www.wikileaks.com) என்ற இணையதளம் 92 ஆயிரம் ஆவணங்களை கொண்ட இந்த ரகசியங்களை மிகப்பிரபல்யமான மூன்று பத்திரிகைகள் வாயிலாக வெளிக்கொணர வழி வகுத்துள்ளது. அரசாங்கத்தின் அளவுக்கு மீறிய ரகசிய நடவடிக்கைகளுக்கு எதிராக உருவானதே இந்த இணையதளம்.
‘வெளிப்படையான நிர்வாகத்தில் மட்டுமே அனைவருக்கும் நீதி கிடைக்கும். அனாவசியமான ரகசியங்கள் தவறுகள் நடக்கவே வாய்ப்பளிக்கும்’ என்பது அந்த இணையதள நிறுவனத்தின் தத்துவம்.
அமெரிக்க போர் விமானம் இராக்கிய அப்பாவி மக்கள் மீது குண்டு வீசி 12 பேர் இறந்த காட்சி அந்த விமானத்தின் வீடியோவில் பதிவாகி இருந்ததை வெளியிட்டு பிரபலமானதே இந்த இணையதளம். தற்போது 12 நாடுகளில் தன்னார்வலர்கள் உதவியால் செயல் பட்டுவரும் 'விக்கிலீக்' - ஐ, ஒபாமா அரசு முடக்க எடுக்கும் முயற்சிக்கு உலகெங்கும் உள்ள அரசுகள் மானசீகமான ஆதரவு அளிக்கும் என்பதும் உலகமறிந்த ரகசியம்.
அதேவேளை சம்மந்தப்பட்டவர்களே இப்படியான இரகசியங்களை கசிய விடுவதும் ஓர் இராணுவ உத்தியே என்பதையும் திருவாளர் பொதுஜனம் சிந்திக்க இடமிருக்கிறது.