Wednesday 28 July 2010

நாய் போல வாழ்ந்து வரும் அதிசய இளம் பெண்?!

நாய் போல வாழ்ந்து வரும் அதிசய இளம் பெண்?!

(வீடியோ LINK இணைக்கப்பட்டுள்ளது)

உக்கிரேன் (Ukraine) நாட்டை சேர்ந்த “ஒசான மலய” (Oxana Malaya) என்ற 27 வயது இளம் பெண் எவ்வித மனித நடத்தைகளைகளும் இல்லாமல் முற்றுமுழுதாக நாய்களின் செயல்பாடுகளோடு இருந்து வருவது பார்ப்போரை வியப்பில் ஆழ்த்துகின்ற அதே வேளை சோகத்திலும் ஆழ்த்தி வருகின்றாள்.

இவளது சோகக்கதை இதுதான்:-

1983 ம் ஆண்டு கார்த்திகை மாதம் பிறந்த இப்பெண், குழந்தை பருவத்தில் இயல்பான மனித சுபாவங்களேயே கொண்டிருந்தாள்.

ஆனால் அக்குழந்தையின் விதி பெற்றோர்களால் மாறியது. இவளது குழந்தை பருவத்திலேயே தனது குடிகார பெற்றோரால் கைவிடப்பட்டாள். இங்கு தான் அவ் விபரீதம் அந்த பெண்குழந்தைக்கு தொடங்கியது. பெற்றோரால் கைவிடப்பட்ட அந்தக் குழந்தை - நாய்கள் வளர்க்கும் கொட்டடி ஒன்றில் நாய்களோடு நாய்களாக, நாய்களின் கூட்டிலேயே, 6 வருடங்கள் தொடர்ச்சியாக வாழ்ந்து இருக்கின்றாள்.இதனால் மனித நடத்தைகளை முற்றிலும் மறந்து, நாயின் நடாத்தைகளுக்கு முழுதாக மாறிவிட்டாள்.

நாய்களைப்போலவே குரைப்பது, பாய்வது, நடப்பது, உணவு உண்பது மற்றும் நீர் பருகுவது போன்ற அனைத்து நடவடிக்கைகளும் நாய்களைப் போலவே செய்யத் தொடங்கினாள். ஆறு வருடங்களுக்கு பின் இப் பெண்ணை இனம்கண்டு தத்தெடுத்த சமூக ஆர்வலர்கள் - விஞ்ஞானிகளின் உதவியுடன் - அப்பெண்ணை மீண்டும் மனித இயல்புகளுக்கு மாற்ற முயற்சி எடுத்து வருகின்றனர் ஆனால் இன்றுவரை அந்த முயற்சிகள் எதுவும் வெற்றியளிக்கவில்லை.

“தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்" என்ற பழமொழிக்கு ஏற்ப, இப்போது 27 வயதாகும் இப் பெண்ணின் நடத்தைகள் சற்றும் மாறாமல் இன்றுவரை நாய்களின் நடத்தைகளுடனேயே வாழ்ந்து வருவது மிகவும் வேதனையான செய்தி.

பார்க்க, Video Link:

http://www.youtube.com/watch?v=qyqbnDjId7g&feature=player_embedded

No comments: