Showing posts with label சிந்திக்க. Show all posts
Showing posts with label சிந்திக்க. Show all posts

Saturday, 12 May 2012

அம்பேத்கர் மக்கள் மீது தொகாடியாவின் திடீர் பாசம்!

அம்பேத்கரின் மக்கள் மீது தொகாடியாவுக்கு என்ன திடீர் பாசம்?

முஸ்லிம்கள் கல்வி, அரசியல் அதிகாரம் மற்றும் பொருளாதார ரீதியில் மேம்பாடு அடைந்து விடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து சிறுபான்மை நலன் சார்ந்த அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்பு காட்டி வரும் இந்துத்துவாவினர் அந்த எதிர்ப்புகளினூடே தவறான வாதங்களையும் முன் வைத்து பெரும்பான்மை மக்களை சிறுபான்மையினருக்கு எதிராக திருப்பி விடும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சிறுபான்மை துவேஷத்தை வெளிப்படுத்தி வரும் இந்துத்துவா அமைப்புகளின் முக்கிய பிரிவான விஷ்வ இந்து பரிஷத், மத்திய அரசு சிறுபான்மை மக்களுக்கு வழங்கியிருக்கும் இட ஒதுக்கீட்டை தொடர்ந்து ஆட்சேபித்து வருகிறது.

சமூக நீதிக்கு எதிராக சிந்திக்கும் விஷ்வ இந்து பரிஷத்தின் அகில உலக (!) செயல் தலைவரான தொகாடியா, டாக்டர் அம்பேத்கரின் பிறந்த தினமான ஏப்ரல் 14 அன்று ஹைதராபாத்திலுள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த கையோடு அம்பேத்கரின் சிந்தனைக்கு எதிராக சிறுபான்மையினரின் இட ஒதுக்கீட்டை மறுத்துப் பேசியுள்ளார்.

“டாக்டர் அம்பேத்கர், தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடியினர் சமூகத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பதால் அவர்கள் வறுமையிலிருந்து நீங்கவும், முன்னேற்றம் அடையவும், பிற சமூகத்தவரோடு சேர்ந்து முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பதற்காகவும் அம்மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க அரசியல் சாசனச் சட்டத்தில் சாதகமான அம்சங்களை வழங்கியிருந்தார்.

அதே சமயம், இந்திய அரசியல் அமைப்பில் மத ரீதியிலான இட ஒதுக்கீட்டை வழங்குவதை டாக்டர் அம்பேத்கர் கடுமையாக எதிர்த்தார். இதற்கு காரணம், மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கினால் உண்மையான வளர்ச்சியும் சமூக ஒற்றுமையும் சீர்குலையும் என அம்பேத்கர் எண்ணினார்...'' என்று பேசியிருக்கும் தொகாடியா,

“முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் மத்திய அரசு அளித்திருக்கும் இட ஒதுக்கீட்டைத் திரும்பப் பெற வேண்டும்; அதோடு, முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு அளித்ததற்காக டாக்டர் அம்பேத்கரிடம் மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்...'' என்றும் கூறியிருக்கிறார்!

தொகாடியாவின் பேச்சை கூர்ந்து கவனித்தால்... முஸ்லிம், கிறிஸ்தவ எதிர்ப்பு மட்டும் அவரது பேச்சில் வெளிப்படுவதை புரிந்து கொள்ள முடியும்.

மத்திய அரசு சிறுபான்மை மக்களுக்கு அளித்திருக்கும் 4.5 சதவீத இட ஒதுக்கீடு மத அடிப்படையில் வழங்கப்பட்டதல்ல என்பது சமூக நீதியில் அக்கறை கொண்டவர்களுக்கும், இட ஒதுக்கீட்டின் அரசியலை கூர்ந்து கவனித்து வருபவர்களுக்கும் தெரியும்.

மத்திய அரசு முஸ்லிம், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகங்களை மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் கொண்டு வந்து அதன் பின்பே இட ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது.

அதோடு, மொழிவாரி சிறுபான்மையினரையும் அந்தப் பட்டியலில் கொண்டு வந்து அவர்களின் சமூக முன்னேற்றத்திற்காக இட ஒதுக்கீட்டை வழங்கியிருக்கிறது. 

இதைத் தெரிந்து கொண்ட பின்பும் இந்துத்துவாவிற்கே உரிய கோயபல்ஸ் தத்துவத்தை பிரயோகித்து சிறுபான்மையினருக்கு மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதாக ஒரு சித்திரத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகிறார் தொகாடியா.

தொகாடியா நம்புவதைப்போல மத்திய அரசு மத அடிப்படையில்தான் இட ஒதுக்கீட்டை வழங்கியிருக்கிறது என்றால்... முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் மட்டும் வழங்கவில்லை... சீக்கியர்களுக்கும், பார்சிகளுக்கும், பௌத்தர்களுக்கும் சேர்த்தே வழங்கியிருக்கிறது.

ஆனால் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இட ஒதுக்கீட்டை மட்டும் தொகாடியா எதிர்ப்பது ஏன்?

ஏனெனில் இந்துத்துவாவினரின் கணக்குப்படி சீக்கியர்களும், பௌத்தர்களும் இந்துக்கள். பார்சிகள் மிகச் சொற்பமானவர்கள் என்பதாலும் இவர்கள் முஸ்லிம்கள் இல்லை என்பதாலும் இந்துத்துவா கண்டு கொள்வதில்லை. ஆக, முஸ்லிம், கிறிஸ்தவ எதிர்ப்பை மையப்படுத்தவே இந்துத்துவாவினர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கின்றனர்.

இன்னொரு வகையில் பார்த்தால் இட ஒதுக்கீட்டிற்கு தகுதியானவர்களாக அரசு முடிவு செய்திருக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருப்போர் யார்?

இவர்களெல்லாம் எந்த மதத்தையும் சாராதவர்களா? பெரும்பான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள்தானே இவர்கள்! அப்படியானால் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளித்ததற்காக அம்பேத்கரிடம் மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்; இட ஒதுக்கீட்டை திரும்பப் பெற வேண்டும் என சொல்வாரா தொகாடியா?

மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கினால் சமூக ஒற்றுமைக்கு கேடு வரும் என அம்பேத்கர் எண்ணியதாக சொல்கிறாரே தொகாடியா... சமூக ஒற்றுமையைப் பற்றி மத வெறியன் தொகாடியா பேசத் தகுதியிருக்கிறதா?

சரி! இதெல்லாம் போகட்டும். சட்ட மேதை டாக்டர் அம்பேத்கருக்கும் சனா தனவாதி தொகாடியாவுக்கும் என்ன சம்பந்தம்?

டாக்டர் அம்பேத்கரின் மக்களை சூத்திரர்களாக, தீண்டத்தகாதவர்களாக ஆக்கி வர்ணாசிரமம் பேசி அவர்களை சேரிப் பகுதிகளுக்குள் ஒடுக்கி வைத்தது தொகாடியா வகையறாக்கள் தானே... அம்பேத்கரின் மக்கள் மீது தொகாடியா சார்ந்த சமூகம் நிகழ்த்திய வன்கொடுமைகளைத் தாங்காமல் தானே இந்து மதத்தை விட்டு வெளியேறி லட்சக்கணக்கான மக்களை அழைத்துச் சென்று புத்த மதத்தில் சேர்ந்தார் அம்பேத்கர்.

தொகாடியா சார்ந்த இந்துத்துவாவினர் கடந்த ஜனவரி மாதம் அமலாபுரத்தில் அம்பேத்கரின் சிலையை உடைத்தார்களே அப்போது தொகாடியா கண்டனம் தெரிவிக்கவில்லையே!

இப்போது என்ன அம்பேத்கரின் மக்கள் மீது திடீர் பாசம்?

அம்பேத்கரின் மக்களுக்கு தொகாடியாவின் சமூகம் இழைத்து வந்த, இழைத்துக் கொண்டு வருகிற வன்கொடுமைகளையெல்லாம் அம்பேத்கர் சிலைக்கு மாலை போடுவதன் மூலம் அந்த மக்கள் மறந்து விடுவார்கள் என்று தொகாடியா நினைக்கிறார்.

அம்பேத்கர் சிலைக்கு மாலை போடுவது இந்துத்துவாவின் அரசியல் சூழ்ச்சி  தான். சிறுபான்மையினருக்கு எதிரான கலவரங்களின்போது அம்பேத்கரின் மக்களை பயன்படுத்தத் துடிக்கும் தொகாடியாவின் நிஜ முகத்தை அந்த மக்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள். அதனால் தொகாடியாவின் திடீர் பாசம் விஷத்தன்மை வாய்ந்தது என்று அம்பேத்கரின் மக்கள் புரிந்தே வைத்திக்கிறார்கள்.

- ஹிதாயா

தொகாடியாவின் பேச்சை தடை செய்ய வேண்டும்!
தொகாடியாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆலமி ஜம்யிய்யதுல் மஷய்க் என்கிற முஸ்லிம் அறிஞர்களைக் கொண்ட அமைப்பு தொகாடியா பேசுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ஹைதராபாத் காவல் துறையை கேட்டுக் கொண்டுள்ளது.

ஏ.ஜெ.எம். அமைப்பின் தலைமை ஆலோசகரான மவ்லானா சையத் ஷா அஸôர் ஹுசைனி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சமீபத்திய வகுப்புக் கலவரம் காரணமாக ஹைதராபாத் பழைய நகரிலும் கலவர பதட்டம் நிலவி வரும் சூழலில், நகரின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்களை கோபப்படுத்தும் வகையில் பேச தொகாடியா அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

அவரது சமீபத்திய பேச்சு, முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டை ஆட்சேபிக்கும் வகையிலும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரின் இட ஒதுக்கீட்டின் பலனை முஸ்லிம்கள் அனுபவித்து வருகிறார்கள் என்று பொய்யாகக் கூறி தாழ்த்தப்பட்ட - பழங்குடியினரை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டி விடும் வகையிலும் அமைந்திருக்கிறது. தொகாடியா சொல்வதைப்போல முஸ்லிம்களுக்கு மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. பின் தங்கிய சமூகப் பொருளாதார அடிப்படையில்தான் வழங்கப்பட்டிருக்கிறது.

உண்மையில் பார்க்கப்போனால் தாழ்த்தப்பட்ட - பழங்குடியினருக்குத்தான் மத அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியும். தாழ்த்தப்பட்ட - பழங்குடியினர் அனுபவிக்கும் இட ஒதுக்கீடு மற்றும் இதர பயன்களை வேறு மதத்தைச் சேர்ந்த எவரும் பெறமுடிவதில்லை என்பதுதான் யதார்த்த நிலைமை.

பொய்யான தகவல்களுடன் ஆத்திரமூட்டும் வகையில் பேசும் தொகாடியாவின் பேச்சுக்களுக்கு தடை விதிக்க வேண்டும். இல்லையென்றால் அவரது பேச்சுகளால் ஹைதராபாத் நகரில் சமூக நல்லிணக்கம் கெடும் என தெரிவித்திருக்கிறார் சையத் ஷா அஸார் ஹுசைனி.

Source: http://goo.gl/4Qb53

Saturday, 28 April 2012

ராமர் எப்படி ராமேஸ்வரம் சென்றார்?





"சேது சமுத்திர கப்பல் கால்வாய்த் திட்டம் செயல்படுத்தப்படும் ஆறாவது வழித்தடத்தில் ராமர் பாலம் இருப்பதாக இந்துக்கள் நம்புகிறார்கள். அதனால், அந்தப்பகுதியை தேசிய புராதன நினைவுச்சின்னமாக அறிவிக்கவேண்டும். ராமர் பாலத்துக்கு ஆதரவாக உள்ள இந்து மக்களின் உணர்ச்சி வேகத்தால், மத்திய அரசு தெளிவற்ற நிலையில் உள்ளது..." - இப்படிக் கூறியிருப்பவர் சுப்பிரமணியன் சுவாமி. சேது சமுத்திரம் திட்டம் செயல்படுத்தப்படுகிற பகுதியில்தான் ராமர் பாலம் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கும் அதே சுப்பிரமணிய சுவாமி.

சேது சமுத்திரம் திட்டம் இன்றைக்கு மீண்டும் ஒருமுறை விவாதப் பொருளாகி இருக்கிறது. வேண்டும் என்றும், வேண்டாம் என்றும் நாடு முழுக்க குரல்கள் ஓங்கி ஒலிக்கத் துவங்கியிருக்கின்றன. வேண்டும் என்று சொல்பவர்கள் அறிவியலைக் காரணம் காட்டுகிறார்கள். வேண்டாம் என்பவர்கள் ஆன்மீகத்தை துணைக்கு அழைக்கிறார்கள். சுற்றுச்சூழல் மாசுபடும் என்பதை காரணமாக முன்னிறுத்தி, திட்டத்தை எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களின் கருத்துக்கள், கவலைகள் ஏற்றுக் கொள்ளத்தக்கவையே.

ராமர் பாலம் என்று இல்லாத ஒரு வாதத்தை, மக்களின் மத உணர்வுகளை, நம்பிக்கைகளை உசுப்பி விடக்கூடிய ஆன்மீக விஷ(ய)த்தை கையில் எடுத்துக் கொண்டு பிரச்னை செய்வதுதான், ஆபத்தான. அச்சுறுத்தலான விஷயம். சேது சமுத்திரம் திட்டத்தால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கும். கடலியல் சூழல் பாதிக்கும். அங்கு வாழும் கோடிக்கணக்கான கடல் உயிரினங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று காரணங்கள் காட்டினால், மறுப்பின்றி அவற்றை ஏற்றுக் கொள்ளலாம்; தவறில்லை. ஆனால், இந்தத் திட்டத்தை முடக்குவதற்காக ராமரை துணைக்கு அழைப்பதில் எந்த நியாயமும் இல்லை.

நியாயம் இல்லை என்பது மட்டுமல்ல... அவர்கள் விடுவது ‘கப்சா’வாக இருந்தாலும், அதிலும் கூட ஒரு ‘லாஜிக்’ இல்லை. ‘ராமர் பாலத்துக்கு ஆதரவாக இந்துக்கள் உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்’ என்று சுப்பிரமணியன் சுவாமி சொல்லியிருக்கிறார். இந்தக் கட்டுரையை எழுதியிருக்கிற நானும் கூட, கடவுள் நம்பிக்கை உள்ள ஒரு இந்துதான். எனக்குள் அப்படியாக எந்த உணர்ச்சிக் கொந்தளிப்பும் இல்லை... ராமர் மீது சத்தியம். எனக்கு மட்டுமல்ல, என்னைச் சுற்றி இருக்கிற சக இந்து நண்பர்கள், உறவினர்கள் யாருக்கும் ராமர் மீது இருக்கிற அக்கறை, ராமர் பாலத்தின் மீது இல்லை என்பதை உறுதியாகவே இங்கு கூறமுடியும்.

ராமர் பாலத்தின் மீது இந்த அளவுக்கு அக்கறையாக இருப்பவர்கள் யார் என்று பார்த்தால்... அவர் பெயரை உச்சரித்த படியே, இந்த நாட்டில் எக்கச்சக்கமான மதக்கலவரங்களையும், மாபெரும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியவர்கள்தான் கணணுக்குத் தெரிகிறார்கள். உணர்ச்சிக் கொந்தளிப்பு, இந்த மதவாதிகளிடம், அடிப்படைவாதிகளிடம்தான் இருக்கிறதே தவிர, சாமானிய இந்துக்களிடம் இல்லை. அவர்களுக்கு அதற்கெல்லாம் கவலைப்பட நேரமில்லை. ராமர் பாலத்தையும் கடந்து, ஒவ்வொரு நாளிலும் அவர்களுக்கு ஆயிரம் பிரச்னைகள்.

ராமர் பாலம்... ராமர் பாலம் (உண்மையில் அது, ஆதம் பாலம் எனப்படுகிற மணல் திட்டு!) என்று கோஷமிடுபவர்கள், அது ராமர் பாலம் என்பதை (அறிவியல் ரீதியாக முடியாவிட்டாலும் கூட, ஆன்மீக ரீதியிலாவது) நிரூபிக்கவேண்டும். முதலாவதாக, ராமர் பாலம் என்று கருதப்படுகிற, அழைக்கப்படுகிற அந்த மணல் திட்டு, நிஜத்தில் ஒரு இயற்கை அமைப்பு. இரு பெரிய நீர்பரப்புகளை இணைக்கிற ஒரு குறுகிய நிலப்பரப்பு அது. இதுபோன்ற இயற்கை அமைப்புகளுக்கு ‘இஸ்த்மஸ் (isthmus)’ என அறிவியல் பெயர் உண்டு.

சில இடங்களில் இவை கடல் மட்டத்துக்கு மேலாக இருக்கும். இங்கே அது கடலில் மூழ்கி இருக்கிறது. ‘இஸ்த்மஸ்’ அமைப்பை ஒட்டி மணல் படிவதன் காரணமாக, அந்தப்பகுதியில் ஆழம் சற்றுக் குறைவாக இருக்கிறது. உலகின் பல கடற்பகுதிகளில் இப்படியான ‘இஸ்த்மஸ்’ இணைப்பு உண்டு. வட, தென் அமெரிக்க இடையே இப்படிப்பட்ட ‘இஸ்த்மஸ்’ இணைப்பை வெட்டித்தான் பனாமா கால்வாய் உருவாக்கப்பட்டது. உலகில் இன்னும் பல, பல இடங்களில் இப்படி இயற்கை மணல் திட்டுக்களை வெட்டி, வழித்தடங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

ராமர் பால கோஷ்டிகளுக்கு முதலில் ஒரு கேள்வி. சீதையை மீட்டெடுப்பதற்காக, ராமேஸ்வரத்தில் இருந்து ராமரும், லட்சுமணரும், இன்னபிற வானர சேனைகளும், இலங்கைக்கு பயணப்படுவதற்காக அமைக்கப்பட்டதுதான், இந்த ராமர் பாலம் என்பது உங்கள் வாதம். ரொம்பச் சரி. முதலில், ராமரும், அவரது சகோதரர் லட்சுமணனும், வானர சேனைகளும் ராமேஸ்வரத்தை அடைந்தது எப்படி? அதை விளக்குவீர்களா?


ராமேஸ்வரம் பற்றி முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். ராமேஸ்வரம் என்பது ஒரு தீவுப்பகுதி. சகலபுறங்களும் கடலால் சூழப்பட்ட தீவுப்பகுதி. மதுரையில் இருந்து ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரம் செல்பவர்கள் கவனித்திருக்கலாம். மண்டபம் பகுதியில் இருந்து 2 கிலோ மீட்டரைக் கடந்தால், கடல் வந்து விடும். அந்தக் கடலை கடக்க ரயில் பாலமும், அடுத்ததாக பஸ் பாலமும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தக்கரையில் இருந்து அந்தக்கரை வரை கடலின் நீளம் 2.7 கிலோ மீட்டர். கடலின் நடுப்பகுதி ஆழமானது. சிறிய ரக கப்பல்கள் இன்றும் கூட இந்தக் கடல்பகுதியை கடந்து சென்றும், வந்தும் கொண்டிருக்கின்றன என்பதில் இருந்து இது ஆழ்கடல் என்பதை அறிந்து கொள்ளமுடியும்.

இப்போது விஷயத்துக்கு வருவோம். ராமர் அண்ட் கோ இலங்கைக்கு போனது அப்புறம். முதலில் படை, பரிவாரங்களுடன் அவர் எப்படி ராமேஸ்வரம் போனார்? குறிப்பாக, அந்த 2.7 கிலோ மீட்டர் நீளமுடைய கடல் பகுதியை அவர் கடந்தது எப்படி? அவருடன் சென்றவை பெரும்பாலும் வானரசேனைகளே என்றாலும், ஏறக்குறைய 3 கிலோ மீட்டர் நீளமுடைய அந்த கடலை அத்தனை வானரங்களும் ஒன்றன் பின் ஒன்றாக தாவிக் குதித்து கடப்பதெல்லாம் கஷ்டம். கார்ட்டூன் படம் எடுத்தாலும் கூட இவ்வளவு பெரிய ‘லாங் ஜம்ப்’ சாத்தியமில்லாத விஷயம். வானரங்களே கடக்க கஷ்டபடுகின்றன என்றால், ராமர், லட்சுமணன் போன்ற ராஜகுமாரர்களுக்கு அது ரொம்பவும் கஷ்டம்.

ஆகவே, அந்த கடற்பரப்பை கடந்து அவர்கள் ராமேஸ்வரம் சென்றடைந்திருக்கவேண்டுமானால், நிச்சயமாக இப்போது பாம்பன் பாலம் இருக்கிற இடத்திலும் அவர்கள் ஒரு பாலம் அமைத்திருக்கவேண்டும். இல்லையா? பாலம் அமைந்திருந்தால் மட்டுமே கடலைக் கடந்து ராமேஸ்வரம் அடைந்திருக்க முடியும். ஆக, ராமர் முதன்முதலாக இந்தக் கடல் பகுதியில்தான் பாலத்தைக் கட்டியிருக்கவேண்டும். பாம்பன் பாலத்தில் ரயிலில் நீங்கள் செல்லும் போது கடலை கவனித்திருந்தால், இதற்குச் சாட்சியாக இன்னும் ஒரு விஷயம் கூட புரிந்து கொள்ளமுடியும்.

இந்தக் கடல் பகுதியில், மிதக்கிற கற்களை (Floating stones) இப்போதும் நிறையப் பார்க்கமுடியும். இந்த மிதக்கும் கற்களைத்தான், பாலம் கட்ட ராமர் பயன்படுத்தியதாக சுப்ரமணியன்சுவாமிகள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். பாலம் கட்டியதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால், கையைப் பிடித்து அழைத்துப் போய், இந்தக் கற்களைத்தான் காட்டுகிறார்கள். உண்மையில் இந்த மிதக்கிற கற்கள், பாலம் கட்டுகிற / கட்டப் பயன்படுத்திய கற்கள் அல்ல. இது பவளப்பாறை (Coral Reefs) வகையைச் சேர்ந்தவை. அவ்வளவே. இந்தியாவில், மன்னார் வளைகுடா பகுதி தவிர அந்தமான், லட்சத்தீவுகள் பகுதியில் இவை எக்கச்சக்கமாய் இருக்கின்றன. பசுபிக் பெருங்கடல் பகுதியிலும் இவை உண்டு.

சரி, அந்த ஆய்வு இப்போது வேண்டாம். பாம்பன் பகுதியில் ராமர் ஒரு பாலத்தை கட்டினார். ராமேஸ்வரத்தை அடைந்தார். ஏற்கனவே பாம்பனில் பாலம் கட்டிய அனுபவம் கைகொடுக்க, மீண்டும் ஒரு மெகா பாலத்தை சிங்களத் தீவுக்கு அவர்கள் அமைத்திருக்கவேண்டும். கண்ணில் படுகிற சாட்சியாக, பாம்பன் பகுதியிலேயே ராமர் பாலம் இருக்க; அதையெல்லாம் புறந்தள்ளி விட்டு, ஆள் நடமாட்டமில்லாத, அவ்வளவு சுலபத்தில் யாரும் சென்று வர முடியாத, ஆழ்கடல் பகுதியில் ராமர் பாலம் இருப்பதாகவும், அதை தேசிய புராதன சின்னமாக அறிவிக்கவேண்டும் என்றும், இந்துக்கள் அங்கு சென்று பூஜைகள், புண்ணியங்கள செய்யவேண்டும் என்றும் கூறுவதும் எந்த விதத்தில் நியாயமாக இருக்கும்?

இவ்வளவு உறுதியான ஆதாரங்கள் இருக்கையில், சுப்பிரமணியன் சுவாமி மற்றும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்துமத உணர்வாளர்கள், பாம்பன் பாலம் அமைந்திருக்கும் தற்போதைய கடல் பகுதியை ஏன் ராமர் பாலம் என்று அறிவிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடத்தக் கூடாது? பழகிய விஷயம் என்பதால், உச்சநீதிமன்றத்திலும் கூட வழக்குத் தொடரலாமே? நிலப்பரப்பில் இருந்து பல மைல் தூரம் கடந்து சென்று, நடுக்கடலில் உள்ள ஒரு ராமர் பாலத்தை இந்துக்கள் எப்படி தரிசனம் செய்யமுடியும்? அங்கு பூஜை, புனஸ்காரங்கள் செய்யமுடியும்? படகு பிடித்து மட்டுமே போகமுடியும். அதுவும், நேரம் சரியில்லை என்றால், இலங்கை கடற்படை காரர்கள் வந்து சுட்டுத் தள்ளி, ஒரேடியாக ராமரிடம் அனுப்பி விடும் ஆபத்தும் இருக்கிறது.

சுப்பிரமணியன் சுவாமியும், அத்வானியும், சுஷ்மா சுவராஜூம் வேண்டுமானால், இந்திய கடற்படை உதவியுடன், அவர்கள் குறிப்பிடுகிற ராமர் பாலத்தை தரிசித்து வரமுடியுமே தவிர... பிற எந்த இந்துவுக்கும் அது சாத்தியப்படுகிற விஷயமே அல்ல. ஆகவே, வீண் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு, அனைத்து இந்து பெருமக்களுக்கும் பயன்படுகிறது போல, இப்போது பாம்பன் பாலம் இருக்கிற பகுதியை ராமர் பாலமாக அறிவித்து, அதை தேசிய புராதனச் சின்னமாக்க கோரி போராட்டத்தை மாற்றிக் கொள்ளலாம். அப்படி மட்டும் அறிவிக்கப்பட்டால், பக்தர்கள் பாம்பனிலேயே இறங்கி, ராமர் பாலத்தை பார்த்து மகிழ்வதுடன், பூஜை, வழிபாடுகளும் நடத்திக் கொள்ளமுடியும். இன்னும் அதிகளவு சுற்றுலாப் பயணிகளும் வருவார்கள். தமிழகத்துக்கு வருவாயும் பெருகும். யோசிப்பாரா சுப்பிரமணியன் சுவாமி?

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார்
Source: http://goo.gl/mqfzr 

Friday, 27 April 2012

மாதாந்திர மின் கட்டண வசூல் முறை...

குமரகுருபரன் - தணிக்கை அலுவலர், (பணி நிறைவு)
மதுரையிலிருந்து எழுதுவது:

மின் வாரியத்தில், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் பயன்பாடு அளவு கணக்கெடுப்பும், மின் கட்டண வசூலும், கடந்த பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளன.

மேலும், இன்றைய கால கட்டத்தில், மின் கட்டண வசூலுக்கு, கணினி பயன்பாடு வந்துவிட்டதால், இரு மாதங்களுக்கு ஒருமுறை, மின் பயன்பாடு அளவு கணக்கெடுப்பும், கணக்கெடுத்த தேதியில் இருந்து, 20 நாட்களுக்குள் மின் கட்டண வசூலும், நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன.
இப்போது, ஏப்ரல் 1ம் தேதி முதல், வீட்டு உபயோகப் பயனீட்டாளர்களுக்கு, மூன்று விதமான கட்டண முறை உள்ளது.
இரு மாதங்களுக்கு:
1 முதல் - 100 யூனிட் வரை: 1.00 ரூபாய்
101 முதல் - 200 யூனிட் வரை: 1.50 ரூபாய்
1 முதல் - 200 யூனிட் வரை: 2.00 ரூபாய்
201 முதல் - 500 யூனிட் வரை: 3.00 ரூபாய் 

1 முதல் - 200 யூனிட் வரை: 3.00 ரூபாய்
201 முதல் - 500 யூனிட் வரை: 4.00 ரூபாய்
501 முதல்: 5.75 ரூபாய்

வீட்டு உபயோக மின் பயன்பாடு அளவு, சரியாக இரு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிடப்பட வேண்டும். 

உதாரணத்துக்கு, ஏப்ரல் 1ம் தேதி கணக்கெடுத்தால், அடுத்த கணக்கெடுப்பு, ஜூன் 1ம் தேதி இருக்கவேண்டும். ஆனால், ஜூன் 2 அல்லது 3ல் கணக்கெடுத்தால், யூனிட் அதிகமாகி, முதல் ஸ்லாப்பில் செலுத்த வேண்டியவர்கள், இரண்டாம் ஸ்லாப்பிலும்; இரண்டாவது ஸ்லாப்பில் செலுத்த வேண்டியவர்கள், மூன்றாவது ஸ்லாப்பிலும் மின் கட்டணம் செலுத்த வேண்டிவரும்.

உதாரணம்:
* சரியாக இரு மாதத்தில் கணக்கெடுத்தால், 200 யூனிட்.
* ஒன்று அல்லது இரண்டு நாட்கள் தள்ளி கணக்கெடுத்தால், 205 யூனிட்.
* 5 யூனிட் அதிகமானதால், இரண்டாவது ஸ்லாப்பில் மொத்த யூனிட்டிற்கு மின் கட்டணம் செலுத்த வேண்டிவரும்.
* சரியாக, இரு மாதத்தில் கணக்கெடுத்தால், 500 யூனிட் .
* ஒன்று அல்லது இரண்டு நாட்கள் தள்ளி கணக்கெடுக்கும் போது 505 யூனிட். 5 யூனிட் அதிகமானதால், மூன்றாவது ஸ்லாப்பில், மொத்த யூனிட்டிற்கும் மின் கட்டணம் செலுத்த வேண்டிவரும்.

வீட்டு உபயோக மின் பயனீட்டாளர்கள் சுமையை, ஓரளவிற்கு குறைக்கும் வண்ணம், சரியாக இரு மாதங்களுக்கு ஒருமுறை, தேதி மாறாமல், மின் பயன்பாடு அளவு கணக்கெடுக்க, மின் வாரியம் ஒத்துழைக்க வேண்டுகிறோம்.

                                            ----------------------------------------
சகோதரர் Moosa mdn அனுப்பிய e mail செய்தி, இங்கு பகிரப்பட்டுள்ளது.
                                            ----------------------------------------

Thursday, 12 April 2012

திருமணத்தை தள்ளி போடும் பெண்கள்!!



'மணல் கயிறு’ திரைப்படத்தில் Hero S. V. சேகர், தனக்கு வரப்போகிற மனைவி இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று பத்து வித  Conditions போடுவார்!!!!


ஆம்! திருமண Market -டில் பையன்களால் Conditions போடும் காலமெல்லாம் இன்று மலையேறிவிட்டது. இது தலைகீழாக மாறி, இப்போது பெண்கள்தான், திருமண Market -டில்,  தனக்கு வரும் 'மாப்பிள்ளை இப்படி இருக்க வேண்டும்; அப்படி இருந்தால் நல்லது' என ஆயிரத்தெட்டு Conditions போடுகிறார்கள்!

உதாரணமாக, நானே (கோபாலகிருஷ்ணன்) சென்னையில் ஒரு Marriage Matching Center நடத்தி வருகிறேன்.

எங்களது Marriage Center -ரில் இதை ஆரம்பித்த 14 வருடங்களாக பெற்றோர்களை நேராக வரச்சொல்லி  பதிவு செய்யும் முறையை ரொம்பவும் Strict -டாக வைத்திருக்கிறேன். சமயங்களில் பெண்களையும், பையன்களையும் Office -க்கு நேரில்  வரச் சொல்லி பேசிப்பார்ப்பேன். 

பெண்கள் - பையன்களுக்கு அன்றைக்கிருந்த மனநிலைக்கும், தற்போது இருக்கும் மனநிலைக்கும்தான் எத்தனை வேறுபாடுகள் தெரியுமா? ...

உதாரணமாக, சமீபத்தில் தன் பெண்ணுக்கு வரன் தேடி, Register செய்ய வந்த பெண்ணின் தாயார் சொன்னது இது...

‘‘போன மாசம் எங்க பெண்ணுக்கு ஒரு இடம் பார்த்து நிச்சயம் பண்ணினோம். நாலு மாசம் கழிச்சு கல்யாண தேதி குறிச்சிருந்தோம். Phone -லே பேசிக்கிட்டதிலே அந்தப் பையன் பேச்சு எங்க பொண்ணுக்கு பிடிக்காம போச்சு! இந்தக் கல்யாணமே வேண்டாம்னுட்டா; நாங்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் முடியாமத்தான் மறுபடி Register செய்ய வந்தோம்’’ என்றார்கள் அந்தப் பெற்றோர்.

‘‘அந்தப் பையன் அப்படி என்னதான் பேசினாராம்!’’

‘‘வேறொண்ணுமில்லை. வீட்டிலே Cook இருக்கான்னு எங்க பொண்ணு கேட்டிருக்கா. அதுக்கு அந்தப் பையன் Cook இருக்கு; ஆனா அவ Leave போட்டா நீ ஏதாவது செய்யறாப்லே இருக்கும்’னு சொல்லி இருக்கான். அது எங்க பொண்ணுக்குப் பிடிக்கலே. 'Cook, Leave போட்டா அவன் அம்மா பார்த்துக்குவாங்க’ன்னு சொல்ல வேண்டியதுதானே! .... நான் செய்யணும்னு ஏன் எதிர்பார்க்கறான்? இன்ன Company -யிலே வேலை பார்த்து இவ்வளவு ஆயிரம் சம்பாதிக்கிறேன். எங்கிட்டேயே இவ்வளவு பேசறான்(!); சமைக்கணும், Coffee போடணும்னா பேசாம கிராமத்திலே போய் படிக்காத பெண்ணைப் பார்க்க வேண்டியதுதானே’ன்னு கேட்கறா. அவ சொல்றது எங்களுக்கும் நியாயமா(!) படுது’’ என்று தன் பெண்ணின் மனநிலை தெரிந்தும் விட்டுக் கொடுக்காமல் பேசினார் அந்த அம்மா!

அடுத்து File பார்க்க வந்த பெண்ணுக்கு வயது 32 இருக்கும். ‘‘நீங்க கொடுத்த அந்தப் பையன் ஜாதகம் பொருந்தி வந்ததுன்னு அப்பா சொன்னார். அதோட, அந்தப் பையனோட Cell Number கொடுத்தார். பேசிப்பார்த்தேன். ஆனா சரிப்பட்டு வரமாட்டான்னு தோணுது. (மாட்டார் என்பதெல்லாம் இப்போது இல்லை) நேத்து நான் Movie போனேன்னு அவன்கிட்டே சொன்னேன். ‘யார்கூட போனே?’ன்னு கேட்டான். இந்த மாதிரி கேட்கக்கூடாதுங்கிற Manners கூடத் தெரியலே! I want my space. எனக்கு ரொம்ப Broad minded பையன்தான் ஒத்து வருவான்!’’ என்று வேகமாகப் பேசினாள் அந்தப் பெண்.

இது மட்டுமல்ல... இதுபோல் எத்தனையோ விதமான Dialog -களை நான் கேட்டு வருகிறேன்.

‘‘எனக்கு Life -லேயே பிடிக்காத வார்த்தை Compromise. நான் எதுக்காக Compromise பண்ணிக்கணும். அப்படி ஒரு Life எனக்குத் தேவையே இல்லை’’ என்றாள் ஒரு பெண். அவளும் 30 வயதை நெருங்குகிறாள்....

ஒரு பெற்றோரே வந்து சொன்ன விஷயம் இது.... ‘‘எங்க பொண்ணு Adjustable type இல்லே. அதை இப்பவே சொல்லிடறோம். அதனால Parents இல்லாத இடமா.... ஏதாவது ...இருக்கான்னு பாருங்க.... அல்லது.... வெளியூரிலே பையனின் குடும்பம் இருந்து அவன் மட்டும் இங்கே வேலைபார்க்கற மாதிரி இருக்கா?’’ என்றார்கள்...
 
இன்னொரு பெற்றோர் ரொம்பத் தெளிவாகச் சொன்னார்கள்... ‘‘எங்க பொண்ணு சமைப்பாள்னு எதிர்பார்க்க வேண்டாம். அவளுக்கு Coffee கூட கலக்கத் தெரியாது.’’ இதைச் சொல்லிடுங்க முதல்ல! என்றார்கள்.

‘‘எங்க பொண்ணு Mood வந்தா நல்லாவே Cook பண்ணுவா. அவளுக்கு சமைக்கத் தெரியும். ஆனா சமைக்கப் பிடிக்காது’’ என்று சொல்லும் பெற்றோர்...

‘‘எங்க பொண்ணு ரொம்பவே Independent. அவளை யாராவது ஏதாவது கேள்வி கேட்டாலே பிடிக்காது’’ என்று சொல்லும் பெற்றோர்....

‘‘எங்க பொண்ணுக்கு கடவுள் நம்பிக்கை சுத்தமா கிடையாது. இதை பையன் வீட்டிலே சொல்லிடுங்க. அவங்க விளக்கு... கிளக்கு ஏத்தச் சொல்லப் போறாங்க. அப்புறம் Mood Out ஆயிடுவா’’ என்று தகவல் தரும் பெற்றோர்...

இதையெல்லாம் பார்க்கும்போது திருமணத்தைப் பொறுத்தவரை இன்றைய இளம் பெண்களின் சிந்தனை எவ்வளவு மாறிப்போயிருக்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது.

வரனுக்காக Register செய்துவிட்டுப் போனால்கூட, பையன் வீட்டினர்தான் திரும்ப Phone அடித்துக் கூப்பிட்டு ‘வரன் ஏதாவது வந்திருக்கா? என்று பொறுப்பாக கேட்கிறார்கள். பெண் வீட்டினருக்கு நானே போன் போட்டு பேசினால்கூட 'பொண்ணு Friday தான் வருவா... Sunday தான் பேசணும்... சும்மா பேசினா Mood Out ஆயிடுவா... அப்புறம் இந்த Week End பூராவும் Waste -ஆகப் போயிடும்' என்பார்கள்.

இன்னும் சிலர் ‘‘நீங்களே என் பொண்ணுகிட்டே பேசி அவ Mind -ல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்குங்களேன்...!’’ என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

இன்று திருமணம் குறித்த பெண்களின் எதிர்பார்ப்பு Total -லாக மாறிவிட்டது...

‘இவர்தான் இனி நம் வாழ்க்கை... என் சந்தோஷமோ துக்கமோ இவர்கூடத்தான்!...’ என்று தன் வருங்காலத் துணையை தன் ‘பாதுகாப்பாக’ நினைக்கும் மனோபாவம் முற்றிலுமாகப் போய்விட்டது.

இன்று, "Life -ல எனக்குன்னு ஒரு Security ஏற்படுத்திட்டுதான் கல்யாணத்துக்கு O. K.  சொல்வேன்!’’ என்று சொல்கிறார்கள் பெண்கள்.

பெரும்பாலான பெண்கள் திருமணத்தைத் தள்ளிப்போடச் சொல்லும் காரணமே, இந்த Security தான். ‘‘ஒரு Plot Book பண்ணிட்டேன்... அதுக்கான Commitments  கொஞ்சம் இருக்கு... என்ன இருந்தாலும் எனக்குன்னு ஒரு Security  வேணுமே!...’’ என்கிறார்கள். 

தவிர, பல பெண்கள் இப்போது வேலை, Project என்று வெளியூர், வெளிநாடுகளுக்கு போய்விட்டு வருவது சகஜமாகி விட்டது. அங்குள்ள வாழ்க்கை, வசதி, சுதந்திர மனப்பான்மை இவற்றை அப்படியே பிடித்துக்கொண்டு நம் கலாச்சாரத்திலும் அதை அப்படியே எதிர்பார்க்கிறார்கள்... தன்னை யாரும் பேச்சில்கூட கட்டுப்படுத்தக்கூடாது என்றும் நினைக்கிறார்கள்.

உதாரணமாக சினிமாவுக்கு யாரோட போனே? என்று கேட்ட பையனை நிராகரித்த பெண்!...
சொல்லப் போனால் இப்போதெல்லாம் பெண்ணைப் பெற்ற (ஒரு சில) பெற்றோரின் மனப்பான்மைகூட மாறி விட்டது... ‘ஐயோ... பொண்ணுக்கு இருபத்தி ஐந்தாச்சே... கல்யாணம் பண்ணிக் கொடுக்கணுமே!’ என்று பெற்றோர் கவலைப்பட்ட காலம் போய், இப்போது 29, 30 ஆனாலும்கூட வற்புறுத்த மாட்டேன் என்கிறார்கள். சிலர் இன்னும் ஓரிரு வருடங்கள் பெண் இருந்தால் வீட்டு Commitments எல்லாம் முடித்துவிட்டு நாமும் கொஞ்சம் வாழ்க்கையை Enjoy பண்ணலாம்!’’ என்று பேசாமல் இருந்து விடுகிறார்கள். அனைவரையும் சொல்லவில்லை... ஒருசில பெற்றோர்கள் தான்!...
 
இன்றைய பெண்களிடம் ‘ஒரு வெற்றிகரமான திருமணமாக, இது நிச்சயம், அமையும்!’ என்ற நம்பிக்கை இல்லை. 

நல்ல படிப்பு, நல்ல நிறுவனத்தில் வேலை, சுறுசுறுப்பான பையன் இதுபோன்ற அஸ்திவாரங்கள் நன்றாக இருக்கிறது. என் எதிர்கால மணவாழ்க்கை 40, 50 வயதுகளிலும் சிறப்பாகவே இருக்கும் என்று நினைக்காமல் Height 2 Inches கூடுதலாக எதிர்பார்க்கிறேன். கலர் கொஞ்சம் பத்தாது’ என்று, தான் எடுக்கப்போகும் திரைப்படத்திற்கு ஹீரோ செலக்ட் பண்ணும் பாணியில், கணவரை செலக்ட் பண்ணுவது.
தனக்கு வரப் போகும் கணவர், நல்ல படிப்பு படித்து, வேலையில் இருக்கிறார், நல்ல ஒழுக்கத்துடன் வளர்க்கப்பட்டிருக்கிறார் என்றால் அதற்கு அவரது பெற்றோர்களின் பொறுமை, தியாகம், அன்பு போன்ற இவைகளே காரணம் என்கிற அடிப்படை உண்மையை மறந்துவிட்ட மாதிரியாய், ‘Parents கூட இருந்தா சரியா வராது’ என்று பேசுவது.
இவ்வாறெல்லாம் சிந்தித்து வயசு கூடிக் கொண்டே போய் திருமணம் முடிப்பதால் இவர்கள் வாழ்க்கையில் இழப்பது என்னென்ன தெரியுமா?

பெற்றோருக்கும் வயது ஏறிக்கொண்டே போவதால் அவர்களுக்கும் 70 வயதுக்கு மேல் ஆகி உடல் நலக்குறைவால் அவதிப்படுவது. வயது காலத்தில் பெற்றோர் ஆதரவில் சீரும் சிறப்புமாக நடக்க வேண்டிய திருமணத்தை பெற்றோரின் வயோதிகம் அல்லது இழப்பு காரணமாய் தானே நடத்திக் கொள்ள வேண்டிய நிலை.
கருத்தரிக்க வேண்டிய வயது தாண்டி விடுவதால் ஒரு குழந்தையை கண்ணால் பார்க்க கருத்தரிப்பு மையம், மருத்துவர், மருத்துவப் பரிசோதனை என்று அலைச்சலுக்கு அலைச்சல், மன உளைச்சல், செலவுக்கு செலவு போன்ற துன்பங்களுக்கு ஆளாதல்.
பெண்ணை படிக்க வைத்து, ஆளாக்கி நிம்மதிப் பெருமூச்சு விட வேண்டிய நேரத்திலிருக்கும் 60+ வயது பெற்றோர்கள், மகளின் திருமணத் தடையால் ஒருவித குற்ற உணர்விற்கு ஆளானதுப் போல, உறவினர் நண்பர்கள் மத்தியில் ஒதுங்கி, தனிமைப்பட்டு மன உளைச்சல் போன்ற பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். இதனால் பெற்றோரின் சந்தோஷ, நிம்மதியான வயோதிக வாழ்க்கையை, இந்தப் பெண்கள், அனுபவித்துப் பார்க்கும் வாய்ப்பையே  இழக்கிறார்கள்.
முதலில் தன்னை முழுமையாக நம்பி, தன் மீது நம்பிக்கை வைத்த குடும்பத்தையும், கணவரையும் நம்பி, தெய்வ பலம் துணை நிற்கும் என்று உறுதியாக நினைத்து 20 - 24 வயதுகளில் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் நிச்சயமாக வெற்றிகரமான மணவாழ்க்கையை பெறுவார்கள்  என்பதில் சந்தேகமில்லை!
நன்றி: தமிழ் தாயகம் ...பதிந்தவர்: GOPALAKRISHNAN 

Saturday, 7 April 2012

ஒரு பார்வை - நகை மதிப்பீட்டு கட்டணம்

அபார வசூல்! 
கே. கலியபெருமாள், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் (பணி நிறைவு), பரங்கிப்பேட்டையிலிருந்து எழுதுகிறார்: 

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், அவசரத் தேவைக்கு நகைக் கடன் வேண்டி அணுகினால், நகை மதிப்பீட்டாளர் கட்டணமாக 1,000 ரூபாய்க்கு, மூன்று ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கினால், 300 ரூபாய் மதிப்பீட்டாளர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது, ராஜஸ்தானிலிருந்து இங்கு வந்து தொழில் செய்யும் சேட்டுகள் வாங்கும் கந்து வட்டியை விட அதிகம்!

வங்கிகளில் வாங்கினால், சலுகை கிடைக்குமென நினைப்பது தவறு. நாள் ஒன்றுக்கு, ஒரு வங்கியில், ஐந்து லட்ச ரூபாய் நகைக்கடன் தரப்படுகிறது எனில், மதிப்பீட்டாளர் கட்டணம் 1,500 ரூபாய் ஆகிறது.

மாதம் 25 வேலை நாட்கள் என வைத்துக் கொண்டால், இவர்களின் வருமானம், 37 ஆயிரத்து 500 ரூபாய். கிட்டத்தட்ட வங்கி மேனேஜரின் ஊதிய அளவிற்கு வருகிறது. 

இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது, ஏழை - எளிய மக்களும், விவசாயிகளும் தான். 

ஆண்டுதோறும் கூட்டுறவு சங்கத்துறை மூலமாக, நகை மதிப்பீட்டாளர் பயிற்சி அளிக்கப்படுகிறது. அவ்வாறான பட்டயப் படிப்பு பெற்ற நபர்களை, வங்கி மூலம் நியமித்தால், மாத ஊதியம், 10 ஆயிரம் ரூபாய்க்குள் வரும். 
அதை வாடிக்கையாளரிடம் பிடித்தம் செய்து கொள்ளலாம்.
  
படித்துவிட்டு, வேலையில்லாமல் இருப்போருக்கு உதவி செய்தது போலவும் இருக்கும். எனவே, பொதுமக்கள் நலன் கருதி, பொதுத்துறை வங்கிகள், தகுந்த நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.
----------------------------------------
சகோதரர் Moosa mdn அனுப்பிய e mail செய்தி, இங்கு பகிரப்பட்டுள்ளது.
----------------------------------------
 

Saturday, 31 March 2012

மாட்டுக்கறி அரசியல்! (அப்டி போடு!!)




d.n.jhaதிவிஜேந்திர நாராயண ஜா இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவின் வரலாற்றை ஆராய்ந்து வரும் வரலாற்றறிஞர்; இந்துத்துவத் தொன்மங்கள் பலவற்றைத் தக்க சான்றுகளுடன் தவறென நிறுவி வருபவர்; இந்துத்துவாவின் பரப்புரைகளுள் பல தவறானவை என்பதை இந்திய இலக்கியங்கள், கல்வெட்டுகள் ஆகியவற்றின் அடிப்படையில் எடுத்துக் கூறி வருபவர். “புனிதப் பசுவின் புராணம்” (‘The myth of the holy cow’) என்னும் தம்முடைய நூலில் இந்திய உணவு முறைகளில் மாட்டிறைச்சி இருப்பதை எடுத்துக்காட்டியிருப்பவர். பழைய இந்தியாவின் பண்பாடு பற்றியும் இடைக்கால இந்தியாவின் நிலப்பிரபுத்துவ அமைப்புப் பற்றியும் தம்முடைய வழிகாட்டியும் வரலாற்றறிஞருமாகிய ஆர். எசு.சருமாவைப் போலவே நிறைய பணியாற்றியிருப்பவர்.

மத்தியப் பிரதேச அரசு பசு வதை தடுப்புக்காகச் சட்டத்தைத் திருத்த முடிவு செய்திருக்கிறது. அரசின் இம்முடிவு அறிஞர்கள் பலரால் “கொடுமையானது” என எதிர்த்து உரைக்கப்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில் ‘பசுவின் புனிதத்தன்மை’ பற்றிய தொன்மங்கள் பற்றியும் அத்தொன்மங்களைச் ‘சங்கப் பரிவாரங்கள்’ நாட்டைத் துண்டாட எப்படிப் பயன்படுத்துகின்றன என்பதைப் பற்றியும் தி.நா. ஜாவிடம் நேர்கண்டோம். இனி அவருடைய நேர்காணலில் இருந்து சில பகுதிகளைப் பார்ப்போம்.
இந்தியத் துணைக்கண்டத்தில் மாட்டிறைச்சி தின்பதை இசுலாமியர்கள் தாம் அறிமுகப்படுத்தினார்கள் என்னும் பரவலான நம்பிக்கையைப் “புனிதப் பசுவின் புராணம்” என்னும் உங்களுடைய புத்தகம் மறுக்கிறது. அம்மறுப்பிற்கு என்னென்ன தரவுகளைச் சான்றுகளாக வைத்திருக்கிறீர்கள்?
‘இசுலாமியர்கள் மாட்டிறைச்சியைத் தின்பவர்கள்; எனவே அவர்கள் தாம் பசுக்களைக் கொன்று அவற்றின் இறைச்சியைத் தின்பதை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியவர்கள்’ என்று இங்குள்ள இந்துத்துவா அமைப்புகள் தொடர்ச்சியாக மக்களை மூளைச்சலவை செய்திருக்கின்றன. இக்கருத்தியலை இந்திய மதங்கள் சார்ந்த நூல்களில் இருந்து சரியான தரவுகளைக் காட்டுவதன் மூலம் மிக எளிதாக உடைத்து விடலாம். அந்நூல்கள் எல்லாம் இந்தியாவில் பழங்காலம் தொட்டே மாட்டிறைச்சி தின்னப்படுவதைக் கூறுகின்றன. இசுலாம் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பே இங்கு மாட்டிறைச்சி தின்னும் வழக்கம் இருந்திருக்கிறது என்பதை பிராமணிய, புத்த, சமண நூல்களில் இருந்து சான்றுகள் காட்டி நான் நிறுவியிருக்கிறேன்.
பழங்காலத்திலேயே இந்தியாவில் மாட்டிறைச்சி தின்றார்கள் என்பதற்கும் பசுக்களைப் பலியிட்டார்கள் என்பதற்கும் சில எடுத்துக்காட்டுகள் சொல்ல முடியுமா?
விலங்குகளைப் பலியிடுதல் என்பது வேத காலத்தில் சாதாரணமான ஒன்றாக இருந்திருக்கிறது. பொதுப் பலியிடுதலுக்கு முன் செய்யப்படும் முன்னேற்பாட்டுச் சடங்காகிய ‘அக்கினித் தேயம்’ என்னும் சடங்கில் பசுதான் கொல்லப்பட்டது.
பலியிடுதலில் முதன்மையான ஒன்றாகிய ‘அசுவமேத யாகத்’தில் அறுநூறு விலங்குகளும் பறவைகளும் கொல்லப்படும்; அப்படிக் கொல்லப்பட்ட பின் பலியிடுதலின் நிறைவைக் குறிப்பிடும் வகையில் இருபத்தோரு பசுக்கள் கொல்லப்படும்.
‘இராஜசூய யாகம்’, ‘வாஜபேய யாகம்’ ஆகிய பலியிடுதல் நிகழ்வுகளைப் போல முதன்மையான ஒன்றாகக் கருதப்படும் ‘கொசவ யாகத்’தில் பசு மருட்டர்களுக்குப் பலியிடப்பட்டது. பசு மட்டுமன்று! கன்றுகள் போன்று எல்லா விலங்குகளும் பல யாகங்களில் பலியிடப்பட்டிருக்கின்றன.
வேதக் கருத்துகளிலும் தருமசாத்திரங்களிலும் நுகர்வுக்காகப் பசுக்கள் கொல்லப்பட்டதும் மாட்டிறைச்சி தின்னப்பட்டதும் பல இடங்களில் கூறப்பட்டுள்ளன. ‘பசு விருப்பமான உணவு’ என வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. யக்ஞ வல்கீய முனிவர், பசு இறைச்சியைத் தின்பதை வலியுறுத்துவது வேதங்களில் உள்ளது. விருந்தினர்களை வரவேற்கும் போது பசுக்களைக் கொன்று உணவாகப் படைப்பது பெருமைக்குரிய ஒன்று என வேதங்களும் அவற்றிற்குப் பிந்தைய கருத்துகளும் சொல்கின்றன. இறுதிச் சடங்குகளின் போது பிராமணர்கள் பசுக்களைக் கொன்று தின்றதற்கான பல்வேறு எழுத்துச் சான்றுகள் இருக்கின்றன. நான் சொல்வதெல்லாம் கிடைத்திருக்கும் சான்றுகளுள் சொற்பந் தான்! இவற்றைப் போல ஏராளமான எழுத்துச் சான்றுகளைக் காட்ட முடியும்.
பழங்காலச் சான்றுகளை நிறைய காட்டுகிறீர்கள். பசுவை எப்படிப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது பற்றி இடைக்கால இந்திய இலக்கியங்களிலோ மூலங்களிலோ என்னென்ன இருக்கின்றன?
இடைக்கால மூலங்களிலும் ஏராளமான தரவுகள் இருக்கின்றன. ஆசாரம் மிகுந்த பிராமணர்கள் பசியைப் போக்குவதற்காக காளை இறைச்சியையும் நாய் இறைச்சியையும் தின்றதை மனுஸ்மிருதி கூறுகிறது. படித்த பார்ப்பன‌ரைப் பெரிய காளையைப் படைத்தோ ஆட்டைப் படையலாக்கியோ வரவேற்க வேண்டும் என்று யக்ஞவல்கீய ஸ்மிருதி (கி.மு. 100-300) சொல்கிறது. மகாபாரதத்தில் வரும் கதை மாந்தர்களுள் முக்கால்வாசிப் பேர் அசைவ உணவு தின்பவர்கள் தாம்! இரந்திதேவ அரசரின் அடுக்களையில் மட்டும் ஒவ்வொரு நாளும் இரண்டாயிரம் பசுக்கள் அடித்துக் கொல்லப்பட்டு உணவாக்கப்பட்டன. மற்ற தானியங்களுடன் இந்த இறைச்சியும் பார்ப்பன‌ர்களுக்குக் கொடுக்கப்பட்டன.
கொழுத்த கன்றை அடித்து உணவாக்கி இராமனும்க்குப் பரத்வாஜ முனிவர் படையலாக்கினார் என்று சொல்லப்படுகிறது. மதம் சார்ந்த எழுத்துகள் மட்டுமல்ல! மதச்சார்பற்ற இலக்கியங்களிலும் இப்படிச் சான்றுகள் காட்ட முடியும். இந்திய மருத்துவ முறைகளில் மாட்டிறைச்சி மருந்துக்காகப் பயன்படுத்தப்பட்டது. மாட்டிறைச்சியைத் தின்பது பற்றிக் காளிதாசர், பவபுத்தி, இராஜசேகரர், சிறீஹர்சர் ஆகியோருடைய எழுத்துகளில் இருக்கும் குறிப்புகள் நிறைய சொல்கின்றன.
பசுக்கள் புனிதமானவை என்னும் தொன்மக்கதை எப்படி இங்குள்ள இந்துகளின் மனங்களில் புகுத்தப்பட்டது? கொல்லப்பட்டு தின்னப்பட்டு வந்த பசுக்கள் எப்படிப் புனிதமானவை என்று ஆக்கப்பட்டன? ‘இந்துத்துவா’வின் புனிதக் குறியீடாகப் பசு மாறியது எவ்வாறு?
வேதகாலப் பசுக்கள் புனிதமானவை என்று அறிஞர்கள் சிலர் சொல்லி வந்திருக்கிறார்கள். ‘அக்ஞா’ என்னும் சொல்லுக்குக் ‘கொல்லத்தகாதவை’ என்னும் பொருளை அதர்வண வேதம் கூறுகிறது. வேத காலப் பசு புனிதமானது என்பது எப்போது என்றால் அப்பசு பார்ப்பன‌ருக்குப் பலிக்குரிய தொகையாகக் (‘தட்சணையாக’க்) கொடுக்கப்படும் போது மட்டும் தான்! புத்தமும் சமணமும் விலங்கு வதையை எதிர்க்கின்றன. அவை கூடப் பசுவைப் ‘புனிதமான விலங்கு’ எனச் சொல்லவில்லை.
பசு புனிதமானது என்னும் கருத்தியல் பின்னர் வளர்த்தெடுக்கப்பட்ட ஒன்றுதான்! இந்தியச் சமூகம் நிலப்பிரபுத்துவ முறைக்கு மெல்ல மாறி வரும் சூழலில் ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டுகளுக்குப் பின்னர் தான், சட்டத்தை உருவாக்கியவர்கள் மாட்டிறைச்சி தின்பதை வரவேற்காமல் நிறுத்தத் தொடங்கினார்கள். கலியுகக் காலமாக இதிகாசங்களிலும் தொன்மங்களிலும் கூறப்படும் இக்காலத்தை ஒட்டித்தான் சமூக நடைமுறைகளும் சடங்குகளும் ஏராளமான மாற்றங்களைக் கண்டன. முன் நடந்துகொண்டிருந்த நடைமுறைகள் பலவற்றை ‘கலிவர்ஞா’ என்று கொண்டு வரப்பட்ட நடைமுறை மாற்றியது. அப்படித்தான் பசுவைக் கொல்வதும் தவறெனப் பார்ப்பன‌ எழுத்துகள் பதியத் தொடங்கின.
பசுக்களைக் கொல்வதும் அவற்றின் இறைச்சியைத் தின்பதும் தீண்டப்படாத சாதிகளிடம் பரவலாகக் காணப்படுகின்றன. ஆனால் தரும சாத்திர எழுத்துகள் இப்படித் தின்பதைச் சிறிய குற்றமாகக் கூடக் கூறவில்லை.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் துறவி விவேகானந்தர் அமெரிக்காவில் தங்கியிருந்த போது மாட்டிறைச்சி தின்றார். மாட்டிறைச்சி தின்ன மாட்டோம் என்று கூறும் ஆசாரம் மிகுந்த இந்துக்கள் மருத்துவத்திற்காக மாட்டிறைச்சித் தேநீர் குடிப்பதைக் காந்தியடிகள் பலமுறை கேலி செய்திருக்கிறார்.
இன்றும் கேரளத்தில் எழுபத்திரண்டு சாதிகள் (இவற்றுள் எல்லாச் சாதிகளும் தீண்டப்படாத சாதிகள் அல்ல) ஆட்டிறைச்சியின் விலை அதிகம் என்பதால் மாட்டிறைச்சியைத் தான் தின்கிறார்கள். அச்சாதிகளை எல்லாம் இந்துத்துவா சக்திகள் கடிந்து கொள்ளவில்லை.
வன்மையில்லா முறையை உபநிடதக் கொள்கைகள் வலியுறுத்தியமை, புத்தம், சமணம் ஆகியவற்றின் எழுச்சி, வைணவத்தின் மையக்கருத்து ஆகியன தாம் விலங்குகளைக் கொல்லாமையை உறுதிப்படுத்தின. வேளாண்மைச் சமூகத்தில் பசுக்களின் பொருளியல் மதிப்பு அந்நிலையை முதன்மைப்படுத்தின. பசுக்களைத் தானமாகப் பெற்ற பார்ப்பன‌ர்கள் அதனால் தான் அவற்றைக் கொல்லவில்லை.
பசுவதை என்பது இந்தியாவில் எப்போது அரசியல் கருவி ஆனது? இதற்குப் பின்னால் ஏதாவது வரலாற்றுப் பின்னணி இருக்கிறதா? பசுக்களின் மேல் “உருவாக்கப்பட்ட புனிதத்தன்மை”யை அரசியல் கருவியாகப் பயன்படுத்தியதற்குச் சான்றுகள் தர முடியுமா?
பல்வேறு காலங்களில் ஆண்ட வெவ்வேறு ஆட்சியாளர்களால் தாம் பசு அரசியல் கருவியாக்கப்பட்டது. சமணர்களையும் பார்ப்பன‌ர்களையும் மதிக்கும் பொருட்டு பசுக்களைக் கொல்வதற்கு முகலாயப் பேரரசர்களான பாபர், அக்பர், ஜஹாங்கீர், ஒளரங்கசீபு ஆகியோர் தடை விதித்தனர்.  ‘நாம் இந்துக்கள்; இம்மண்ணின் மைந்தர்களாகிய நாம் பசுக்களைக் கொல்வதோ அதன் வழி பார்ப்பன‌ர்களை ஒடுக்குவதோ கூடாது’ என்று பசுக்களையும் பார்ப்பன‌ர்களையும் காப்பாற்ற வந்த அவதாரமாகக் கருதப்படும் மாமன்னர் சிவாஜி பறைசாற்றியிருக்கிறார்.
‘சிக் குகா’ அல்லது ‘நாம்தாரி’ என்னும் பெயரில் 1870களில் பஞ்சாப்பில் தொடங்கப்பட்ட ‘இந்து பசுப் பாதுகாப்புப் படை’ தான் முதலில் பசுக்களை அரசியல் கருவியாக்கியது; அவர்களுடைய இக்கருத்தியல் பின்னர் தயானந்த சரஸ்வதி அவர்களால் 1882ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘முதல் கோ ரக்கினி சபை’யால் வலுப்படுத்தப்பட்டது. இவ்வமைப்புத் தான் குறிப்பிட்ட பிரிவு மக்களின் சின்னமாகப் பசுவை அடையாளப்படுத்தியது. அதன் பின் மாட்டுக்கறி தின்னும் இசுலாமியர்களைக் கேள்விக்குள்ளாக்கி 1880களிலும் 1890களிலும் கலவரங்களை ஏற்படுத்தினார்கள்.
இவ்வாறு பசுவதை என்பது கடினமானதாக ஆக்கப்பட்டாலும் 1888ஆம் ஆண்டில் வடமேற்கு மாகாண உயர் நீதிமன்றம், ‘பசு புனிதமான பொருள் அன்று’ என்று கொடுத்த தீர்ப்பு அவர்களுடைய வேகத்தை மட்டுப்படுத்தியது. ஆனால் அதன்பின் இந்து – இசுலாமியர் கலவரங்கள் பலவற்றில் பசுவதை என்பது மையப்பொருளானது. 1893ஆம் ஆண்டு ஆசம்கர் மாவட்டத்தில் கலவரம் நடந்தது. அக்கலவரத்தால் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.  1912-13இல் அயோத்தியாவில் கலவரம் மூண்டது. 1917இல் ஷாகாபாத்தில் பெரிய கலவரம் மூண்டது.
விடுதலை இந்தியா துன்பியல் நிகழ்வுகள் பலவற்றைக் கண்டது. பசு வதையைத் தடுக்க வேண்டும் என்று 1966ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள மதவாத அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் சேர்ந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பேரணியைப் பாராளுமன்றம் முன்பு நடத்தின. அப்போது மூண்ட கலவரத்தில் எட்டுப் பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்தனர். காந்தியடிகளின் ஆன்மீக வாரிசாகக் கருதப்படும் ஆச்சாரிய வினோபா பாவே பசுவதையைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி 1979ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினார். இப்படியாகப் பசு அரசியல் கருவியானது. பசு வதையைத் தடுக்க வேண்டும் என்று சொன்ன ஆதிக்க சாதி அமைப்புகள் எவையும் ‘பசுவைக் கொல்லக்கூடாது என்று வேதங்களிலோ பார்ப்பன‌ எழுத்துகளிலோ எந்தக் குறிப்பும் இல்லை’ என்பதையும் ‘காலாகாலமாகப் பசு தின்னப்பட்டு வந்திருக்கிறது’ என்பதையோ காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை.
மாட்டிறைச்சி தின்பது வட இந்தியாவைக் காட்டிலும் தென்னிந்தியாவில் அதிகமாக இருக்கிறது. இதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?
தென்னிந்தியாவின் சில இடங்களில் மாட்டிறைச்சி தின்பது என்பது இயல்பான ஒன்றாக இருக்கிறது. மலை வாழ் மக்கள், தலித்துகள், இசுலாமியர்கள் ஆகியோர் மாட்டிறைச்சி தின்கிறார்கள். வட கிழக்குப் பகுதிகளில் உள்ள மலைவாழ் மக்கள் மாட்டிறைச்சி தின்கிறார்கள். ஆனால் இவை எல்லாம் எல்லோருக்கும் பொருந்தும் என்று சொல்லிவிட முடியாது. எடுத்துக்காட்டாகத் தெற்குப் பீகாரில் உள்ள மலைவாழ் மக்கள் மாட்டிறைச்சி தின்பதில்லை.
மலைவாழ்மக்கள், இசுலாமியர்கள், கிறித்தவர்கள் ஆகியோரை விடுத்துப் பார்த்தாலும் இந்தியாவில் இப்போது இந்துக்களுள் நாற்பது விழுக்காட்டுப் பேர் மாட்டிறைச்சி தின்பதாகப் புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இந்தியா முழுமைக்கும் உள்ள தலித்துகள் மாட்டிறைச்சி தின்கிறார்கள். பொருளியல் அடிப்படையில் அது தான் விலை குறைந்தது. ஆனால் மத்தியப் பிரதேச அரசு பசுவைக் கொல்வதற்கு மட்டுமல்லாமல் தின்பதற்கும் தடை விதித்திருக்கிறது. பலர் இச்சட்டத்தைக் கண்டிருத்திருக்கிறார்கள். நீங்கள் இச்சட்டத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
சட்டப்படி தண்டனை உண்டு என்றால் இந்தியர் எவரும் கால்நடைகளைக் கொல்ல மாட்டார்கள். விலங்குகளின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் தான்! ஆனால் அவற்றுள் பசுவிற்கு மட்டும் ஏன் சிறப்புத் தகுதி என்பது தான் கேள்வியே! பசுக்களைக் காப்பது தான் சங்கப் பரிவாரங்களின் வேலை என்றால், போக்குவரத்திற்கு இடையூறாகச் சாலைகளில் மேய்ந்து கொண்டிருக்கும் பசுக்களை அவர்கள் காக்கவில்லையே ஏன்? பல இடங்களில் பசுக்கள் குப்பைத் தொட்டிகளைச் சுற்றி நின்று கொண்டிருக்கின்றனவே! அவற்றை அவர்கள் கண்டுகொள்ளவில்லையே ஏன்? பாரதிய ஜனதா ஆண்ட மாநிலங்களில் எல்லாம் இந்நிலை மாற்றப்படவே இல்லையே ஏன்?
வயதான, நோய்வாய்ப்பட்ட, உணவுக்கு வழியில்லாத பசுக்களின் இறைச்சியில் இருந்து தான் ஏழைகள் புரதச் சத்தைப் பெறுகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் பசுக்களைக் கொல்லக்கூடாது, தின்னக்கூடாது என்னும் சட்டங்கள் எல்லாம் அவர்களுடைய தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாகத் தான் நான் பார்க்கிறேன். ஜன சங்கத்தின் (இன்றைய பாரதிய ஜனதா) கொள்கை வகுப்பாளராக இருந்த கே.ஆர். மல்கர்னி இயற்கையாக இறந்த பசுக்களின் இறைச்சியைத் தின்னலாம் என்று சொன்னதைச் சங்கப் பரிவாரங்கள் ஏன் மறந்து விட்டன?
பா.ஜ. ஆளும் மாநிலங்களில் இக்கருத்து தீவிரமாக வலியுறுத்தப்படுகிறதே? இப்படிப் பசுவதை தடுப்புச் சட்டம் கொண்டுவருவது இந்தியாவில் எத்தகைய நிலையை உருவாக்கும் என நினைக்கிறீர்கள்? 
சங்கப் பரிவாரங்கள் ஏற்கெனவே அரசியலில் மதத்தைக் கலந்து கொண்டிருக்கின்றன. பசுவதை தடுப்புச் சட்டம் என்பது ஏற்கெனவே எரியும் மதவாத அரசியலில் எண்ணெய் ஊற்றும் செயல் தான்! வேறொன்றுமில்லை.

நன்றி: பிரண்ட்லைன் 2012 பிப்ரவரி 24ஆம் இதழ்
நேர்காணல்: அஜய் ஆசிர்வாத மகாபிரஸ்தா
மொழிபெயர்ப்பு: முத்துக்குட்டி


Friday, 30 March 2012

மின்சாரப் பஞ்சமும் Inverter -களும்!

சமீபத்திய சட்டமன்றத் தேர்தலின்போது, தற்போது முதல்வர் பதவி வகித்து வருகின்ற ஜெயலலிதா சொன்ன வார்த்தைகள்:

“....தற்போது தமிழகத்தில் நிலவி வரும் மின் தட்டுப்பாடு களையப்பட்டு, மின்வெட்டு அறவே ஒழிக்கப்படும். தமிழகம் மின் உற்பத்தியில் மிகை மாநிலமாக திகழும்...”

தமிழக மக்களும் இந்த வார்த்தைகளை நம்பி அ.தி.மு.க கூட்டணியை வலுவாகவே வெற்றிப்பெற செய்தார்கள். இவை எல்லாமே 'அம்மா' வின் 'வழக்கமான' பசப்பு வார்த்தைகள் என்பது பிறகுதான் நிரூபணம் ஆனது! ஆம், தமிழகத்தில் தலை விரித்தாடுகின்ற மின்சாரப்பஞ்சம் வெகுவாகவே மக்களை நிலைகுலைய செய்துள்ளது என்பதை எவரும் மறுக்க மாட்டார்கள்.


இது இப்படி இருக்க, Inverter -கள் என்று அழைக்கப்படும் மின்சார சேமிப்பு கலன்களை தயாரிக்கும் நிறுவனங்களும், அவற்றை விற்கும் வியாபாரிகளும் தற்போது சந்தோஷத்தில் குதியாட்டம் போட்டுக்கொண்டுள்ளார்கள் என்பதே உண்மை!

மாதமொன்றுக்கு சராசரியாக 10 -லிருந்து 15 Inverter -களை மக்கள் தலையில், படாதபாடுபட்டு, கல்லா கட்டிய வியாபாரிகள், தமிழக அரசின்  தற்போதைய 'மின்சாரப்புரட்சி'யினால், நூற்றுக்கணக்கான Inverter -களை அதிரடியாக, வெகு எளிதில் கல்லா கட்டும் நிலையை அடைந்துள்ளார்கள்! என்ன விலை கொடுத்தும், மக்களே தம்தலைகளில், சுமக்க தயாராகி விட்டபோது ..... அம்மக்களுக்காக Inverter குறித்து உபயோகமான சில Tips:
       
பொதுவாக Inverter என்னும் இந்த 'மின்சார சேமிப்பு கலன்', மின்சாரத்தை உள்வாங்கி தன்னுள் தக்கவைத்து தேவைப்படும் பிறிதொரு சமயத்தில் வெளிப்படுத்தும். தானாகவே இயங்கும்  (Automated) வடிவமைப்பை கொண்ட இது, உள்வாங்கிக்கொண்டு இருக்கும் மின்சாரம் தடைபட்டவுடன் இயங்க, அதாவது உள்வாங்கிய மின்சாரத்தை வெளிப்படுத்த, ஆரம்பித்துவிடும். மீண்டும் மின்சாரம் வந்ததும் இதன் இயக்கமும் தானாகவே நின்று விடும். 

இதனை எப்பொழுதும் மின் இணைப்பில் வைத்து இருப்பதால், தன்னிடமுள்ள மின்சக்தியின் அளவு குறையும் பட்சத்தில் தன்னை தானே Recharge செய்துகொண்டு தன் மின்சக்தியின் அளவை சமன் படுத்தியவாறு இருக்கும். ஆக, Inverter அதனுடன் இணைக்கப்பட்ட Battery இவைகளை எப்பொழுதும் மின் இணைப்பில் வைத்து இருப்பது அவசியம். 

Square Wave, Sine Wave என இருவகை Model -களில் Inverter -கள் உள்ளன. இவைகள் 250 Watts மற்றும் 400 Watts  திறன் கொண்டவை. 250 Watts -ஐ உபயோகித்தால் ஒரு விளக்கு மற்றும் ஒரு ஃபேனை இயக்கலாம்.  400 Watts -சில் இரண்டு விளக்குகளையும், இரண்டு ஃபேன்களையும் இயக்கலாம். இந்த இரண்டு திறன் வகைகளும் தற்போது அதிக புழக்கத்தில் இல்லை என்றே சொல்லப்படுகிறது.

இப்போது புழக்கத்தில் இருந்து வருபவை 650 Watts மற்றும் 850 Watts திறன் கொண்ட Inverter -கள். 650 Watts மூலம் ஒரு விளக்கு, ஒரு ஃபேன் மற்றும் ஒரு டி.வி. யை இயக்கலாம். 850 Watts திறன் கொண்டதை உபயோகிப்பதால் 4 விளக்குகளோடு, 3 ஃபேன் அல்லது டி.வி. அல்லது கம்ப்யூட்டர் அல்லது மிக்ஸி போன்றவைகளை இயக்க முடியும். 

850 Watts திறன் கொண்ட Inverter -களே சிறுதொழில் செய்பவர்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் பயன்தரக்கூடியது. இன்றைய சூழ்நிலைக்கு இதுவே உகந்ததாக இருப்பதோடு, அதிகளவில் விற்பனை ஆகக்கூடியதும் இதுதான்!  

சில அத்தியாவசிய Tips: 
  • உபயோகிப்போரின் தேவைக்கு ஏற்ற வகையில் Inverter -களையும் அதற்கேற்ற Battery -களையும் கவனத்துடன் தேர்வு செய்வது நல்லது.
  • Battery -களை தேர்வு செய்யும்போது சற்று அதிக அளவில் மின்சக்தியை சேமித்து வைக்கக் கூடிய Battery -களாக தேர்வு செய்யவும். 
  •  நீண்ட காலமாய் Inverter தயாரித்து வருகின்ற நிறுவனங்களின் Inverter மற்றும் Battery -களை வாங்குவதோடு விலை கொடுத்து வாங்கும் பொருட்களுக்கு அந்நிறுவனம் தரும் Warranty மற்றும் Service போன்ற விபரங்களையும் அறிந்துக்கொள்ளவும்.
Inverter -களில் Square Wave -வை விட, Sine Wave -களே சிறந்த தேர்வாக உள்ளது! காரணம், தேவைப்படும் மின்சக்தியை Sine Wave முழுமையாக  தருவதாகவும், இதனால் உபயோகிக்கும் மின்சாதனங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை எனவும், Square Wave -வை பொறுத்தவரை உபயோகிக்கும் மின்சாதனங்களில் ஒருவித இரைச்சல் சப்தம் ஏற்படுவதால், மின்சாதனங்கள் விரைவில் பழுதடைய வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.    

மேலும் Battery -யில் Flat மற்றும் Tubular  என இரு வகைகள் உள்ளன. இதில் Tubular வகை சிறந்தது; நீண்ட நாட்களுக்கு உழைக்கவும் செய்வதோடு பராமரிப்பு செலவும் குறைவு.
FLAT 
TUBULAR













Battery -யை அடிக்கடி கண்காணித்து வருவதோடு, அதனுடைய Distilled Water குறைந்து வரும் பட்சத்தில் அதனை நிரப்புவதும் அவசியம். 

தற்போது உச்சத்தில் இருந்துவருகின்ற மின்சாரப்பஞ்சம் சில மாதங்கள் சென்று சற்று குறையவோ / கூடவோ  அல்லது முழுமை பெற்று தமிழகமே தன் அண்டை மாநிலங்களுக்கு தாரை வார்க்கக்கூடிய அளவிற்கு போனாலும், விலை கொடுத்து வாங்கிவைத்துள்ள Inverter - களை தூக்கி பரண்மேல் போட்டு விடாமல், மாதம் ஓரிரு முறைகளாவது  மின்சாரத்தை நிறுத்தி அவைகளுக்கு வேலை கொடுப்பதால் Inverter -ம் அதை சார்ந்த Battery -யும் பழுதடையாமல் நீண்ட நாள் உழைக்கும்.

Inverter -கள் வாங்குவது பற்றி மேலும் அறிய: